ஸ்ரீ மதே ராமாநுஜாய நம:
கூரத்தாழ்வான் வைபவம் பகுதி - 5
கூரமாநகர் அரசர் ஒரு சாதாரண பிரஜையின் குறையை தீர்த்தல்

ஆழ்வான் அவதரித்த கூரம் என்கிற இடம், பழங்காலத்திலே கூரமாநகர் என பிரசித்தி பெற்ற ராஜ்யமாக இருந்தது. அதில் இவர் தாமே அரசாட்சி செய்து வந்தார்.

ஒரு நாள் இரவு நகர்வலம் வந்து
கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு வீட்டில் கதவை தாளிட்டு சில பேர் பேசிக்கொண்டிருந்தார்கள்.

உண்மையை அறிய, ஆழ்வான் அவர்கள் வீட்டின் திண்ணையில் அமர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார். அவர்கள் அந்த வீட்டுத்தலைவரின் பெண்ணைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள்.

அவர்கள் பேசியதாவது, “இந்தப்
பெண்ணின் ஜாதகப்படி அவளை மணம் புரிபவன், திருமணம் ஆன சிறிது காலத்திலேயே இறந்து விடுவான். இதை அறிந்த யாரும் இந்தப் பெண்ணை மணம் புரிய முன் வரவில்லையே”, வயது வந்த இந்தப் பெண்ணை வீட்டில் வைத்து இருந்தால் உலகம் பழிக்குமே.

எனவே, இவளைக் கொன்று விடுவதே நல்லது என்று பேசிக்
கொண்டிருந்ததைக் கேட்டார். மறுநாள் அவர்களை ராஜசபைக்கு வரவழைத்து, முதல் நாள் இரவு உங்கள் வீட்டில் பேசிக் கொண்டிருந்ததை சொல்ல வேணும் என்று கேட்டார்.

அவர்களும், ஒன்றையும் மறைத்திடாது உள்ளபடியயே சொன்னார்கள். ஆழ்வான் அதைக்கேட்டு, குடிமக்களின் வருத்தத்தைத் தீர்ப்பது ஒரு அரசனின் கடமை.
எனவே, உங்கள் பெண்ணை நான் மணந்து உங்கள் வருத்தத்தைத் தீர்க்கிறேன் என்று அறுதியிட்டார்.

பெண்ணின் பெற்றோர்கள் “தேவரீர் மணந்தால் அவள் ஜாதகப்படி தேவரீர் உயிர் மாய நேரிடுமே. இந்த நாடு ராஜா இல்லாமல் ஆகிவிடுமே” என்று வருத்தம் தெரிவித்தார்கள். அதற்கு ஆழ்வான் “நான் சிற்றின்பத்தை
விரும்பினால் அன்றோ அப்படிப்பட்ட தீங்கு விளையும். எனக்கு சிறிதும் விருப்பமில்லை.

விவாஹத்திற்கு இரண்டு பலன்கள் உண்டு, அவையாவன, 'தர்மத்தை நிலைநாட்டுவதும்', 'குழந்தைச் செல்வங்கள் பெற்றுக் கொள்ளுவதும்' ஆகும். நான் தர்மத்தை நிலைநாட்டுவதற்காக மணந்து கொள்கிறேன், என்று சொல்லி அந்தப்
பெண்ணை மணந்து கொண்டார்.

இதனால் ஆழ்வானின் இந்த நல்ல குணங்கள் வெளிப்படுகின்றன.

1.ராஜாவாக இருப்பவன் குடிமக்களின் விருப்பத்தை நிறை வேற்றவேண்டும்.

2.சிற்றின்பத்தில் பற்று இல்லாமை.

3.சாதாரண குடும்ப விருத்தியைக் காட்டிலும் விசேஷ தர்மமான தர்மாநுஷ்டமானமும் முக்கியம்.
4. ஜீவஹிம்ஸை (உயிர்களை வதைத்தல்) தவிர்த்தல்

ஆழ்வானின் மனைவியின் பெயர் ஆண்டாள், ஆழ்வானைக் காட்டிலும் இவருக்கு சிறப்பு அதிகம். சாஸ்த்ரங்களிலும், அதன் அர்த்தங்களிலும் ஆழ்வானுக்கு ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால், தனது மனைவியிடம் கேட்பார் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள். அதைவிட
முக்கியமான சிறப்பம்சம் ஒன்று உள்ளது. ஆழ்வான் எவ்வளவு பெரிய செல்வந்தராக இருந்தபோதிலும், அதை அனைத்தையும் துறந்து இராமாநுசரின் திருவடியை அடைந்த பொழுது ஆழ்வானுடன் தானும் உடன் சென்றது ஆண்டாளின் வைராக்யத்தை அல்லவா காட்டுகிறது!

