#குருவாயூரப்பன் #குருவாயூர்ஸ்ரீகிருஷ்ணன்
குருவாயூரில் உள்ள உன்னி கிருஷ்ணன் எனும் மூலவர் கல்லிலோ வேறு உலோகம் கொண்டோ செய்யப் படவில்லை. பாதாளாஞ்சனம் எனும் கலவையால் செய்யப்பட்டது இச்சிலை. இந்த திருக்கோவிலில் கண்ணன் குழந்தை வடிவில் காட்சி தருகிறார். மிகவும் திவ்யமாக திகழும் இறைவன்
பாஞ்சஜன்யம் என்ற சங்கை ஒரு கையிலும், சுதர்சன சக்கரம் என்ற சக்கரத்தை இன்னொரு கையிலும், மூன்றாவது கையில் கௌமோதகி என்றறியப்படும் கதையையும் நான்காவது கரத்தில் தாமரை மலரையும் வைத்துக்கொண்டு புன்சிரிப்புடன் காட்சி தருகிறார். கழுத்தில் புனிதமான துளசி மாலை அலங்கரிக்க, இந்த விக்கிரகம் மகா
விஷ்ணுவின் கம்பீரமான அவதாரத்தை குறிக்கிறது. உருவத்தில் தான் குழந்தை ஆனால் உலகத்தையே தன் வாயில் அடக்கியவன். சித்திரை விஷு, ஓணம் பண்டிகை மற்றும் ஏகாதசி இங்கு முக்கியமான பண்டிகைகள். குழந்தைக்குப் முதல் முதலாக சோறு ஊட்டும் வைபவம் இங்கு மிகவும் சிறப்பு. இங்கு இதை செய்தால் அந்த குழந்தை
வாழ்நாள் முழுவதும் கண்ணன் திருவருளால் உடல் ஆரோக்கியம் கொண்டு வளரும் என்பது நம்பிக்கை. இந்த திருக்கோவிலில் பக்தர்களால் வழங்கப்பட்ட யானைகள் மிகவும் விஷேசம். அந்த வகையில் பத்மநாபன், கஜ ராஜன், கேசவன் என்று பெயர் கொண்ட யானைகள் வரலாற்றில் இன்றும் சிறப்பு பெற்றவை ஆகும். இங்கு நடை
திறப்பின் பொழுது யானைகள் இடம் பெறுகின்றன. திருவிழா காலங்களில் யானைகள் தான் சுவாமியை சுமந்து வரும். அதற்காக யானைகளுக்கு ஓட்ட பந்தயம் நடத்தப்படும். வெற்றி பெரும் யானை தான் சுவாமியை சுமக்கும் பாக்கியம் பெறும். இந்த திருக்கோவிலில் ஸ்வாமி சன்னதி காலை 3 மணிக்கு திறக்கப்படும். முதல்
நாள் அணிந்த மாலைகளுடன் மற்றும் அலங்காரத்துடன் பூஜை நடத்தப்படும். இதனை நிர்மால்ய பூஜை என்பார்கள். பின்னர் திருமஞ்சனம் கண்டு மகிழ்வார் கண்ணன். ஒவ்வொரு நாளன்றும் ஆதி சங்கரரால் வரையறுக்கப்பட்ட பூஜை முறைகள் மற்றும் தாந்தரிக வடிவில் சென்னாஸ் நாராயணன் நம்பூதிரி (பிறப்பு 1427) அவர்களால்
எழுதி குறிக்கப்பட்ட வழி முறைகளை பின்பற்றியும் இந்த கோவிலில் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. பூஜை விதிமுறைகள் மிகவும் கண்டிப்புடனும், விட்டுக் கொடுக்காமலும் நிறைவேற்றப் படுகின்றன. இதை கவனித்துக் கொள்வதற்காகவே இக்கோவிலின் தந்திரி எந்நேரமும் கோவிலிலேயே காணப்படுவார். கோவிலின்
