#அறிவோம்_வரலாறு
குஜராத்தின் #சோமநாதபுரி ஜோதிர்லிங்க சிவாலயம் #Somnath சாதுராஷ்ட்ரம் எனும் சவுராஷ்ட்ரா பகுதியின் மாபெரும் கலை பொக்கிஷமாய் இருந்தது. அன்றைய சாதுராஷ்ரம் குஜராத்தின் கடல் வணிகமும் அவர்கள் கொட்டிய செல்வமும் பெரும் நதிகளின் வளமும் அந்த சோமநாதபுரியினை சொர்க்கபுரியாக
ஆக்கியிருந்தன, மாபெரும் செல்வத்தின் அடையாளமாய் இருந்தது. இன்றைய பத்மநாதஸ்வாமி ஆலயத்தை விட அதிக தங்கம் அங்கே இருந்தது. அதை விட பெரும் அதிசயம், சிவலிங்கம் அங்கே அமரவில்லை மாறாக அந்தரத்தில் நின்றது. சுற்றிலும் 4 காந்த கல்களை பதித்து விஷேஷமான இரும்பு கல்லால் ஆன சிவலிங்கம். அதன்
ஈர்ப்பு விசையினால் நடுவில் நிறுத்தபட்டது, அந்தரத்தில் லிங்கம் மிதந்தது. நவரத்தினமும் வைரமும் பதிக்கபட்டு மின்னிய அந்த லிங்கம் சோமன் எனும் நிலவு போலவே மின்னியது. அங்கு மாபெரும் காணிக்கையும் பக்தர் எண்ணிக்கையும் குவிந்தன. கோவிலின் குறைந்த பட்ச உலோகம் தங்கம் எனும் அளவு ஜொலித்ததது.
கோவிலின் கோபுரம் உள்ளிட்டவை தங்க தகடுகளால் வேயப் பட்டிருந்தன.‌ இன்னும் எவ்வளவோ அதிசயங்கள்! கோவிலின் பிரம்மாண்ட கதவுகள் சந்தன மரத்தால் செய்யபட்டு வைரமும் வைடூரியமும் பதிக்கப் பட்டிருந்தன‌. அந்த ஆலயத்தின் செல்வத்தை குறிவைத்து 800ம் ஆண்டுகளில் வந்த ஆபத்தையெல்லாம் பாப்பா ராவ் போன்ற
மன்னர்கள் முறியடித்து வெற்றி பெற்றனர். ஸ்பெயின் வரை வென்ற அரேபிய கலிபாக்களால் அருகில் இருந்த இந்தியாவுக்குள் நுழைய முடியவில்லை இங்குள்ள அரசுகள் வலுவாய் இருந்தன. ஆப்கனில் முகமது எனும் மன்னன் கஜினி, பிராந்திய மன்னனாக இருந்த பொழுது இந்த ஆலயத்தின் செல்வம் அவன் கண்களை உறுத்திற்று, அதை
கொள்ளையடிக்க அவன் படை திரட்டவில்லை காரணம் நேருக்கு நேர் மோதினால் வெல்ல முடியாது என்பது அவன் அறிந்தது. இதனால் வஞ்சக திட்டமிட்டான். குதிரை வியாபாரிகள், ரத்ன வியாபாரிகள் என அவன் ஆட்கள் சூரத் வழியாகவும் கைபர் போலன் வழியாகவும் ஊடுருவினர். எல்லா நாட்டு வியாபாரிகளும் புழங்கிய இடம்
என்பதால் யாரும் அதை கண்டு கொள்ளவில்லை. அப்படி ஒவ்வொருவராக, குழுவாக, வந்து ரகசியமாக நிலையெடுத்தனர. குறிப்பிட்ட நாளில் கஜினி சிறு படையோடு வந்தபோது இவர்கள் அவனோடு இணைந்த போதுதான் ஆபத்து புரிந்தது. கஜினி இந்தியாவினை கொள்ளையிடவோ இல்லை ஆளவோ விரும்பியவன் அல்ல, மாறாக அந்த ஆலய செல்வத்தை
கொள்ளையிடுவதே அவன் நோக்கமாய் இருந்தது. இப்படி மின்னல் வேக கொள்ளையடித்து அவன் திரும்புவதும், அவன் வந்துவிட்டு சென்றபின்பும் அவன் கைகூலிகள் ஆங்காங்கு பதுங்கி இருந்து எங்களுக்கும் கஜினிக்கும் சம்பந்தமில்லை என கதறுவதும் நடந்தது. இந்தியா அவனை ஒரு கொள்ளையனாக கருதிற்று, அக்காலத்தில்