#AndalYatra #Andal #Kooram #Birthday

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with I Am Pavanz Sharma

I Am Pavanz Sharma Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @PavanSharma1806

Jan 23
மனபயம் அச்சம் தீர்க்க லட்சுமி நரசிம்மர் வழிபாடு!!!ருணம் எனும் கடன் ரோகம் எனப்படும் வியாதிகள்
தீராத பிரச்னைகள், செவ்வாய் தோஷம் பிரச்சனைகள் தீரும் !
கடன் தொல்லை தீர எளிய லட்சுமி நரசிம்மர் வழிபாடு!!!
🪔🌺🙌🙏 "லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே " 🪔🌺🙌🙏
கடன் தொல்லையால் Image
அவதிபடுபவர்கள் இந்த வழிபாட்டை செய்து வந்தால் பலன் அடையலாம்.
கடன்பட்டார் நெஞ்சத்தை உவமையாக கம்பர் ராமாயணத்தில் சொல்லியிருக்கிறார். கடன் தொல்லையை காலைச் சுற்றிய பாம்பு என்பர். கடன்தொல்லையில் இருந்து மீள ருணவிமோசன லட்சுமி நரசிம்மர் ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வது நல்லது.
இந்த துதி சமஸ்கிருதத்தில் இருப்பதால், படிக்க இயலாதவர்களுக்கு எளிமையான பரிகாரம் இருக்கிறது.
"லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே "
என்ற மந்திரத்தை மாலை நேரத்தில் 108 முறை பாராயணம் செய்யவேண்டும்.
அப்போது லட்சுமி நரசிம்மருக்கு காய்ச்சிய பசும்பால் அல்லது பானகம் (எலுமிச்சை சாறு,
Read 15 tweets
Jan 23
*அகத்திய மகரிஷியின் திருமண நாள் இன்று..*

காசி மகராஜாவின் பெண் லோபமுத்ரா. அவரைத் திருமணம் செய்து கொண்டு பொதிகைக்கு அகத்தியர் வரும் பொழுது, அங்கிருக்கும் யோகிகள், ஞானிகள், சித்தர்கள் அனைவரும் அகத்தியரின் திருமண நிகழ்வை காண வேண்டும் என்று வேண்டிக் கொண்டதால், அவர்களுக்கு Image
அகத்தியர் தன் திருமணக் காட்சி தந்து அருளினார்.

அகத்தியர் உட்கார்ந்து இருக்கக்கூடிய இந்தப் பாறையின் மேலிருக்கும் இந்த மரம் ஒரு ' *தேவதாரு மரம்* '.

அகத்தியர் அணிந்திருக்கக் கூடிய ஆபரணங்களான *"தோள்வளை, கீரிடம், கைவளை, சண்ணவீரம், கால்வளை, தோடகம்*", போன்ற அனைத்தும் '
*திருத்தோடகன்* ' என்னும் பொற்கொல்லரால் பிரத்தியேகமாக அகத்தியருக்காக செய்து கொடுக்கப்பட்டது.

அகத்தியர் அணிந்திருக்கும் பூணூலானது, விபூதி கலந்த ஒரு நிறத்தில் இருக்கும். இதன் பெயர் ' *திரிபூரணம்* ' என்பதாகும். இது *கௌதம முனிவரால்* கொடுக்கப்பட்டது.

அகத்தியரும், லோபமுத்திரா
Read 4 tweets
Jan 23
ஸ்ரீகூரத்தாழ்வான் 1013ஆவது திருநட்சித்திரம்,தை ஹஸ்தம் இன்று
(23/01/2022)-பதிவு -3/3
🙏🌻🌼🌷🌺🙏
அண்ணலும் இளவலும்!!!
🎖👍☝️🖕👏👌🏅
இன்று (23/01/2022) தை ஹஸ்தம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமியின் 1013 ஆவது திருநட்சித்திரம்.ராமானுஜரை விட 8 ஆண்டுகள் மூத்தவரான கூரத்தாழ்வான் Image
ஸ்ரீராமபிரானின் அம்சமாக அவதரித்தார் என்பர்.
ஆதிசேஷனின் அம்சமாக அவதரித்த ராமானுஜர் திரேதாயுகத்தில்,
இளையபெருமாள் லட்சுமணராக
அவதரித்தார்.அப்போது ராம கைங்கர் யமே பிரதானம் என்று வாழ்ந்தார்.
அவர் செய்த கைங்கர்யங்களுக்கு
(சேவை) எதைக் கொடுத்தாலும்
ஈடாகாது என்று உணர்ந்த ராமர்,தாமே
மீண்டும் ஒரு அவதாரம் எடுத்து, லட்சமணராகத் தோன்றும், அவதார
புருஷருக்குக் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று சங்கல்பித்துக்
கொண்டார்.அந்த வகையில் கலியுகத்தில் 1017ஆம் ஆண்டில் அவதரிக்கப்போகும் ராமானுஜருக்குச் சேவை புரிவதற்காக,1009 ஆம் ஆண்டிலேயே,கூரேசர் ஆக,
காஞ்சிபுரத்துக்கு
Read 58 tweets
Jan 23
உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம்.

