சிங்கவரம் ரங்கநாதர் கோவிலை பாதுகாக்க வேண்டும்: நீதிமன்ற வழிகாட்டுதல் கடைபிடிக்கப்படுமா ?
செஞ்சி:சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் உரிய முறைகளை பின்பற்றாமல் மலைப்பாதை அமைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவிலில் சுற்று சுவர் இடிந்து விழுந்தது பக்தர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த சிங்கவரம் மலை மீது 6ம் நுாற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால ரங்கநாதர் குடைவரை கோவில் உள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலில் நடக்கும் வைகுண்டஏகாதசி விழாவுக்கு 25 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவர்.
முகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடக்கிறது.இதனால், கோவிலின் மலை மீது செல்ல பாதை அமைக்க வேண்டும்என்ற கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து இந்து சமய அறநிலையத் துறையினர் 2017ல் மலைப்பாதை அமைக்க முடிவு செய்தனர்.அப்போது 555 மீட்டர் மலை பாதை அமைக்க 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டது. இது போதுமானதாக இருக்காது என முடிவு செய்து, 1 கோடி ரூபாயில் திட்டம் தயாரித்து தமிழக அரசுக்குஅனுப்பினர்.
ஒப்புதல் வருவதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
இதற்கிடையே 2018ல் கிராம மக்கள் தங்களின் சொந்தமுயற்சியில் மலைப்பாதைக்கான வேலைகளை துவக்கி செய்தனர்.அப்போது மலைப் பாதையை ஆகம விதிகளுக்கு முரணாகவும், கோவிலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் செய்வதாக
செஞ்சி போலீசில் அகில இந்திய இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் செஞ்சிராஜா புகார் அளித்தார்.
இதற்கு பதில் அளித்த இந்து சமய அறநிலையத்துறையினர் மலை தங்களின் கட்டுப்பாட்டில் இல்லை. வருவாய்த் துறைக்கு சொந்தமானது என, பதில் அளித்தனர். இதன் பிறகு சில மாதங்கள் பணிகள் நிறுத்தப்பட்டன.
வெடிபொருட்கள்மீண்டும் சில மாதங்களாக பணியை துவக்கி செய்து வந்தனர்.
இந்நிலையில் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், மலைப்பாதை அமைக்க வெடிப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதால் கோவிலுக்குசேதம் ஏற்படும். கோவிலின் சுற்றுச் சுவர் பாதிக்கப்படும் என,
சென்னைஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.நவ. 20ல் இம்மனுவை ஏற்று கொண்ட முதல் பெஞ்ச் நீதிபதிகள் துரைசாமி, நாராயண பிரசாத் ஆகியோர் தற்போதைய நிலை தொடரவும், சேதமடைந்த பகுதியை செப்பனிட தடையேதும் இல்லை என, உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு விசாரணையை டிச. 2ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில் நவ.19ல் பெய்த கனமழையின் போது கோவிலின் இரண்டு இடங்களில் மதில் சுவர் சரிந்து விழுந்தது.கொடி மரம் எதிரே பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டது.
இதை தற்போது சீரமைத்து வருகின்றனர். நவ.21 செஞ்சியில் பேட்டியளித்த பா.ஜ., மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி 18ம் தேதி இரவு பாறைகளை வெடி வைத்து தகர்த்ததால் தான் சிங்கவரம் ரங்கநாதர் கோவில் சுற்று சுவர் இடிந்து விழுந்தது.
அரசின் ஒப்புதல்இன்றி சாலை அமைக்கும் பணி அமைச்சர் மஸ்தான் தலையீட்டில் நடந்து வருகிறது. தி.மு.க., அரசு வேண்டும் என்றே கோவிலுக்கு சேதத்தை ஏற்படுத்துகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என,குற்றம் சாட்டியிருந்தார்.
ஆய்வு நடத்தப்படுமா ?
அரசியல் ரீதியான குற்றச்சாட்டுக்கள் ஒருபுறம் இருந்தாலும் இதுவரை நடந்துள்ள பணிகள் அரசின் எந்தத் துறையின்அனுமதியும் இல்லாமலேயே நடந்திருப்பது தவறான முன் உதாரணமாகி உள்ளது.
எனவே இதுவரை நடந்துள்ள பணிகளால்கோவிலுக்கு எதேனும் பாதிப்புஏற்பட்டுள்ளதா என்பதை இந்திய தொல்லியல் துறையின் வல்லுநர் குழுவை கொண்டு தமிழக அரசு ஆய்வு செய்து கோவிலின் பாதுகாப்பைஉறுதி செய்ய வேண்டும். வரும் காலங்களில் தகுந்த வல்லுநர் குழுவின் ஆலோசனையின்படி மலைப்பாதையை அமைக்க வேண்டும்.
இது குறித்து அமைச்சர் மஸ்தான் கூறுகையில், 'அ.தி.மு.க., ஆட்சியில் எம்.எல்.ஏ.,வாக இருந்த போது வயதானவர்கள் கோவிலுக்கு போக மலைப்பாதை வேண்டும் என, கிராம மக்கள் கேட்டு கொண்டனர். இது குறித்து மூன்றுமுறை சட்டசபையில் பேசினேன். துணை மானிய கோரிக்கையின் போதும் துணை கேள்வி எழுப்பினேன்.
இப்போது அமைச்சரான பின், கோரிக்கையை நிறைவேற்ற நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது விதிமுறைகள் படியே நடக்கும்' என்றார்.
