#அழகர்_ஆற்றில்_இறங்கும்_வைபவம் எல்லோருக்கும் ஐப்பசியில் தீபாவளி வரும். ஆனால், மதுரைவாசிகளுக்கு, சித்திரையிலும் ஒரு தீபாவளி. அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை அந்த அளவுக்கு மிக விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள். திருவிழா நடக்கும் பத்து நாட்களும் ஊரே திமிலோகப்படும். மதுரை மற்றும்
சுற்றிலுமுள்ள ஊர்களில் இருந்து குடும்பத்துடன் புறப்பட்டு வந்து சேருவார்கள். சுமார் பத்து லட்சம் பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடும் திருவிழா இது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தைச் சொல்வதற்கு முன், அவர் குடிக்கொண்டிருக்கும் #அழகர்மலையின் சிறப்பையும் சொல்லியாக வேண்டும். மதுரைக்கு
வடக்கே சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில், அழகர்மலை கம்பீரமாகக் காட்சி தருகிறது. பார்ப்பதற்கு காளை வடிவில் இருப்பதால் இந்த மலைக்கு 'விரிஷபாத்ரி' என்று ஒரு பெயர் உண்டு. தன்மேல் ஏவி விடப்பட்ட சாபத்துக்கு விமோசனம் கேட்டு, எமதர்மன் இந்த மலைக்கு வந்து பெருமாளை வேண்டித் தவமிருந்தான்.
தவத்தை மெச்சி, எமதர்மனுக்கு பெருமாள் சாபவிமோசனம் தந்தபோது, 'இதேபோல் இங்கேயே தங்கியிருந்து பூலோக பக்தர்களுக்கும் அனுக்கிரகம் பண்ண வேண்டும்' என்று எமதர்மன் கேட்டுக்கொண்ட காரணத்துக்காக, இந்த மலையில் பெருமாள் குடி கொண்டதாகப் புராணம் சொல்கிறது. எங்கும் இல்லாத சிறப்பாக இங்கு கள்ளழகராக
அவதாரம் எடுத்து எழுந்தருளி இருக்கும் சுந்தரராஜப் பெருமாள் சங்கு, சக்கரம், வில், வாள், கதை என பஞ்சாயுதங்களுடன் காட்சி தருகிறார். அதுமட்டுமின்றி, இங்கு மட்டும்தான் பெருமாளின் கையில் உள்ள சக்கரம் புறப்படத் தயாராக இருக்கிறது. பக்தர்களிடம் இருந்து அபயக்குரல் வந்தால், கண நேரமும்
தாமதிக்காமல் துஷ்டர்களை அழிக்க வேண்டும் என்பதற்காக சக்கரத்தைப் பிரயோக நிலையிலேயே வைத்திருக்கிறார் பெருமாள். மூலவருக்கு அடுத்தபடியாக அதிமுக்கியமானவர் சோலை மலைக்கு அரசராக விளங்கும் உத்சவர்தான். #அபரஞ்சி என்ற அரியவகை தங்கத்தாலானவர் சோலைமலைக்கரசர். அபரஞ்சி என்பது தேவலோகத் தங்கம்
என்பதால், இந்தப் பெருமாளையும் தேவலோகப் பெருமாளாக பூஜிக்கிறார்கள். உலகத்திலேயே அபரஞ்சி தங்கத்திலான பெருமாள் சிலைகள் இரண்டு இடங்களில்தான் இருக்கின்றன. ஒன்று அழகர் கோயிலில், இன்னொன்று திருவனந்தபுரத்திலுள்ள அனந்த பத்மநாபசுவாமி கோயிலில்.
அழகர் ஆற்றில் ஏன் இறங்குகிறார்?
