அருள்மிகு #நீலமேகப்பெருமாள் (மாமணி) கோயில், தஞ்சாவூர்

சிவனிடம் சாகா வரம் பெற்ற தஞ்சகன், தண்டகன், தாராசுரன் எனும் மூன்று கொடிய அசுரர்கள் பராசர் எனும் மகரிஷியையும், அவருடன் தவம் செய்து வந்த முனிவர்களையும் தொந்தரவு செய்தனர். 🙏🇮🇳1
கலக்கமடைந்த பராசரர் மகாவிஷ்ணுவிடம் வேண்டினார். அப்போது மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம், வராக அவதாரம் எடுத்து தஞ்சகன், தண்டகனை வீழ்த்தினார். பின் காளியை அனுப்பி தாரகனை வதம் செய்ய அருளினார். மூன்று அசுரர்களும் அழிக்கப்பட்ட பிறகு அவர்; பராசரருக்கு நீலமேகப்பெருமாளாக காட்சி தந்தார். 🙏🇮🇳2
இவர; மூன்று திருநாமங்களில் தனித்தனி கோயில்களில் இத்தலத்தில் அருள்புரிகிறார்.

🙏🇮🇳3
சக்கரத்தாழ்வாரான பெருமாள்:

வீரநரசிம்மர் கோயிலில் சக்கரத்தில் மகாவிஷ்ணுவே சக்கரத்தாழ்வாராக இருக்கிறார். இவர் வலப்புறத்தில் இருக்கும் யானையின் மீது கை வைத்து தடவிக்கொடுத்தபடி இருக்க, இடப்புறத்தில் ஒருவர் சுவாமியை வணங்கியது போல சிலை அமைப்பு இருக்கிறது. 🙏🇮🇳4
இந்த வடிவம் யானை வடிவம் எடுத்த தஞ்சகாசுரனையும், அவன் திருந்தி மகாவிஷ்ணுவை வணங்குவதையும் குறிப்பதாக சொல்கிறார்கள். மனதில் தீய குணங்களுடன் இருப்பவர்கள் இவரை வணங்கினால் மன்னிப்பு பெறலாம் என்பதை இது நமக்கு உணர்த்துகிறது. 🙏🇮🇳5
இவருக்கு பின்புறத்தில் நரசிம்மர் யோகபட்டையுடன் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். அவருக்கு இருபுறமும் இரண்யகசிபு, பிரகலாதன் ஆகியோர் இருக்கின்றனர். இந்த சக்கரத்தாழ்வார் வடிவ பெருமாளின் தரிசனம் மிகவும் விசேஷமானது.

🙏🇮🇳6
வலவந்தை நரசிம்மர்:
 
நரசிம்மரின் இடதுபுறத்தில் அமர்ந்திருக்கும் மகாலட்சுமி, நீலமேகப்பெருமாள் கோயில் பிரகாரத்தில் அவருக்கு வலப்புறத்தில் அமர்ந்த நிலையில் இருக்கிறார். இவரை வலவந்தை நரசிம்மர் என்கின்றனர். 🙏🇮🇳7
அசுரனை அழித்த நரசிம்மர், இதயம் கோபத்தில் துடித்துக்கொண்டிருக்க இத்தலத்தில் அமர்ந்தார். கோபம் இருக்கும் இடத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதில்லை. எனவே அவள் நரசிம்மருக்கு வலப்புறத்தில் அமர்ந்துகொண்டாள். 🙏🇮🇳8
கோபப்படும் குணம் கொண்டவர்களுக்கு லட்சுமி கடாட்சம் கிடைக்காது என்பதை இந்த வடிவம் நமக்கு உணர்த்துகிறது. அதிகமாக கோபப்படுபவர்கள் இவரை வணங்கி மன அமைதி பெறலாம்.

🙏🇮🇳9
மூன்றும் சேர்ந்து ஒன்று:
 
அசுரர்களை அழித்த மகாவிஷ்ணு இங்கு நீலமேகர், மணிக்குன்றப் பெருமாள், வீரநரசிம்மர் என மூன்று வடிவங்களில் தனித்தனி கோயில்களில் அருளுகிறார். பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் இம்மூவரையும் சேர்த்தே மங்களாசாசனம் செய்துள்ளனர்.