மேல்சாந்தியானவர் (முதன்மை பூசாரி) விடியற்காலை 2:30 மணிக்கே கர்ப்பக்கிருகத்தில் நுழைந்து விடுவார். உச்சி பூஜை முடியும் 12:30 மணி வரை தண்ணீர் கூட அருந்தமாட்டார். வேதகாலத்து பாரம்பரியங்களை இன்றும் தொடர்ந்து கச்சிதமாகவும் நேர்மையாகவும் பேணப்பட்டு வருவதே இந்தக் கோவிலின் மிகவும் சிறந்த
அம்சமாகும். நாராயண பட்டத்திரி சமஸ்கிருதத்தில் எழுதிய நூல் மற்றும் பூந்தானம் என்ற மஹான் எழுதிய ஞானப்பானை என்ற மலையாள நூல் இந்த ஸ்தல சிறப்பினை விளக்குகிறது. இங்குள்ள துலாபாரத்தின் சிறப்பு எண்ணில் அடங்கா. பக்தர்கள் கண்ணனை பிரார்த்தனை செய்து அது நிறைவு பெற்றவுடன் துலாபாரத்தில்
பழங்கள், கல்கண்டு , பொருள், காசுகள், போன்ற எடைக்கு எடை காணிக்கை செலுத்தி வருகின்றனர். குரு பகவானும், வாயு பகவானும் சேர்ந்து உருவாக்கிய ஊர் தான் இந்த சிறப்பு பெற்ற குருவாயூர். கண்ணன் இவர்களுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் கண்ணன் இந்த ஊருக்கு தனது பெயரை சூட்டிக் கொள்ளாமல்,
குரு+ வாயு சேர்த்து குருவாயூர் என பெயர் பெற்றது. இந்த புகழ் பெற்ற திருஸ்தலம் கேரளாவில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கிருஷ்ணாட்டம் இங்கு மிகவும் சிறப்பு பெற்றவை. இரவு ஸ்வாமி சன்னதி நடை அடைத்த பிறகு தொடங்கி, காலையில் நடை திறப்பிற்கு முன்பும் ஆடி முடிக்கும் ஆட்டமே
கிருஷ்ணாட்டம். மயில் பீலியை கொண்டு கிரீடம் செய்து ஆடுவார்கள். இது கண்ணனுக்கு மிகவும் பிடித்த ஆட்டம் ஆகும்.

ஜெய் ஸ்ரீ கிருஷ்ண ஜெய் ஸ்ரீ கிருஷ்ண

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Feb 5
#ஶ்ரீஹயக்ரீவர் ஸ்ரீ ஹயக்ரீவ அவதாரம் திருமாலின் பதினெட்டாவது அவதாரமாகக் கருதப்படுகிறது. பின் வலக்கரத்தில் ஸ்ரீ சுதர்சன சக்கரத்தையும், இடக்கரத்தில் பாஞ்சஜன்யம் என்ற சங்கையும், முன் வலது கரத்தில் ஏட்டையும் ஏந்தி மக்களுக்கு ஞானத்தை போதிக்கும் ஞான சொரூபியாக ஸ்ரீஹயக்ரீவர் திகழ்கிறார். Image
ஸ்ரீஹயக்ரீவ மூர்த்தி ஞானத்தின் உறைவிடம் என்பதால் அவரைத் துதித்தால் முக்குணங்களில் இருந்து நமக்கு விடுதலை கிடைக்கும். தனது இடது தொடையில் ஸ்ரீமஹாலட்சுமியை ஏந்தி, ஸ்ரீஹயக்ரீவர், ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவராகத் திகழ்கிறார். சிவபெருமானின் அஷ்டாஷ்ட (64) மூர்த்தி பேதங்களில் ஒன்றான தட்சிணா
மூர்த்தி உருவத்தையே ஸ்ரீஹயக்ரீவரின் திருவுருவம் பிரதிபலிப்பதாக உள்ளது.