சுதபஸ் என்ற
முனிவர், நூபுரகங்கையில் தீர்த்தமாடி, பெருமாளை நோக்கித் தவமிருந்தார். அந்தச் சமயத்தில் துர்வாச மகரிஷி, தன் பரிவாரங்களோடு அவ்வழியாக வந்தார். பெருமாளையே நினைத்துக் கொண்டிருந்த முனிவர், ரிஷி வந்ததைக் கவனிக்காமலிருக்கவே ஆத்திரமடைந்த துர்வாசர் 'மண்டூகோ பவ' (தவளையாக போகக் கடவாய்!) என
சாபமிட்டார். உடனே தவளையாகிப் போன சுதபஸ், சாபவிமோசனத்துக்கு வழிகேட்டபோது, 'விவேகவதி தீர்த்தக்கரையில் (வைகை) நீ தவம் பண்ணிக்கொண்டிரு. சித்ரா பௌர்ணமிக்கு மறுநாள் அழகர் அங்கு வந்து உனக்கு சாபவிமோசனம் கொடுப்பார்' என சொல்லி இருக்கிறார் துர்வாசர். அதன்படி வைகைக் கரையில் தவம் பண்ணிக்
கொண்டிருந்த சுதபஸ் முனிவருக்கு விமோசனம் கொடுக்க அழகர் மதுரைக்கு வந்து போனதாகப் புராணங்கள் விவரிக்கின்றன. சித்ரா பௌர்ணமிக்கு 4 நாள் முன்னதாகச் #சித்திரைத்திருவிழா தொடங்கி விடுகிறது. முதல் இரண்டு நாட்கள் கோயிலில் இருப்பார் அழகர். மூன்றாம் நாள் மாலை மதுரையை நோக்கிப் புறப்படுவார்.
ஆரம்ப காலத்தில் கோயிலைவிட்டு கிளம்பும் அழகர், அலங்காநல்லூர் போய்ச் சேருவார். அங்கு அழகரை குதிரை வாகனத்தில் தூக்கிவைத்து (ஆற்றில் இறங்குவதற்காக) அலங்காரம் செய்வார்கள். அழகருக்கு அலங்காரம் செய்யும் ஊர் என்பதால் அலங்காரநல்லூராக இருந்து, பின் அலங்காநல்லூராக மாறிப் போனதாகத் தெரிகிறது.
அலங்காநல்லூரில் இருந்து தேனூருக்கு வந்து வைகை ஆற்றில் இறங்கும் அழகர், அதன் பிறகு வண்டியூருக்கு வந்து மண்டூக முனிவருக்கு (சுதபஸ்) சாபவிமோசனம் கொடுக்கிறார். இதனால் மண்டூர் என அழைக்கப்பட்டு அதுவே மண்டியூராகிப் பிறகு வண்டியூராகிப் போனது. கள்ளர் கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கையில்
வலைதடி (பூமராங்), இடுப்பில் ஜமதாடு (ஒருவகை கத்தி) என விதவிதமான ஆயுதங்களுடன் மதுரை நோக்கிப் புறப்படுகிறார் கள்ளழகர். அழகர் மலையிலிருந்து தங்கப் பல்லக்கில் புறப்பட்டு வரும் அவர், வழிநெடுக பக்தர்களால் ஏற்பாடு செய்யப்படுகிற ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் ஆசி வழங்கி விட்டு,
நான்காம் நாள் இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்கு வந்து சேருகிறார். அதற்கு முன்னதாக மதுரை எல்லையான மூன்றுமாவடியில் அழகரை மக்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி களைகட்டும். நான்காம் நாள் இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலில் கள்ளழகருக்கு அபிஷேகம் நடக்கும். இதற்கு நூபுர
கங்கையிலிருந்து தீர்த்த நீர் தலைச்சுமையாகக் கொண்டு வரப்படுகிறது. அபிஷேகம் முடிந்ததும் அழகருக்கு அலங்காரம். அழகருக்கான ஆடைகள், அலங்காரப் பொருட்கள் அனைத்தும் ஒரு பெரிய மரப்பெட்டியில் இருக்கும். அதில் இருந்து பொதுவாக பச்சைப் பட்டு தான் எடுத்து உடுத்துவார் அர்ச்சகர். ஐந்தாம் நாள்
