*பிரதோஷ நேரத்தில் மூச்சுவிடும் அதிசிய நந்தி* 

இது அமைந்துள்ள கோவில் *ஆலக்கிராமம் அருள்மிகு திரிபுரி சுந்தரி சமேத எமதண்டீஸ்வரர் திருக்கோவில்*

🙏🇮🇳1
வளநாட்டில் வரலாற்றுப்புகழ் வாய்ந்த காஞ்சிமண்டலத்தில் புகழ்பெற்ற மயிலம் அருள்மிகு முருகப்பெருமான் ஆலயத்திற்கு மேற்குதிசையில் வராகநதியின் (தொண்டியாறு) வடகரையில் அமைந்துள்ள ஊர் ஆலக்கிராமம்.

🙏🇮🇳2
இக்கிராமத்தில் பல்லவர்காலத்திற்கு முன்னர் (1500 ஆண்டுகளுக்குமுன்னர்) கட்டப்பெற்ற பழமையான சிவாலயம் உள்ளது, 

இந்த ஆலயத்தில் இப்பூவுலகு அனைத்திற்கும் அருள்பாலிக்கும் சிவன் எமதண்டீஸ்வரர் என்ற நாமத்தோடு, அம்மைதிரிபுரசுந்தரி என்கின்ற நாமத்தோடும் அருளாட்சிபுரிந்து வருகிறார்கள்.

🙏🇮🇳3
திரிபுரசுந்தரி உடனுறை எமதண்டீஸ்வரர் ஆலயம் நீண்ட ஆயுளை வழங்கும் பரிகார ஸ்தலமாக உள்ளது. 

🙏🇮🇳4
15௦௦ ஆண்டுகள் மிகவும் பழமையான இந்த சிவன் கோவில் .

இங்கு கண்டெடுக்கப்பட்ட வட்டெழுத்துக்கள் பொறிக்கப்பட்ட 
பீடத்தில் உள்ள பிள்ளையார் சிற்பம் இரண்டு கைகளுடன் பரியங்க ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.

வலக்கையில் தடி போன்ற ஆயுதத்தையும் இடக்கையில் ஒடிந்த தந்தத்தையும் பற்றியுள்ளார்.

🙏🇮🇳5
தலையில் கரண்டமகுடமும், மேற்கைகளில் கடகமும், முன்கைகளில் காப்பும், மார்பில் உபவீதமாக யக்ஞோபவிதமும், இடையில் ஆடையும், கால்களில் தண்டையும் அணிந்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள விநாயகா் சிற்பங்களில் இதுவே காலத்தால் முந்தையது என கல்வெட்டு ஆராய்ச்சியாளர் ஐரா மகாதேவன் தெரிவித்துள்ளார்.🙏🇮🇳6
இந்த சிற்பம் 75செ.மீ உயரம் (29 அங்குலம்)  மற்றும் 40 செ.மீ (15 3/4 அங்குலம்) அகலம் கொண்ட நீளமான
ஒரே பலகைகல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

🙏🇮🇳7
மேலும், இந்த பிள்ளையார் பீடத்தில் 
3 வரிகளில் "பிரமிறை பன்னூற- சேவிக - மகன்- கிழார்- கோன்- கொடுவித்து" என்ற வட்டெழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது.

🙏🇮🇳8
இந்தச் சிற்பத்தின் பீடத்தில் 3 வரிகளில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மூலம் இந்த சிற்பம் கி.பி. நான்காம் நூற்றாண்டிற்கும் ஆறாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். 

இக்கல்வெட்டு ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று டாக்டர் ஐராவதம் மகாதேவன் கருதுகிறார்.

🙏🇮🇳9
இது சம்பந்தமாக முதன் முதலில், விழுப்புரத்தைச் சார்ந்த கல்வெட்டு ஆய்வாளர் வீரராகவன் கோவிலுக்கு வந்து சிலையை ஆய்வு செய்து சொல்ல. பின்பு தொல்லியல் நிபுணர்கள் கோவிலுக்கு வந்து ஆய்வு செய்தனர். 

🙏🇮🇳10
அவர்கள் சிலையில் உள்ள வட்டெழுத்துக்களை பர்வையிட்ட பிறகு, 

"இந்த எழுத்துக்களின் வடிவம் பூளாங்குறிச்சி என்ற எழுத்து வடிவத்துக்கு பிறகும், பிள்ளையார் பட்டி 
குடைவரைக்கோயில் கல்லெழுத்துக்களின் வடிவத்துக்கு முந்தையதுமாக உள்ளது என கூறிச் சென்றுள்ளனர்". 

