தாய் தெய்வ வழிபாட்டோடு தொடர்புடையதாகவே மாரியம்மன் வழிபாடும் இருந்திருக்கிறது. தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் கானமர்ச்செல்வி, காடமர்ச்செல்வி முதலியவை பழங்குடி மக்கள் தொழுத தெய்வமாகும். இந்தத் தாய் தெய்வத்தை துர்கை என்றும் பலர் வழிபட்டனர். பழந்தமிழர் கொற்றவை என்றனர். இந்தத் தாய்
தெய்வம் மிகப் பழைமையான குடிகளிடமிருந்து நாம் பெற்றது. அதனால்தான் ‘பழையோள்’ என்றும் ‘மூத்த அம்மா - முத்தம்மா, ஆத்தாள்’ என்றெல்லாம் ஆதி நினைவுகளின் தொடர்ச்சியாக மாரியம்மனை அழைக்கிறோம். ஆண் கடவுளரான ஐயனார், வீரனார், பதினெட்டாம் படி கருப்பன், முன்னடியான், காத்தவராயன், இருளன்,
சங்கிலிக் கருப்பன், மதுரை வீரன் போன்ற சாமிகளையும், பெண் தெய்வங்களான மாரியம்மன், காளியம்மன், காட்டேரி, பொம்மி, செல்லாயி, குழுமாயி போன்ற தெய்வங்களையும் பொதுவாக சிறு தெய்வம் என்றும் நாட்டார் தெய்வமென்றும் அழைக்கும் பழக்கம் நம்மிடம் உள்ளது. “துடியுள்ள சாமி” என்று மக்கள் இவற்றிடம்
அஞ்சுவார்கள். எல்லா சாதிக்குள்ளும் இந்த சாமிகளுக்கு பூசாரிகள் உண்டு. தாங்கள் சாப்பிட்ட எல்லாவற்றையும் சாமிக்கும் படையலிட்டார்கள். அவற்றைக் கும்பிட்ட மக்களுக்குக் கூரை இல்லாததைப் போலவே சாமிகளுக்கும் சமயத்தில் கூரை இருக்காது. இப்படி ஒண்ணோடு ஒண்ணாக சாமியோடு இவர்கள் கலந்து இருந்தனர்.
அதனால்தான் தங்கள் எல்லா கஷ்டங்களையும் கொட்டுவதற்காக அவரகள் நாட்டார் தெய்வங்களிடம் வந்தார்கள். வரும்போதே தாய் வீட்டுக்கு வரும் மகள் போல வந்தார்கள். அலகு குத்தி, காவடி எடுத்து, பட்டினி கிடந்து, தீச்சட்டி ஏந்தி என் கஷ்டத்தை நீ பார் என்று ஆவேசத்தோடு வந்தார்கள். எனக்கும் உனக்கும்
இடையில் யாருமில்லை, நீ வா என்று வாரி அணைக்கும் தாயாக சமயபுரத்தாள் போன்ற அம்மன்கள் இருப்பதான உணர்வுதான் மக்களை வெள்ளம்போல் கூட்டுகிறது. இது நாட்டார் தெய்வங்களுக்கே உரிய ஈர்ப்பு. கால ஓட்டத்தில் ஆகம விதிகளுக்கு உட்பட்ட பெரும் தெய்வமாக மாறிய பின்னும் நாட்டார் மரபின் கூறுகளை தொடர்வது
தான் பல அம்மன் கோவில்களின் மகிமை. அதனால்தான் மாவிளக்கு போடுவது தொடங்கி குழந்தைக்கு நோய் நீங்கியதும் பச்சை மூங்கிலில் மஞ்சள் துணியைத் தூளியாகக் கட்டி அதில் குழந்தையை அமர்த்தி அன்னை முன்னே போடுவது வரை நடக்கிறது. அதுபோலவே சுட்ட மண்ணாலான குழந்தை உருவங்களை கொண்டு வந்து