பௌர்ணமியன்று, அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம். இதற்கு தல்லாகுளத்தை விட்டு கள்ளழகர் கிளம்பியதுமே தண்ணீர் பீய்ச்சும் வைபவம் தொடங்குகிறது. அந்தக் காலத்தில் அழகர் வருவதற்குப் புதிதாகப் பாதை அமைத்ததால் தூசி கிளம்பாமல் இருப்பதற்காகவும், வெப்பத்தைத் தணிப்பதற்காகவும் தண்ணீர் பீய்ச்சும்
வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். காலப்போக்கில் தண்ணீர் பீய்ச்சுவது ஒரு முக்கிய வைபவமாக மாறிப்போனது. அழகர் ஆற்றில் இறங்கி வண்டியூர் போய்ச் சேரும் வரை இந்த வைபவம் கலகலப்பாக நடக்கிறது. ஆற்றிலிறங்கும் அழகரை மதுரையில் உள்ள வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு அழைப்பார். ஆற்றுக்குள் இருவரும்
மாலை மாற்றி மரியாதை பண்ணிக் கொள்வார்கள். அதன்பிறகு மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருவதற்காக வண்டியூரை நோக்கிக் கிளம்புவார் அழகர். வழிநெடுக வரவேற்பு பெற்றுக்கொண்டு ஐந்தாம் நாள் இரவு வண்டியூர் போய்ச் சேருகிறார் அழகர். ஆறாம் நாள் அதிகாலையில் அழகருக்கு ஏகாந்த சேவை. பயணக்களைப்பு
நீங்குவதற்காக சந்தன அலங்காரம் பண்ணிக் கொள்ளும் கள்ளழகர், வண்டியூர் பெருமாள் கோயிலை வலம் வருவார். அதன்பிறகு சர்ப்பவாகத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம் (இந்த மண்டபம் வைகை ஆற்றுக்குள் திருமலைநாயக்கரால் கட்டிக் கொடுக்கப்பட்டது. ஏற்கெனவே தேனூரில் நடந்து கொண்டிருந்த வைபவங்கள் இப்போது
இந்த மண்டபத்தில் நடக்கிறது) வந்து சேருகிறார் அழகர். தேனூர் மண்டபத்தில் தங்க கருட வாகனத்துக்கு மாறும் அழகர், அங்கிருந்து மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருகிறார். பிறகு தேனூர் மண்டபத்திலிருந்து மதுரை நோக்கிவரும் அழகர், ராமராயர் மண்டகப்படி மண்டபத்துக்கு ஆறாம்நாள் இரவு வந்து
சேருகிறார். அன்றிரவு அங்கு தங்குகிறார். இரவு முழுவதும் தசாவதார அலங்காரங்களில் தோன்றி பக்தர்களைப் பரவசப்படுத்தும் அழகர், ஏழாம் நாள் காலையில் அங்கிருந்து அனந்தராயர் பல்லக்கில் (திருமலை நாயக்கரின் திவானால் செய்து கொடுக்கப்பட்ட இது முழுக்கத் தந்தத்தால் இழைக்கப்பட்டது) தல்லா
குளத்திலுள்ள சேதுபதிராஜா மண்டபம் வரைக்கும் வருவார். அன்றிரவு அங்கு அழகருக்கு அலங்காரம் கலைக்கப்பட்டு பூப்பல்லக்கில் ஜோடனை நடக்கும்.
எட்டாம்நாள் அதிகாலையில் பூப்பல்லக்கில் மலைநோக்கிக் கிளம்பும் அழகர் வழிநெடுக பூஜை புனஸ்காரங்களை ஏற்றுக்கொண்டு ஒன்பதாம் நாள் காலையில் அழகர் கோயிலைச்
சென்றடைவார். பத்தாம் நாள் பயணக்களைப்பு நீக்குவதற்காக உற்சவசாந்தி அபிஷேகம் நடக்கிறது. அத்துடன் சித்திரைத் திருவிழாவின் பத்து நாள் கொண்டாட்டங்கள் சுபமாக நிறைவுற்று மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகிறது மதுரை.
