// போலக்குளம் பீதாம்பரன் வழக்கு //

1.முகவுரை
2.ஒரு சி.பி.ஐ டைரி குறிப்பு
3.போலி மனித உடல் பரிசோதனை
4.போலக்குளம் பீதாம்பரன்
5.ஆரம்பகட்ட விசாரணை
6.சிறப்பு குற்றப்பிரிவு விசாரணை
7.உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு
8.உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
9.சி.பி.ஐ விசாரணை
10.இறுதியில் நடந்ததென்ன?
11.தடயவியல் மருத்துவர் உமாதாதன்
12.முடிவுரை
13.விவரணைகள்

# அனைத்து வழக்குகளின் தொடக்கமும் முடிவும் ஒன்றாக அமைய வேண்டிய கட்டாயமில்லை என்ற அடிப்படையில் இக்கட்டுரையை வாசிக்க வேண்டுகிறேன்.
முகவுரை

உலக சினிமாவில் கொலையை துப்பறிந்து கொலையாளியை கண்டுபிடிப்பது மிக பிரபலமான கதைக்களங்களில் ஒன்றாகும். அவ்வகையில் சுவாரஸ்யமான துப்பறியும் திரைப்படங்களின் வரிசையில் மம்முட்டி நடித்த சி.பி.ஐ திரைப்படத் தொடர் மலையாள சினிமாவில் புகழ் பெற்றது. 1988 இல் சி.பி.ஐ திரைப்படத் தொடரின்
முதல் படமாக வெளியான ஒரு சி.பி.ஐ டைரி குறிப்பு படத்தில் மம்முட்டி நடித்த சேதுராம ஐயர் சி.பி.ஐ கதாபாத்திரமும் கொலையை விசாரிக்கும் நுட்பமும் 1983 இல் கேரளாவில் பரபரப்பாக பேசப்பட்ட போலக்குளம் பீதாம்பரன் கொலையை விசாரித்த ராதா வினோத் ராஜு என்ற நிஜ சி.பி.ஐ அதிகாரியால் ஈர்க்கப்பட்டது.
ஒரு சி.பி.ஐ டைரி குறிப்பு

11-02-1988 அன்று வெளியான ஒரு சி.பி.ஐ டைரி குறிப்பு திரைப்படத்தில் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து ஓமனா (லிஸ்ஸி) விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்பட்ட நிலையில் போலி மனித உடல் (Humanoid Dummy) நுட்பத்தை பயன்படுத்தி ஓமனாவின் மரணம் தற்கொலை அல்ல
என்றும் அவர் கொலை செய்யப்பட்டார் என்றும் சி.பி.ஐ அதிகாரி சேதுராம ஐயர் (மம்முட்டி) நிரூபிப்பார். தமிழ்நாட்டில் ஒரு சி.பி.ஐ டைரி குறிப்பு திரைப்படம் ஒரு வருடம் ஓடியது மட்டுமல்லாமல் படத்தின் வீடியோ கேசட் விற்பனையிலும் சக்கை போடு போட்டது குறிப்பிடத்தக்கது.
போலி மனித உடல் பரிசோதனை

மொட்டை மாடியில் இருந்து ஒரு போலி மனித உடலை நேராக குதிப்பது போல கீழே இறக்கிவிட்டும் மற்றொரு போலி மனித உடலை யாரோ தள்ளிவிடுவது போலவும் தூக்கி எறிவர். அப்படி தூக்கி எறியப்பட்ட போலி மனித உடல்கள் தோராயமாக தரையிறங்கும் இடத்தை கண்டறிந்து அது கொலையா? தற்கொலையா?
என்பதை விசாரணை அதிகாரிகள் நிறுவிட முயல்வர்.

