1928-ம் ஆண்டு ஜீன் மாதம் "கீர்த்தி" இதழில்
தோழர் பகத்சிங் எழுதிய ஜாதிக் கொடுமைகளுக்கு எதிரான கட்டுரையிலிருந்து சில துளிகள்...👇

👉 பிரிட்டிஷ் அரசாங்கம் நம்மைச் சமமாக நடத்தவில்லை என்று நாம் குறறம் சாட்டுகிறோம். ஆனால் நாம் நம் மக்களைச் சமமாக நடத்துகின்றோமா?

1/N
👉 மக்கள் மதம் மாறும்போது ஆத்திரப்படுகிறார்கள். அவர்களை நீங்கள் விலங்குகளை விடக் கேவலமாக நடத்தினால், அவர்கள் எங்கு மனிதர்களாக மதிக்கப்படுகிறார்களோ அந்த மதத்திற்குப் போகத்தானே செய்வார்கள்?

- தோழர் பகத்சிங்

2/N
👉 நாம் ஒரு நாயைக் கட்டியணைக்கலாம். அது எவ்விதத் தடையுமின்றி நம் சமையலறை வரையில் வரலாம். ஆனால் ஒரு மனிதன் நம்மைத் தொட்டு விட்டால், நமது மதத்தின் புனிதம் கெட்டுவிடுகிறது.

- தோழர் பகத்சிங்

3/N
👉 மாளவியா போன்ற இக்கால சீர்திருத்தவாதிகளுக்குத் தீண்டப்பாடாதவர்கள் மீது திடீரென்று பாசம் பிறந்துள்ளது. அவர் ஒரு துப்புரவுத் தொழிலாளி அணிவிக்கும் மாலையை ஏற்றுக் கொள்கிறார். ஆனால் தன் ஆடைகளோடு குளித்து முடிக்கும் வரை தன்மீது தீட்டு உள்ளதாகவே அவர் உணர்கிறார்.

- தோழர் பகத்சிங்

4/N
என்ன ஒரு தந்திரமான ஏமாற்று வேலை?!

👉 அனைவரையும் நேசிப்பவர் என்று நம்பப்படும் கடவுளை வழிபடுவதற்காகக் கோயில்கள் கட்டப்படுகின்றன. ஆனால் அவற்றுள் தீண்டப்படாதவர்கள் நுழைந்துவிட்டால், புனிதத் தன்மை போய்விடுகிறது என்கிறார்கள்!.?

- தோழர் பகத்சிங்

5/N
👉 விலங்குகளை வணங்குகிறோம்; ஆனால் நம்முடன் உள்ள மனிதர்களை நம்மோடு உட்கார வைக்க வைக்க மறுக்கிறோம்.

👉 துப்புரவு செய்யும் ஜாதியைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்து விட்டதற்காக, ஒருவர் தன் வாழ்நாள் முழுக்க கழிவுகளைச் சுத்தம் செய்து கொண்டேயிருக்க வேண்டும்;

- தோழர் பகத்சிங்

6/N
வாழ்க்கையில் முன்னேறக்கூடிய வேறெந்த தொழிலையும் அவர் செய்யக்கூடாது என்று சொல்வது முட்டாள்தனமானது.
ஆரிய முன்னோர்கள் அவர்களுக்கு அநீதி இழைத்துவிட்டனர். கீழான வேலைகளைச் செய்வதற்கு அவர்களைக் கட்டாயப்படுத்தி வைத்துவிட்டனர்.

- தோழர் பகத்சிங்

7/N
👉 இவர்கள் விழிப்புற்று போராடிவிடக் கூடாது என்பதற்காக, பூர்வஜென்மம் மறுஜென்மம் பற்றிப் போதித்து வருகின்றனர். இப்பிறவி இழிவுக்குப் போன பிறவி பாவம் என்கிற மோசடிக்கு மாற்றுவழி உண்டா?

👉இன்றுவரையில் தீண்டப்படாதவர்கள் என்று அழைக்கப்பட்டவர்களிடம், அவ்வாறு அவர்களை நடத்தியதற்காக

8/N
மன்னிப்பு கேட்கவேண்டும்.