தட்சிணாமூர்த்திக்கும் சிவபெருமானின் அக்னி, மழுவோடு சின் முத்திரையும், ஏடும் கரங்களில் இருப்பது போல ஸ்ரீஹயக்ரீவரருக்கு திருமாலின் ஆயுதங்களான சங்கு சக்கரத்துடன் வியாக்கியான முத்திரை, ஏடு உள்ளன. இரண்டு
Read 6 tweets
Feb 5
Not many know about the great stuti on Ambal, #MookaPanchaSathi There lived a man in Kanchipuram, who was speech impaired from birth so was called Muka Sankara.Mooka means one who cannot speak. Daily he will go to the temple and sit in front of Maa staring at her beauty for hours Image
together. One day a sadhakar came and began practicing rituals. Maa appeared in front of him with mouth full of thamboolam. As a present she took a small portion and offered it to the sadhakar who felt offended for giving “aparisudha” prasadam. We all know every mother bites and Image
also gives a little portion to the toddler. Maa immediately glanced at the Muka Sankara and offered it. Sarasa sahithya sagram began to overflow and Muka Sankara began to sing extempore on the vilasas of Kamakshi. The world renowned “Mooka Pancha Sathi” was the gift of Sankara to
Read 13 tweets
Feb 4
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு துறவியிடம் அழகான பெண் ஒருத்தி வந்து, என் கணவரிடம் நிறைய குறைகள் உள்ளன. அவரோடு என்னால் இனி வாழமுடியாது. எனவே அவரைவிட்டு நான் விலகி விடட்டுமா என்று கேட்டாள். அவளுக்கு நேரடியாக பதில் சொல்லாத துறவி "அம்மணி! இங்குள்ள செடிகளில் ஏதாவது ஒன்றை உனக்கு தர
விரும்புகிறேன் எது வேண்டும் கேள்" என்றார். அப்பெண் ரோஜா செடியைக் கேட்டாள். "அதைப் பராமரிப்பது மிகவும் கடினம். அதோடு அதில் நெறைய முட்கள் வேறு இருக்கிறதே, இதுவா வேண்டும்?" என்று கேட்டார் துறவி. எனக்கு ரோஜாவை மிகவும் பிடிக்கும். அதனால் அதனிடம் உள்ள முட்கள் எனக்கு பெரிதாகத்
தெரியவில்லை என்றாள். புன்னகைத்த துறவி சொன்னார், "வாழ்க்கையும் அப்படித்தான்! பிறரை நேசிக்கக் கற்றுக் கொண்டால், அவர்களது குறை பெரிதாகத் தெரியாது." குறைகளை பெரிதுபடுத்தாமல் நம்மை சுற்றி இருப்பவர்களை நேசிப்போம். குறைகள் இல்லா பரந்தாமனை நினைப்போம். நம் எண்ணத்தால்
நாமும் குறைகள்
Read 4 tweets
Feb 4
ஒன்றுக்கு உதவாத மனிதர்களை, மண்ணுக்கு சமம் என்று குறை கூறுவது வழக்கம். தான் வாழ்ந்த விதத்தால் மிருத்திகை எனப்படும் மண்ணுக்கும், மக்கள் அனைவரும் வணங்கும் மகத்தான இடத்தை அளித்தவர் ராகவேந்திரர். அவர் மண்ணுலகை வலம் வந்த காலத்திலும், இன்றும், ஏன் என்றுமே ராகவேந்திர பக்தர்களுக்கு
மிருத்திகை என்னும் மண்ணானது குரு ராகவேந்திரரின் பிரசாதம்தான். அவர் கைபட்ட மண் செய்த மகோன்னத லீலை ஒன்று இதோ! மடத்தில் ஒரு சமயம் ஏழைச் சிறுவன் ஒருவன் சிஷ்யனாக வந்து சேர்ந்தான். பண்டிதர் வரிசையில் சேர்க்க முடியாவிட்டாலும் பண்பாளனாகவும், குரு பக்தியில் தோய்ந்த தொண்டனாகவும் அவன்
விளங்கினான். கல்விக்கான பருவம் முடிந்ததும் அவனது தாய் தந்தையர் அவனுக்கு மணம் செய்ய ஏற்ற பெண்ணை தேடினார்கள். ஏழைக்கு யார் தன் மகளை மணமுடித்துத் தருவார்கள்? அதனால் சிஷ்யன் குருவுக்கு பணி விடைகள் செய்தவாறே காலத்தைத் தள்ளிக் கொண்டிருந்தான். எல்லாம் தெரிந்த மகானுக்கு இந்த விவரங்கள்
Read 12 tweets
Feb 3
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் முன்னர் அங்கிரசர் என்றொரு ரிஷி, வனத்தில் வசித்து வந்தார். அவர் மிகவும் புகழ் பெற்றவர். அவரிடம் மாணவர்கள் பலர் இருந்தனர். அவருடைய ஞானத்தில் இருந்து கணிசமான அனுகூலத்தை அவர்கள் பெற்றிருந்தனர். அந்த மாணவர்களில் சிலர் பக்தியும், கடமையுணர்வும் கொண்டவர்கள்.
