" *பிரம்மா எழுதும் தலையெழுத்தையே மாற்றும் வல்லமை ஸ்ரீ ராமபிரானுடைய திருவடிகளுக்கு உள்ளது - விளக்கும் எளிய கதை
பிரம்மாவுக்கு ஒரு பேரழகியைப் படைக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றிற்று. அதனால் தன் கற்பனை நயங்களை எல்லாம் திரட்டி ஒரு பேரழகியை உருவாக்கிக் கொண்டிருந்தார்.
இதைக் கண்டு பொறாமை கொண்ட சரஸ்வதி, தன் மகனான நாரதரை அழைத்து, “உன் தந்தை ஒரு பேரழகியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். குற்றமில்லாத பெண்ணாக அவளை உருவாக்கப் போவதாகப் பெருமிதம் கொண்டிருக்கிறார்.
எப்படியாவது அந்தப் பெண்ணுக்கு ஏதாவது ஒரு குறை ஏற்படும்படி செய்துவிடு!” என்றாள். பிரம்மா அந்தப் பெண்ணைப் படைத்து முடித்துவிட்டார். அவளுக்குப் என்ன பெயர் சூட்டலாம் என்று யோசித்தார்.
‘ஹல்யம்’ என்றால் குற்றம் என்று அர்த்தம். எந்தக் குற்றமுமில்லாத பேரழகியாதலால் ‘அஹல்யா’ என்று பெயர் வைத்தார். அவளது தலையெழுத்திலும் அஹல்யா என்று எழுதினார் பிரம்மா.
அந்நேரம் பார்த்து அங்கே வந்த நாரதர் பிரம்மாவிடம் பேச்சு கொடுத்து அவரது கவனத்தைத் திசை திருப்பி விட்டு, அப்பெண்ணின் தலையெழுத்தில் இருந்த ‘அ’ என்னும் எழுத்தை மட்டும் அழித்து விட்டார். ‘ஹல்யா’ என்று ஆகிவிட்டது.
ஹல்யா என்றால் குற்றமுள்ளவள் என்று பொருள். சரஸ்வதி சொன்னபடி நாரதர் அப்பெண்ணுக்குக் குறையை உண்டாக்கிவிட்டார். பெயர்தான் அஹல்யா (குற்றமற்றவள்), ஆனால், தலையெழுத்தில் ஹல்யா (குற்றமுள்ளவள்) என்று உள்ளது. பிரம்மாவும் இதைக் கவனிக்கவில்லை.
அஹல்யாவுக்குத் திருமண வயது வரவே, பல தேவர்கள் அவளை மணந்து கொள்ள விரும்பினார்கள். நாரதரின் ஆலோசனைப் படி பிரம்மா, “யார் மூவுலகையும் முதலில் சுற்றி வருகிறார்களோ அவர்களுக்குத் தான் பெண் கொடுப்பேன்!” என்று கூறிவிட்டார்.
இந்திரன் ஐராவதத்தின் மேல் ஏறினான், அக்னி பகவான் ஆட்டின் மேலும், வருண பகவான் முதலையின் மீதும், வாயு பகவான் மானின் மீதும் ஏறி மூவுலகைச் சுற்றினார்கள். அதற்குள் மிகவும் முதியவரான கௌதம மகரிஷியைப் பிரம்மாவிடம் அழைத்து வந்தார் நாரதர்.
கன்றை ஈன்று கொண்டிருக்கும் பசுவைப் பிரதட்சிணம் செய்யுமாறு கௌதமரிடம் நாரதர் வேண்டினார். அவரும் பிரதட்சிணம் செய்தார். பிரம்மாவிடம், “கன்றை ஈன்று கொண்டிருக்கும் பசுவைச் சுற்றினால் மூவுலகங்களையும் சுற்றியதற்குச் சமம். இதோ கௌதமர் சுற்றி விட்டார்.
அஹல்யாவை இவருக்கு மணமுடித்துத் தாருங்கள்!” என்றார் நாரதர். அதை ஏற்றுக் கொண்டு அஹல்யாவைக் கௌதமருக்கு மணமுடித்துத் தந்தார் பிரம்மா.
மூவுலகங்களையும் சுற்றிவிட்டு வந்த இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள். எப்படியாவது அஹல்யாவை அடைந்தே தீரவேண்டும் என்று இந்திரன் முடிவு செய்தான்.
அதன்படியே அவன் செயல்பட, அஹல்யாவைக் கல்லாகப் போகும்படி கௌதமர் சபித்தார். கல்லாக இருந்த அஹல்யாவின் மீது ராமபிரானுடைய திருவடித்துகள் பட்டபோதே அவள் மீண்டும் பெண் ஆனாள்.
