படித்து ரசித்தேன்...

ஒரு பெண் ஒரு மகானிடம்... "என் கணவருக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை வருகிறது, என்னை அவர் புரிந்துகொள்வதில்லை, தினந்தோறும் எங்களுக்குள் பிரச்சினையாகவே பொழுது விடிகிறது, என் திருமண வாழ்க்கை நிம்மதி பெற எனக்கு ஏதாவது யோசனை சொல்லுங்கள்!" என்றாள்... ஆழ்ந்த
சிந்தனைக்கு பிறகு மகான் சொல்கிறார்...

"ஊருக்கு வெளியே இருக்கும் காட்டில் ஏதாவது ஒரு விலங்கிற்கு 30நாள் உணவு கொடு... 30 நாட்களுக்கு பிறகு என்னை வந்து பார் உன் பிரச்சினைக்கான வழியை சொல்கிறேன்!" என்றார்... குழப்பத்தில் இருந்தவள், "தன் கணவருக்கும் தனக்கும் சண்டையில்லாத நிம்மதியான
வாழ்க்கை கிடைத்தால் போதும்!" என்ற எண்ணத்தில் தைரியத்துடன்...

மகான் சொல்லியது போல... அடர்ந்த காட்டிற்குள் சென்று தான் கொண்டு வந்த மாமிசத்தை ஒரு இலையில் வைத்துவிட்டு தூரத்தில் ஒரு மரத்திற்கு பின்னால் ஒழிந்து கொண்டாள்... மாமிசத்தின் வாடை காடெங்கும் வீச வெகுநாட்களாக அங்கு இரை
கிடைக்காத ஒரு புலிக்கு அந்த உணவு கிடைத்தது... இப்படியே தினமும் மாமிசம் வைப்பது அந்த நேரத்தில் சரியாக புலி வருவது... என நாட்கள் பல ஓடியது... 20நாட்களுக்கு பிறகு அப்பெண் மாமிசம் வைக்கும் அதே இடத்தில் புலி படுத்திருந்தது...

இப்பெண்ணை கண்டு புலி ஏதும் செய்யவில்லை...
பணிவுடன் அப்பெண்ணிடம் பணிந்து போனது... மாமிசத்தை வைத்துவிட்டு அவள் விருட்டென ஓடியேவிட்டாள்... 30வது நாளில் புலியிடமே தைரியமாக சென்று மாமிசம் வைத்தாள், உணவு உண்ட புலி அப்பெண்ணின் மடியிலேயே பாசமாக படுத்துக்கொண்டது... 31வது நாளில் அப்பெண்ணின் பின்னாலே அந்த புலி ஊருக்குள்
வந்துவிட்டது புலியை கண்டு மக்கள் தெறித்து ஓட அப்பெண்ணிற்கோ பயமில்லை அந்த புலி பூனை போல அவள் காலை சுற்றி சுற்றி வந்தது, இது என்ன சோதனை என்று முழி பிதிங்கியவள்... நேராக மகானை சந்திக்க வந்தாள், புலியுடன் வந்த பெண்ணை பார்த்தவர்கள் ஆங்காங்கே தெறித்து ஓடீவிட்டனர்...
பார்த்தீர்களா குரு! பிரச்சினையை தீர்க்க நான் உங்களிடம் வந்தேன். இப்போது மேலும் ஒரு புதிய பிரச்சினையை எனக்கு உருவாக்கிவிட்டீர்கள், இந்த புலி பூனையாகவே மாறிவிட்டது என் காலை சுற்றி சுற்றி வருகிறது!" என்றாள்... மென்மையாக சிரித்த அந்த மகான்...
"ஒரு உயிரை கொன்று உண்ணும் இந்த கொடிய விலங்கையே உன் அன்பினால் பூனையாக மாற்றிவிட்டாய், உன் கணவர் இந்த புலியை விடவா கொடிய குணம் கொண்டவர்!"என்றார்.