👉தீண்டப்படாதவர்கள் சுத்தமில்லாமல் இருக்கிறார்கள் என்று எப்போதும் வாதிடப்படுகிறது. இதற்கான பதில் மிகவும் எளிமையானது -அவர்கள் ஏழைகளாய் இருக்கிறார்கள். அவர்களின் ஏழ்மையை போக்குங்கள்.ஆதிக்க ஜாதி ஏழைகளும் இவர்களைப் போலதான் இருக்கிறார்கள்.
-தோழர் பகத்சிங்
9/N
👉 குழந்தையின் மலத்தைத் தாய் அள்ளுகிறாள். அதற்காக அவளைக் கீழாகவோ, தீண்டப்படாதவளாகவோ நடத்தவில்லையே?

👉உண்மையான பாட்டாளி வர்க்கமான தீண்டப்படாதவர்களே, உங்களிடம் இழப்பதற்கு அடிமை விலங்கைத் தவிர வேறொன்றும் இல்லை.

- தோழர் பகத்சிங்

10/N
👉 தற்போது நிலவும் சமுதாய அமைப்பிற்கு எதிராகப் புரட்சி செய்யுங்கள். மெல்ல வரும் சீர்திருத்தங்கள் உங்களுக்குப் பயன்படாது. மக்களின் பேரியக்கம் மூலம் புரட்சியை வளர்த்தெடுங்கள்.

தோழர் பகத்சிங்

11/12
அரசியல் - பொருளாதார புரட்சிக்கு தயாராய் இருங்கள். நீங்களே நாட்டின் உண்மையான முதுகெலும்பு. நீங்களே நாட்டின் உண்மையான வலிமை. உறங்கிக் கொண்டிருக்கும் சிங்கங்களே விழித்தெழுங்கள்! புரட்சி செய்யுங்கள்!

- தோழர் பகத்சிங்

🙏🙏🙏
12/12

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with குறள் நெறி

குறள் நெறி Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @arakkarperiyar

8 Jun
#பார்ப்பனீயபீடை யின் ➕யும் 👉காட்டியும் கொடுத்து தனக்கானதை சாதித்துக் கொண்டதிற்கான ஓர் எ.கா

1478ல் செஞ்சியை அரசாண்டவன் வெங்கடபதி (எ) துமால் கிரிஷ்ணப்பன் என்கிற தெலுங்கு இனத்தை சேர்ந்த அரசன்.

இவனுக்கு உயர்ந்த ஜாதி ஒவ்வொன்றில் இருந்தும் ஒவ்வொரு பெண்ணை மணக்க வேண்டும் என்று

1/N
எண்ணம் கொண்டு பார்ப்பான்களைக் கூப்பிட்டு பெண் கேட்க, தங்களை விட தாழ்ந்த ஜாதியான இவனுக்கு பெண் தரும் அந்த நேரத்தில் சமணர்களை கோர்த்து விட்டு அழிக்க சதி திட்டம் தீட்டப்படுகிறது.

பார்ப்பனர்கள் வேங்கடபதிடம், "சமணர்கள் பார்ப்பான்களை விட உயர்ந்த இனம். அதனால் முதலில் சமண பெண்ணைத்

2/N
திருமணம் செய்யனும்னு சொல்லறானுங்க.

ஒரு சமண பிரபுவின் குடும்பமும் அடையாளம் காட்டப்படுகிறது.

அந்த சமண பிரபுவின் மகளை பெண் கேட்க ஒரு நாளும் குறிக்கப்படுகிறது. அரசனும் அந்நாளில் அந்த சமண பிரபு வீட்டிற்கு சென்றால் அங்கு யாருமில்லை,

3/N
Read 5 tweets
11 Nov 20
🎯 1008 அண்டங்களையும் ஆண்டவன் என்கிற சூரபத்மன் கொல்லப்பட்ட போது தீபாவளி இல்லை.

🎯 சொர்க்கம் முதல் பாதளம் வரை அரசு செலுத்தியவன் என்கிற இராவணன் இறந்தபோதும் தீபாவளி ஏற்படவில்லை!

🎯 திரிபுராதிகளை ஒழித்தபோதும் தீபாவளி இல்லை!