அஸ்வினி
ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே
சுதாகராயை தீமஹி
தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்

பரணி
ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே
தண்டதராயை தீமஹி Image
தன்னோ பரணி ப்ரசோதயாத்

கிருத்திகை
ஓம் வன்னிதேஹாயை வித்மஹே
மஹாதபாயை தீமஹி
தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்

ரோஹிணி
ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே
விச்வரூபாயை தீமஹி
தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்

மிருகசீரிடம்
ஓம் சசிசேகராய வித்மஹே
மஹாராஜாய தீமஹி
தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்
திருவாதிரை
ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே
பசும்தநாய தீமஹி
தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்

புனர்பூசம்
ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே
அதிதிபுத்ராய த தீமஹி
தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்

பூசம்
ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே
மஹா திஷ்யாய தீமஹி
தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்
Read 9 tweets
Jan 23
தியாகராஜர் ஆராதனை ஸ்பெஷல் !

எந்தரோ மஹானுபாவுலு அந்தரிகி
வந்தனமுலு....

(எத்தனையோ மஹான்கள். அனைவருக்கும்
என் வணக்கங்கள் இது தான் அர்த்தம்)

பக்தி செய்வதில் பலவகை இருக்கிறது. இசையால் பக்தி
செய்வது அதில் ஒரு வகை.
ராமபக்திக்கு தியாகய்யர்
மிகச்சிறந்த உதாரணம். அதனால்
தான் இறைவன் Image
அவருக்கு தரிசனம்
தந்ததாக சொல்வார்கள்.

தியாகராஜரின் கீர்த்தனைகள் அனைத்தும் தெலுங்கில் இருந்தாலும் அவை தமிழர்கள் உட்பட அனைவராலும் ரசித்துக் கொண்டாடப்படுவதற்கான காரணம் அதிலுள்ள உணர்வுபூர்வமான பக்திரசம்தான். அப்பாடல்களில் இருக்கும் உயிரோட்டம், கேட்பவர்களின் ஆன்மாவுடன் கலந்து
வாழும் விருப்பத்தை அதிகரிக்கிறது.

இக்கீர்த்தனைகள் இறைவன் புகழைப் பாடுவதால் அனைவருக்கும் உரிமை உடையதாக நினைக்கிறார்கள். தனக்கு உரிமையானது என்பதால் நினைவில் நிரந்தர இடம் அளிக்கிறார்கள். அதிலும் பஞ்சரத்ன கீர்த்தனைகளில் உள்ள ‘எந்தரோ மகானுபாவுலு’ வாழ்வில் ஒரு முறை கேட்டுவிட்டால்,
Read 8 tweets
Jan 23
நீங்கள் அனுமனை தரிசித்தபோதோ அல்லது அனுமனின் படத்தைப் பார்த்தபோதோ கவனித்திருக்கலாம் அனுமனின் வாலில் ஒரு மணி தொங்கிக் கொண்டிருக்கும். வாலில் அந்த மணி எப்படி வந்தது தெரியுமா? அது ஒரு கதை. படியுங்கள்.

தந்தை தசரதன் தன் பத்தினி கைகேயிக்கு கொடுத்த வாக்குப்படி ஸ்ரீராமன் சீதா Image
பிராட்டியுடனும் தன் சகோதரன் லட்சமணனுடனும் பதினான்கு ஆண்டுகள் வனவாசத்திற்கு சென்றதும் அந்த வனத்தில் சீதாப்பிராட்டியை ராவணன் கடத்திச் சென்ற கதையும் நமக்கெல்லாம் தெரிந்ததே.

சீதாப்பிராட்டியை மீட்க ராவணனுடன் போர் புரிய இலங்கைக்கு புறப்படும் முன் ஸ்ரீ ராமன் வானரப்படையை திரட்டிக்
கொண்டிருந்தார். வானரங்களில் பல வகை. உயரமானவை,குட்டையானவை என்று. அதில் " சிங்கலிகா" என்று அழைக்கப்படும் குள்ளமான வானரங்கள் கொண்ட ஒரு படை.இதில் ஆயிரம் வானரங்கள். இவை எப்படி போர்புரியும் என்று ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? இவை கூட்டமாக சென்று எதிரியின் படைவீரர்கள் மேல் விழுந்து
Read 22 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(