🙏🇮🇳10
இதனால் மூன்று கோயில்கள் சேர்ந்து ஒரே திவ்யதேசமாக கருதப்படுகிறது. திருமணங்கொள்ளையில் மகாவிஷ்ணுவிடம் திருமந்திர உபதேசம் பெற்ற திருமங்கையாழ்வார் இத்தலத்தை இரண்டாவதாக மங்களாசாசனம் செய்துள்ளார்.

🙏🇮🇳11
வீரநரசிம்மர் கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். மூன்று மூலவர்களுக்கும் தைலக்காப்பு மட்டுமே செய்யப்படுகிறது. நீலமேகப்பெருமாள் உற்சவராக கையில் செங்கோல் ஏந்தியபடியும், உற்சவர் தாயார் அக்னி கிரீடம் அணிந்து கொண்டு சாந்தமான கோலத்தில் காட்சி தருவதும் சிறப்பு.

🙏🇮🇳12
இவரது கருவறையில் பராசரர் சுவாமியை வணங்கிய கோலத்தில் இருக்கிறார். ஹயக்ரீவர் இங்கு லட்சுமியுடன் வடக்கு பார்த்தபடி இருக்கிறார். 🙏🇮🇳13
கல்விக்கு அதிபதியான ஹயக்ரீவர், செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி ஆகிய இருவருக்கும் ஏலக்காய் மாலை சாத்தி, நெய்விளக்கு, கற்கண்டு நைவேத்யம் படைத்து வணங்கினால், கல்வியில் சிறந்து விளங்கலாம், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

#வாழ்க_பாரதம்🙏🇮🇳
#வளர்க_பாரதம் 🇮🇳🙏🇮🇳

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

13 Jan
அருள்மிகு #அஞ்சலி_வரத_ஆஞ்சநேயர் திருக்கோயில், சின்னாளபட்டி, திண்டுக்கல்

அனுமனை வணங்குபவர்களை சனிபகவானும் அண்டமாட்டான் என்பது நம்பிக்கை. 🙏🇮🇳1
ஓ ராமா! உன் நாமாவையோ, இந்த அனுமன் நாமாவையோ யார் கூறுகிறார்களோ, அவர்களிடம் நான் ஒரு நொடி கூட இருக்க மாட்டேன், என்று ராமனிடம் சத்தியம் செய்து விட்டு சனி பகவான் தன் இருப்பிடம் சென்றதாக கூறுவர்.🙏🇮🇳2
ராமாயண கதாநாயகன் ராமனின் வலதுகரமான ஆஞ்சநேயர் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர். அனுமனை சிவனின் அவதாரம் என கூறுவதுண்டு. வாயுபகவானுக்கும், அஞ்சனாதேவிக்கும் மகனாக பிறந்த அனுமனுக்கு பவனசுதன், மருத்சுதன், பவனகுமார், பஜ்ரங்கபலி, மகாவீரர் என்ற பெயர்களும் உண்டு.🙏🇮🇳3
Read 14 tweets
12 Jan
பூலோகம் வந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.!!

ஒரு நாள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பூலோகம் வந்து மானிடர்களை பார்த்து விட்டு செல்லலாம் என எண்ணி நகர்வீதி உலா வந்தாராம்.

சாதாரண மனிதர் உருவில் வந்த ஸ்ரீ கிருஷ்ணரை அடையாளம் கண்டு கொண்ட பக்தர் ஒருவர் அப்பனே !
"பூலோகத்தில் வந்த உங்களை சந்தித்ததில் எனக்கு பெரும்
மகிழ்ச்சி "! என்றார் . 

அதற்கு பரவாயில்லை சாதாரண மனித உருவில் வந்தாலும் கண்டு கொண்டாய், சரி நான் பூலோகத்தில் சில மனிதர்களை சந்திக்க வேண்டி உள்ளது . என்னுடன் வாருங்கள் என அழைத்துச் சென்றார் .
பக்கதரும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அழைப்புக்காக உடன் சென்றார் . 