🎯 இரண்யன் இரண்யாக்ஷன் இறந்தபோதும் தீபாவளி இல்லை!

1/N
🎯 தேவர் உலகத்தில் திக் விஜயம் செய்து தேவேந்திரனை விரட்டிய சம்பராசுரனை சாகடித்த போதும் தீபாவளி இல்லை!

🎯 காலகேய நிவாத கவசர்களை வீழ்த்தியபோதும் தீபாவளி இல்லை!

🎯 இவர்களைப் போலவே
மகிடாசுரன், இடும்பாசுரன், பக்காசுரன், சடாசுரன், கர்த்தபாசுரன், கயமுகாசுரன், தாராகாசுரன் முதலான

2/N
திராவிட அரசர்கள் கொலையுண்ட போதும் தீபாவளி இல்லை.

📌அப்படியிருக்க
நரகாசுரன் இறந்ததற்காக ஏன் ஆரிய நரிகள் தீபாவளி கொண்டாட வேண்டும்?

சத்தியபாமை வரத்திற்காகவா?
இல்லவே இல்லை.
அது ஒரு கட்டுக்கதை.

👉 நரகாசுரனை நயவஞ்சகத்தால் அழித்ததோடு, வடநாட்டில்
பூர்வீகத் திராவிடர்களின் அரசாட்சி

3/N
Read 5 tweets
11 Oct 20
நகைகள்,மாடு,குடை,பாய்,செருப்பு, பச்சரிசி,பச்சைக் காய்கறிகள் போன்ற தட்சணைச் சுரண்டல் என்பதை மதமே அங்கீகரிக்கிறது.

#பணம்_பிடுங்கி_பார்ப்பான் சுரண்டல்களில் சில

🐍வரன் பொருத்தம் பார்க்க
🐍திருமண நாள் பார்க்க
🐍திருமணத்திற்கு மந்திரம் ஓத
🐍சாந்திமுகூர்த்தத்திற்கு நேரம் பார்க்க

1/N
🐍 பிறந்த குழக்கைக்கு ஜாதகம் பார்க்க
🐍 நாள் நட்சத்திரம் பார்க்க
🐍 குழந்தைக்கு பெயர் வைக்கும் நாள் பார்க்க
🐍 பெண்கள் பூப்படைந்த தீட்டு கழிக்க
🐍 வீட்டு கிரஹபிரவேச சடங்கு செய்ய
🐍 இறந்தவுடன் ஈமச் சடங்கு செய்ய
🐍 கருமாதி காரியம் செய்ய
🐍 ஆண்டுதோறும் திதி திவசம் செய்ய

2/N
🐍 சடங்குகள் செய்ய
🐍 பூமி பூஜை செய்ய
🐍 கும்பாபிஷேகம் செய்ய
🐍 ஜாதகம் பார்க்க
🐍 குறி பார்க்க
🐍 நாள் பார்க்க
🐍 நட்சத்திரம் பார்க்க
🐍 பஞ்சாங்கம் பார்க்க
🐍 பரிகாரம் பார்க்க & செய்ய
🐍 பூமி பூஜை
🐍 குடமுழுக்கு
🐍 யாகம்
Etc

இதெல்லாம் பார்ப்பனர்களின் சொகுசு வாழ்க்கைக்கு,

3/N
Read 8 tweets
30 Sep 20
முத்தமிழ்:
♥️ இயல் தமிழ்
♥️ இசைத் தமிழ்
♥️ நாடகத் தமிழ்

நடுவில் உள்ள இசைத் தமிழ் எப்படி தமிழர்களிடம் இருந்து காணாமல் போயிற்று என்பதை நாம் அறிந்துக் கொள்ள வேண்டாமா?

பண் என்பது தமிழர் இசைக் கலையின் அடையாளம், குறியீடு.
அது பற்றிய விவரங்களை நம்மிடமிருந்து மறைக்கப்பட்டுள்ளது.

1/N
பார்ப்பன ஞானசம்பந்தன் ஒவ்வொரு கோயிலாகச் சென்று பதிகம் பாடி அதை சைவக் கோயிலாக்கும் போது,
கூடவே திருநீலகண்ட யாழ்ப்பாணரையும் அவரது மனைவி இசைஞானியாரையும் அழைத்துச் சென்று தன் பதிகங்களுக்கு பண் அமைத்து பாடியிருக்கிறான்.