#காவல்ஜமீன்
அந்தக் காலத்தில் கள்ளழகரின் பாதுகாவலராக வெள்ளியங்குன்றம்
ஜமீன்தார் நியமிக்கப்பட்டிருந்தார். இன்றுவரை அந்த ஜமீன் வாரிசுகள்தான் கள்ளழகருக்குப் பாதுகாப்பு. இன்றும் ஜமீன்தார் வந்து அவருக்குரிய மரியாதைகள் வழங்கப்பட்ட பிறகுதான் கோயிலைவிட்டு மதுரைக்குக் கிளம்புவார் அழகர். அந்தக் காலத்தில் அழகருக்குப் பாதுகாவலாகக் குதிரை பூட்டிய சாரட்
வண்டியில் அழகரைப் பின்தொடர்ந்து வந்துகொண்டே இருப்பார் ஜமீன். இப்போது வண்டிதான் மாறியிருக்கிறது. 10 நாட்களும் அவர் அழகருடன் இருப்பார். அதே வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வாழ்க்கையில் ஒரு முறையேனும் தரிசித்து அருள் பெற வேண்டிய திருவிழா இது.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Apr 18
#ஆஞ்சநேயர்
அஞ்சனா கிரி மலையில் அஞ்சனா என்ற பெண் குரங்கிற்கும், கேசரி என்ற ஆண் குரங்கிற்கும் மகனாய் அனுமன் அவதரித்தார். அஞ்சனா பிரம்மாவின் சபையில் ஒரு அப்ஸரஸாக இருந்தவர். துர்வாச முனிவரின் தவத்தை கலைத்ததற்காக சாபம் பெற்று குரங்காகப் பிறந்தார்.
அவர் சிறு பெண்ணாக இருககும்போது ஒரு Image
குரங்கு, காலை ஆசனமிட்டு தவம் செய்து கொண்டிருப்பதைக் கண்டார். அதை பார்த்தவுடன் குதூகலத்தில் அந்த குரங்கின் மீது பழங்களை எறிந்தார். அந்த குரங்கு துர்வாச முனிவராக மாறி தவம் கலைந்து எழுந்தது. கடும் சினம் கொண்ட அவர் அஞ்சனா யார் மீதாவது காதல் கொண்டால், அத்தருணமே குரங்காக மாறி விடுவாள்
என சாபமிட்டார். மன்னிப்பு கேட்டு மன்றாடிய அஞ்சனா, தனக்கு குரங்கு முகம் இருந்த போதிலும் தன் காதலன் தன்னை நேசிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அவ்வாறே நடக்க அவர் ஆசி கூறினார். மேலும் சிவபெருமானின் அம்சமே தனக்கு மகனாக பிறக்க வேண்டும் என்றும், அப்படி பிறந்தவுடன் தான் சாப விமோசனம்
Read 12 tweets
Apr 18
#மகாபெரியவா மகாராஷ்டிராவில் உள்ள சதாரா என்ற இடத்தில் பக்தர்களுக்கு அருள் புரிந்த மஹா பெரியவா, பண்டரிபுரம் நோக்கி கிளம்பினார். சதாராவில் இருந்து பண்டரிபுரம் 150 கி.மீ. எங்கும் நடந்தே செல்லும் அவருக்கு அப்போது என்பது வயது தாண்டியிருந்தது. அதனால், பெரியவா உடல்நலம் குறித்து அன்பர்கள் Image
கவலைப் பட்டனர். அவரோ அதைச் சற்றும் பொருட்படுத்தாமல் நடந்தார். வழியெங்கும் மக்கள் கூட்டம் அவர் தரிசனத்தை பெற்று மகிழ்ந்தது. வழியில் ஒரு மலை தென்பட்டது. அதன் மீது ஒரு கோயில் இருந்தது. அடிவாரத்தில் நின்றார் பெரியவா. மலைக் கோயிலை தரிசிக்க விரும்புகிறாரோ என்று நினைத்தனர் பக்தர்கள். 80
வயதில் நெடுந்தூரம் நடப்பதே பெரிது, இதில் மலையேறுவது சாத்தியமா என அனைவரும் கருதினர். அப்போது உச்சியில் இருந்து தாவி வந்தது ஒரு கருங்குரங்கு. மனிதர் போல வளர்ந்து இருந்து, உயரமாக, வலிமையாக இருந்தது அக்குரங்க. அன்பர்கள் அதை விரட்ட முயற்சி செய்தனர். ஆனால், அது பெரியவாளை வைத்த கண்
Read 6 tweets
Apr 17
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் கேரளாவில் ஒரு சிறிய கிராமத்தில் ஒரு சிறிய கிருஷ்ணர் கோவில் இருந்தது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஜமீன்தார், தினமும் காலையிலும் மாலையிலும் கோயிலில் பூஜை செய்ய ஏழை பூசாரியை நியமித்தார். பூசாரி தினமும் தனது 3 வயது மகனுடன் கோயிலுக்கு வருவது வழக்கம்.