ராமனின் திருவடித் துகள் அவள் மேல் பட்டபோது அவளது தலையெழுத்தில் இருந்த ‘ஹல்யா’ என்பது ‘அஹல்யா’ என்று மாறிவிட்டது.
அதனால் தான் அவள் இப்போது குற்றமற்றவள் ஆனாள். இவ்வாறு பிரம்மா எழுதும் தலையெழுத்தையே மாற்றும் வல்லமை ஸ்ரீ ராமபிரானுடைய திருவடிகளுக்கும் பாதுகைகளுக்கும் உள்ளது.
இது அமைந்துள்ள கோவில் *ஆலக்கிராமம் அருள்மிகு திரிபுரி சுந்தரி சமேத எமதண்டீஸ்வரர் திருக்கோவில்*
🙏🇮🇳1
வளநாட்டில் வரலாற்றுப்புகழ் வாய்ந்த காஞ்சிமண்டலத்தில் புகழ்பெற்ற மயிலம் அருள்மிகு முருகப்பெருமான் ஆலயத்திற்கு மேற்குதிசையில் வராகநதியின் (தொண்டியாறு) வடகரையில் அமைந்துள்ள ஊர் ஆலக்கிராமம்.
🙏🇮🇳2
இக்கிராமத்தில் பல்லவர்காலத்திற்கு முன்னர் (1500 ஆண்டுகளுக்குமுன்னர்) கட்டப்பெற்ற பழமையான சிவாலயம் உள்ளது,
இந்த ஆலயத்தில் இப்பூவுலகு அனைத்திற்கும் அருள்பாலிக்கும் சிவன் எமதண்டீஸ்வரர் என்ற நாமத்தோடு, அம்மைதிரிபுரசுந்தரி என்கின்ற நாமத்தோடும் அருளாட்சிபுரிந்து வருகிறார்கள்.
இன்று ஒரு மிக மிக மோசமான அனுபவம்!..மிக மிக கேவலமான நிகழ்வு!...
எனது நண்பரின் தாய் சற்று உடல்நலம் இல்லாமல் இருந்தார்.மூக்கு,காது தொடர்பான கோளாறு.
இதற்க்கு சில தினம் முன் அருகில் உள்ள ENT மருத்துவ நிபுணரிடம் அழைத்து சென்றுள்ளார்கள்.
அவர்கள் மருந்து எழுதி அந்த மருந்தை அவர்களது மருந்து கடையில் வாங்கவேண்டும் என்று கூறியுள்ளார்கள்.மருந்து கிட்டதட்ட 3 மாதம் எடுத்துக்கொள்ள பரிந்துரை.
இதில் இவர்கள் ஒரு மாதத்துக்கு தேவையானதை வாங்கி வந்துள்ளார்கள்.
இப்போது ஒருமாதம் ஆகிவிட்டதால் மருந்து தீர்ந்தது.
இதனை மீறி கடந்த வாரம் உடுப்பி பி.யு. கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவியை கல்லூரி நிர்வாகம் தடுத்து நிறுத்தியது. இதனால் கோபமடைந்த மாணவியின் உறவினர் முகமது தவுசீஃப் கல்லூரி முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இதையடுத்து உடுப்பி போலீஸார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை குந்தாப்பூர் பி.யு.கல்லூரி முதல்வருக்கு மிரட்டல் மின்னஞ்சல் வந்தது.
தமிழ்நாட்டில், மதுரையில் இருந்து 115 கிமீ மேற்கே உள்ள பழனியில் அமைந்துள்ளது.
இங்குள்ள முருகனது சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது.
முருகனது கோவில் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது.
மூலவர்..
தண்டாயுதபாணி சுவாமி (முருகன்)
🙏🇮🇳1
*கோவில் வரலாறு..*
ஒருநாள் நாரதர் மிக அரிதாக கிடைக்கும் ஞானப்பழத்தை பரமசிவனுக்கு படைப்பதற்காக கொண்டு வந்தார்.
அப்பொழுது அருகிலிருந்த உமையாள் அந்தப் பழத்தை தனது குமாரர்களான குமரனுக்கும், விநாயகனுக்கும் பகிர்ந்து கொடுக்க விரும்பினாள்.
🙏🇮🇳2
ஆனால் பரமசிவனோ பழத்தை பகிர்ந்தால் அதன் தனித்தன்மை போய்விடும் எனக்கூறி தனது மைந்தர்கள் இருவருக்கும் ஒரு போட்டியை அறிவித்தார் அதில் உலகத்தை யார் முதலில் சுற்றிவருகிறார்களோ அவர்களுக்கு அந்த ஞானப்பழத்தை பரிசாக அறிவித்தார்.