ஏகபட்ட கொள்ளையர் இப்படி வந்து கொள்ளையடிப்பதுண்டு. பாரத கண்டம் ஒருவித பெருந்தன்மையில் அவனை மிகபெரும் ஆபத்தாக கருதா நிலையில் அவன் படுபயங்கர திட்டமிட்டான். சுமார் 6 முறை அவன் கொள்ளை முயற்சி வெற்றிபெற்ற நிலையில் 10 முறை தடுக்கவும் செய்யபட்டது, அவன் ஓட அடிபட்ட காலமும் உண்டு. அடிக்கடி
கொள்ளையிட முடியாது என்பதை உணர்ந்த அவன் கடைசியில் பெரும் பாய்ச்சலாக பாய்ந்தான். அந்த பாலை நிலத்தில் கொள்ளை என்பது தர்மம், ஒன்றுமே விளையாத அந்நிலம் கொள்ளை ஒன்றாலேதான் வாழ்ந்தது, அதை இந்த வளமான நாட்டில் தயக்கமின்றி செய்தான் கஜினி முகமது. கோவிலை இடித்தான், அந்தரத்தில் மிதக்கும்
லிங்கத்தை காலால் இழுத்து உடைத்தான். கோவிலை தோண்டி கொள்ளையடித்து, தங்க தகடுகளையெல்லாம் கழற்றி அதை மொத்தமாக பாழ்படுத்தி மொத்த செல்வத்துடன் தப்பி சென்றான். அது யாரும் எதிர்பாரா தாக்குதல், கோவில் முழுமையாக அழிந்தது. அந்த செல்வத்துடன் கஜினி தன் நகரை புதுப்பித்தான் அணை கட்டினான் அமிர்
குஸ்ரூ எனும் புலவனை தன்னை பற்றி பாட சொல்லி கேட்டு கொண்டிருந்தான். அந்த மிதக்கும் லிங்கத்தை துண்டு துண்டாக உடைத்து பல இஸ்லாமிய மன்னருக்கும் அனுப்பி இந்துக்களின் மிக பெரும் நம்பிக்கை ஒன்றை தான் தகர்த்ததாக பெருமைபட்டு கொண்டான். ஆப்கனில் இருந்து எப்படி தன் கைகூலிகள் வழி இந்தியாவினை
கொள்ளை அடிக்க வேண்டும் என்பதை முதலில் சொன்னவன் அவனே. வியாபார உளவு, பயணிகள் உளவு, இன்னும் பலவேட உளவாளிகளாக வந்து கானகத்தில் பதுங்கி இன்னும் எங்கெல்லாமோ பதுங்கி உத்தரவு வந்ததும் ஒன்றாக கிளர்ந்தெளும் அபாய வழியினை அவன் சொல்லியிருந்தான்.
சோமநாதபுரியினை அவன் கொள்ளையடித்து சென்ற கொஞ்ச காலத்தில் அவன் செத்துவிட கவுரி அல்லது கோரி என்பவனுக்கு இந்தியாவினை கொள்ளையிடும் ஆசை வந்தது. ஆனால் அவனை ஓட அடித்தான் மாவீரன் பிருத்திவிராஜன். ஆனால் பிருத்வி ராஜனுக்கும் அவன் மாமனுக்கும் முரண்பாடு வந்த காலத்தில் உள்ளே வந்து வஞ்சகமாக
பிருத்வியினை பிடித்து குருடாக்கினான் கோரி. கோரியும் சில நாட்களில் அதே வஞ்சகத்தில் கொல்லபட்டான், அவனை கொன்றது பிரித்த்வி எனவும் இந்திய வீரர்கள் எனவும் பல செய்தி உண்டு, எப்படியாயினும் கோரி இந்தியாவைத் தாண்டும் முன் செத்தான் என்பதே வரலாறு. கோரி தன் அடிமை ஒருவனை டெல்லி சுல்தானாக
நியமித்தான், டெல்லியில் சுல்தான் ஆட்சி அப்படி வந்ததே. அந்த அடிமை வம்சத்தை கில்ஜி தூக்கி எறிந்து சுல்தான் என்றானான், அவன் குறியும் சோமநாதபுரியில் விழுந்தது. ஆம் கஜினியால் நொறுக்கபட்ட ஆலயத்தை இந்துக்கள் தேனி போல் உழைத்து மறுபடி உருவாக்கி வைத்திருந்தனர், அதை கொள்ளையிட்டான் கில்ஜி.