போலக்குளம் பீதாம்பரன்

கேரளாவில் மதுபான கடையில் பரிமாறுபவராக வாழ்க்கையைத் தொடங்கிய நாராயணன் நாளடைவில் அரசியல்வாதிகளுக்கு நெருக்கமானவராக வளர்ந்து மதுபான வியாபாரத்தில் கோலோச்சினார். 1980 காலகட்டத்தில் எர்ணாகுளம் மாவட்டம் பாலாரிவட்டத்தில்
தனது முதல் சுற்றுலா இல்லமான போலக்குளம் சுற்றுலா இல்லத்தை திறந்த நாராயணன் தனது சுற்றுலா இல்லத்தின் வரவேற்பாளராக பீதாம்பரனை நியமித்தார். பாலாரிவட்டத்தில் ஹரிஹரசுதா கோவில் அறங்காவலராக நாராயணன் இருந்து போது அக்கோவில் நிர்வாகத்தை கவனித்து கொண்டது பீதாம்பரனின் தந்தை தாமோதரன் ஆவார்.
போலக்குளம் நாராயணனின் நம்பகமான நண்பராக, நேர்மையான இளைஞராக, விசுவாசமான ஊழியராக பணிபுரிந்து வந்த பீதாம்பரன் 22-04-1983 அன்று அதிகாலை 4.30 மணியளவில் போலக்குளம் சுற்றுலா இல்லத்தின் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
ஆரம்பகட்ட விசாரணை

சில காயங்கள் கீழே குதித்ததால் ஏற்பட்டு இருக்கலாம் என்றும் சில காயங்கள் கீழே குதித்ததால் ஏற்பட்டிருக்காது என்றும் பிரேத பரிசோதனை அறிக்கை கூறியதால் இறந்தவர் முதலில் அடித்து துன்புறுத்தி பின்னர் தூக்கி எறியப்பட்டதாக உள்ளூர் காவல்துறை எண்ணியது. பிரேத பரிசோதனை
சான்றுகளை தீவிரமாக ஆய்வு செய்யாமல் உண்மையில் பீதாம்பரன் மரணம் கொலையா? தற்கொலையா? என்ற சந்தேகம் கொள்ளாமல் ஆரம்பகட்ட விசாரணையின் முடிவில் உள்ளூர் காவல்துறை கொலை வழக்கு பதிவு செய்தது.

நாராயணனின் கணக்கு பேரேட்டில் குறைவான வருமான கணக்கை எழுதி பணத்தை பீதாம்பரன் திருடியதாக,
நாராயணனின் கள்ளக் கணக்கை பீதாம்பரன் அறிந்து மிரட்டியதாக, நாராயணனின் மகளை காதல் வலையில் சிக்க வைக்க பீதாம்பரன் திட்டமிட்டதாக பல்வேறு கிசுகிசுக்கள் பரப்பப்பட்டது. இதற்கிடையே பீதாம்பரன் மரணம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி பீதாம்பரனின் தந்தை தாமோதரன் அல்வே
(Aluva) மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதை தொடர்ந்து கேரளா அரசின் கீழ் இயங்கும் சிறப்பு குற்றப்பிரிவு பீதாம்பரன் வழக்கை விசாரிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிறப்பு குற்றப்பிரிவு விசாரணை

நீண்ட கால மன அழுத்தம் பிரச்சனை காரணமாக மனநல மருத்துவரிடம்
சிகிச்சை பெற்று மருந்துகளை உட்கொண்டு வந்த பீதாம்பரன் திடீரென மருந்துகளை சில காலம் உட்கொள்வதை நிறுத்தியதன் விளைவாக ஏற்பட்ட மோசமான மனநிலையால் அவதிக்குள்ளாகி பீதாம்பரன் தற்கொலை செய்திருக்கலாம் என்று வழக்கை விசாரித்த சிறப்பு குற்றப்பிரிவு முடிவு செய்தது.
பீதாம்பரன் உடலில் இருந்த 18 காயங்களில் வலது காலின் பின்புறத்தில் இருந்த 13வது காயம் விசாரணை அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தது. அவ்வகையில் முதன்மையான தாக்கத்தை வலது காலின் பின்புறம் தாங்கி கொண்டு பீதாம்பரன் உடல் செங்குத்தாக தரையில் மோதியதாக நிரூபிக்கப்பட்டது. இதன் அடிப்படையில்
கொலைக்கான வாய்ப்பை நிராகரித்து பீதாம்பரன் மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ததாக சிறப்பு குற்றப்பிரிவு முடிவுக்கு வந்தது. மேலும் தீர ஆராயாமல் ஆரம்பகட்ட விசாரணையின் முடிவில் உள்ளூர் காவல்துறை கொலை வழக்கு பதிவு செய்தது தவறு என்றும் சிறப்பு குற்றப்பிரிவு கூறியது.
உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு

தனது மகன் பீதாம்பரனுக்கு மன அழுத்தம் பிரச்சனைகள் எதுவும் இல்லை என்றும் சிறப்பு குற்றப்பிரிவு பொய்யான ஆதாரங்களைத் தயாரித்ததாகவும் குற்றம் சாட்டி வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு கேரளா உயர் நீதிமன்றத்தை அணுகினார் தாமோதரன்.
தாமோதரன் மனுவை ஏற்றுக் கொண்டு கேரளா மாநில அரசு பீதாம்பரன் வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

நான்கு மாதங்கள் ஆகியும் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க கேரளா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஏனெனில் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு விடுப்பு மனுவை தாக்கல் செய்துள்ளதால் மேலும் மூன்று மாத கால அவகாசம் கோரி உயர் நீதிமன்றத்தில் கேரளா அரசு உடனடியாக மற்றொரு மனுவை தாக்கல் செய்தது. இறுதியாக கேரளா அரசு விசாரணையை நடத்தினாலும் வழக்கில் எந்தவொரு புதிய
ஆதாரத்தையும் அது வெளிப்படுத்தவில்லை.

இந்திய எல்லையில் உள்ள எந்தவொரு நீதிமன்றத்தின் எந்தவொரு உத்தரவுக்கு எதிராகவும் மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு சிறப்பு அனுமதியை வழங்குவதே சிறப்பு விடுப்பு மனு ஆகும்.
சி.பி.ஐ விசாரணை

கேரளா அரசின் போக்கை கண்டித்து ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் சி.பி.ஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தை நாடினார் தாமோதரன். தாமோதரன் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்டு பீதாம்பரன் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து 1986 ஆம்
ஆண்டு பீதாம்பரன் வழக்கு மீண்டும் புதிதாக விசாரிக்க சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

22-04-1983 அன்று போலக்குளம் சுற்றுலா இல்லத்தின் மொட்டை மாடியில் இருந்து விழுந்து பீதாம்பரன் தற்கொலை செய்து கொண்டதாக சிறப்பு குற்றப்பிரிவு கூறிய நிலையில் கட்டிடத்தில் இருந்து 10 மீட்டருக்கும்
அதிகமான தொலைவில் சடலம் கண்டெடுக்கப்பட்டதால் பீதாம்பரன் மொட்டை மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்டதாக சி.பி.ஐ வாதித்தது.

இதை நிரூபிக்கும் வகையில் சி.பி.ஐ அதிகாரி ராதா வினோத் ராஜு தலைமையில் வர்கீஸ் தாமஸ் உதவியில் போலி மனித உடல் நுட்பத்தை கொண்டு பரிசோதனை நடத்தியது. இறந்த
பீதாம்பரனின் எடைக்கு சமமான ஒரு போலி மனித உடல் மொட்டை மாடியில் இருந்து கீழே வீசப்பட்டது. மற்றொரு போலி மனித உடல் மொட்டை மாடியில் இருந்து தானாக விழுந்தது போல் ஒரு நொடியில் கைவிடப்பட்டது. தூக்கி வீசப்பட்ட போலி மனித உடல் கட்டிடத்தின் சுவரில் இருந்து தள்ளி விழுந்ததால் பீதாம்பரன்
கொல்லப்பட்டதாக சி.பி.ஐ முடிவு செய்தது.

