இது உங்கள் இடம்: இதுதான்யா உண்மையான சுயமரியாதை

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்

ஆர்.சுப்ரா, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.,வும் இடம் பெற்றிருந்தது. ஆனால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ.,வை கூட்டணியில் இருந்து வெளியேற்றி விட்டனர்,
அ.தி.மு.க.,வினர், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி போன்றவர், தமிழக பா.ஜ., தலைவராக இருந்திருந்தால், 'ஐயா சாமி! அடியேன் சரணம்! நீங்கள் கொடுக்குறதை கொடுங்க; நாங்கள் சந்தோஷமா ஏத்துக்கறோம்' என்று சொல்லி, பழனிசாமி, பன்னீர்செல்வம் கால்களில் விழுந்து இருப்பார்.
தற்போதைய பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தன்மானம் உள்ளவர்; சுயமரியாதை உடையவர். 'துணிந்து நில்; தொடர்ந்து செல்! தோல்வி கிடையாது தம்பி... உள்ளதை சொல்; சொன்னதை செய்! தெய்வம் இருப்பதை நம்பி...' என்ற வாலியின், பால்குடம் பட பாடல் போல, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனியாக நின்றார்.
தெய்வம் இருப்பதை நம்பினார்; கணிசமாக வென்றார்.'இது, ஈ.வெ.ரா., மண்; தாமரை இங்கு மலராது; தமிழகத்தில் பா.ஜ., ஜெயிக்காது' என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் முகத்தில், 300க்கும் அதிகமான இடங்களில் வென்று சாதித்து காட்டி, கரியை பூசி இருக்கிறார்.
ஓட்டு போட வாக்காளர்களுக்கு 1 ரூபாய் கூட லஞ்சம் தராமல், இன்று, 300 இடங்களில் வென்றுள்ள பா.ஜ., நாளை இந்த பணப் பட்டுவாடாக்களை முறியடித்து, வெற்றி வாகை சூடி, கோட்டையையும் கைப்பற்றும்.
லோக்சபாவில், 1980ல் இரண்டே இரண்டு எம்.பி.,க்களோடு இருந்த பா.ஜ.,வை, காங்கிரஸ் கட்சியினர் ஏளனமாக பார்த்தனர்; எள்ளி நகையாடி சிரித்தனர்.
அப்போது, எம்.பி.,யாக இருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், 'இன்றைக்கு நாங்கள் இரண்டு பேர் இருக்கலாம்.
ஒரு நாள் பா.ஜ., - எம்.பி.,க்கள் இந்த சபை முழுதும் நிறைந்து இருப்பர். 'அப்போது, காங்கிரசை எங்கே என்று தேட வேண்டி இருக்கும்' என்று பதிலளித்தார். அன்று வாஜ்பாய் சொன்னது பலித்ததா இல்லையா!
அதுபோல, தமிழகத்திலும், இது இந்திய மண் என்ற உணர்வு மேலோங்கி, பா.ஜ., ஆட்சியில் அமரும். அதற்கு தமிழக பா.ஜ., செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்...அது, இனி தமிழகத்தில், எந்த மாநில கட்சியுடனும் கூட்டணி வைக்காமல், எதிர்வரும் அனைத்து தேர்தலிலும், தனித்தே நின்று முத்திரை பதிக்க வேண்டும்.
லோக்சபாவில் வாஜ்பாயின் குரல் வென்றது போல, தமிழகத்திலும் வெல்லும். தமிழக மக்களுக்கு இப்போது தான், கொஞ்சம் சுயமரியாதை கிளர்ந்திருக்கிறது. அந்த சுயமரியாதையை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்ப்பதே அண்ணாமலையின் கடமை

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

Feb 28
மகா சிவராத்திரியில் இதை எல்லாம் செய்யாதீர்கள்! சிவராத்திரியின் உண்மையான விளக்கம்

மகா சிவராத்திரி அன்று இறைவனுக்கு நான்கு ஜாம பூஜைகள் செய்யப்படும். ஒவ்வொரு ஜாமத்தின் போதும் அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுவது வழக்கம்.
மகா சிவராத்திரி அன்று நாம் செய்ய கூடாத சில நடைமுறை பழக்கத்தை பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவு..
நான் கடந்த வருடம் சிவராத்திரி அன்று பெருமானை தரிசிக்க கோவில் சென்ற பொழுது ஒரு புரம் உணவு வழங்கப்பட்டு கொண்டு இருந்தது, மக்கள் உணவுகளை உண்டு விட்டு கோவிலில் இலைகளை சிதறி கோவிலை அசுத்தப்படுத்தி கொண்டு இருந்தார்கள்.
Read 19 tweets
Feb 28
அருள்மிகு சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயில்*

மூலவர்:சாட்சி நாதேஸ்வரர், சாக்ஷீஸ்வரர், புன்னைவனநாதர்

அம்மன்/தாயார்:கரும்பன்ன சொல்லி, இக்ஷீவாணி

🙏🇮🇳1
தல விருட்சம்:புன்னை தீர்த்தம்:பிரமதீர்த்தம்
புராண பெயர்:திருப்புறம்பயம், கல்யாண மாநகர், புன்னாகவனம் ஊர்:திருப்புறம்பியம் மாவட்டம்:தஞ்சாவூர்

பாடியவர்கள்:  

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் , அருணகிரிநாதர்

🙏🇮🇳2
தேவாரபதிகம் முன்னைச் செய்வினை இம்மையில் வந்து மூடுமாதலின் முன்னமே என்னை நீதியக் காதெழுமட நெஞ்சமே யெந்தை தந்தையூர் அன்னச் சேவலோடு ஊடிப் பேடைகள் கூடிச் சேரும் அணிபொழில் புன்னைக் கன்னி கழிக்கண் நாறும் புறம்பயந் தொழப் போதுமே.