சிறிது தூரம் சென்றதும் " பக்தா, எனக்கு தண்ணீர் தாகமாக உள்ளது. இந்த செல்வந்தர் வீட்டில் தண்ணீர் வாங்கி வா என கட்டளையிட்டார் . 

பக்தரும் மறுப்பேதும் சொல்லாமல் அந்த செல்வந்தர் வீட்டு கதவை தட்டினார் .
Read 21 tweets
12 Jan
#விவேகானந்தர்

கடவுளைத் தேடி... எனும் தலைப்பில் வங்க மொழியில் கவிதைகளை எழுதியுள்ளார். அதுபற்றி வெகு சிலருக்கேத் தெரியும். அதனைத் தமிழிலும் மொழிபெயர்த்துள்ளனர்.
அவற்றினை திருமதி.சௌந்திரா கைலாசம் என்பவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். மீராபாய், கபீர்தாஸ், ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்றவரின் கவியில் உள்ள ஆழம், இவற்றிலும் உண்டு.
எடுத்துக்காட்டாக..

அனைத்தும் ஆகி அன்பாகி அமைபவன் அவனே அவன்தாளில் உனதுளம் ஆன்மா உடல் எல்லாம் உடனே தருக என் நண்பா இவைகள் யாவும் உன்முன்னே இருக்கும் அவனின் வடிவங்கள் இவைகளை விடுத்து வேறெங்கே இறைவனைத் தேடுகின்றாய்
Read 4 tweets
12 Jan
#விவேகானந்தர்

இந்திய இந்து துறவி மற்றும் தத்துவவாதி

சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda, ஜனவரி 12, 1863 - ஜூலை 4 1902) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் 
தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார்.
இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta). இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துகள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன.
இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத 
வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்.

1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய 
சொற்பொழிவுகள் 
உலகப்புகழ் பெற்றது.
Read 22 tweets
11 Jan
#கட்டைவிரல் இதயத்தில் கடவுள்!..

பெருமாள் பக்தன் ஒருவன், தன்
பூலோக வாழ்வை முடித்து
வைகுண்டம் சென்றான்.

பெருமாள் சயனத்தில் இருந்தார்.
அருகில், லட்சுமி அமர்ந்து அவரது
கமலமுகத்தை மகிழ்வுடன்
நோக்கியபடியே, திருவடிகளை
பிடித்து விட்டுக்கொண்டிருந்தாள்.
பக்தன் பெருமாள் முன் நின்று
சேவித்தான். பூலோகத்தில், அவன்
செய்த நன்மைகளைப் பாராட்டிய
பெருமாள், ""பூலோகத்தில்
எல்லா இன்பங்களையும்
அனுபவித்தவன் நீ.
வைகுண்டத்திலும் இன்பவாழ்வு
நடத்து,'' என்றார்.
பக்தன் அவரிடம், ""பெருமாளே!
எனக்கு பூலோகத்தில் இன்பமான
வாழ்வு கிடைத்தது உண்மை.

ஆனால், ஒரே ஒரு கேள்விக்கு
மட்டும் பதில் கிடைக்கவில்லை
என்ற குறையுடன் இங்கு
வந்துவிட்டேன்,'' என்றான்.
Read 15 tweets
11 Jan
*#அருள்மிகு_கதிர்_நரசிங்க_பெருமாள் திருக்கோயில்...!!*

கரூர் மாவட்டத்தில் உள்ள பாளையம் என்னும் ஊரில் தேவர்மலையில் அருள்மிகு கதிர் நரசிங்க பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.

🙏🇮🇳1 Image
கரூரிலிருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் சுமார் 30 கி.மீ தொலைவில் பாளையம் உள்ளது. பாளையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் குருணிகுளத்துப்பட்டி உள்ளது. இங்கிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள தேவர்மலையில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.

🙏🇮🇳2
இத்திருக்கோயிலில் கிழக்கு நோக்கிய நிலையில் சுமார் நான்கு அடி உயரத்தில் கதிர் நரசிங்க பெருமாள் காட்சியளிக்கிறார்.

மூலஸ்தானத்தின் அருகிலிருக்கும் மற்றொரு சன்னதியில் கமலவல்லி தாயார் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

🙏🇮🇳3
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(