இறுதியில் நடந்ததென்ன?

பீதாம்பரன் கொலைக்கான குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ தாக்கல் செய்தது. கொலை மற்றும் சதித்திட்டம் பிரிவுகளின் கீழ் போலக்குளம் நாராயணன் A-1, டிரைவர் A-2, ரூம் பாய் A-3, மேனேஜர் A-4 ஆகிய நால்வரும் குற்றவாளிகள் என்று முடிவு
செய்து ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றவாளிகள் தரப்பில் அடுத்தடுத்து மேல்முறையீடு செய்யப்பட விசாரணை நீதிமன்றம் A-4 யை விடுவித்தது உயர் நீதிமன்றம் A-3 யை விடுவித்தது ஆனால் பீதாம்பரனின் மரணம் தற்கொலை அல்ல கொலை தான் என்று தீர்ப்பளித்து A-1
மற்றும் A-2 தண்டனைகளை உறுதி செய்தது.

இறுதி வாய்ப்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தவர்களின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி இறந்தவரின் மரணம் கொலை அல்ல என்றும் அது தற்கொலை அல்லது விபத்து காரணமாகவும் இருக்கலாம் என்றும் இறந்தவர் மன அழுத்தம் பிரச்சனையால்
அவதிப்பட்டவர் என்றும் ஆதாரத்துடன் உண்மையை (Fact) நிரூபிக்காமல் பிரேத பரிசோதனை அறிக்கையை மட்டுமே வைத்துக் கொண்டு மரணம் கொலையால் நிகழ்ந்ததென ஒற்றை பார்வையில் அனுமானம் (One sided assumption) செய்ய முயல்வது தவறு என்றும் கடுமையாக வாதிட்டார்.
முடிவில் போதிய ஆதாரத்துடன் சந்தேகத்திற்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்படாததால் (Guilt should be proved beyond any reasonable doubt) பீதாம்பரன் கொலைக்கான சாத்தியம் நிராகரிக்கப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்தது உச்ச நீதிமன்றம்.
மேலும் உச்ச நீதிமன்றத்தில் போலக்குளம் பீதாம்பரன் வழக்கில் ஒன்றிய அரசின் சி.பி.ஐ முன்வைத்த வாதங்கள் ஏற்கப்படாமல் கேரளா அரசின் சிறப்பு குற்றப்பிரிவு முன்வைத்த வாதங்கள் ஏற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தடயவியல் மருத்துவர் உமாதாதன்

பீதாம்பரன் வழக்கில் சி.பி.ஐ பயன்படுத்திய போலி மனித
உடல் பரிசோதனையை அறிவியலற்றது என்றும் போலி மனித உடல் உண்மை மனித உடலுக்கு மாற்றாகக் கருதப்பட முடியாது என்றும் கட்டிடத்தின் உயரம் கூடுதலாக இருந்தால் உடல் 10 மீட்டருக்கு அதிகமான தூரத்திற்கும் குதிக்க நேரிடும் என்றும் போலக்குளம் சுற்றுலா கட்டிடத்தின் மொட்டை மாடி 20 மீட்டர் உயரத்தில்
இருந்ததும் தரையில் உடலின் இருப்பிடத்தையும் கொண்டு அது தற்கொலை என நிறுவிட முடியும் என்றும் தடயவியல் மருத்துவர் உமாதாதன் வாதிட்டார்.

சர்வதேச அளவில் பல தடயவியல் நிபுணர்களால் நடத்தப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் போலி மனித உடல் பரிசோதனையானது அறிவியல்பூர்வமற்றது என்று
நிராகரிக்கப்பட்டது. ஏனெனில் போலி மனித உடல் பரிசோதனை முடிவுகள் ஒரு தரப்புக்கு மட்டுமே சாதகமான முடிவினை தரும் வாய்ப்புகள் அதிகம் என்றும் பரிசோதனை நடைமுறைக்கு (Practical) முரணாக கோட்பாடு (Theoretical) அடிப்படையில் அமைந்தது என்றும் கட்டிடத்தின் உயரத்திற்கு ஏற்ப உடல் வீழ்ச்சியின்
தூரம் மாறுகிறது (The fall coverage increases with the height of the building) என்றும் நிரூபித்தது.

