குரு பிரம்மா
குரு விஷ்ணு
குரு தேவோ
மகேஸ்வர

அவனேதானாயிடுக

பிரபன்னாமிர்தம் என்னும் குரு பரம்பரை நூலை வாசித்துக்கொண்டிருந்தபோது ஒரு விஷயம் தோன்றியது.

‘நானே கடவுள்’ என்று சொல்லிக்கொள்கிற யாரையும் மக்கள் நம்புவதில்லை. பெருமானையே நேருக்கு நேர் சந்தித்துவிட நேர்ந்தாலும்
அவநம்பிக்கைதான் முதலில் எழும். ஒருவேளை ஆர்.எஸ். மனோகர் குழுவில் உறுப்பினராக இருந்திருப்பாரோ என்று எண்ணத் தோன்றும்.

நமது பிறப்பு அப்படி.

ஒன்றும் பிழையில்லை என்று வையுங்கள். அறிவும் மெய்யறிவும் எதிரெதிர் திசையில் பயணம் செய்வது இக்காலத்தின் இலக்கணமே.
இது எம்பெருமானுக்கு மட்டும் தெரியாதா என்ன?

தெரியாமல்தான் இருந்திருக்கிறது என்பது ஒரு கதையில் தெரியவந்தது.

ராமானுஜர் திருக்குறுங்குடிக்குப் போயிருந்தபோது, குறுங்குடி நம்பி ஒரு சமாசாரம் கேட்கிறான். ‘சுவாமி, உம்மை ஒன்று கேட்க வேண்டும்.
நானும் எத்தனையோ காலமாக எவ்வளவோ நல்ல விஷயங்களைச் சொல்லிக்கொண்டுதான் வருகிறேன். ராமாவதாரத்தில் வாழ்ந்தே காட்டினேன். ஒரு பயல் புரிந்துகொள்ளவில்லை. கிருஷ்ணாவதாரத்தில் நட்டநடு யுத்தக் களத்தில் நிறுத்திவைத்துப் பாடம் எடுத்தேன். யாரும் மதிக்கவில்லை.
ஒவ்வொரு அவதாரத்திலும் என்னவாவது சொல்லிக்கொடுத்து திருத்திப் பணி கொள்ள முடியாதா என்று பார்த்துக்கொண்டேதான் இருக்கிறேன். யாரும் மதிக்கவே மாட்டேனென்கிறார்கள். நீங்கள் மட்டும் எப்படி ஜனங்களை இழுத்து வைத்துக்கொண்டு சாதித்துவிடுகிறீர்கள்? நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கிறார்களே!
நான் கூப்பிட்டு என் பக்கம் திரும்பாதவர்களெல்லாம், நீங்கள் சுட்டிக்காட்டிய பிறகு இந்தப் பக்கம் வருவதன் மாயம் என்ன?’

‘நல்ல கேள்விதான். ஆனால் உபதேசமாக அல்லவா கேட்கிறீர்? எனவே கேட்கும் விதத்தில் கேளும்’ என்றார் ராமானுஜர்.
உடனே பெருமான் அவருக்கு ஒரு பீடம் தருவித்து அமர வைத்து, தன் பீடத்தில் இருந்து இறங்கி வந்து பவ்யமாக, சிஷ்ய பாவத்தில் கேட்க ஆரம்பித்தபோது ராமானுஜர் அந்த ரகசியத்தைச் சொன்னார்.

‘எனக்கு உமது திருநாமம் இருக்கிறது. அதை தியானம் செய்துகொண்டு, பக்தியுடன் போதிக்கிறேன்.
அதனால் நான் சொல்லுவதை மக்கள் கேட்கிறார்கள். உமக்கு அப்படி என்ன இருக்கிறது? நீரே பரமாத்மா என்பதை இனி நாங்கள் சுட்டிக்காட்டி, செய்யவேண்டியதைச் செய்துகொள்கிறோம். வந்து சேருவோரை நீர் அரவணைத்து அருளாசி வழங்குங்கள்; அது போதும்!’ என்றிருக்கிறார்.
பகவானைவிட பகவான் திருநாமத்துக்கு சக்தி அதிகம் என்பதல்ல இதன் செய்தி. பகவானே ஆனாலும் நான் தான் கடவுள் என்று சொல்லிக்கொள்வதைவிட, இவந்தான் கடவுள் என்று இன்னொரு பொருத்தமான நபர் சுட்டிக்காட்டுவ பலனளிக்கும் என்பதே செய்தி

அடியேன் ராமானுஜ தாசன்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Chowkidar Kaalabala🇮🇳

Chowkidar Kaalabala🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Kaalabala1

Mar 23
ஜாலியன் வாலாபாக்கில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த ஜெனரல் டையரை நமக்குத் தெரியும்.