கொடிமரத்தடியில்
வைத்து வணங்குகிறார்கள். பெரியம்மை நோயால் கொத்து கொத்தாக முன்பு மக்கள் செத்தார்கள். அப்போதெல்லாம் தன் விருட்சமான வேம்பால் நோய் தீர்த்தவள் மாரியம்மாள் என்ற நம்பிக்கையோடுதான் “வேப்பில்லை மாரி” என்று இன்றும் வணங்குகிறார்கள். வட மாநிலங்களில் அம்மை நோய்க்கு அதிபதியாக சீதளாதேவியை
வணங்குவார்கள். சீதளம் என்றால் குளிர்ச்சி என்று பொருள். இங்கு திருச்சி தென்னூரில் உள்ள குளுமாயி அம்மனை வணங்குவதும் அது போலே. குளிர்மாயி என்பதே குளுமாயி என்று மாறியிருக்கலாம். மாரியம்மன் வழிபாடு பழைமையானது மட்டுமல்ல பரவலானது. உதாரணமாக திருவேற்காடு, கருமாரியம்மன், தஞ்சைபுன்னைநல்லூர்
மாரியம்மன், சமயபுரம் மாரியம்மன், நார்த்தாமலை முத்துமாரியம்மன், நாகை நெல்லுக்கடை மாரியம்மன், பன்னாரி மாரியம்மன் என்று தொன்மையான தாய் தெய்வ வழிபாட்டின் தொடர்ச்சியாகவே மாரியம்மன் வழிபாடு பார்க்கப்படுகிறது. இதனால்தான் முத்துமாரியைப் பாடவந்த பாரதியும், “தேடிஉன்னைச் சரணடைந்தேன்
தேசமுத்து மாரி கேடு அதனை நீக்கிடுவாய் கேட்டவரம் தருவாய்” என்று சரண்டைகிறார். தமிழ்நாட்டு மாரியம்மன் கோயில்களில் தலைமைக் கோயிலாக சமயபுரம் சொல்லப்படுகிறது. இங்கு திருவிழா தொடங்கிய பின்னால்தான் மற்ற மாரியம்மன் கோயில்களில் திருவிழா தொடங்குவது ஐதிகமாம்.
நீண்ட நெடிய வரலாறு கொண்ட
ஒரு மொழியில் தொன்மங்கள் நிறைய இருக்கும். அதுவும் கடவுளோடு இணையும் போது அவை நம்பிக்கைகளாகவும் மாறிவிடும். மகமாயியின் தோற்றம் புராணத்தின் படி பெரும் தெய்வமான கிருஷ்ணனோடு இணைக்கப்படுகிறது. மதுராவில் தேவகிக்கும் வசுதேவனுக்கும் திருமணம். வசுதேவன் தன் மனைவி தேவகியை அழைத்துச் செல்லும்
தேரை தேவகியின் அண்ணன் கம்சன் ஓட்டிச்சென்றான். தேவகியின் எட்டாவது பிள்ளையால் கம்சனுக்கு மரணம் என அசரீரி சொல்கிறது. தேவகியைக் கொல்ல முயன்ற கம்சனைத் தடுத்த வசுதேவன், பிள்ளைகள் பிறந்தவுடன் கம்சனிடம் தருவதற்கு ஒப்புக்கொண்டான். அப்படியே ஏழு குழந்தைகளையும் கம்சன் கொன்றான். ஆயர்பாடியில்
நந்தகோபனும் யசோதையும் குழந்தை வேண்டி கடவுளிடம் வந்தனர். மகாமாயையை அழைத்த கடவுள் யசோதையின் கர்ப்பத்திற்குள் போகச் சொன்னார். யசோதைக்குப் பிறக்கும் பெண் குழந்தையை தேவகியிடமும் தேவகியின் ஆண் குழந்தையை யசோதையிடமும் மாற்றி விடும்படி நந்தகோபனுக்குக் கட்டளையிட்டார். அப்படியே நடந்தது.
