கோவிலில் ஸ்வாமி தரிசனம் செய்யும் போது #செய்ய_வேண்டியவைகள் #செய்ய_கூடாதவைகள்.
இறைவனை வணங்கி விட்டு வரும் போது தானம் செய்வதை விட முன்பாக தானம் செய்வது நல்லது. அதாவது கோவில் வாசலில் இருக்கும் யாசகர்களுக்கு உங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் கோவிலுக்குள் போகும்
போது கொடுக்க வேண்டும், திரும்பி வரும்போது அல்ல. பலருக்கும் இது தெரியாது. கோவிலுக்கு வெறும் கையுடன் செல்லக் கூடாது. பூ, பழம், நல்லெண்ணெய், தேங்காய் கற்பூரம் என எல்லாமுமோ சக்திக்கு முடிந்த அளவு ஏதாவதோ கொண்டு செல்ல வேண்டும். அங்கு சென்று கடன் வாங்க கூடாது. உடல், ஆடை, மனம் எல்லம்
தூய்மையாக இருக்க வேண்டும். பிரதான நுழைவாயில் வழியாக உள்ளே செல்ல வேண்டும். (கருணாநிதி தஞ்சை பெரிய கோவிலுக்கு பிரதான வாயில் வழியாக சென்றால் ஆட்சி பீடம் போய் விடும் என்று பக்க வாயில் வழியாக சென்றது உங்களுக்கு நினைவிருக்கும். அது தவறு.) மூடியிருக்கும் கோவிலில் வெளியிலிருந்து சாமி
கும்பிடக் கூடாது. இதை நாம் பலரும் செய்வோம். வாகனங்களில் சென்றபடியே கடவுளை வணங்கக் கூடாது. அது கடவுளை அவமதிக்கும் செயலாகும். கோபுர தரிசனம் கோடி புண்ணியம், கோபுரத்தினை ஆண்கள் தலைக்குமேல் இரு கைகளையும் குவித்தும் பெண்கள் மார்புக்கு நேரே கைகளை குவித்தும் வணங்க வேண்டும். வேண்டுதல்களை
கொடி மரத்தின் அருகே நின்று கேட்க வேண்டும். கொடி மரம் இல்லாத கோவில்களில் கருடனை துதித்து விட்டு பிரகாரத்துக்குள் நுழைய வேண்டும். பலி பீடத்திற்கு அருகில் சென்று வணங்கி நம்மிடமுள்ள காம, குரோத, லோப, மோக, மத, மாத்சரியும் என்னும் ஆறு தீய குணங்களை பலி கொடுத்ததாக சங்கல்பம் செய்ய வேண்டும்
சில பெருமாள் கோவிலில் பலி பீடத்தில் சிறிது உப்பு, மிளகைக் கொட்டி பிராத்தனை செய்தால் நோய்கள் தீரும் என்பது ஐதீகம். பலி பீடத்தை குறைத்தது 3 அல்லது 5 முறை நமஸ்காரம் செய்ய வேண்டும். ஆலய ஆகம விதிப்படி கர்ப்ப கிரகத்தில் உள்ள மூலவருக்கும், எதிரில் உள்ள நந்திக்கும்/கருடருக்கும் இடையில்
விழுந்து வணங்குவதோ, குறுக்கே செல்வதோ கூடாது. தெய்வ வாகனங்களில் மூக்கில் இருந்து வரும் காற்று மூலவருக்கும் போய் உயிர்நிலை தருவதாக ஐதீகம். கோவிலில் பிரகாரங்களை வலம் வரும்போது வேகமாக நடக்கக்கூடாது. மெல்ல நடக்க வேண்டும். திருக்கோயிலில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் நேரத்திலும்,
மூடியிருக்கும் நேரத்திலும், திருவிழாவில் சுவாமி உலா வரும் நேரத்திலும் கோவிலில் தெய்வத்தை வணங்குவதோ, பிரதட்சணம் செய்வதோ கூடாது. அபிஷேகம் நடந்தால் பிரகாரத்தை சுற்ற கூடாது, அபிஷேகத்தை கண்டால் அலங்காரமும் பார்க்க வேண்டும். விநாயகருக்கு ஒரு பிரதட்சணமும், லிங்கம், முருகன், அம்மன் போன்ற
மூர்த்திகளுக்கு மூன்று பிரதட்சணமும், விஷ்ணுவுக்கும் தாயாருக்கும் நான்கு பிரதட்சணமும், அரச மரத்திற்கு ஏழு பிரதட்சணம் செய்ய வேண்டும். கருவறை மண்டபத்துக்குள் சிவன் கோயிலாக இருந்தால் முதலில் விநாயகர் பின்னர் நந்தி அடுத்ததாக சிவனையும் பிறகு அம்பாளையும் வணங்க வேண்டும். பெருமாள் கோவிலில