இந்திய வரலாற்றின் மறக்க முடியாத அந்தக் ஜாலியன் வாலாபாக் கோரச் சம்பவம், 15 நிமிடங்களுக்குள் நடந்தேறியது.

1000 பேருக்கும் மேலான மக்கள் ஜெனரல் டயர் என்பவனால், கொன்று குவிக்கப்பட்டனர். Image
2,000 பேருக்கும் அதிகமானோர் குற்றுயிரும் குலை உயிருமாகத் துடித்துக்கொண்டு இருந்தனர்.

ஒவ்வொரு துப்பாக்கி வீரனும் 33 ரவுண்ட் சுட்டு இருந்தான். மொத்தம் 1,650 ரவுண்ட் சுடப்பட்டது. செத்து விழுந்த உடல்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்தன.
தப்பிப் பிழைத்தவர்கள், நடக்க முடியாமல் வீதியில் விழுந்து கிடந்தனர்.

"என்னை மதிக்காத இந்தியர்களுக்கு நான் அளித்த தண்டனை இது. ஒரு ராணுவ அதிகாரியாக இந்தச் செயலுக்காக நான் சந்தோஷம் அடைகிறேன். என்னிடம் இன்னும் அதிக ஆயுதங்கள் இருந்திருந்தால், அதிக நேரம் சுட்டிருப்பேன்’
Read 13 tweets
Mar 23
திருச்சிற்றம்பலம்

தில்லையம்பலம்

*லோகா சமஸ்தா சுகினோ பவந்து!*
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

"#ஒருகோடி_கிராமத்தில்_கோடிவிநாயகர்."

ஒருகோடி என்ற கிராமத்தில் ஒரு கண் மட்டும் வைத்து பார்க்கும் அளவிற்க்கு. #உலகிலேயே_மிகச்சிறிய_நுழைவாயில் கொண்ட அதிசய சிவன் கோயில் உள்ளது. Image
விழுப்புரம்-திருக்கோவிலூர் சாலையில் தோகைப்பாடியில் இருந்து 5கி.மீ சென்றால் வரும் அழகிய கிராமம் #ஒருகோடி.
மொத்தம் 230 வீடுகளும், ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகையும் கொண்டது. விவசாயமே பிரதானத் தொழிலாக உள்ளது.
பதினைந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட
பழமை வாய்ந்த இந்த சிவாலயத்தில் ஒரு கோடி சித்தர்கள் வந்து வழிபட்டு, தவம் செய்து சென்றுள்ளனராம். அதனால்தான் இந்த கிராமத்தின் பெயர் "ஒருகோடி' என்று அழைக்கப்படுகிறதாம். தற்போது சிதிலமடைந்த நிலையில் உள்ள இந்த சிவாலயத்தில்
Read 7 tweets
Mar 23
இரண்டு நாளாக இணையத்தை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது காசியை சேர்ந்த சுவாமி சிவானந்தர் பத்மஸ்ரீ விருது பெற்ற நிகழ்வு..பல லட்சக் கணக்கான மக்கள் அந்த வீடியோவை கண்ணீர் மல்க பகிர்கிறார்கள்..யாருக்கும் அந்த உணர்வை,அதற்கும் மேல் வெளிப்படுத்த தெரியவில்லை என்றே நினைக்கிறேன். Image
125 வயதை அடைந்திருக்கும் ஒரு முதியவர் நடந்து வந்து,சபையின் முன்பு பிரதமர் மோடி அமர்ந்திருக்கும் திசையை நோக்கி விழுந்து வணங்கினார்.தன்னை விட 53 வயது பெரியவர்,நிறை வாழ்வின் எதார்த்த அளவீடுகளை கடந்த ஒரு நபர்,தன் முன்னால் இப்படி வணங்குவதைக் கண்டு
,மோடியும் அதே போல தலை தாழ்ந்து சிவானந்தரை வணங்கினார்..

ஆனால்,சிவானந்தர் அதையெல்லாம் எதிர்பார்த்து செய்தது போல இல்லை.ஒரு கடமையைச் செய்து முடித்தது போல அங்கிருந்து நகர்ந்து விருதை வாங்கப் போகும் பாதைக்கு நேரேவும் அதே போல வணங்கினார்,ஜனாதிபதிக்கு அருகே வந்ததும் அதே போல வணங்கினார்.
Read 18 tweets
Mar 23
*✌🏼🙏🏻🌺🌺🌺.

