வெல்லவே முடியாதது..." #தர்மம்"

மஹாபாரதப்போர் 18 நாள் யுத்தம் வெற்றி பாண்டவர்களுக்கு ஆனால், ஒரு விஷயம் கெளரவர்கள் பக்கத்தில் எப்பேர்ப்பட்ட மஹா ரதர்கள் — துரியோதனன், பீஷ்மர், துரோணர், கர்ணன், ஜயத்ரதன் என்று மிகப் பெரிய பட்டியல்...
இவர்களை எப்படிப் #பாண்டவர்கள் வென்றார்கள்...?

#ஸ்ரீ_கிருஷ்ணர் இல்லாவிட்டால் பாண்டவர்கள் வெற்றி பெற்றிருக்கவே முடியாது.

1) ஜயத்ரதன்
2) பீஷ்மர்
3) துரோணர்
4) கர்ணன்
5) துரியோதனன்
6) விதுரர்
இவர்களின் வீழ்ச்சிக்காகக்
ஸ்ரீ கிருஷ்ணர் தீட்டிய திட்டம் தான் வெற்றியை தந்தது. இதில் யாரை வீழ்த்த தீட்டிய திட்டம் சிறப்பு வாய்ந்தது தெரியுமா? அநேகப் பேர் கர்ணனின் வீழ்ச்சிக்குக் ஸ்ரீகிருஷ்ணர் தீட்டிய யுக்தி தான் சிறப்பு வாய்ந்தது என்று நினைப்பார்கள்.
இன்னும் சிலபேர் ஜயத்ரதனைக் கொல்ல சூரியனை மறைத்தது தான் உயர்ந்தது என்றும் நினைக்கலாம்.இதே மாதிரிதான் பீஷ்மர், துரோணர் இவர்களுக்கு எதிராக எடுத்த முயற்சிகள்...

ஆனால் சரியான விடை...
#விதுரருக்காக ஸ்ரீகிருஷ்ணர் தீட்டிய திட்டம் தான் சிறப்பு வாய்ந்தது. இது என்ன புது குழப்பம்? விதுரர் எங்கே சண்டை போட்டார்? அவரை வீழ்த்தக் ஸ்ரீகிருஷ்ணன் ஏன் திட்டம் போட வேண்டும்? என்ற கேள்விக்கு விடை சொல்லும் முன்... யுத்தம் நடக்கும் முன்பு நடந்த சம்பவங்களை பார்ப்போம்...
முதலில் விதுரரை பற்றி தெரிந்து கொள்வோம்...

யார் இந்த விதுரர்? விதுரர்...திருதராஷ்டிரருக்கும், பாண்டுவுக்கும் தம்பி...அதாவது, பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் சித்தப்பா...விதுரரின் தாயார் ஒரு பணிப்பெண்ணாக இருந்தவர். விதுரர் மகா நீதிமான்...தருமத்திலிருந்து சிறிதளவும் நழுவாதவர்..
தருமத்திலிருந்து சிறிதளவும் நழுவாதவர்...தர்மராஜர்... அப்பழுக்கில்லாதவர்...