🙏🇮🇳11
எனவே இந்த விநாயகர் வழிபாடு என்பது, கி.பி 4 ம் நூற்றாண்டு இறுதி காலத்திலும்,கி.பி 5 ம் நூற்றாண்டு தொடக்க காலத்திலும் ஆர்கராமூர் என்ற ஆலகிராமம் என்ற ஊரில் மூத்த பிள்ளையார் சிலையை நிறுவி மக்கள் வழிபட்டு வந்துள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது.

🙏🇮🇳12
தற்போது இந்த விநாயகர் 
சிலை,மூலவர் கருவறையை ஒட்டிய அர்த்தமண்டபத்தில்  வைக்கப்பட்டுள்ளது. 

🙏🇮🇳13
பிள்ளையார் சிற்பத்துடன் லகுலீசர், இரண்டு பல்லவர் கால ஐயனார், ஜேஸ்டாதேவி  
சிற்பங்கள் இக்கோவில் கும்பாபிஷேகத்திற்காகத் திருப்பணிகள் மேற்கொண்டபோது பூமியின் அடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.

🙏🇮🇳14
இக்கோயிலில் உள்ள சிவன் எமனுக்கு 
தோஷம் நீக்கியதால் எமதண்டீஸ்வரர் என்று பெயர் கொண்டுள்ளார். 

இது எமனுக்கு தோஷம் நீக்கிய ஸ்தலமாகவும் சனீஸ்வரர் வணங்கிய ஸ்தலமாகவும் விளங்குகிறது.

🙏🇮🇳15
திரிபுரசுந்தரி சமேத எமதண்டீஸ்வரர் கோவில் வளாகத்தில் மூலவரான எமதண்டீஸ்வரர் கிழக்கு நோக்கிய கருவறையில் சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார்.  

மூலவர் விமானம் 
சதுரஸ்ர வகையைச் சேர்ந்தது. 

கருவறை பீடம் சதுரவடிவில் அமைந்துள்ளது. 

🙏🇮🇳16
கருவரையினுள்ளும் யாரோ நீரினுள்ளிருந்து வித்தியாசமான மூச்சு விடும் ஒலியைப் போல ஓர் ஒலியை  மக்கள் கேட்டுள்ளார்கள்.

திருப்பணி வேலைகள் ஆரம்பித்து மூலவரை நகற்றிய போது
மூலவருக்கு கீழேயிருந்த ஒரு ஒளிப்பிழம்பு மேல் நோக்கி சென்றுள்ளதை படம் பிடித்து வைத்துள்ளர்கள்.

🙏🇮🇳17
பிரதோஷ நாளில் இக்கோவில் நந்தி விடும் மூச்சுக் காற்றுக் கேட்பதை உணர முடிவதாக பொதுமக்கள் கூறுகிறார்கள். 

பிரதோஷ காலங்களில் நந்தி சுவாசிப்பதை இங்கு உணரமுடிகிறது என்பது தனி சிறப்பு. 

🙏🇮🇳18
சுவாமி இடப்பக்கமும் அம்பாள் வலப்பக்கமும் மையமாக கடுவெளி சித்தர்சீடரின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. 

படர்ந்து விரிந்த ஆலமரத்தின் கீழே 
ஆண், பெண் நாக தேவதைகள் காட்சி தருகிறார்கள். 

மூலவர் கருவறையை ஒட்டி அர்த்தமண்டபம் மற்றும் மகாமண்டபம் ஆகிய அங்கங்களைப் பெற்றுள்ளது. 

🙏🇮🇳19
தெற்கு நோக்கிய கருவறையில் திரிபுரசுந்தரி அம்மன் காட்சி தருகிறார். 

இந்த அம்மன் வாரத்தின் ஏழு நாட்களுக்கும் ஏழு வேறுபட்ட முகங்களில் வெவ்வேறு விதமாகக் காட்சி தருவது வியப்பு. 

🙏🇮🇳20
மகாவிஷ்ணு ஸ்ரீதேவி பூதேவி சமேதராகக் காட்சி தருகிறார். 

சித்திரகுப்தனுக்கும் பிரகாரத்தில் சன்னதி உள்ளது. 

நவக்கிரக சன்னதி இல்லாத சில கோவில்களில் இதுவும் ஒன்று. 

🙏🇮🇳21
இக்கோவில் தீர்த்தக் குளத்தில் கங்காதேவி உறைவதாக நம்பப்படுகிறது. 

யமன் இக்குளத்தில் மூழ்கி தன் பாவங்களைக் களைந்ததாக ஒரு புராணக்கதை உள்ளது.  

🙏🇮🇳22
எம தோஷம் நீக்கும் திருக்குளத்தின் நடுவே கங்கா தேவி தோஷம் நீக்கும் பொருட்டு காட்சி தருகிறார்.

கங்கைசிலை தனியாக இருப்பது வேறு எங்கும் காணமுடியாத சிறப்பு.