முதலில் கருடன் அல்லது ஆஞ்சநேயர் அடுத்ததாக மஹாலக்ஷ்மியை வணங்கி, பிறகு பெருமாளை வணங்க வேண்டும். ஸ்வாமிக்கு அர்ச்சனை செய்து, ஆரத்தி காட்டியதும் பயபக்தியுடன் கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும். தீபாராதனை காட்டும் போது கண்களை மூடிக்கொண்டு வேண்டக் கூடாது. பிரசாதம், தீர்த்தம், சடாரி,
நைவேத்தியம் போன்றவற்றைப் பெற்றுக் கொண்டு வருவது நல்லது. விபூதி, குங்குமம் போன்ற பிரசாதங்களை கோயில்களின் தூண்களில் பூசுவதோ, தீர்த்தத்தை தரையில் சிந்த விடுவதோ கூடாது. அதனால் தான் தீர்த்தம் பெறும் சமயம் கைகளுக்குக் கீழே புடவையோ அல்லது மேல் துண்டையோ வைத்துக் கொள்கிறோம். பெருமாள்
கோவில்களில் நவக்கிரக வழிபாடு இல்லை. ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை வணங்கினாலே நவக்கிரங்களை வணங்கிய பலன் கிடைக்கும். சிவன் கோவில்களில் நவக்கிரங்களுக்கு தனி சந்நிதி இருக்கும். மூலவரைத் தரிசித்து வெளியே வந்ததும், நவக்கிரக தரிசனம் செய்து ஒன்பது முறை பிரதட்சணம் செய்வது நலம். சிவன் கோவில்களில்,
கடைசியாக வணங்க வேண்டியவர் சண்டிகேஸ்வரர் ஈசானத்தில் அமர்ந்திருக்கும் சண்டிகேஸ்வரரை தரிசித்து சத்தம் எழுப்பாமல் வணங்க வேண்டும்.
கோவில்களில் செய்யக் கூடாதவை என்னென்ன:
கோவிலை அசுத்தம் செய்யக் கூடாது. அது மஹா‌‌ பாபமாகும். எச்சில் துப்பக்கூடாது தூங்கக் கூடாது, நம்மைவிட சிறியவர் கையில்
இருந்த விபூதியை எடுத்து நாம் தரிக்கக் கூடாது. கோயிலுக்குள் மற்றவர்களுக்கு வணக்கம் செலுத்தக்கூடாது. சத்தமாக சிரிக்க கூடாது, மொபைலில் பேசக் கூடாது. ஊர்க்கதை பேசவே கூடாது. சிவன் கோயிலாக இருந்தால் சிறிது நேரம் கோயிலில் அமர்ந்தால் சிவ கணங்கள் மற்றும் அம்பாளே வீடு வரை வருவதாகவும்,
பெருமாள் கோயிலாக இருந்தாலும் சிறிது நேரம் அமர்ந்து நாம் ஜெபம் செய்து வீட்டிற்குச் சென்றால் மஹாலஷ்மியே நம்முடன் வருவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. யாரும் பார்க்காத நேரத்தில் கோவிலில் நந்தி மற்றும் எந்த முர்த்திகளையும் தொடக் கூடாது. கையில் விளக்கு ஏந்தி ஆரத்தி காட்ட கூடாது. கோவிலுனுள
மனிதர்கள் காலில் விழுந்து வணங்கவே கூடாது. கோவிலுக்கு சென்று திரும்பிய உடன் கால்களை கழுவ கூடாது. கோவில் படிகளில் உட்கார கூடாது. தாம்பூலம் தரித்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லக்கூடாது. எவருடனும் வீண் வார்த்தைகள் கோயிலில் பேசக்கூடாது. வாசனை இல்லாத மலர்களை மற்றும் மலராத மொட்டுக்களை
பூஜைக்குத் தர கூடாது. கிழே விழுந்த மண் விளக்குள், யாரோ ஒருவர் ஏற்றிய விளக்கில் ஏற்றக் கூடாது தரித்திரம் ஒட்டி கொள்ளும். கிரகணம் இருக்கும் பொழுது கோவிலை வணங்கக் கூடாது. புண்ணிய நதிகளில், குளங்களில் உடனே காலை வைக்கக்கூடாது. முதலில் நீரை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்பவேண்டும்
குளத்தில் கல்லைப் போடக்கூடாது. கோவிலுக்கு போய்விட்டு வந்தால் நேராக நம் வீட்டிற்கு தான் செல்ல வேண்டும், வேறு எங்கும் போக கூடாது. வீட்டிற்கு சென்றதும் கால்களை உடனே கழுவக்கூடாது. வீட்டிற்குள் அப்படியேசெல்ல வேண்டும். அப்போது தான் கடவுளிடம் நாம் கோவிலில் பெற்ற வரம் நேராக நம் இல்லத்தில
நிலைத்து இருக்கும்.
