ஒரு சமயம் புனித யாத்திரை மேற்கொண்டிருந்த *அர்ஜுணன்* திருமலை சென்று ஶ்ரீரங்கம் நோக்கி வந்து கொண்டு இருந்தான். அப்போது ஓரிடத்தில் களைப்பினால் தாகம் ஏற்பட்டது.
அருகிலிருந்த அகத்திய முனிவர் தன் ஆசிரமத்திற்கு வந்து நீர் அருந்தி தாகத்தை தீர்த்துக் கொள்ள சொன்னார். ஆசிரமத்தில் இருவரும் சென்றபோது துரதிர்ஷ்டவசமாக ஆசிரமத்திலும், அவர் வைத்திருந்த கமண்டலத்தில் நீர் இல்லாது போனது.
இது *கண்ண பெருமான்* னின் லீலை என்பதை உணர்ந்தார் முனிவர். கண்ணனை நோக்கி பிராத்திக்குமாறு சொல்ல, அர்ஜுணனும் கண்ணனை பிரார்த்தனை செய்தான்.
அங்கு தோன்றிய கண்ணன் அர்ஜுணன் கையில் ஒரு வாளைக் கொடுத்தார். அர்ஜூணன் அந்த வாளைக் கொண்டு தரையில் ஒரு கோடு கிழிக்க, நீரூற்று தோன்றி அர்ஜூணனின் தாகத்தை தீர்த்தது.
இந் நிதழ்வு சீர்காழிக்கு அருகேயுள்ள *திருநாங்கூர்* எனும் திருத்தலத்தில் நடைபெற்றது. இக் கோவிலின் தெற்குப் பகுதியில் உள்ள இந்த தீர்த்தத்தை *கட்க புஷ்கரணி* என்று அழைக்கின்றனர்.
108 திவ்ய தேசங்களில் ஒன்றாக போற்றப்படும் இத்தலத்தில் அர்ஜுணன் கையில் வாளோடு காட்சி தருகிறான். இதனால் இத்தலம் *பார்த்தன் பள்ளி* என்று அழைக்கப்படுகிறது.
இதையடுத்து அர்ஜூணன் *ஶ்ரீரங்கம்* சென்று *ஶ்ரீரங்கநாதர்* ஐ தரிசித்தாராம். இதனை நினைவுகூறும் வகையில் ஶ்ரீரங்கம் கோவிலில் உள்ள மண்டபம் *அர்ஜூணன் மண்டபம்* என்று அழைக்கப்படுகிறது.
*சர்வம் கிருஷ்ணார்ப்பணம்*
🇮🇳🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அனுமனை வணங்குபவர்களை சனிபகவானும் அண்டமாட்டான் என்பது நம்பிக்கை. 🙏🇮🇳1
ஓ ராமா! உன் நாமாவையோ, இந்த அனுமன் நாமாவையோ யார் கூறுகிறார்களோ, அவர்களிடம் நான் ஒரு நொடி கூட இருக்க மாட்டேன், என்று ராமனிடம் சத்தியம் செய்து விட்டு சனி பகவான் தன் இருப்பிடம் சென்றதாக கூறுவர்.🙏🇮🇳2
ராமாயண கதாநாயகன் ராமனின் வலதுகரமான ஆஞ்சநேயர் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர். அனுமனை சிவனின் அவதாரம் என கூறுவதுண்டு. வாயுபகவானுக்கும், அஞ்சனாதேவிக்கும் மகனாக பிறந்த அனுமனுக்கு பவனசுதன், மருத்சுதன், பவனகுமார், பஜ்ரங்கபலி, மகாவீரர் என்ற பெயர்களும் உண்டு.🙏🇮🇳3
ஒரு நாள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பூலோகம் வந்து மானிடர்களை பார்த்து விட்டு செல்லலாம் என எண்ணி நகர்வீதி உலா வந்தாராம்.
சாதாரண மனிதர் உருவில் வந்த ஸ்ரீ கிருஷ்ணரை அடையாளம் கண்டு கொண்ட பக்தர் ஒருவர் அப்பனே !
"பூலோகத்தில் வந்த உங்களை சந்தித்ததில் எனக்கு பெரும்
மகிழ்ச்சி "! என்றார் .