முடிவுரை

ஒரு சி.பி.ஐ டைரி குறிப்பு படத்தில் போலி மனித உடல் பரிசோதனையை பயன்படுத்தி ஓமனா தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் சி.பி.ஐ அதிகாரி
சேதுராம ஐயர் தலைமையிலான விசாரணை குழு நிரூபிக்கும். சினிமாவில் ஆய்வுக்குரிய போலி மனித உடல் பரிசோதனை சித்தரிப்பு ரசிகர்களுக்கு பெரும் நம்பகத்தன்மையை அளித்தது. ஏனெனில் உண்மை நிலவரத்திற்கு (Matter of fact) மாறாக வண்ணமயமான பொய் கருத்துக்களை தானே சினிமா ரசிகர்கள் விரும்புகிறார்கள்.
இங்கிலாந்து வழியில் உலக நாடுகள் பலவும் பின்பற்றி வரும் “ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது” என்ற கூற்று இன்று வரை விவாதப் பொருளாக தொடர்கிறது. இருப்பினும் ஜனநாயக நாட்டில் குற்றவியல் நீதி அமைப்பின் அடிப்படை கொள்கைகளில் ஒன்று சந்தேகத்தின் பலன்
எப்போதும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நீட்டிக்கப்பட வேண்டும். அவ்வகையில் பீதாம்பரன் வழக்கில் உறுதியான ஆதாரங்களுடன் கொலை குற்றம் நிறுவப்படாததால் (Lack of Concrete Evidence) உச்ச நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.
விவரணைகள்

India Today News Coverage on Peethambaran Case

indiatoday.in/magazine/crime…

Dead Men Tell Tales by Dr.Umadathan

fountainink.in/essay/tales-th…

Oru CBI Diary Kurippu Movie ((Malayalam)



Peethambaran Case Story (Malayalam)

Peethambaran Case Details - 1

indiankanoon.org/doc/1912489/

Peethambaran Case Details - 2

indiankanoon.org/doc/813560/

// My Blog //

போலக்குளம் பீதாம்பரன் வழக்கு 🔽

chocksvlog.blogspot.com/2021/12/blog-p…

வாசித்தமைக்கு நன்றி.

வணக்கம்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Chocks

Chocks Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @chockshandle

5 Dec
// கேரளாவை உலுக்கிய ஒரு மாணவரின் கதை //

ராஜனும் ராஜாக்கண்ணும்

1.முகவுரை
2.நக்சல் தாக்குதல்
3.இரு மாணவர்கள் கைது
4.விசாரணை முகாம்
5.சித்தரிப்பும் உண்மையும்
6.மக்களின் குரல் ஓங்கியது
7.தந்தையின் போராட்டம்
8.இரு முதலமைச்சர்கள்
9.வேறுபட்ட வாக்குமூலங்கள்
10.முக்கிய சாட்சியங்கள்
11.உயர்நீதிமன்றம் ஆணை
12.பதவி விலகிய முதலமைச்சர்
13.கேரளா அரசின் பதில்
14.ஒப்புக்கொண்ட பிரதிவாதிகள்
15.இறுதி நடவடிக்கை
16.ராஜனின் உடல்
17.முடிவுரை
18.விவரணைகள்