மற்றவர்களைவிட எளிதில் எதையும் கிரகித்துக் கொள்ளக் கூடியவர்களாக இருந்தனர். அவர்களுடைய நற்பண்புகள் காரணமாக மற்ற மாணவர்களால் மதிக்கப்பட்டனர். ஆனால் அறிவுக் கூர்மையற்ற சிலர் மட்டும் அந்த நல்ல மாணவர்களிடம் பொறாமை கொண்டிருந்தனர். குருவின் உபதேசங்களைக் கிரகித்துக் கொள்ளும் திறன்
தங்களிடம் குறைவாயிருப்பதை அவர்கள் மறந்துவிட்டனர். ஏனோ குருவின் பாரபட்சமற்ற தன்மையில் அவர்களுக்குச் சந்தேகம். அவர் பக்தியுணர்வுடைய மாணவர்களுக்கு மட்டும் ரகசியமாக விசேஷ அறிவைப் புகட்டுவதாக எண்ணிக் கொண்டனர். ஒருநாள் குருதேவர் தனித்திருந்த போது அவரிடம் சென்று, ஐயனே! தாங்கள் பாடம்
Read 15 tweets
Feb 3
ஆதிசங்கரர் அருளிய #மீனாக்‌ஷி_பஞ்சரத்னம்
உத்³யத்³பா⁴நு ஸஹஸ்ரகோடிஸத்³ருʼஶாம் கேயூரஹாரோஜ்ஜ்வலாம்
பி³ம்போ³ஷ்டீ²ம் ஸ்மிதத³ந்தபங்க்திருசிராம் பீதாம்ப³ராலங்க்ருʼதாம் ।
விஷ்ணுப்³ரஹ்மஸுரேந்த்³ரஸேவிதபதா³ம் தத்வஸ்வரூபாம் ஶிவாம்
மீனாக்ஷீம் ப்ரணதோ3ஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதி⁴ம் || 1 ||
எடுத்தவுடனே “உத்³யத்³பா⁴நு ஸஹஸ்ரகோடிஸத்³ருʼஶாம்” என்கிறார். ‘உதிக்கின்ற செங்கதிர்’, என்று ஆரம்பித்தார் அபிராமி பட்டரும். மகான்களுக்கு அம்பாளின் தரிசனம் ஒளிவடிவமாக கிடைக்கிறது. நாம் கோவிலில் தரிசனம் செய்வதற்கும், மஹான்கள் தரிசனம் செய்வதற்கும் அதுதான் வேறுபாஉ. அந்த உள்ளொளி
அதிகமாகி அவர்களுக்கு வெளியிலேயும் ஸ்வாமியைப் பார்க்கும்போது, ஒளிவடிவமாக தெரிகிறது. கோடி சூர்யப்ரகாசமாக விளங்கும் மீனாக்ஷி தேவியை, “ப்ரணதோ3ஸ்மி ஸந்ததம் அஹம்”! ‘அஹம்‘ –  நான், ‘ஸந்ததம்‘ – இடையறாது, ‘ப்ரணதோ3ஸ்மி‘ – வணங்குகிறேன் என்று சொல்கிறார். மீனாக்ஷி என்ற பெயருக்கு மீன் போன்ற
Read 15 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

:(