Sathguroo Pahimam

இன்று "ஏக்நாத் ஷஷ்டி"
ஏக்நாத் மகராஜ் அவர்களின் க்ஷேத்திரமான பைட்டன் நகரில் ஏக்நாத் சஷ்டி கொண்டாடப்படுகிறது. பங்குனி மாதம் கிருஷ்ண பக்ஷ சஷ்டி திதியில் அவர் ஜலசமாதி எடுத்துக் கொண்டார். அந்த பவித்ரமான புனித தினம் இன்று தான்.
இந்த நாளில் மிகவும் விசேஷம் என்னவென்றால் ஏக்நாத் மகராஜ் அவர்களின் குரு ஜனார்த்தன ஸ்வாமியின் ஜென்ம தினம், ஏக்நாத் மகராஜ் ஜனார்த்தன சுவாமியிடம் குரு அனுக்கிரகம் பெற்ற தினம், குருவின் மூலமாக தத்தாத்ரேயரின் தரிசனம் பெற்ற தினம்,
குரு ஜனார்த்தன சுவாமியின் சமாதி தினம் மற்றும் ஏக்நாத் மகாராஜ் ஜலசமாதி எடுத்த தினம் என்றவாறு மிகவும் புனிதமாக கருதப்படும் உயர்ந்த தினம் இன்று. பைடன் க்ஷேத்திரத்தில் இந்த ஏக்நாத் சஷ்டி விசேஷமாக கொண்டாடப்பட்டு
Read 4 tweets
Mar 22
சம்பளம் உயர்த்தி கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த Test!
Q: நீ flightல போய்கிட்டு இருக்க, அதுல 50 செங்கல் இருக்கு, அதுல ஒன்னை தூக்கி வெளிய போட்டுட்டா மீதி எவ்ளோ இருக்கும்?
A: 49 இருக்கும்.
Q: ஒரு யானையை எப்படி 3 Stepல் fridgeக்குள் வைப்பது?
A: fridgeஐ திறக்கனும், யானைய உள்ள வைக்கனும், fridgeஐ மூடனும்.
Q: ஒரு மானை எப்படி 4 Stepல் fridgrக்குள் வைப்பது?
A: fridgeஐ திறக்கனும், யானைய வெளிய எடுக்கனும், மானை உள்ள வைக்கனும், fridgeஐ மூடனும்.
Q: அன்னைக்கு சிங்கத்தோட பிறந்தநாள் எல்லா விலங்கும் வந்துருச்சு ஒன்னு மட்டும் வரல அது என்ன?
A: மான், ஏன்னா அது fridgeக்குள்ள இருக்கு.
Q: முதலைகள் வாழும் குளத்தை ஒரு பாட்டி கடக்கனும், என்ன பண்ணுவாங்க.?
Read 5 tweets
Mar 22
வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம், முக்கியமான கோயிலுக்கு போயிட்டு வாங்க!

இளமை சீக்கிரம் போய்விடும்,
முதுமை சீக்கிரம் போகாது,

ஆசைப்பட்டாலும் கோயிலைப் பார்க்க முடியாது.

சொத்து சுகம் இருந்தாலும் சொந்த பந்தம் இருந்தாலும் முதுமையான காலத்துல
யாரும் கோயிலுக்கு கூட்டிகிட்டு போக மாட்டாங்க.

கடைசி காலத்தில் உயிர் இழுத்துகிட்டு சாவுற நிலைமை வரக்கூடாது.

யாராக இருந்தாலும் முதுமை கால வாழ்க்கை மிகவும் மோசமானது.

கடைசி காலத்துல கட்டில்ல படுத்துகிட்டு பிள்ளைகளுக்கு சிரமத்தை கொடுக்கிற வாழ்க்கை நமக்கு வேண்டாம்.
இளமையில் சாப்பிட்ட அத்தனையும் சாப்பிட தோணும்.

பணிவிடை செய்வதற்கு இன்று யாரும் தயாராக இல்லை.

அசிங்கமா போயிடும்
நம்ம நாற்றம் பிடித்த உடம்பை வைத்துக்கொண்டு மிகவும் கொடுமையான சித்திரவதையை அனுபவிக்கவேண்டும்

இறுதிகாலத்தில்.
சிவசிவ என்று சொன்னாலே உயிர் போய் விட வேண்டும்,
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(