1.முகவுரை

அரசியல் ரீதியாக சுதந்திர இந்தியாவின் கருப்பு பக்கங்களில் சாதி, மதம், இனம், வர்க்கம் சார்ந்த தாக்குதல்கள் போல
நெருக்கடி நிலை (State of Emergency from 25-06-1975 to 21-03-1977) கால தாக்குதல்களும் கவனத்திற்குரியது. நெருக்கடி நிலை காலத்தின் போது கேரளா காவல்துறையால் கைது செய்யப்பட்டு விசாரணையின் போது இறந்த ராஜன் என்பவர் குறித்த வழக்கும் விசாரணையும் கேரளா அரசியலை புரட்டி போட்டது.
Read 64 tweets
3 Dec
தீடீரென மலை ஏறிய மம்தாவின் அரசியல் போக்கு அதீத கவலை அளிக்கிறது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு ஒரு சில பகுதிகளுடன் சுருங்கிவிடும்.

இந்தியா முழுக்க ஓரளவுக்கு அடிப்படை கட்டமைப்பு கொண்ட கட்சி காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தான்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸை ஆதரித்து கூட்டணி அமைத்து பா.ஜ.கவை வெளியேற்றுவதே மாநில கட்சிகளில் தலையாய கடமையாகும்.

அதைவிட்டுவிட்டு எல்லாரும் தலைப்பாகை கட்ட ஆசைப்பட்டால் மக்கள் தலையில் துண்டை போட்டு போக வேண்டியது தான்.

பாடாய் படிக்கிறோம் ஆனால் மம்தா போன்றவர்கள் கேட்பார்களா?
மாநில அளவில் Second Thought இல்லாமல் தி.மு.க மட்டுமே காங்கிரஸை ஆதரிக்கிறது.

அதையே அனைத்து மாநில கட்சிகளும் செய்ய முன்வர வேண்டும்.

2024 இல் மாற்றம் அவசியம் வர வேண்டும்.

இல்லையேல் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் மட்டுமே இந்தியாவில் ஓரளவுக்கு நிம்மதியாக வாழ முடியும்.
Read 6 tweets
2 Dec
Motels பத்தி பேசுற உனக்கு Public Transportation பத்தி என்னப்பா தெரியும்னு ஒருத்தரு ஏளனமாக கேட்குறாரு.

சரி, சுருக்கமா சொல்றேன்!

இந்தியாவில் Unorganised Business Sector இல் Public Transportation முக்கிய இடம் வகிக்கிறது.

Lorry, Bus தொழில் பற்றி நன்கு அறிந்துள்ளேன்.
பல விதமான தொழிலிலும் ஈடுபடும் Reliance, Tata, Birla போன்ற Giant Corporates கூட தற்போது வரை Public Transportation தொழில் செய்யல. (இந்நிலை எதிர்காலத்தில் மாறினால் அப்போது பார்ப்போம்).

காரணம் இத்தொழில் இந்திய அளவில் அவ்வளவு Unorganised ஆ இருக்கு.

பல Driver's சொல்றத கேட்குறதில்ல.
Driver's உடன் கூட்டு சேர்ந்து Depot Supervisor "Lorry, Bus Repair Services" ன்னு பொய் சொல்லி காசை ஆட்டைய போடுறது எழுதப்படாத சட்டம்.

இவனுங்க ஒவ்வொரு பிரச்சினைக்கும் முழிய டைப் டைப்பா மாத்துவாங்க.

எல்லாரும் ஒன்று தான் என்று குற்றம் சாட்ட முடியாது ஆனால் பலரும் உண்டு.
Read 6 tweets
1 Dec
// மறுபிறவி (Reincarnation) பற்றி உங்கள் கருத்து என்ன? //

# இது கடவுள் அல்லது பேய் குறித்த கேள்வி அல்ல.

# ஓவியத்தின் ஆன்மா கவிதை ஆவது, புத்தகத்தின் ஆன்மா திரைப்படம் ஆவது, திரைப்படத்தின் ஆன்மா மனிதர்களை மாற்றுவது என்பது போல உடலில் உள்ள ஆன்மா என்னவாகும்?
# ஏன் குழந்தைகளுக்கு இறந்த முன்னோர்களின் பெயரை வைக்க வேண்டும்?