இந்துகள் அவ்வாலயத்தை மறுபடி மறுபடி உருவாக்குவதும் ஆப்கானிய கொள்ளையர் கொள்ளையிடுவதுமாக இருந்தனர். கில்ஜி துக்ளக் ஆகியோர் திருச்சி, மதுரை வரையில் கொள்ளை அடித்து ஆளை அமர்த்தினர். இங்கே விஜயநகர பேரரசும் வடக்கே ராஜபுத்திரரும் அவர்களை கட்டுப்படுத்தி காவலை இந்துக்களுக்கு வழங்கினார்கள்.
துக்ளக் காலம் முடிந்து பாபர் வந்து அக்பர் கொஞ்சம் நிதானமாக ஆண்டபொழுது சோமநாதபுரி ஆலயம் மறுபடி கட்டபட்டு ஜொலித்தது. ஆனால் அவுரங்கசீப் அந்த ஆலயம் எழுவது பொறுக்காமல் அதை இடித்து அதன் கோபுரத்தை மசூதி போல் ஆக்கி வைத்திருந்தான். அதாவது அவன் அக்கோவிலை மசூதியாக்கும் வேலையினை செய்து
கொண்டிருந்த பொழுது சிவாஜி அவனை விரட்டி அடித்தார், கோவில் முழுவதும் மசூதியாகாமல் தப்பித்தது. ஏன் அதை ஆப்கானிய மன்னர்கள் குறிவைத்தார்கள் என்றால் யூத கோவிலை ரோமர் ஒழித்த கதைதான், இது இருப்பதால் தானே ஒன்று கூடி சண்டையிட்டு என் கோவில் என் நாடு என் இனம் என்கின்றார்கள்! மொத்தமாக ஒழித்து
விட்டால் சும்மா இருப்பார்கள், அதுவும் மசூதி கட்டிவைத்தால் மெல்ல மெல்ல மதம்மாற போகின்றாகள், அவ்வளவு போதும். ஒரு நாட்டின் அடையாளத்தையே மாற்றி அடிமையாக்கும் முயற்சி அது. பின் மராத்தியர் காலத்தில் சிங்கம் வீரசிவஜியால் அவுரங்கசீப் ஒடுக்கபட்டு கோவில் வேலை தொடங்கும் திட்டம் இருந்தாலும்
ஓயா போர்கள் அதை முடிக்க முடியவில்லை. இடிபட்ட கோவில் அப்படியே இருந்தது, அவுரங்கசீப் கட்டி வைத்த மசூதிவடிவ கூரையுடனே இருந்தது. பின் வெள்ளையன் வந்து அந்த ஆலயம் ஜூனாகத் சுல்தானின் ஆட்சிக்குள் சிக்கியது. அந்த ஆலயம் இந்தியாவின் அடையாளம் என்பதிலும் பாரம்பரியம் மிக்கது என்பதிலும்
இந்துக்கள் திரும்ப கட்ட துடித்தார்கள், ஆனால் ஜூனாகத் சுல்தான் அனுமதி வழங்கவில்லை. இச்சிக்கலை வைத்து வெள்ளையன் அரசியல் செய்தானே அன்றி ஆலயம் பாழ்பட்டே கிடந்தது. 1947ல் சுதந்திரம் வாங்கியதும் பட்டேல் அதை கட்ட விரும்பினார், ஆனால் ஆபத்து ஜூனாகத் மன்னன் வடிவில் வந்தது அவன் பாகிஸ்தானோடு
இணைய விரும்பினான். ஆனால் மக்கள் எழுச்சியில் அந்த பகுதி இந்தியாவோடு இணைய சோமநாத பட்டணம் இந்திய பகுதியானது. அதை கட்ட வேண்டும் என கே.கே முன்சி என்பவர் முதலில் முயல நேரு ஒரு தடைகல்லானார், காந்திக்கு அதில் விருப்பமுமில்லை தடையுமில்லை. இந்த இடத்தில் தான் விவகாரம் படேல் கைக்கு சென்றது.