கம்சன் தேவகியின் எட்டாவது குழந்தை என எண்ணி, கொல்வதற்காகத் தூக்கும்போது நழுவிய பெண் குழந்தை வில் அம்பு வாள் ஏந்திய காளியாக மாறினாள். அந்தக் காளியே மாரியம்மனாகத் தோன்றி அரக்கர்களையும், தீவினைகளையும், நோய்களையும் போக்கி கண்கண்ட கடவுளாக விளங்குகிறாள் என்கிறது புராணம். உலகம் முழுவதும்
வலியும்-வேதனையும்-வழிபாடும் பிரிக்க முடியாதவை என்பது வாழ்வியல் கோட்பாடு. அதாவது, வலியும் வழிபாடும் எப்படி பிரிக்க முடியாதவையோ, அப்படித்தான் வழிபாடும் சடங்குகளும் பிரிக்க முடியாதவை. நிலப்பரப்பின் தன்மைக்கு ஏற்ப வாழ்க்கை மாறுபடும். இதற்கு ஏற்பவே வழிபாடும் சடங்குகளும் மாறும். நடை
முறையில் உள்ள சடங்குகளைப் பின்தொடர்ந்தால் அது நம்மை அச்சமூகத்தின் கடந்த காலங்களுக்கு அழைத்துப் போகும். பல அம்மன் கோவில்களில் நடக்கும் சடங்குகளில் முக்கியமானது முடி இறக்குதல். நேர்த்திக் கடனாக முடியைக் காணிக்கையாகத் தரும் இந்தச் சடங்கைப் பின் தொடர்ந்தால் அது சங்க காலத்தில் போய்
முடியும். கொற்றவையின் முன் மண்டியிட்டு, தன் தலைமுடியை இடக்கையால் தூக்கிப் பிடித்து வலது கையில் உள்ள வாளால் தன் தலையைத் தானே வெட்டி பலிபீடத்தில் வைத்துத் தன் நேர்த்திக் கடனை முடிப்பவர்களை அந்தக்கால இலக்கியங்கள் பேசுகின்றன. “கடன் இறுத்தல்”“சூர்தல்” என்று இதனை சிலப்பதிகாரம் பதிந்து
உள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள “திரௌபதி ரதத்தில்” இதேபோல பலி கொடுக்கும் காட்சி சிற்பமாக உள்ளது. காலப்போக்கில் இதுவே தலை முடியை மழித்துக் காணிக்கையாக்குவது என்ற சடங்காக மாறியுள்ளது. இதுபோலவே உடல் உறுப்புகளை வெட்டிக் காணிக்கையாகத் தருவதற்கு பதிலாக, உடல் தசைக்கு வலியும் துன்பமும்
தரும் அலகு குத்துதல், சிலாகை குத்துதல், முதுகில் கொக்கி மாட்டித் தேர் இழுத்தல் போன்ற சடங்குகள் நடைமுறையில் உள்ளதைப் பார்க்கிறோம். சிறு தெய்வங்களான நாட்டார் தெய்வங்களின் சமூக பங்களிப்பு அளவற்றது. எல்லா சமூக மக்களும் ஒருங்கிணைந்து வேலை செய்ய வேண்டிய தேவையை இந்த தெய்வங்கள்
உருவாக்குகின்றன. சில கிராமங்களில் பிரச்சனைகள் இருந்தாலும், சமூகங்களுக்கு இடையே உறவை வலுப்படுத்த இந்தத் தெய்வங்களுக்காக எடுக்கப்படும் திருவிழாக்கள் பயன்படுகின்றன. அதனால்தான் மக்களின் சமய வாழ்க்கையில் உயிர் துடிப்புள்ள இடமாக கோயில் இருக்கிறது.
“காட்டு வழிதனிலே-அண்ணே கள்ளர் பயம்
இருந்தால்-எங்கள் வீட்டுக் குல தெய்வம்-தம்பி வீரம்மை காக்குமடா. நிறுத்து வண்டி என்றே-கள்ளர் நெருக்கிக் கேட்கையிலே-எங்கள் கறுத்த மாரியின் பேர்-சொன்னால் காலனும் அஞ்சுமடா” இது பாரதியின் வண்டிக்காரன் பாட்டு. பாரதியின் வண்டிக்காரனை கள்வரிடமிருந்தும் காலனிடமிருந்தும் காப்பாற்றும்
கறுத்த மாரிதான் தங்களையும் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையோடு மக்கள் நம் குல தெய்வ, சிறு தெய்வக் கோவில்களுக்கு வந்து கொண்டே இருக்கிறார்கள். நம் சனாதன தர்மத்துக்கு என்றும் அழிவில்லை. நம் மதத்தில் இயற்கையும் கல்லும் மரமும் தெய்வங்கள்!