இவற்றை கடைபிடிப்பதால் கடவுளின் பரிபூர்ண அருள் முழுமையாக கிடைக்கும்.
ஜெய் ஸ்ரீ ராம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Mar 29
#MahaPeriyava
Sri Maha Periyava was running a high temperature. His chest was congested with phlegm. Vengudi Doctor usually attended on Periyava and prescribed medication. This time Periyava did not take his medicines. The fever did not subside nor did the phlegm decrease. Image
A lady who came regularly for darshan arrived. Seeing Periyava’s condition, she had made a paste of saffron on the stone used for grinding sandal paste and then heating it to the right temperature and brought it. Periyava was then seated inside the mena (palanquin). The lady Image
offered the costly medicine reverentially. Taking it casually as if it were a common object, Periyava placed the leaf-cup in a corner of the mena. Sri Kamakshiamman was then arriving outside SriMatham in the ceremonial procession down the streets.
“Kamakshi has arrived in front
Read 10 tweets
Mar 29
சாஸ்திரம் மொத்தம் 32 வகையான அறங்களை சொல்லியிருக்கிறது. இவை அனைத்தையும் அம்பாளே காஞ்சிபுரத்தில் தான் செய்து காட்டி அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்ந்துள்ளாள். அன்னைக்கு ‘தர்மசம்வர்த்தினி’ என்று பெயர் உண்டு. தமிழில் ‘அறம் வளர்த்த நாயகி.’ நம் பொருளாதார நிலைக்கு ஏற்ப தர்மங்களை செய்து ImageImage
பலன் பெறுவோம். பொருள் அதிகம் தேவைப்படும் அறம் முதல் அதிகம் செலவில்லாத குடிக்க நீர் கொடுக்கும் தண்ணீர் தானம் வரை பல அறங்கள் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளன.
#தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்:
1. அன்னதானம் செய்தால் பூர்வ  ஜென்ம கர்மவினைகள் தீரும். பித்ருக்களின் ஆசிர்வாதம் Image
கிடைக்கும்.(பழைய சாதத்தை எப்பொழுதும் தானமாக கொடுக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் அது உங்கள் வருமானத்தை விட அதிகப்படியான செலவுகளையே உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும்.)
2. மானத்தை மறைக்க உதவும் ஆடைதானம் செய்தால் தகாத உறவுக் குற்றங்கள் நீங்கும். பெண்களுக்கு இரட்சையாக இருக்கும். ImageImage
Read 12 tweets
Mar 28
ஐந்து வடத்திற்கு ஒரு முறை ஆறு மாதங்கள் நடத்தப்படும் #துபாய்எக்ஸ்போ #DubaiExpo2022 எனப்படும் கண்காட்சியில், எந்த நாடும் தன் நாட்டிற்காக என்று ஸ்டால் போடலாம். ஆனால் ஒரு நாடு தான் ஸ்டால் போட முடியும். ஒரு நாட்டின் தனிப்பட்ட மாகாணம் அல்லது மாநிலம் அல்லது அந்நாட்டு நிறுவனங்கள் அல்லது
தனி மனிதர்கள் தனித்தனியாக ஸ்டால் போட முடியாது. அந்தந்த நாடுகளின் ஸ்டால்களில் அவரவர் நாட்டு மத்திய அரசாங்கம், அந்தந்த மாநில வாரியாகவும் 3 முதல் ஆறு நாட்களுக்கு, அந்தந்த நாடுகளின் ஸ்டால்கள் உள்ளே, கடை நடத்தும். அதன்படி இந்தியா ஒரு ஸ்டால் வாங்கியுள்ளது. இந்தியா தன் ஸ்டாலை ஆறு
மாதங்களாக நடத்திக் கொண்டு வந்து கொண்டுள்ளது. அதில் மாநிலங்கள் வாரியாக ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஸ்பெஷல் டிஸ்ப்ளே அடிப்படையில், மத்திய அரசு மூன்று முதல் ஆறு நாட்கள் வரை அம் மாநில அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பற்றிய கடை விரிக்கும். மத்திய அரசு அதன்படி நாட்களை ஒதுக்கீடு செய்து
Read 6 tweets
Mar 28
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் தனஞ்ஜெயன் என்ற மகான் தன் அன்றாட தேவைகளை ஒருவன் கவனித்துக் கொண்டால் தான் ஸ்ரீமந் நாராயணன் வழிபாட்டில் மூழ்கி இருக்கலாமே என்ற எண்ணத்தில் தனக்கு ஓரு பணியாளை நியமித்துக் கொண்டார். பணியாள் மாதவனின் பணிவும் மரியாதையும் அவருக்கு மிகவும் பிடித்தது.