அவர் நேருவினை பகிரங்கமாக எதிர்த்தபின் நேருவுக்கு வேறு வழி தெரியவில்லை. பட்டேல் தீவிரமாக ஆலய வேலையில் இறங்க நேருவோ மதசார்பற்ற நாட்டில் இதற்கு அனுமதி இல்லை என்றார். ஆனால் இந்துக்கள் நாடெல்லாம் கையேந்தி அதை கட்டி முடித்தனர். இடையில் எவ்வளவோ எதிர்ப்புகள் வந்தன, இந்து ஆலயம் மீள கூடாது
என கங்கணம் கட்டி பல சதிகள் நடந்தன‌. காஷ்மீர் போர், நாட்டின் கலவரம் என எவ்வளவோ இடைஞ்சல்கள். உச்சமாக காந்தி கொலை நடந்தபின் எழுந்த ஒப்பாரியில் இந்த பணி நிறுத்தப் படவேண்டும் என்ற குரல் எழுந்தன.‌
ஆனால் நடக்க வேண்டிய பணிகள் அமைதியாக நடந்து நல்லபடியாக முடிந்தது. (அது மத அடையாளம் என்ற
நேருவுக்கு பின்னர் ஹூமாயுன் சமாதி முதல் பல தேவாலயம் மசூதிகள் அரசு சார்பில் பழுதுபார்க்கபட்டபொழுது கண்கள் மூடிகொண்டன.) மாபெரும் வரலாறு அன்று திரும்பியது, சுமார் ஆயிரம் ஆண்டு கால போராட்டத்தின் பின் அக்கோவில் மறுபடி இந்துகளால் திறக்கபட்டது. உண்மையில் இந்திய வரலாற்றின் மாபெரும்
ஆச்சரியம் அது. ஆயிரம் ஆண்டுகளாக ஒரு ஆலயம் அழிக்கபடுவதும் விழ விழ எழுவதும் எத்தனை நூற்றாண்டுகளாக இஸ்லாமிய ஆட்சியில் இருந்தும் அது பின்பு மீள கட்டபட்டதும் வரலாறு. அன்றைய குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத்தை அழைத்து அந்த ஆலயம் திறக்கபட்டது, 1951ல் அந்த ஆலயம் திறக்கபட்டபொழுது பட்டேல்
உயிரோடு இல்லை. அக்கோவில் மீள எழ காரணமான பட்டேல் அந்த கோவிலின் வேலை முடியும் முன் தன் காலத்தை முடித்திருந்தார். 1951லும் நேரு என்பவர் அப்பக்கமே வரவில்லை, வர அவருக்கு மனமில்லை. ஆம், 1951ல் சோமநாதபுரி ஆலயம் மறுபடி திறக்கபட்டு தன் வரலாற்றை மீட்டு கொண்டது. உலகின் எந்த நாட்டு
ஆலயத்துக்கும் இல்லா பெருமை சோமநாதபுரி ஆலயத்துக்கு உண்டு, எந்த இனங்களுக்கும் இல்லா பெருமை இந்துகளுக்கு உண்டு.
அக்கோவில் ஏன் கட்டபட வேண்டும் என 1947களில் சாதுக்கள் மற்றும் பக்தர்கள் கூட்டத்தில் பட்டேல் சொன்ன வார்த்தை சரியானது.