அதற்கு பரவாயில்லை சாதாரண மனித உருவில் வந்தாலும் கண்டு கொண்டாய், சரி நான் பூலோகத்தில் சில மனிதர்களை சந்திக்க வேண்டி உள்ளது . என்னுடன் வாருங்கள் என அழைத்துச் சென்றார் .
பக்கதரும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அழைப்புக்காக உடன் சென்றார் .
சிறிது தூரம் சென்றதும் " பக்தா, எனக்கு தண்ணீர் தாகமாக உள்ளது. இந்த செல்வந்தர் வீட்டில் தண்ணீர் வாங்கி வா என கட்டளையிட்டார் .
பக்தரும் மறுப்பேதும் சொல்லாமல் அந்த செல்வந்தர் வீட்டு கதவை தட்டினார் .
கடவுளைத் தேடி... எனும் தலைப்பில் வங்க மொழியில் கவிதைகளை எழுதியுள்ளார். அதுபற்றி வெகு சிலருக்கேத் தெரியும். அதனைத் தமிழிலும் மொழிபெயர்த்துள்ளனர்.
அவற்றினை திருமதி.சௌந்திரா கைலாசம் என்பவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். மீராபாய், கபீர்தாஸ், ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்றவரின் கவியில் உள்ள ஆழம், இவற்றிலும் உண்டு.
எடுத்துக்காட்டாக..
அனைத்தும் ஆகி அன்பாகி அமைபவன் அவனே அவன்தாளில் உனதுளம் ஆன்மா உடல் எல்லாம் உடனே தருக என் நண்பா இவைகள் யாவும் உன்முன்னே இருக்கும் அவனின் வடிவங்கள் இவைகளை விடுத்து வேறெங்கே இறைவனைத் தேடுகின்றாய்
சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda, ஜனவரி 12, 1863 - ஜூலை 4 1902) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின்
தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார்.
இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta). இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துகள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன.
இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத
வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்.
1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய
சொற்பொழிவுகள்
உலகப்புகழ் பெற்றது.
சிவனிடம் சாகா வரம் பெற்ற தஞ்சகன், தண்டகன், தாராசுரன் எனும் மூன்று கொடிய அசுரர்கள் பராசர் எனும் மகரிஷியையும், அவருடன் தவம் செய்து வந்த முனிவர்களையும் தொந்தரவு செய்தனர். 🙏🇮🇳1
கலக்கமடைந்த பராசரர் மகாவிஷ்ணுவிடம் வேண்டினார். அப்போது மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம், வராக அவதாரம் எடுத்து தஞ்சகன், தண்டகனை வீழ்த்தினார். பின் காளியை அனுப்பி தாரகனை வதம் செய்ய அருளினார். மூன்று அசுரர்களும் அழிக்கப்பட்ட பிறகு அவர்; பராசரருக்கு நீலமேகப்பெருமாளாக காட்சி தந்தார். 🙏🇮🇳2
இவர; மூன்று திருநாமங்களில் தனித்தனி கோயில்களில் இத்தலத்தில் அருள்புரிகிறார்.
பெருமாள் பக்தன் ஒருவன், தன்
பூலோக வாழ்வை முடித்து
வைகுண்டம் சென்றான்.
பெருமாள் சயனத்தில் இருந்தார்.
அருகில், லட்சுமி அமர்ந்து அவரது
கமலமுகத்தை மகிழ்வுடன்
நோக்கியபடியே, திருவடிகளை
பிடித்து விட்டுக்கொண்டிருந்தாள்.
பக்தன் பெருமாள் முன் நின்று
சேவித்தான். பூலோகத்தில், அவன்
செய்த நன்மைகளைப் பாராட்டிய
பெருமாள், ""பூலோகத்தில்
எல்லா இன்பங்களையும்
அனுபவித்தவன் நீ.
வைகுண்டத்திலும் இன்பவாழ்வு
நடத்து,'' என்றார்.
பக்தன் அவரிடம், ""பெருமாளே!
எனக்கு பூலோகத்தில் இன்பமான
வாழ்வு கிடைத்தது உண்மை.
ஆனால், ஒரே ஒரு கேள்விக்கு
மட்டும் பதில் கிடைக்கவில்லை
என்ற குறையுடன் இங்கு
வந்துவிட்டேன்,'' என்றான்.