# ஒரு கைக்கடிக்காரம் உடைந்துவிட்டால் அதன் காலம் முடிந்தது என்று பொருள். அது போல ஒரு மனிதனின் மரணம் நிகழ்ந்தால் அத்துடன் கதை முடிந்தது என்று எடுத்துக் கொள்ளலாமா?
# இவ்வுலகில் ஆக்கிய எந்த ஒரு பொருளையும் முற்றிலும் அழிக்க முடியாது அதாவது உருமாற்றம் செய்ய இயலுமே தவிர இல்லாமல் செய்துவிட முடியாது.

# காகிதத்தை கிழித்தால் துண்டுகள் ஆகும்.

# மனிதனை எரித்தால் சாம்பல் ஆகும்.

# இலையை மாடு உண்டால் அது சாணத்தில் கலந்து கோழிக்கு தீவனம் ஆகலாம்.
Read 6 tweets
28 Nov
// மும்பை நிழல் உலகம் //

சுருக்கம்

1.முகவுரை
2.ஹாஜி மஸ்தான்
3.வரதராஜன் முதலியார்
4.கரீம் லாலா
5.தாவூத் இப்ராஹிம்
6.அபு சலேம்
7.அருண் கவ்லி
8.ராஜன் வகையறா
9.முடிவுரை
10.விவரணைகள்
1.முகவுரை

இன்றைய தேதியில் இந்தியாவில் 28 மாநிலங்களும் 8 ஒன்றியப் பகுதிகளும் இருக்கிறது அதில் கிட்டத்தட்ட 748 மாவட்டங்கள் இருக்கிறது அதில் இரண்டு மாவட்டங்கள் குற்றங்களின் தலைநகரம் என வர்ணிக்கப்படுவது உண்டு. அவை முறையே மும்பை மற்றும் பெங்களூரு.
அதற்கு காரணம் வட இந்தியாவின் பொருளாதார தலைநகரம் மும்பை தென் இந்தியாவின் பொருளாதார தலைநகரம் பெங்களூரு. இங்கு நடக்கும் குற்ற செயல்களை யாரும் அவ்வளவு எளிதில் கட்டுப்படுத்தவோ தடுக்கவோ இயலாது.
Read 99 tweets
26 Nov
ஊருக்குள் ஒருத்தர் தலப்பா கட்டுனா உடனே எல்லாரும் தலப்பா கட்டனும்னு நினைச்சா அந்த ஊரு விளங்க வாய்ப்பில்ல.

ஒரே ஒரு சூரியன் மாதிரி ஒரே ஒரு ராஜா தான்.

அனைத்து தரப்பையும் சமமாக பாவித்து சமூக நீதியை கொண்டு சேர்க்க முயலும் தி.மு.கவுக்கு கூட சில தேர்தலில் மக்கள் ஆட்சியை ஒப்படைக்கல்ல.
சூழல் அப்படியிருக்க ஜெய் பீம் பட சர்ச்சைக்கு பின் சீமான் போன்று ஆட்டம் காட்டும் சில்வண்டு போல மீ்ண்டு(ம்) "ஆண்ட பரம்பரை" என்று மார்தட்டி பேச கிளம்பியுள்ள பா.ம.க என்ன அடிப்படையில் ஆட்சியை பிடிக்க நினைக்கிறது?

இது தான் மாற்றம் முன்னேற்றம் அன்புமணியா?
ராமதாஸின் ஆண்ட பரம்பரை பேச்சை அவரது குடும்பத்தினர் பேரன் பேர்த்திகள் ஏற்கிறார்களா?

நீங்கள் ஆண்ட பரம்பரை என்று பேசி ஆட்சிக்கு வர எண்ணினால், நீங்கள் உங்களுக்கு கீழ் அடிபணிந்து நடக்க ஒரு அடிமை பரம்பரையை உயிரூட்டி வளர்த்தெடுக்க விரும்புகிறீர்கள் என்று தானே பொருள் வரும்!
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(