"இந்த ஆலயம் இந்துக்களின் பெருமை மட்டுமல்ல, இந்தியாவின்
பெருமையும் கூட‌. இது ஜொலிக்கும் பொழுதெல்லாம் இந்தியா உலகில் சக்தியும் செல்வமும் கொண்ட நாடாய் இருந்தது, இது இந்தியாவின் மாபெரும் அடையாளம். புதிய இந்தியா இந்த ஆலயத்தில் இருந்தே எழட்டும், மாபெரும் இடத்தை அது அடையட்டும்" அது சர்வ நிச்சயமானது, அதிலிருந்துதான் ஒவ்வொரு ஆலயமாக துலங்க
துலங்க தேசமும் வளர்ந்து இன்று தேசமும் வலுவாகி ராமர்கோவிலும் கிடைத்தாயிற்று. அந்த சோமநாதபுரி ஆலயத்தில் முதலில் பறக்க தொடங்கிய காவி கொடிதான் இன்று நாடெங்கும் பறந்து தமிழகத்திலும் இப்பொழுது பறக்க தொடங்கி இருக்கிறது. முதன் முதலில் வீழ்ந்த அந்த ஆலயம் எழும்பித்தான் இன்று எல்லா மற்ற
ஆலயங்களும் எழ தொடங்கி இருக்கின்றன.‌ உண்மையில் இந்தியாவின் அதிசயம் தாஜ்மகால் அல்ல, அந்த சோமநாதபுரி ஆலயமே. பட்டேலுக்கு மாபெரும் சிலை ஏன் வைக்கபட்டது என்றால் நாட்டுக்காக ஆற்றிய சேவை மட்டுமல்ல, ஆயிரமாண்டு அடையாளத்தை அன்றைய நேரு எனும் சக்திவாய்ந்த‌ மனிதனை மீறி அவர் மீட்டு கொடுத்தார்
என்பதற்காக.‌இன்று அந்த சோமநாதபுரி ஆலயம் ஆயிரம் ஆண்டு கடந்து மீண்டு கம்பீரமாக நிற்கின்றது, அதன் உச்சியில் காவி கொடி பறக்கின்றது. அது மறுபடி உருவாக காரணமான பட்டேல் மாபெரும் சிலையாக நிற்கின்றார். அதே குஜராத்தில் இருந்து உருவான காவி சிங்கங்கள் டெல்லியில் இருந்து வறண்ட ஆப்கனுக்கு
உதவிகளை செய்கின்றது. இதெல்லாம் காலம் போட்டு வைத்த கணக்கு, பரம்பொருள் போட்டு வைத்த தர்ம கணக்கு, மானிட கண்முன் மாபெரும் நாடகம் ஆடி சிரிக்கும் சோமநாதரின் கணக்கு. வரலாற்றில் மறைக்கபட்ட இந்நாளை ஒவ்வொரு இந்துவும் இந்து எழுச்சி நாளாக கொண்டாடட்டும், ஒவ்வொரு ஆலயமும் அப்படி மீட்கபட்டு
பொலிவு பெற்று மிளிர உறுதி ஏற்கும் நாளாகவும் இது அமையட்டும்.
(சோமநாதபுரி ஆலயத்தின் சொத்துக்களை கொண்டு சென்று உருவாக்கபட்ட ஆப்கன் இன்று சீரழிந்து கிடப்பதும், எவ்வளவோ முறை சொத்துக்களை பறிகொடுத்த குஜராத் ஆலயத்தையும் மீட்டு மிகபெரிய வளமான பகுதியாய் எழுந்து நிற்பதும் சிவனின்
திருவிளையாடல் அன்றி வேறென்ன‌?