'பெண்களை தாயாக, சகோதரியாக, மனைவியாக, மகளாக என எந்த நிலையிலும் அவர்களை உயர்வாக வைத்து போற்ற வேண்டியவர்கள்' என தர்ம சாஸ்திரம் சொல்கிறது.
திரெளபதியை துச்சாதனன் துகில் உரியும்போது விதுரர் ஒருவரை தவிர மற்ற பெரிய வீரர்கள் அனைவரும் வாய் திறக்காமல் மெளனமாகத்தானே இருந்தார்கள். அதற்கான தண்டனை தான், விதுரரை தவிர மற்ற பெரிய வீரர்கள் அனைவருக்கும் யுத்தத்தில் மரணம் அடைய வேண்டும் என்பது தர்மத்தின் நியதி.
கெளரவர் பக்கத்திலிருந்து போராடும் பெரிய பெரிய வீரர்களை வீழ்த்தக் ஸ்ரீகிருஷ்ணர் போட்ட திட்டங்கள் அவ்வளவு கடினமானது இல்லை. ஏனெனில், ஒவ்வொருவருக்கும் ஒரு பலஹீனம் இருந்தது. எனவே அவர்களை எளிதில் வீழ்த்த முடிந்தது.
ஆனால், மேற்கண்ட பண்புகளால் விதுரரை மட்டும் வீழ்த்தவே முடியாது.விதுரர் 'வில்' எடுத்தால் அவரை ஜெயிக்கவே முடியாது. யுத்தம் என்று வந்தால் மற்ற பெரியவர்கள் - பீஷ்மர், துரோணர் போல் விதுரரும் செஞ்சோற்றுக் கடனுக்காக, கெளரவர்கள் பக்கம் நின்று போரிட்டால் பாண்டவர்கள் வெற்றி பெற முடியாது.
மஹாபாரதப் போரின் முடிவே வேறே மாதிரி ஆகி இருக்கும். அதனால் எல்லோரையும் விட மிக முக்கயமான நபர் விதுரர்தான். அவர் கெளரவர்களுக்காக நிச்சயம் போரிடக் கூடாது. மேலும், தர்மநெறி படி விதுரர் போரில் மரணமடைய கூடிய நியதியும் கிடையாது.
விதுரரை போரிடாமல் எப்படி தடுப்பது? ஸ்ரீகிருஷ்ணர் தர்ம வியூகம் அமைக்கிறார். அதன்படி, பாரதப்போரைத் தடுக்க, ஸ்ரீகிருஷ்ணர் பாண்டவர்களுக்காகத் தூது செல்கிறார்.கிருஷ்ணர் வருகிறார்' என்று தெரிந்ததும் திருதராஷ்டிர மகாராஜா தடபுடல் வரவேற்பு எற்பாடு செய்திருந்தார்.
துரியோதனன் சபைக்குச் செல்லும் நாளுக்கு முந்தின இரவு, 'ஸ்ரீகிருஷ்ணர் யார் வீட்டில் தங்குவார்?' என்ற கேள்வி பிறந்தது. நான், நீ என்று எல்லோரும் அவரை அழைத்தார்கள்.
ஸ்ரீகிருஷ்ணரோ, “நான் தூதுவன்... என் வேலை வெற்றி பெற்றால்தான் உங்கள் உபசரணைகளை ஏற்றுக்கொள்வேன். இப்போது இந்த இரவில் நான் விதுரர் வீட்டுக்குச் சென்று என் பொழுதைக் கழிக்க விரும்புகிறேன்...” என்றார். விதுரருக்கு மகா சந்தோஷம்.
தனக்கு பிரியமான கிருஷ்ணர் தன் விருந்தினராக வருவதைப் பெரும் பாக்கியமாகக் கருதினார்.

விதுரர் வீட்டில் கிருஷ்ணர் இரவு பொழுதைக் கழித்தார்...
மறுநாள், அரச சபையில் ஸ்ரீகிருஷ்ணர் பாண்டவர்களுக்காக வாதாடினார். துரியோதனன், "ஒரு ஊசி முனை நிலத்தைக்கூடப் பாண்டவர்களுக்குக் கொடுக்க முடியாது." என்று சொல்லி கிருஷ்ணரையும் அவமதித்துப் பேசினான். கிருஷ்ணரும், "யுத்தம் நிச்சயம்..." என்று சொல்லிவிட்டு பாண்டவர் முகாமுக்குத் திரும்பினார்.
வழியில்..
கிருஷ்ணருடைய சாரதி, "சுவாமி! எந்த நோக்கத்தில் நீங்கள் விதுரர் மாளிகையில் தங்க நிச்சயத்தீர்கள்? என்றான்.
கிருஷ்ணா் சொன்னார், "அனைத்தும் நல்லதுக்கே... இதன் விளைவு இப்போது துரியோதனன் சபையில் நடந்து கொண்டிருக்கிறது...” என்று சொல்லி சிரித்தார்.