உன் பெயரென்ன என்று
அவர் கேட்டபோது நீங்கள் என்னை எந்தப் பெயரைக் கொண்டும் அழைக்கலாம். அது உங்கள் விருப்பத்தை பொறுத்தது என்றான் பணியாள் மாதவன்.நீ என்ன வேலை செய்வாய் என்றதற்கு, தாங்கள் என்ன உத்தரவு அளிக்கின்றீரோ அதை செவ்வனே செய்து முடிப்பதே என்னுடைய கடமை என்றான் அவன்.
நீ என்ன சாப்பிடுவாய்?
தாங்கள் என்ன
தருகின்றீரோ அதை சாப்பிடுவேன்.
உனக்கு ஏதேனும் ஆசை இருக்கின்றதா?
எஜமானர் நீங்கள் இருக்கும் போது எனக்கு என்று ஒரு ஆசை தனியாக இருக்க முடியுமா? தங்களுடைய நாட்டமே என் விருப்பம்.
அவனுடைய அந்த தன்னடக்கமான பேச்சைக் கேட்டதும் மகான் தனஞ்ஜெயனுக்கு அழுகையே வந்து விட்டது. தனக்கும் ஸ்ரீமந்
Read 5 tweets
Mar 28
#யோகிஆதித்யநாத் #YogiAdityanath
தேர்தலுக்கு முன் அவரிடம் 'இண்டியா டிவி' பேட்டி எடுத்தது. பேட்டியாளர், உங்கள் குடும்பத்தார் நீங்கள் முதலமைச்சர் ஆனதால் மகிழ்ச்சியோடு இருக்கிறார்களா எனக் கேட்கிறார்!. யோகியின் சகோதரி, ஒரு கோவில் அருகே காய்கறி வியாபாரம் செய்கிறார். அத்துடன் ஒரு
டீக்கடையும் சில பிஸ்கெட்களையும் விற்கிறார். மிகவும் ஏழ்மையான வாழ்க்கை நடத்துகிறார். இதுதான் ஒரு முதலமைச்சரின் சொந்த சகோதரியின் நிலைமை! டிவியாளர் கேட்ட கேள்விக்கு யோகியால் பதில் சொல்ல இயலவில்லை. கண்களில் கண்ணீர் மட்டும் பெருகி ஓடுகிறது. கண்ணீருக்கு இடையே தழுதழுத்த குரலில், "நான்
இந்த மாநிலத்திற்காக என்னை அர்ப்பணிப்பதாக சத்தியப் பிரமாணம் எடுத்துள்ளேன். என் குடும்பம் முன்னேற சபதம் எடுக்கவில்லை.எனது குடும்பத்தைப் பற்றி என்னால் கவலைப்பட முடியாது. எனது கவனமெல்லாம் உபி மக்களின் முன்னேற்றமே!" எனக் கூறி கண் கலங்குகிறார்!
உபி மாநிலம்
Read 12 tweets
Mar 27
#தீட்சை தீக்ஷா என்னும் சமஸ்கிருதச் சொல்லிருந்து தீட்சை என்ற தமிழ்ச்சொல் பிறந்தது. இதற்கு கொடுத்துக் குறைப்பது என்று பொருள். ஞானத்தைக் கொடுத்து மலத்தைக் கெடுப்பது என்று ஆகமங்கள் சொல்கின்றன. இச் சொல்லில் தீ-கொடு, க்ஷி-அழித்தலைக் குறிக்கிறது. ஞானமாகிய நற்பேற்றை அளித்து, மும்மலங்களை
அழிப்பதால் இது தீக்ஷா (தீட்சை). #தீக்கை உள்ளத்து அழுக்கைத் தீயிலிட்டுக் கொளுத்துவது தீக்கை (தமிழ்ச்சொல்). மனிதப் பிறவியின் நோக்கம் இறைவனை அடைவதே. உலகியல் அறிவு எல்லாமே ஏதோ ஒரு ஆசிரியர் வழியே தான் நாம் அறிகிறோம். அப்படியிருக்க எல்லாவற்றிலும் உயர்ந்ததான ஆன்மீக அறிவு, அதில் அனுபவம்
பெற்ற ஒரு குரு வழியேதான் ஒரு சாதகனுக்கு வந்து சேரும். அப்படிப்பட்ட குருவிடம் பூரண சரணாகதி செய்வதன் மூலமே ஒரு ஆன்மீக சாதகன் தன் அகங்காரத்தைத் துறந்து அறிய வேண்டியதை அறிய முடியும். அதற்கு, குருவருளின் ஒரு அங்கமாக, வழிகோலும் ஒரு அடிப்படைச் சாதனமாக குரு தருவதுதான் தீட்சை எனலாம்.
Read 14 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(