ஒருநாள் அமைதியான நாள் என்றோ, ஒருநாள் இரத்தம் சிந்தா நாள் என்றோஆப்கானில் உண்டா? இல்லை. சிவன் சொத்து குலநாசம் என அர்த்தமில்லாமலா சொன்னார்கள்)
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Apr 13
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் உறையூர் சென்று சோழர்குல வல்லியும் தனது பக்தையுமான கமலவல்லியைக் கண்டு மணமுடித்து விரலில் மோதிரம் பெற்றுக்கொண்டு காவிரி வழியே மெல்ல நடந்து கோவிலில் பெரியபிராட்டியாம் தாயார் சந்நிதியை அடைவார் அரங்கன். அண்ணலின் மார்பில் இருக்கும் மஹாலட்சுமியின் அனுமதியின் ImageImageImage
பெயரில் தான் உறையூர் நாயகியை மணக்கிறார். புதுமாப்பிள்ளை ஆகிறார்! புது மோதிரம் பளபளக்க காவிரி வழியே ஊர் திரும்பும்போது பழைய மோதிரத்தை ஆற்றில் தொலைத்து விடுகிறார். ஆஹா இன்று நாம் வீட்டுக்குப்போனால் அரங்கநாயகி எங்கே நான் அணிவித்த மோதிரம் என்று கேட்பாளே, புது மோதிரம் வந்த ஜோரில்
பழையதை வீசி எறிந்துவிட்டீர்களா எனக் கேட்டு நம்மை தொலைத்து விடுவாளே என்ன செய்வது என தவிக்கிறார். காவிரிக்குப் போய் பல்லக்கில் வரும் அரங்கன், அன்பர்கள் எல்லாரையும் மோதிரத்தைத் தேடச் சொல்கிறார். தானும் தேடுகிறார். தப்புப் பண்ணிய கணவர்கள் சகஜமாக செய்யும் அசட்டு வழியை மேற்கொள்ள
Read 12 tweets
Apr 13
#மகாபெரியவா தமிழ் மொழியில் பெரிவாளுக்கு இருந்த பேரறிவு முத்தமிழ்க் காவலர்களை எல்லாம் பிரமிக்க வைக்கிறது. ஒரு முறை கி.வா.ஜ விடம்,“தமிழ் என்றால் என்ன” என்று கேட்டார். மேலும் “சமஸ்கிருதம் என்றால், செம்மை செய்யப்பட்ட மொழி என்று அர்த்தம்! அப்படி தமிழுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது Image
சொல்லுங்கள்” என்கிறார்.
கி,வா.ஜ. அடக்கமாக, ”பெரியவா சொன்னால் தெரிந்து கொள்கிறேன்” என்றார்.
“எந்த மொழியிலும் இல்லாத சிறப்பான எழுத்து ‘ழ’ என்பது. இந்த எழுத்து வரக்கூடிய எந்தச் சொல்லும், அழகு, இனிமை.
மழலை, குழல், அழகு, குழந்தை, கழல், நிழல், பழம், யாழ் இப்படி ‘ழ’ வருகிற எல்லாமே Image
நமக்குப் பிடித்தவை. ஆகவே இனிமையான ‘ழ’வைத் தம்மிடத்தில் உடையது தமிழ் (தமி+ழ்) என்று சொல்லலாமா” என்றார்.
உடனே கி.வா.ஜ., “இதைவிடப் பொருத்தமாக சொல்ல முடியுமா? இனி எல்லா மேடைகளிலும் நான் இதைச் சொல்லுவேன்” என்றாராம்.

சீர்காழிப் பதிகத்தில் நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தர் பாடியிருக்கும்
Read 8 tweets
Apr 13
ஆயுள் பலம் பெறுவதற்கும் மரண பயம் இன்றி வாழ்வதற்கும் வழிபட வேண்டிய பரிகார சிவஸ்தலங்கள் பல உள்ளன. அக்கோவில்கலில் எல்லாம் நவக்கிரகங்கள் இருப்பதில்லை. புகழ் பெற்ற புராதன சிவன் கோயில்கள் அவை. எங்கெல்லாம் எமன் சிவனை வழிபட்டுள்ளாரோ அங்கெல்லாம் நவக்கிரகங்கள் இருக்காது.
1. திருவான்மியூர் ImageImage
மருந்தீஸ்வரர் கோயிலில் நவக்கிரகம் இல்லை. எமன் வந்து வழிபட்ட தலம்.
2. திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலிலும் நவகிரக சந்நதி இல்லை. அங்கும் எமன் வந்து வழிபட்டுள்ளார்.
3. ஸ்ரீவாஞ்சியம்
4. திருவாவடுதுறை.
5. திருப்பைஞ்சீலி
6. திருக்கடையூர். எமன் மார்க்கண்டேயனை நோக்கி பாசக்கயிறு
வீசும் போது சிவன் காட்சி அளித்து என்னுடைய பக்தனை எப்படி நீ ஆட்கொள்ளலாம் என்று காலால் எட்டி உதைத்ததாகவும் அதனால் இறத்தல் தொழில் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் இந்த ஸ்தல புராணம் கூறுகிறது. மானிடர்களின் உயிரை பறித்த எமனுக்கு சிவன் இங்கு மறுபடியும் உயிரை எடுக்கும் அதிகாரம் வழங்கியதாக
Read 6 tweets
Apr 12
ஜெயதேவர் (முழுப்பெயர் ஜெயதேவ கோஸ்வாமி) இந்திய வரலாற்றின் இணையற்ற கவிகளில் ஒருவர்.