அதேபோன்று...
அப்போது துரியோதனன் சபையில் எல்லோரும் துரியோதனனிடம் கெஞ்சி, 'கிருஷ்ணா் பேச்சைக் கேட்டு யுத்தத்தை தவிர்க்க வேண்டும்’ என்று வாதாடினார்கள். அதில் விதுரர் குரல் தான் ஓங்கி ஒலித்தது. ஏற்கனவே துச்சாதனன் துயில் உறியும் போது விதுரர் தட்டி கேட்டது..
பாண்டவ தூதரான கிருஷ்ணரை விதுரர் தன் வீட்டில் முதல் நாள் இரவு தங்கவைத்து உபசாரம் செய்தது. என துரியோதனனுக்கு விதுரர் மேல் வெறுப்பு இருந்தது..
இதன்மூலம் அவர் பாண்டவர்கள் கட்சி என்றும் ஒரு நினைப்பு. இப்போதும் விதுரர், கிருஷ்ணர் பேச்சைக் கேட்டு கொண்டு போரை நிறுத்த வாதாடியதும்,
துரியோதனனுக்குக் கோபம் பொத்துக் கொண்டுவந்தது.என்ன பேசுகிறோம் என்ற நினைப்பில்லாமல் நாக்கில் நரம்பின்றி விதுரரை அவமானப்படுத்திப் பேசினான். குறிப்பாக அவரை ‘தாசி புத்திரன்’ என்று திட்டித்தீர்த்தான் இதனால் விதுரர் மிகுந்த அவமானமடைந்தார்.
ஆவேசமடைந்த விதுரர் சபையோர்கள் நடுங்க #சபதமிட்டார். "உனக்கு அழிவு காலம் நெருங்கி விட்டதடா துரியோதனா!. இனி உனக்காக நான், என் வில்லை எடுத்துப் போரிட மாட்டேன். அதே சமயம் நான் பாண்டவர்கள் பக்கமும் செல்லமாட்டேன்.
எனக்கு இங்கே இனிமேல் வேலையில்லை.” என்று சொல்லித் தன்னுடைய வில்லை இரண்டாக உடைத்துவிட்டு சபையிலிருந்து வெளியேறினார்.
யுத்தம் முடியும் வரை அவர் தீர்த்த யாத்திரையிலிருந்து திரும்பவில்லை.இப்பொழுது புரிந்து இருக்கும் ஸ்ரீகிருஷ்ணர், விதுரர் வீட்டில் ஏன் தங்கினாரென்று.
தங்காமல் இருந்தால் விதுரர் வில்லை உடைத்து வெளியேறியிருப்பாரா?
துரியோதனனுக்காகப் போராட வேண்டிய ஒரு கட்டாயம் விதுரருக்கு வந்திருக்கும் அல்லவா? விதுரர் வைத்திருந்த 'வில்' தர்ம சக்கரம் கொண்ட மஹாவிஷ்ணுவின் வில். 'கோதண்டம்' எனப்படும் அந்த வில்லை எவராலும் வெல்ல முடியாது.
அர்ஜுனன் கையில் உள்ள வில் பிரம்மாவுடையது. 'காண்டீபம்' என்பது அதன் பெயர். போரில் விதுரர் கோதண்டத்துடன் வந்து நின்று விட்டால் ஆனானப்பட்ட அர்ஜுனனால் கூட தன் வில்லான காண்டீபம் கொண்டு அவரை வெல்ல முடியாது!
இதுவே பாண்டவர்களுடைய வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்து விட்டது...!

தர்மராஜனான விதுரரை ஜெயிக்கவே முடியாது என்ற தர்மம் உணர்ந்த ஸ்ரீகிருஷ்ணர் செய்த மஹா தர்ம யுக்தி தான் மஹாபாரத வெற்றி...!
தர்மத்தை யாராலும் வெல்ல முடியாது. தர்மத்தை போற்றுவோம்.
நம் சந்ததியினர் தர்மத்தை கடைபிடிக்க முன்னுதாரனமாக இருப்போம் ..!

#சர்வம்_ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்..