#ஆரியமயமாக்கல்_அயோக்கியத்தனம்

2/N
ராஜராஜசோழன், தில்லை திடீர் பார்ப்பனர்கள் மறைத்து வைத்திருந்த தேவாரப் பதிகங்களை, வெளிகொண்டு வந்து, அவற்றுக்குப் பண் அமைக்க திருநீலகண்ட யாழ்ப்பாணர் பரம்பரையில் ஒரு பெண்மணியின் உதவியைப் பெற்றான் என்பதெல்லாம் வரலாறு.

பார்ப்பனர்களுக்கு இசை - பண் தெரியாது.

3/N
Read 8 tweets
24 Sep 20
#DrBR_Fatherofthenation

நீங்கள் எப்போதுமே இந்துவாக இருந்தது இல்லை, இன்றும் கூட உங்களை இந்துவாக அம்மதமே ஏற்று கொண்டது இல்லை.

இந்து தர்மமே மனிதனை அடிமை படுத்துவதையே தத்துவமாக கொண்டது.
இந்து தர்மத்தில் நீங்கள் ஒரு அடிமை!

இந்து மதத்திலிருந்து வெளியேறுவது மதமாற்றம் அல்ல;

1/N
#DrBR_Fatherofthenation

மாறாக உங்களை அடிமைபடுத்தியிருக்கும் அடிமை சங்கிலியை உடைத்தெரிந்து வெளிவருவதே ஆகும்.

உயர்சாதிக்காரன் மேலானவன் என்பதும்,கீழ்சாதிக்காரன் கீழானவன் என்ற நம்பிக்கை கேவலமான மனநோய்.

இந்துத்துவத்தின் ஆன்மாவே வருணம் மற்றும் சாதியை அடிப்படை தத்துவமாக கொண்டது.

2/N
இவை பார்ப்பனர்களின் வாழ்வாதாரத்திற்காக உருவாக்கப்பட்டது.

வருணம் மற்றும் சாதி இல்லாத இந்து தர்மத்தை கற்பனைக் கூட செய்ய இயலாது.

செய்யும் தொழிலை விட சாதியையே தத்துவமாக, தர்மமாக , புனிதமாக கொண்டதுதான் இத்துத்துவம்.

#DrBR_Fatherofthenation

3/N
Read 8 tweets
22 Sep 20
323. ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.

(அதிகாரம்:கொல்லாமை)

என்ற குறளில் கொல்லாமை, பொய்யாமை என்ற இரண்டு அறத்தை திருவள்ளுவர் வலியுறுத்துகிறார்.

இந்தக் குறளைப் படித்தபோது,
"பொய்யையும் கொலையையும் செய்யத் தூண்டிய கிருஷ்ணன் கதை நினைவுக்கு வந்தது...👇

1/N
கிருஷ்ணன் பகவத்கீதையில் அர்ச்சுனனை பங்காளிகளையே"கொல்" என்கிறான்.
அதுதான் உன் தர்மம் என்கிறான். துரோணன் தலைமை ஏற்று கௌரவப் படைகளை நடத்தியபோது அவனை வெல்லவும் முடியவில்லை;கொல்லவும் முடியவில்லை.

அதற்காக"அஸ்வத்தாமன் இறந்து விட்டான்"என்று தருமனை கிருஷ்ணன் பொய் சொல்லச் சொல்கிறான்.

2/N
ஆனால் தருமன் தயங்குகிறான். தருமன் சொன்னால்தான் துரோணன் நம்புவான். மற்றவர்கள் சொன்னால் நம்பமாட்டான். அதனால் தருமனை இப்படி பொய் சொல்லத் தூண்டுகிறான் கிருஷ்ணன்.

தருமன் தயங்குவதைப் பார்த்த பீமன் அசுவத்தாமன் என்று பெயர் கொண்ட ஒரு யானையை தனது கதாயுதத்தால் அடித்துக் கொள்கிறான்.

3/N
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Thank you for your support!

Follow Us on Twitter!

:(