சமஸ்கிருத மொழி வல்லுனர். 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவரின் முக்கிய படைப்பு, புகழ்பெற்ற கீத கோவிந்தம் என்னும் காவியம். இந்த கவிதைத் தொகுப்பு ஸ்ரீ கிருஷ்ணன் மற்றும் ராதைக்கும் இடையே இருந்த தெய்வீகக் Image
காதலை, அற்புதமான வரிகளுடன், அழகான இசையுடன் விவரிக்கும். இந்திய பக்தி இயக்கத்தில் இவரது படைப்பு முக்கியமானது. ஒடிசா மாநிலத்தில் உள்ள குர்தா மாவட்டத்து பிராச்சி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கெந்துளி சாசன் என்ற இடத்தில் இவர் பிறந்தார். இது புகழ்பெற்ற கோவில் நகரமான பூரிக்கு அருகில் Image
உள்ளது. ஒடிசாவை கிழக்கு கங்கை பேரரசு ஆண்டு கொண்டிருந்தபோது இவர் பிறந்துள்ளார். சோடகங்க தேவர் மற்றும் அவரது மகன் இராகவா மன்னராக இருந்த காலங்களில் ஜெயதேவர் தமது படைப்புக்களை ஆக்கியிருக்க வேண்டும் என கோவில் கல்வெட்டுக்களிலிருந்து தெரிய வருகிறது. இவரது பெற்றோரின் பெயர்கள் போஜதேவன்
Read 7 tweets
Apr 12
#MahaPeriyava
When Smt D.K.Pattammal, the eminent Carnatic music singer was seven years old, she had the rarest opportunity of taking the blessings of Sri Maha Periyava. She was a regular visitor to the Kanchi Mutt and her father would always insist on her to chant slokas in the
Mutt regularly after having darshan at Kanchipuram Kamakshi Amman Temple. Having noticed the little girl’s potential, Sri Maha Periyava personally requested DKP’s father to bring her to Esanur (when she was only 7 or 8 years of age) where He was stationed for observing the
Chaturmasya Vratha. He wanted Krishnaswami Deekshithar to participate during the Navarathri Pooja and wanted young Pattammal to sing during his nine day Pooja. DKP remembered with gratitude how Sri Maha Periyavaa himself offered the coconut kept in the Navarathri kalasam to DKP’s
Read 7 tweets
Apr 11
🏹 #சிவதனுசு சிவபெருமானிடம் கோடிக் கணக்கான தனுசுகள் அதாவது வில்கள் உண்டு. தெரிந்த வரை சிவபெருமான் தன்னிடம் உள்ள மூன்று சிவதனுசுகளைச் சிவப் பிரசாதமாகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் அளித்துள்ளார். இதில் ஒன்று ராவணனின் தவத்தை மெச்சி அவனுக்கு அளிக்கப்பட்டது. சிவ தனுசுவை வைத்திருக்கும்
ஒருவனை எந்த உலகத்திலும் யாராலும் வெல்ல முடியாது. ஆனால், இந்த வில்லை முறையாகப் பயன்படுத்தும் வரைதான் அது சிவப் பிரசாதமாக இருக்கும். அதைத் தவறாகப் பயன்படுத்தினால் அது தன் சக்தியை இழந்து விடும். இதை பூரணமாக உணர்ந்தவன்தான் இராவணன், ஆனால், தான் என்ற அகங்காரம் காரணமாக சிவ வாக்கை மறந்து
எல்லா லோகங்களுக்கும் சென்று அனைத்து லோகங்களையும் வென்று தேவர்கள், கந்தர்வர்கள் என அனைவரையும் வென்றான். நவகிரக லோகங்களுக்கும் சென்று எல்லா நவகிரகங்களையும் தன் அடிமையாக்கி தன் சிம்மாசனப் படிகளாக்கி அவர்களை அவமானப்படுத்தினான். இத்தகைய அதர்மமான செயல்களால் சிவதனுசுவின் சக்தி சிறிது
Read 17 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(