மகானின் சொல்லில் உண்மை அறிந்தவள்,அன்புதான் எல்லாவற்றையும் எல்லோரையும் மாற்றிவிடும் என்பதை உணர்ந்தாள்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Kannigaa

Kannigaa Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @BKannigaa

24 Nov
இறைவனின் கணக்கு...

ஒரு கோவில் மண்டபத்தின் வாசலில் இரண்டு வழிப் போக்கர்கள் அமர்ந்திருந்தனர். இரவு நேரம்... பெருத்த மழையும் பெய்து கொண்டிருந்தது...

அப்போது அங்கே மற்றொருவரும் வந்து சேர்ந்தார். வந்தவர் நானும் இரவு இங்கே தங்கலாமா? என்று கேட்டார். அதற்கென்ன... தாராளமாய் தங்குங்கள்
என்றார்கள்.

சிறிது நேரம் கழித்து எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா? என்றார் வந்தவர்.

இருவரில் முன்னவர் சொன்னார், என்னிடம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றது என்றார்.

இரண்டாமவர் என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றது, ஆக மொத்தம் எட்டு ரொட்டிகள். இதனை நாம் எப்படி மூவரும் சமமாய்
பிரித்துக்கொள்ள முடியும்? என்றார்.

மூன்றாம் நபர், இதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன் என்றார்.

நீங்கள் உங்கள் ரொட்டிகளை, ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகள் போடுங்கள். இப்போது இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும்! நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்து கொள்ளலாம் என்றார்.
Read 12 tweets
5 Oct
காந்தியை சுட்டு கொன்ற #கோட்சேவின் வாக்குமூலம்,ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.
டெல்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில்,காந்தி கொலை வழக்கு விசாரணை நடந்தது.1948 நவம்பர் 8_ந்தேதி கோட்சே வாக்குமூலம் கொடுத்தார்.வாக்குமூலம், ஆங்கிலத்தில் மொத்தம் 92 பக்கங்களில்
எழுதப்பட்டிருந்தது. மொத்தம் ஐந்து மணி நேரம் நின்று கொண்டே வாக்குமூலத்தை கோட்சே படித்தார். வாக்குமூலத்தில் கோட்சே கூறியிருந்ததாவது:-

காந்தியின் கொள்கையால் நாட்டிற்கு நன்மை செய்ய வேண்டும் என்று அவரின் கால்களுக்கு செருப்பாக இருக்க ஆசை பட்டு அவருடன் சேர்ந்தேன்.
தெய்வ பக்தியுள்ள பிராமணக் குடும்பத்தில் நான் பிறந்தேன். இந்துவாகப் பிறந்ததில் பெருமைப்படுகிறேன். நான் வளர வளர என் மதத்தின் மீது எனக்கு மிகுந்த பற்றுதல் ஏற்பட்டது. ஆனால் எனக்கு எவ்வித மூட நம்பிக்கையும் ஏற்படவில்லை. தீண்டாமை ஒழியவும், சாதி ஒழியவும் பாடுபட்டேன்.எல்லா இந்துக்களையும்
Read 35 tweets
13 Jul
*#பரந்தாமனின் பன்னிரு நாமங்கள்:*

எண்ணற்ற திருநாமங்களை உடைய பரந்தாமனின் ஆயிரம் திருநாமங்களை தொகுத்து பீஷ்மர்,யுதிஷ்டிரனிடம் கூறியதுதான் விஷ்ணு சகஸ்ர நாமம். அந்த ஆயிரம் திருநாமங்களை பன்னிரெண்டு திருநாமங்களாக சுருக்கி பரந்தாமனி்ன் பெருமைகளைக் கூறுவதுண்டு.அதற்கு த்வாதச எனப்பெயர்.
வைணவர்கள் மிக முக்கியமாகக் கருதும் இப்பன்னிரெண்டு திருநாமங்கள் மிகவும் மகத்துவம் வாய்ந்தவை. அந்நாமங்களும் அவற்றின் விளக்கங்களும்.