🙏🇮🇳23
சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் போன்ற நிறைவுநாள் விழாக்களையும் மிருத்யுஞ்சய ஹோமத்தையும் செய்வதற்கு இத்தலம் ஏற்றது. 

🙏🇮🇳24
இத்தலத்து சிவன் கால அனுக்கிரக மூர்த்தி ஆதலால் காலசர்ப்ப பரிகாரம் செய்வதற்கு ஏற்ற இடமாகும்.

🙏🇮🇳25
அம்பாள் கருணையையும் சுவாமியின் அருளையையும் பெறவேண்டி காஞ்சி மாமுனிவர் மகாபெரியவர் இந்த ஸ்தலத்தில் 1943, 1952, 1966, 1969, 1972 ஆம் ஆண்டுகளில் வருகை தந்து வழிபட்டுள்ளனர் என்பது இந்த ஆலயத்திற்கு பெருமை சேர்க்கும் கூடுதல் சிறப்பு.

 🙏🇮🇳26
தொகுப்புக் கோவில் என்னும் வகைப்பாட்டில், இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலை பரம்பரை அல்லாத அறங்காவலர் குழு நிர்வாகிக்கிறது. 

ஒரு காலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடைபெறும் கோவில்களில் இதுவும் ஒன்று.

🙏🇮🇳27
*கோயில் அமைவிடம்:*

இவ்வூர் மைலத்திலிருந்து 4 கி.மீ. தொலைவிலும், ரெட்டணையிலிருந்து 5.6 கி.மீ. தொலைவிலும், கூட்டேரிப்பட்டு ரோடிலிருந்து 6.4 கி.மீ. தொலைவிலும், பெரமண்டூரிலிருந்து 
10.3 கி.மீ. தொலைவிலும்,

🙏🇮🇳28
திருவம்பட்டிலிருந்து 13.9 கி.மீ. தொலைவிலும், திண்டிவனத்திலிருந்து 14.6 கி.மீ. தொலைவிலும், தீவனூரிலிருந்து 14.8 கி.மீ. தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான விழுப்புரத்திலிருந்து 29 கி.மீ. தொலைவிலும், செஞ்சியிலிருந்து 31 கி.மீ. தொலைவிலும், 🙏🇮🇳29
பாண்டிச்சேரியிலிருந்து 52 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து 144 கி.மீ. தொலைவிலும், அமைந்துள்ளது

🙏🇮🇳30
*கோவிலுக்கு செல்லும் வழி:*

திண்டிவனம் to விழுப்புரம் வழியில் கூட்டேரிபட்டில் இறங்கி, மேற்கே மூன்று கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டும். பேருந்து எண்-8,24 மற்றும் ஆட்டோ வசதி உண்டு.

🙏🇮🇳31
நாமும் ஒருமுறை 

இந்த பழமையான ஆலயத்திற்கு விஜயம் செய்து இறைவன் அருளைப் பெற்று வரலாமே!.

#வாழ்க_பாரதம் 🙏🇮🇳
#வளர்க_பாரதம் 🇮🇳🙏🇮🇳

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

Mar 5
மகாபாரதத்திலிருந்து ஒரு குட்டிக் கதை.!

*நம்பினோர் கைவிடப்படார்..* 

பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும், நிகழப் போகும் போருக்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தனர்..
குருஷேத்திரத்தில், யானைகளைக் கொண்டு, பெரும் மரங்களை, வேரோடு பிடுங்கி அகற்றி, நிலத்தை சீர் படுத்திக் கொண்டிருந்தனர்..
ஒரு மரத்தில் தாய் சிட்டுக்குருவி ஒன்று தன் நான்கு குஞ்சுகளுடன் வசித்து வந்தது. 

அந்த மரம் அகற்றப் படும்போது, பறக்க அறியாத தன் குஞ்சுகளுடன் தாய்க்குருவியும் தரையில் கூட்டோடு விழுந்து விட்டது..
Read 19 tweets
Mar 5
இன்று ஒரு மிக மிக மோசமான அனுபவம்!..மிக மிக கேவலமான நிகழ்வு!...

எனது நண்பரின் தாய் சற்று உடல்நலம் இல்லாமல் இருந்தார்.மூக்கு,காது தொடர்பான கோளாறு.
இதற்க்கு சில தினம் முன் அருகில் உள்ள ENT மருத்துவ நிபுணரிடம் அழைத்து சென்றுள்ளார்கள்.
அவர்கள் மருந்து எழுதி அந்த மருந்தை அவர்களது மருந்து கடையில் வாங்கவேண்டும் என்று கூறியுள்ளார்கள்.மருந்து கிட்டதட்ட 3 மாதம் எடுத்துக்கொள்ள பரிந்துரை.
இதில் இவர்கள் ஒரு மாதத்துக்கு தேவையானதை வாங்கி வந்துள்ளார்கள்.
இப்போது ஒருமாதம் ஆகிவிட்டதால் மருந்து தீர்ந்தது.
Read 7 tweets
Mar 5
கர்நாடகாவில் ஹிஜாப் தடை தொடர்பாக கல்லூரி முதல்வரை மிரட்டிய நபர் கைது