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அகண்ட பாரதம் Akhand Bharath अखंड भारत 🇮🇳

அகண்ட பாரதம் Akhand Bharath अखंड भारत 🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @santhastwitz

17 Dec
வைகுண்ட ஏகாதசி
கடந்த வாரம் வைகுண்ட ஏகாதசி அன்று அரங்கனைச் சேவித்து, பரமபத வாசலையும் கடந்து ... மணல்வெளியில் காற்றாட சிறிது நேரம் அமர்ந்திருந்தேன்.

"அதான் சொர்க்க வாசலை தாண்டியாச்சுல்ல.. சரி.. அப்போ வா போலாம்.."
என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டுப் பார்த்தேன்.
அவன்தான்... அந்தக் குட்டிக் கண்ணன் கள்ளச் சிரிப்போடு நின்று கொண்டிருந்தான்.
'எங்க கூப்பிடற கண்ணா?'

"சொர்க்கத்துக்கு... அங்க போகணும்னுதானே இவ்ளோ நேரம் வரிசையில நின்னு கும்பல்ல முட்டி மோதி வந்த... அங்கதான் கூட்டிப்போறேன் வா..!"
'விளையாடாத கண்ணா.. எனக்குக் குடும்பம் இருக்கு... பிள்ளைங்க இருக்காங்க.. திடீர்னு இப்படி என்னைக் கூப்பிட்டா... நான் இல்லாம அவங்க என்ன பண்ணுவாங்க?'
"இந்த உலகத்தையே பார்த்துக்கிறவன் நான்.. உன் குடும்பத்தைப் பார்த்துக்க மாட்டனா?"
Read 22 tweets
1 Nov
அழகான இளம்பெண்ணுக்கு முகேஷ்_அம்பானி சொன்ன பதில்!

பூஜா என்ற ஒரு அழகான இளம்பெண், ‘பணக்கார ஆண்மகனை திருமணம் செய்து கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று இணையதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இது குறித்து பூஜா கூறியதாவது, ‘என் வயது 25 நான் பார்க்க மிகவும் அழகாக இருப்பேன். ஸ்டைல் மற்றும் நல்ல ரசனை உள்ள பெண். நான் வருடத்திற்கு நூறு கோடிக்கு மேல் சம்பாதிக்கும் ஆண் மகனை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்?’ என்றார்.
இந்த பதிவை பார்த்த முகேஷ் அம்பானி அப்பெண்ணிற்கு பதில் அளித்து கூறியதாவது,

‘உங்களை போல பல பெண்கள் இந்த சந்தேகத்துடன் உலாவி வருகிறார்கள். ஒரு முதலீட்டாளராக உங்கள் இந்த சந்தேகத்திற்கு, ஒரு நல்ல தீர்வை தர நான் விரும்பிகிறேன். எனது வருட சம்பாத்தியமும் நூறு கோடிக்கு மேலானது தான்.
Read 8 tweets
20 Sep
#தோற்று_போகலாம்.

தஞ்சையில் இருந்து,
சென்னைக்கு பத்திரிகை
பணிக்கு வந்த போது
நல்ல சம்பளம்தான்.
ஆனாலும் ஊதாரி.
வீட்டுக்கு போன் போட்டு,
ஏதாவது பொய் சொல்லி,
“ ரெண்டாயிரம்
மணியார்டரில்
அனுப்புங்கப்பா” என்பேன்.
(அப்போது நெட் பேங்க்கிங்
கிடையாது)
அப்பாவும் உடனடியாக
அனுப்பி விடுவார்.
(சம்பளத்தைவிட
அதிகமாக அப்பாவிடம்
வாங்கியிருக்கிறேன்.)

மணியார்டரில் பணம்
அனுப்பும் போது, அந்த
ஃபாரத்தில் சில வரிகள்
ஆங்கிலத்தில் எழுதி
அனுப்புவார் அப்பா.
(ஆங்கிலத்திலும் மிகப்
புலமை பெற்றவர்)
அதைக் கையால்
எழுதாமல், யாரிடமாவது
தட்டச்சு செய்து அனுப்புவார்.
அது அவரது வழக்கம்.
ஒவ்வொரு முறையும்,
“மை டியர் சன்.. (my dear son)”
என்று ஆரம்பிக்கும் அந்த
குறுங் கடிதம்....