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
@threadreaderapp please compile thanks

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

7 Dec
Many would have already heard about this incident. But just a reminder so that we don’t forget about faith. A British Collector named Rose Peter was the Collector of Madurai from 1812 to 1828. Though a Christian he respected all faiths including Hinduism and also honored local
practices. Collector Peter was the temple administrator and conducted all his duties with sincerity and honesty and respected the religious sentiments of all people.
This noble trait earned him the popular nickname ‘Peter Pandian'. Meenakshi Amman Temple was situated between
Collector Peter's residence and office. Everyday he used to go to the office by his horse and while crossing the temple, he got down from his horse, removed the hat and his shoes and crossed the whole path on his foot. Through this small gesture he expressed his reverence to the
Read 10 tweets
7 Dec
1962 ஆம் வருடம், இளையாத்தங்குடியில் வியாச பாரத ஆகம சில்ப சதஸ் நடந்து கொண்டு இருந்த சமயம். ஒரு நாள் சதஸிற்கு வந்திருந்த ஸ்தபதிகள், தொல் பொருள் இலாகா அதிகாரிகள் எல்லோரையும் பெரியவா கூப்பிட்டு அனுப்பினார். நடைபெறும் மகாநாட்டிற்கு உபயோகமான அறிவுரைகளை வழங்கினார். பின்னர், "தமிழ் Image
நாட்டில் எந்த ஊரில் உள்ள சிற்பங்கள் மிக சிறப்பானவை" என்று அந்த மகாநாட்டில் பங்கு பெற்ற வல்லுனர்களிடம் மிகவும் அடிப்படையான சாதாரண கேள்வியாக இதைக் கேட்டார். பதிலளிப்பது மிகவும் எளிதாக இருக்கவே எல்லோரும் ஒருமித்த குரலில், தமிழ் நாட்டில் பல்லவ ஆட்சி காலத்தில் செதுக்கப்பட்ட மாமல்ல
புரத்துச் சிற்பங்களே மிக சிறப்பானவை என்று உடனே பதில் சொல்லிவிட்டனர். "சரி அந்த சிற்பங்களுக்குள் எது மேன்மையானது” என்று ஸ்ரீ பெரியவா அவர்களிடம் கேட்டார்.
அர்ஜுனன் தபஸ் என்றனர். "அந்த சிற்பத்தின் போட்டோ ஏதாவது இருக்கா?" என்று ஸ்ரீ பெரியவா கேட்க, இவர்கள் போய் தேடி எடுத்து வந்தனர்.
Read 10 tweets
6 Dec
Very dangerous situation. When are we going to wake up?
நாம் கார், பஸ், ட்ரெயின்களில் பயணம் செய்யும் போது ஆங்காங்கே மலைகளில் சிலுவைகளை நட்டு வைத்திருப்பதையும் பாறைகளில் பைபிள் வசனங்கள் எழுதி இருப்பதையும் பார்த்திருப்போம். ஆள் நடமாட்டம் இல்லாத மலை உச்சிகளில் போய் சிலுவையை வைக்க
வேண்டிய அவசியம் தான் என்ன? Law of adverse possession என்று ஒரு சட்டம் உள்ளது. ஒரு சொத்து இன்னொருவருக்கு சொந்தமானதாக இருந்தாலும் ஒருவர் உபயோக பாத்தியதை இருப்பதாக நிரூபித்தால் அந்த சொத்து அவருக்கே சொந்தமாகும். அந்த சொத்து தனி நபருடையது என்றால் 12 வருட அனுபவ பாத்தியதை போதும். அரசு
சொத்து என்றால் முப்பது வருட அனுபவ பாத்தியதை வேண்டும். இந்த சிலுவைகளின் காரணம் இப்போது புரிகிறதா? பொறம்போக்கு, நத்தம் இடங்களை கையகப்படுத்த செய்யும் தந்திரம் தான் இது. ஒரு மலையில் சிலுவை நட்டு பாறைகளில் சிலுவைகளையும் பைபிள் வசனங்களையும் எழுதி வைப்பார்கள். வருடம் ஒரு தடவை பெயருக்கு
Read 9 tweets
6 Dec
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மதராஸ் மாகாணத்தின் கீழ் இருந்த சித்தூரில், மன்றோ என்ற ஆங்கிலேயர் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்தார். சித்தூர் மாவட்டத்தில் இருந்த திருமலை திருப்பதி கோயிலிலிருந்து அரசுக்கு நிறைய வருமானம் வந்ததால், மாவட்ட ஆட்சியர் மன்ரோ அடிக்கடி
திருமலைக்கு வருவார். அதிகார ஆணவம் மிகுந்தவரான அவர் திருப்பதியில் மொட்டை அடித்துக் கொண்டு வரும் பக்தர்களைப் பார்த்து, ஏன் முடியை வெட்டுகிறீர்கள்? தலையையே வெட்டி இறைவனுக்குக் கொடுக்க வேண்டியது தானே என்று ஏளனம் செய்வார். லட்டு பிரசாதம் பெற்றுச் செல்லும் பக்தர்களைப் பார்த்து இப்படிச்
சுகாதாரம் இல்லாத உணவுகளை உட்கொள்வதால் தான் எல்லா வியாதிகளும் உண்டாகின்றன என்று சொல்வார். கோவிந்தா! கோவிந்தா! என்று கோஷம் செய்பவர்களைப் பார்த்து, ஏன் இப்படி மது அருந்திய கரடி போலக் கத்துகிறீர்கள், அந்தச் சிலை என்றாவது உங்கள் கோஷங்களுக்குச் செவி சாய்த்திருக்கிறதா என்று கேட்பார்.