தந்தை
கோவிலுக்குள்ளே தனது கடமைகளைச் செய்யும்போது, ​​மகன் கோவில் வளாகத்தில் விளையாடிக் கொண்டிருப்பான். மதியம் கோவில் வராந்தாவில் அப்பா தூங்குவதும், பையன் அருகில் விளையாடுவதும் வழக்கம். பாதி மூடிய கண்களுடன் தன் மகன் விளையாடுவதை ரசித்துக் கொண்டிருப்பார்.
குட்டி கிருஷ்ணன் கோவிலுக்கு வெளிய
வந்து சிறுவனுடன் விளையாடுவது வழக்கம். குட்டி கிருஷ்ணன் மற்ற சிறுவர்கள் விளையாடுவது போல சிரித்து, கத்தி, ஓடி ரசித்து, மகிழ்ந்து இந்தச் சிறுவனுடன் விளையாடுவான். இந்த நடைமுறை தினமும் பின்பற்றப்பட்டது. ஒருமுறை விஷூவுக்கு முந்தைய நாளில், தந்தை கோவில் வளாகத்தையும் உட்புறத்தையும்
Read 8 tweets
Apr 16
பௌர்ணமிகளில் மிக சிறப்பு வாய்ந்தது #சித்ராபௌர்ணமி. (16.4.2022) தமிழ்ப் புத்தாண்டில் வரும் முதல் முழுநிலவு நாள் என்பதால் முதல் சிறப்பு. இன்று தோன்றும் சந்திரன் 64 கலைகளையும் முழுமையாகக் கொண்டு பிரகாசமாக ஒளி வழங்குவதால் இம்மாதப் பெளர்ணமி மேலும் சிறப்புப் பெறுகிறது. எமலோகத்தில் நம்
புண்ணிய - பாவ கணக்கை எழுதிக் கொண்டிருக்கும் சித்திர குப்தனின் அவதார நாள் இன்று. சிவபெருமான் வரைந்த சித்திரத்திலிருந்து உயிர்பெற்று வந்தவர் என்பதால் சித்திரகுப்தர் என்றும் சித்திரபுத்தர் என்றும் அழைக்கப்படுகிறார். யமனுக்கு உதவியாக மானிடர்களின் பாவ புண்ணிய கணக்கைத் துல்லியமாக
பதிவிட படைக்கப்பட்டவர். மக்களின் மனதில் ஒளிந்திருக்கும் எண்ணங்களையும் அவர்கள் செய்யும் நல்வினை, தீவினைகளையும் சாரணர்கள் என்ற ஒற்றர்களின் உதவியால் கண்டறிந்து எழுதி வருகிறார் அவர். அனைத்தையும் மிக மிக ரகசியமாகப் பாதுகாப்பதால் சித்திர குப்தர் என்ற பெயர் ஏற்பட்டது. குப்தர் என்றால்
Read 12 tweets
Apr 16
#MahaPeriyaba In Sanatana Dharma, the term annam is used for the English term 'food', but not as an equivalent. The term annam denotes and connotes physical and spiritual ramifications. Annam is not just something which is input to stomach and digested, but it includes everything
that is ingested by the ten senses and the mind. This is the reason our physical body is called ‘annamaya kosha’. A number of our scriptures talk about annam. The main emphasis is on the truth ‘What we eat, we become’. Kanchi Paramacharya, Sri Chandrasekharendra Saraswati Swami
took sannyasam and ascended the throne of Kanchi Kamakoti Peetham at the age of thirteen. From that day, until he attained videha mukti at the age of 100, he lived an exemplary life of strictest austerity. His daily main meal was often astonishingly simple: a small handful of
Read 17 tweets
Apr 16
#MahaPeriyava
There were a number of shops such as a flower shop, a medical shop and others doing brisk business in front of Kanchi Matham many years go. The bank officials of Indian Bank had a desire to open a branch there and take care of the administration of the revenue and
expenses of the Matham. They expressed their wish to the Matham officials and got the approval. The conditions from the Matham was such that the bank should construct their own building in front of the Matham whatever shops were required to be vacated for this purpose, alternate
places were to be given to the shopkeepers without fail. The conditions were implemented, and the Bank branch was opened. Two years later, a couple came and stood before Sri Maha Periyava and said, Today is our wedding day. Maha Periyava should bless us They prostrated to him.
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(