-சுந்தரர்

🙏🇮🇳3
Read 18 tweets
Feb 27
ஒரு சன்னியாசி. அவர் ஒரு நாள் கனவு கண்டார். அந்தக் கனவில் அவர் சொர்க்கத்துக்குப் போகிறார். அங்கே ஒரு பெரிய திருவிழா நடந்து கொண்டிருந்தது. எங்கே பார்த்தாலும் அலங்கார வளைவுகள். வண்ணமயமான விளக்குகள். பாதைகள் பூராவும் மலர்கள்.  எல்லா கட்டடங்களும் ஒளிமயமாக இருந்து. Image
இவ்வளவு கோலாகலமாக பிரம்மாண்டமாக அந்த திருவிழா நடந்து கொண்டிருந்தது. அது என்ன திருவிழா என்பது இந்த சந்நியாசிக்கு புரியவில்லை. 

அங்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் இது என்ன விசேஷம் என்று விசாரித்தார்.
உங்களுக்கு தெரியாதா விஷயம் இன்றைக்கு கடவுளின் பிறந்தநாள். அதைத்தான் எல்லோரும் சேர்ந்து கொண்டாடுகிறோம். இதற்காக பிரம்மாண்டமான ஊர்வலம் ஒன்று வரப்போகிறது. இறைவனே அந்த ஊர்வலத்தில் கலந்து கொள்கிறார் என்றார்.
Read 13 tweets
Feb 26
இரண்டாம் உலகப் போரின்போது, சில வாரங்களுக்குப் பிறகு, ஒரு வீரருக்கு வீட்டிற்குச் செல்ல விடுமுறை கிடைத்தது.
தனது வீட்டின் அருகே உள்ள தெருவை அந்த வீரர் அடைந்தார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த இராணுவ வாகனங்களில் சடலங்கள் ஏற்றப்பட்டிருப்பதைப் பார்த்ததும், எதிரிகள் தனது நகரத்தில் குண்டு வீசியுள்ளனர் என்பதைப் புரிந்துகொண்டார்.
டஜன் கணக்கில் சடலங்கள் கூட்டுக் கல்லறைக்கு எடுத்துச் செல்லப்பட தயார் நிலையில் இருந்தன. அடுக்கப்பட்ட சடலங்களின் முன்னால் அந்த சிப்பாய் சற்றுநேரம் நின்றார்.

ஒரு பெண்ணின் பாதத்தில் இருந்த பாதணிகளை அவர் திடீரெனக் கவனித்தார். முன்பு தனது மனைவிக்காக வாங்கி வந்த ஷூ போல் இருந்தது.
Read 8 tweets
Feb 26
யார் இந்த வீர்  சாவர்க்கர்? (Veer savarkar )

என்ற கேள்விக்கு, தமிழகத்தின் பெரும்பாலானவர்களுக்கு பதில் தெரிவதில்லை. இந்திய சுதந்திரத்துக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு வீரத் தியாகியை நமக்குத் தெரியவில்லை என்பது மன்னிக்க முடியாத தவறு.
இதற்கு சரித்திரத்தை தன் போக்குக்கு  இழுத்துச் சென்ற காங்கிரஸே காரணம்.

சுதந்திரம் என்ற வார்த்தையை சொன்னவுடன் தாத்தா காந்தி, மாமா நேரு போன்ற தலைவர்களை மட்டும் தேசியமயமாக்கிவிட்டு, மற்றவர்களை அந்தந்த மாநிலங்களுக்குச் சொந்தமாக்கிய காங்கிரஸின் பாடத் திட்டமே இதற்குக் காரணம்.
அடுத்தவரை குறை சொல்லி பிரயோஜனமில்லை. வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லாத நமக்கும் அதில் பங்கு உண்டு.

எந்த ஒரு வேலையைச் செய்தாலும் அதற்கான பலன் நமக்குக் கிடைக்க வேண்டும். இதுதான் நம் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பாக இருக்கும். அப்படி பலனை பெறுவதிலும் இரண்டு வகை உண்டு.
Read 53 tweets
Feb 26
*அருள்மிகு பழனியப்பர் திருக்கோவில்*

பெலுகுறிச்சி, நாமக்கல்.

மூலவர் பழனியாண்டவர் தனியாக வேடன் ரூபத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். 🙏🇮🇳1 Image
மூலவரை நேருக்கு நேராக நின்று வணங்கினால் வேடனைப் போலவும், வலதுபுறம் நின்று வணங்கினால் ஆண் வடிவமாகவும், இடதுபுறமாக நின்று வணங்கினால் பெண் வடிவமாகவும் காட்சி தரும் சிறப்புகளை கொண்ட பழனியப்பர் திருக்கோவில் நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சியில் அமைந்துள்ளது.

🙏🇮🇳2
*தல வரலாறு*

படைப்புக்குரிய மூலமான ஓம் என்னும் பிரணவ மந்திரத்திற்குரிய பொருளை பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரிடம் முருகப்பெருமான் கேட்டார். மூவராலும் சரியாக பதில் கூறமுடியவில்லை. 🙏🇮🇳3
Read 15 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(