Read 11 tweets
6 Dec
#கார்த்திகைஸ்பெஷல்
கார்த்திகை மாதம் பிறந்தாலே ஐயப்பனுக்கு மாலைப் போடும் பக்தர்களின் எண்ணிக்கை தான் அதிகம். தர்ம சாஸ்தாவான ஐயப்பனுக்கும் முருகனுக்கு இருப்பது போல் அறுபடை வீடுகள் உள்ளன.
1. ஆரியங்காவு
2. அச்சன்கோவில்
3. குளத்துப்புழா
4. எரிமேலி
5. பந்தளம்
6. சபரிமலை
1. ஆரியங்காவு: நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள கோவிலில் ராஷ்ட்ர குலதேவி புஷ்கலையுடன் அரசராக ஐயப்பன் காட்சித் தருகிறார்.
2. அச்சன்கோவில்:
செங்கோட்டையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதியில் இந்த கோவில் அமைந்துள்ளது. பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த கோவிலின் விக்ரகம் மட்டுமே பழமை மாறாதது என்கிறார்கள். இங்கு வனராஜனாக அமர்ந்த நிலையில் கையில் அமுதமும், கருப்பனின் காந்தமலை வாளும்
Read 9 tweets
6 Dec
#ஶ்ரீசம்மோஹனகிருஷ்ணன் இவரை பற்றி இன்று தான் எனக்கு தெரிய வந்தது. எப்படி அர்தநாரீஸ்வரர் பாதி சிவன் பாதி பார்வதியாக உள்ளாரோ அதே போல பாதி கிருஷ்ணன் பாதி ருக்மிணியாக சம்மோஹன கிருஷ்ணன் தரிசனம் தருகிறார். இவரை வழிபட்டால் குடும்ப வாழ்வில் கணவன் மனைவியிடையே இருக்கும் மனஸ்தாபங்கள் மறைந்து
குடும்பங்களில் மனநிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். மரீசி முனிவர் இவர் மேல் சக்தி வாய்ந்த ஸ்லோகம் இயற்றி நமக்கு அருளியுள்ளார். காலையில் நீராடிய பின் மூன்று முறையும் இரவில் உறங்கப் போகுமுன் ஒரு முறையும் சொல்வது அளவற்ற நன்மைகளை தரும்.
க்ருஷ்ணம் கமலபத்ராக்ஷம் திவ்யாபரண பூஷிதம்
த்ரிபங்கி லலிதாகாரம் அதிஸுந்தர மோஹனம்
பாகம் தக்ஷிணம் புருஷம் அந்யத் ஸ்திரீ ரூபிணம் ததா
ஸங்கம் சக்ரம் சாங்கு ஸஞ்ச புஷ்பபாணம்ச பங்கஜம்
இஷீசாபம் வேணுவாத்தியம்ச தாரயந்தம் புஜாஷ்டகை:
ஸ்வேத கந்தானு லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம்
ஸர்வ காமார்த்த சித்யர்த்தம் மோஹனம் க்ருஷ்ண மாஸ்ரயே
Read 17 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(