பாதுகாப்பே முக்கியம்
ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் கூறுகையில், 'இந்த கோயிலுக்கு நான் வந்து பார்த்தபோது வெடிபொருட்கள் பயன்படுத்தப்படிருப்பது தெரியவந்தது.
பழமையான கோயில் என்பதால் இதை பாதுகாக்க வழக்கு தொடர்ந்தேன். கோவிலில் வசதிகளை செய்வதை விட பாதுகாப்பு முக்கியமானது. எனவே நீதிமன்ற வழிகாட்டுதலின் படி பணிகளை அரசு செய்ய வேண்டும்' என்றார்.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
மத்திய அரசின் சூரிய மித்ரா பயிற்சி வகுப்புகள்(Solar technical Training) துவங்க உள்ளது. தற்போது சேர்க்கை நடைபெறுகிறது.
கடைசி நாள்: 25.12.2021. Age:18 to 30
பயிற்சி காலம்:3 மாதம்
பயிற்சி நேரம்: கானல 9 மணி முதல் மானல:5மணி வரை
கல்வி தகுதி:
Diploma in
1.EEE
2.ECE
3.Mech
4.Civil
ITI:
Electrician
Fitter
Wireman
Welder
சலுகைகள்: 1. தங்குமிடம் 2. உணவு
3 . சீருடை
பயிற்சி உள்பட இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.
பயிற்சி முடிந்ததும் 100% வேலை வாய்ப்பு.
இந்த பயிற்சி வகுப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
சேர்க்கைக்கு வரும்போது
இன்று (நவ. 26) மும்பை தாக்குதல் 13 ம் ஆண்டு நினைவு தினம் :
மும்பை: மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் 13ம் ஆண்டு நினைவு தினம் இன்று (நவ.26) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மும்பையில் பல்வேறு இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
2008 நவ., 26ம் தேதி பாகிஸ்தானில் இருந்து படகில் வந்த 10 பயங்கரவாதிகள் தனித்தனி குழுவாக சென்று,
இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையின் சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷன், தாஜ் ஓட்டல், நாரிமன் ஹவுஸ், காமா மருத்துவமனை, ஒபராய் டிரிடென்ட் ஓட்டல், லியோபோல்டு கபே ஆகிய இடங்களில் தங்களது பயங்கரவாத செயல்களை அரங்கேற்றினர்.
சமூக வலைதள கருத்துகளுக்கு பொறுப்புடைமை நிர்ணயம் அவசியம்
புதுடில்லி :''சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் பதிவிடப்படும் கருத்துகளுக்கு பொறுப்புடைமையை தெளிவாக நிர்ணயிக்க வேண்டும்,'' என, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தியுள்ளார்.
இணையதளங்கள் நிர்வாகம் தொடர்பான முதலாவது இந்தியா இன்டர்நெட் நிர்வாக அமைப்பின் கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது.
பரிந்துரை
இதில் பங்கேற்ற, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது:'இன்டர்நெட்' எனப்படும் இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களின் பயன்பாடு மற்றும் அதில் பதிவிடும் கருத்துகள் பல மாறுதல்களை சந்தித்துள்ளன.
பா.விஜய், காட்டிகன், சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழகத்தின் சுவிட்சர்லாந்து' என்று அழைக்கப்படும் நீலகிரியில், விதிமீறல் கட்டடங்கள் அதிகமாகிப்போனதால்,
உச்ச நீதிமன்றமே தலையிட்டு சில சட்ட விதிமுறைகளை அறிவித்தது. அதை, மாவட்ட ஆட்சியர் மூலம் நிறைவேற்றவும் ஆணையிட்டது.
நீலகிரியின், 113வது கலெக்டராக, 2017ல் இன்னசென்ட் திவ்யா நியமிக்கப்பட்டார். பொறுப்பேற்ற நாளிலிருந்தே, தன் பணியை சிறப்பாக மேற்கொண்டார்.
சட்டத்திற்குப் புறம்பாக ஆழ்துளைக் கிணறு தோண்டுதல், மரம் கடத்தல் ஆகியவற்றை தடுத்தார்; -பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்தார்.-சீகூர் யானை வழித்தடத்தில் இருந்த, 39 ஓட்டல்கள் மூடல் மற்றும் மின் வேலி அமைக்கத் தடை ஆகியவற்றில் உறுதியுடன் செயல்பட்டார்.
*கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி பகவதிஅம்மன் ஆலயம்*
*கடவுள் குடியிருக்கும் இடம் கோயில். இதன் அடையாளம் கோபுரம். அதை கண்ணுக்கு எட்டிய தூரத்தில் நின்று வழிபட்டாலும் புண்ணியமே. இதனால் எல்லா சன்னதிகளையும் தரிசித்த பலன் கிடைக்கும். இதை ’கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்பர்.*🙏🇮🇳1
மூலவர் : தேவிகன்னியாகுமரி - பகவதி அம்மன்
உற்சவர் : தியாக சவுந்தரி, பால சவுந்தரி
தீர்த்தம் : பாபநாசதீர்த்தம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : குமரிகண்டம்
ஊர் : கன்னியாகுமரி
🙏🇮🇳2
திருவிழா
புரட்டாசி - நவராத்திரி திருவிழா - 10 நாள் வைகாசி விசாகம் - 10 நாள் - தேரோட்டம், தெப்போற்ஸவம் - 10 ஆயிரம் பக்தர்கள் கூடுவர். இத்திருவிழா நாட்களில் காலையிலும் இரவிலும் ஊர் தெரு வழியாகத் தேவியின் திருவுருவம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். 🙏🇮🇳3