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கல்வி நிலையங்களில் ஹிஜாப், காவி துண்டு உள்ளிட்ட மத ரீதியான உடைகள் அணிய உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதனை மீறி கடந்த வாரம் உடுப்பி பி.யு. கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவியை கல்லூரி நிர்வாகம் தடுத்து நிறுத்தியது. இதனால் கோபமடைந்த மாணவியின் உறவினர் முகமது தவுசீஃப் கல்லூரி முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இதையடுத்து உடுப்பி போலீஸார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை குந்தாப்பூர் பி.யு.கல்லூரி முதல்வருக்கு மிரட்டல் மின்னஞ்சல் வந்தது.
Read 6 tweets
Mar 5
*பழனி முருகன் கோவில்..*

தமிழ்நாட்டில், மதுரையில் இருந்து 115 கிமீ மேற்கே உள்ள பழனியில் அமைந்துள்ளது.

இங்குள்ள முருகனது சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது.

முருகனது கோவில் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது.

மூலவர்..
தண்டாயுதபாணி சுவாமி (முருகன்)

🙏🇮🇳1
*கோவில் வரலாறு..*

ஒருநாள் நாரதர் மிக அரிதாக கிடைக்கும் ஞானப்பழத்தை பரமசிவனுக்கு படைப்பதற்காக கொண்டு வந்தார்.

அப்பொழுது அருகிலிருந்த உமையாள் அந்தப் பழத்தை தனது குமாரர்களான குமரனுக்கும், விநாயகனுக்கும் பகிர்ந்து கொடுக்க விரும்பினாள்.

🙏🇮🇳2
ஆனால் பரமசிவனோ பழத்தை பகிர்ந்தால் அதன் தனித்தன்மை போய்விடும் எனக்கூறி தனது மைந்தர்கள் இருவருக்கும் ஒரு போட்டியை அறிவித்தார் அதில் உலகத்தை யார் முதலில் சுற்றிவருகிறார்களோ அவர்களுக்கு அந்த ஞானப்பழத்தை பரிசாக அறிவித்தார்.

🙏🇮🇳3
Read 21 tweets
Mar 4
" *பிரம்மா எழுதும் தலையெழுத்தையே மாற்றும் வல்லமை ஸ்ரீ ராமபிரானுடைய திருவடிகளுக்கு உள்ளது - விளக்கும் எளிய கதை

பிரம்மாவுக்கு ஒரு பேரழகியைப் படைக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றிற்று. அதனால் தன் கற்பனை நயங்களை எல்லாம் திரட்டி ஒரு பேரழகியை உருவாக்கிக் கொண்டிருந்தார்.
இதைக் கண்டு பொறாமை கொண்ட சரஸ்வதி, தன் மகனான நாரதரை அழைத்து, “உன் தந்தை ஒரு பேரழகியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். குற்றமில்லாத பெண்ணாக அவளை உருவாக்கப் போவதாகப் பெருமிதம் கொண்டிருக்கிறார்.
எப்படியாவது அந்தப் பெண்ணுக்கு ஏதாவது ஒரு குறை ஏற்படும்படி செய்துவிடு!” என்றாள். பிரம்மா அந்தப் பெண்ணைப் படைத்து முடித்துவிட்டார். அவளுக்குப் என்ன பெயர் சூட்டலாம் என்று யோசித்தார்.
Read 14 tweets
Mar 4
அஷ்டலட்சுமி கோயில் பெசன்ட்நகர்.சென்னை

அஷ்டலட்சுமி, மகாலட்சுமி, மகாவிஷ்ணு.

அம்பாள் : ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, கஜலட்சுமி, சந்தான லட்சுமி,  விஜயலட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி.

தீர்த்தம் : சமுத்திர புஷ்கரணி (வங்கக் கடல்).

🙏🇮🇳1 Image
தலச்சிறப்பு : விஷ்ணுவின் துணைவியே லட்சுமி தேவி என்பது யாவரும் அறிந்ததே.  தனம்,  தான்யம், கஜம், சந்தானம், வீரம், விஜயம், வித்யா போன்ற பாக்கியங்களை அருளும் இந்த லட்சுமி  அவதாரங்களை ஒருசேர வணங்குவது விசேஷமான ஐதீகமாக பக்தர்களால்  கருதப்படுகிறது. 

🙏🇮🇳2
கடற்கரையை ஒட்டியே வீற்றிருக்கும் இந்த கோயில் நான்கு அடுக்குகளைக் கொண்டுள்ளது.  

🙏🇮🇳3
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(