ஒரு முறை மணிஆர்டர்
வந்த போது , அதில்
தட்டச்சியிருந்த
வார்த்தையைப் பார்த்து
அதிர்ந்தேன்.
Read 17 tweets
19 Sep
உறவுகள் மேம்பட A to Z

மனிதன் தன் அறிவியல் ஆற்றல் மூலம் வாழ்க்கையை வசதியாக்கிக் கொண்டான். ஆனால் இனிமையாக்கிக் கொள்ள தவறிவிட்டான். இனிய வாழ்க்கைக்கு சுமுகமான உறவு அவசியம் அது மேம்பட வழிகாட்டுகிறது இந்த 26 வார்த்தைகள்!
*A - Appreciation*

மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.

*B - Behaviour*

புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.
C - Compromise*
அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். மனம் திறந்து பேசி சுமூகமாக தீர்த்துக் கொள்ளுங்கள்.

*D - Depression*

மற்றவர்கள் புரிந்து கொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்.

*E - Ego*

மற்றவர்களை விட உங்களை உயர்வாக நினைத்துக் கொண்டு கர்வப்படாதீர்கள்.
Read 13 tweets
17 Sep
இயற்கையும் விவசாயியும்

ஒரு விவசாயி இடத்தை வாங்கும் முன், முதல் நாள் இரவு ஒரு சேவலோடு போய் தங்குவார்.

விடியற்காலையில் சேவல் வழக்கம் போல் கூவினால் மண்ணில் ‘உயிர்’ இருக்கிறது என்று கூறிக்கொள்வார்களாம்.
கூவாவிட்டால் ‘மண்ணில் சத்து இல்லைன்னு அர்த்தம்’ என்று தனக்கு உள்ளேயே சொல்லிக் கொள்வாராம்.

மொத்தத்தில் சேவல் நன்றாக கூவினால் மட்டுமே அந்த இடத்தை வாங்குவார். இதிலுள்ள முக்கியமான உண்மை என்னவென்றால் சேவல் மண்ணைக் கிண்டும் போது அதனுள் உள்ள புழுக்களை தின்று மறுநாள் தெம்பாகக் கூவும்.
மண்ணை தோண்டி புழு கிடைக்கவில்லை என்றால் அந்த கூவலின் ஆற்றலில் அது தெரிந்துவிடும். புழு அதிகம் இருக்கும் மண் விவசாயத்திற்கு ஏற்றது என்பது அனுபவசாலிகள் வாக்கு.
Read 6 tweets
13 Sep
#தனது எட்டாவது வயதில் துறவறம் மேற்கொண்டு, அத்வைத சித்தாந்தத்தை இவ்வுலகுக்கு அளித்த ஆதி சங்கரர் #வாழ்ந்தது #வெறும் 32 #வருடங்கள் மட்டுமே.
எட்டு வயது பாலகனுக்கு என்ன தெரியும் ?
ஆனால், அவன் அந்த வயதில் துறவறம் மேற்கொள்ளவிருக்கும் செய்தியை அறிந்து அதிர்ந்துபோன அவனது தாய் ஆர்யாம்பாளுக்கு, தான் சந்நியாசம் மேற்கொள்ள கலங்கிய மனதோடு சம்மதித்த அந்த தாய்க்கு, ஆறுதலாய் ஒரு வாக்களிக்கிறான், சங்கரன்
“ அம்மா, நீ என்னை எப்போது அழைத்தாலும், நான் இந்த உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், அக்கணமே உன் முன் இருப்பேன்”.
இன்புற்ற தாய், தன் பிள்ளையைப் பிரியச் சம்மதிக்கிறாள்.
தாயின் இறுதிக்காலம் நெருங்குகிறது. தன் பிள்ளை இந்த உலகை உய்விக்கப் பிறந்தவன் என்று அறிந்துகொண்ட அந்தத் தாய்
Read 19 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(