1. கேசவ - துன்பத்தைத் தீர்ப்பவன்

2. நாராயண - உயிருக்கு ஆதாரமாக இருப்பவன்

3. மாதவ - திருமகள் மணாளனாக இருப்பவன்

4. கோவிந்த - பூமியைப்
பிரளயத்திலிருந்து காத்தவன் (அ) பசுக்களை மேய்த்தவன்

5. விஷ்ணு - அனைத்துப் பொருள்களிலும் நிறைந்திருப்பவன்

6. மதுஸுதனா - புலன்களாகிய இந்திரியங்களை ஈர்ப்பவன் (அ) மது என்னும் அரக்கனை வென்றவன்

7. த்ரிவிக்ரம் - மூன்றடிகளால் உலகங்களை அளந்தவன்

8. வாமன - குள்ளமான உருவம் உடையவன்
Read 4 tweets
16 Jun
படித்ததில் பிடித்தது ...
மீ : டேய் தம்பி... இந்த கம்ப்யூட்டர் டேபிளயும், சேரையும் கொண்டுபோய் நம்ம அண்ணாவீட்ல போட்ருடா. வாடகை எவ்ளோ ?

ஆட்டோ தம்பி : உங்ககிட்ட என்ன வாடகை கேக்குறது ?. சரிண்ணா... ஒரு முன்னூறு குடுங்க...

மீ : டேய்... டேபிள், சேருக்கு ஆட்டோ போதும்டா. லாரிக்கு வாடகை
சொல்றே ?.

ஆ.த : டீசல் நூறு ரூவாண்ணா...

மீ : சரிடா... 1 லிட்டருக்கு உன்னோட ஆட்டோ 30 Km மைலேஜ் குடுக்குமா ?. இப்போ நீ வந்துபோக, ஒரு 8 Km ஆகுமா ?

ஆ.த.: அந்த கணக்கெல்லாம் போடாதீங்க. உங்க மோடி டீசல்விலைய நூறு ரூவாய்க்கு ஏத்தி வெச்சிருக்காரு. அதை மட்டும் பாருங்க...
மீ: தடுப்பூசி போட்டியா ?.

ஆ.த : போட்டாச்சு போட்டாச்சு...

மீ : எங்க தனியார் ஆஸ்பத்திரிலயா ?

ஆ.த : அரசாங்க ஆஸ்பத்திரில...

மீ : சரி... தனியார் ஆஸ்பத்திரில, தடுப்பூசி போட எவ்ளோ வாங்குறான் ?.

ஆ.த : ஒவ்வொரு ஆஸ்பத்திரி ஒவ்வொரு ரேட் வாங்குறான். 700 ரூவாலிருந்து, 1300 வரைக்கும்
Read 10 tweets
14 Jun
👣#பகவத்கீதை👣
அத்தியாயம்_4
உன்னத_அறிவு
ஸ்லோகம்_4_16
ஸ்ரீகிருஷ்ணர் கூறினார்
"கிம் கர்ம கிம் அகர்மேதி
கவயோ (அ)ப்யத்ர மோஹிதா:
தத் தே கர்ம ப்ரவக்ஷ்யாமி
யஜ் க்ஞாத்வா மோக்ஷ்யலே (அ)ஷுபாத்"
பொருளுரை;
அறிவுடையோர் கூட இவ்விஷயத்தில்,
எது செயல்? எது செயலற்றது?
என்று குழம்பியுள்ளனர். செயல்
என்பதை உனக்கு விளக்குகிறேன்.
அதை அறிவதால் துரதிர்ஷ்டத்திலிருந்து
முக்தியடைவாய்.
👣#பகவத்கீதை👣
அத்தியாயம்_4
உன்னத_அறிவு
ஸ்லோகம்_4_17
ஸ்ரீகிருஷ்ணர் கூறினார்
"கர்மணோ ஹ்யபி போத்தவ்யம்
போத்தவ்யம் ச விகர்மண:
அகர்மணஷ் ச போத்தவ்யம்
கஹனா கர்மணோ கதி:"
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(