#சங்கரஜெயந்தி 6.5.2022. ஆதி சங்கர பகவத் பாதாள், சேது-ஹிமாச்சலம் மூன்று முறை பாத யாத்திரையாக திக்விஜயம் செய்து, தன்னுடைய தரிசனத்தால், மக்களை புனிதப்படுத்தி, தன் வாக் அம்ருதத்தினால் அனைவருக்கும் தெளிவு பிறக்கும்படி செய்தார். #ஆதிசங்கரர்#திருவானைக்காவிற்கு வந்த பொழுது,
திருவானைக்காவில் அன்னை அகிலாண்டேஸ்வரி இந்த அண்டசராசரத்திற்கும் தாயார், கருணையே வடிவானவள் தான் ஆனால் இந்த கலியில மக்கள் ரொம்ப பாவம் செய்வதால் கோபமாக உக்கிர ரூபத்தில் அங்கு இருந்தாள். அப்படி ரொம்ப கோபத்துடன் இருந்த அவளை சாந்தப் படுத்தி, மக்களுக்கு அனுக்கிரஹம் கிடைக்க செய்யணும்
என்று சங்கரர் நினத்தார். என்ன கோபமாக இருந்தாலும் அம்மாக்கு தன் பிள்ளையை பார்த்தால் மனஸ்சாந்தி ஏற்படும், சந்தோஷம் வந்துவிடும் என்று எண்ணம் உதிக்க, விநாயகரை அம்பாளுக்கு முன் பிரதிஷ்டை செய்தார். திரும்ப அந்த உக்கிரமான கோபம் வந்துவிடக் கூடாது என்பதற்காக, உக்கிர கலையை, இரண்டு
தாடங்ககளாகச் செய்து, இரண்டு காதுகளிலும் ஸ்ரீ சக்ரம், சிவ சக்ரம் என்று அம்பாளின் காதில் அணிவித்தார். அம்பாளின் தாடங்கத்தின் மகிமை, அவளின் பாதிவ்ரத்யத்தை காட்டுகிறது என்று சௌந்தர்ய லஹரி ஸ்தோத்ரம் சொல்கிறது. அப்படி அந்த அம்பாளை ஆதி சங்கரர் குளிர செய்தார். #தமிழ்நாட்டுக்கும் ஆதி
சங்கரருக்கும் நிறைய தொடர்பு உள்ளது. திருச்செந்தூரில் சுப்ரமண்ய புஜங்கம் பாடி இருக்கிறார். ஆதி சங்கரர் பௌத்தர்களுடன் வாதாடும் போது திருவிடைமருதூரில் பகவான் அவருக்கு ரெண்டு கைகளையும் தூக்கி அத்வைதமே சத்யம் என்று பிரமாணம் செய்திருக்கார். கேரளத்தில் காலடியில் தான் பிறந்தார்.
தமிழ்நாட்டுக்கு நிறைய வந்திருக்கிறார். ராமநாத ஸ்வாமியை தரிசனம் செய்து பாடி உள்ளார். திருப்பதியில் தனாகர்ஷண யந்த்ரம் பிரதிஷ்டை செய்தார். கடைசியில் காஞ்சீபுரத்துக்கு வந்து அங்கேயும் காமாக்ஷி தேவி உக்ரமாக இருந்த போது சாம்யம் பண்ணி ஸ்ரீ சக்ர பிரதிஷ்டை செய்துள்ளார். இங்கே சர்வக்ஞ
பீடம் எறி இருக்கார். சௌந்தர்ய லஹரி ஸ்தோத்ரம் பாடி இருக்கார். ஒரு மடம் ஸ்தாபனம் செய்து பின் காமாக்ஷி அம்பாளோடு ஐக்கியம் அடைந்தார். ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#சேதுபந்தன_சரித்திரம்
லங்காபுரிக்கு சென்று அசோகவனத்தில் திரிசடை என்கிற அரக்கியின் பாதுகாப்பில் இருந்த சீதாப்பிராட்டியை கண்டு, அனுமான் கணையாழியை பெற்றுக்கொண்டு, கண்டேன் சீதையை, என்று இராமரிடம் சொன்ன போதே, இராவணன் அந்திமம் தீர்மானிக்கப்பட்டது. அடுத்து, இலங்கைக்குச் செல்ல சேது
சமுத்திரத்தில் சேதுபந்தனம் என்கிற பாலம் கட்டப்பட வேண்டும். அது வழியாகத் தான் இலங்கைக்கு செல்ல முடியும். இராமருக்கு சொந்தமாக சைனிகஸேனகள் இல்லை! தற்போது எந்த தேஸத்திற்கும் ராஜனும் இல்லை. சொந்தம் என்று சொல்லிகொள்ள சகோதரன் இலக்ஷ்மணன் மற்றும் அனுமன், சுக்ரீவனும் வாலியின் புத்திரனும்,
கரடிகளின் தலைவன் ஜாம்பவான் ஆகியோர் தான் இருந்நதார்கள். எல்லோரும் ஒன்று கூடி சேதுபாலம் பணி தீர்மானிக்கப்பட்டது. பாலம் பணியை தொடங்க சமுத்திரராஜனிடம் அனுமதி கேட்டு, அதற்காக 3 நாட்கள் மௌன விரதமும் உண்ணா நோன்ம்பும் அனுஷ்டித்தார். கடற்கரையில் தர்ப்பைப் புல்லை பரப்பி பத்மாசனத்தில்
#நற்சிந்தனை
#அதர்மத்திற்குத்_துணைபோனால்_துயரமே_மிஞ்சும்_கர்ணனின்_வாழ்வே_சான்று.
மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான் - என் தாயார் நான் பிறந்த நேரத்தில் என்னை ஆற்றில் விட்டுவிட்டார். தந்தை பெயரை அறியாதவன், தேரோட்டியின் வளர்ப்பு மகன் என்றார்கள் உலகக்தார். இது என் தவறா? இது
அரச குமாரர்கள் மட்டுமே கற்குமிடம் என்று கூறி துரோணாச்சாரியார் எனக்கு வில் வித்தையைக் கற்றுத் தரவில்லை. இது என் தவறா? ஷத்ரியனுக்கு இனி வில் வித்தையைக் கற்பிக்க மாட்டேன் என்று தன் சீடன் பீஷ்மரிடம் சபதம் செய்த பரசுராமரை ஏமாற்றி நான் அந்தணன் என்று கூறி வில் வித்தையைக் கற்றேன்.
இந்திரனால் நான் அந்தணன் இல்லை, சத்திரியன் என்பதைப் பரசுராமர் அறிந்துவிட்டார். எனவே குரு பரசுராமர் எனக்கு சாபமிட்டார். முக்கிய தருணத்தில் நீ கற்ற வித்தை அனைத்தும் மறந்து போகும் என்று என்னைச் சபித்து விட்டார். குருவிடம் பொய் சொன்ன தவற்றை நான் வேண்டுமெனாறே செய்யவில்லை. எனது
#கூர்ம_ஜெயந்தி
ஜீலை 2 2024 கூர்ம ஜெயந்தி நன்னாள். மகா விஷ்ணுவின் அருளை பெறுவதற்கு உகந்த நாள். ஆனி 18, தேய்பிறை துவாதசி திதியில் கூர்ம (ஆமை வடிவம்) அவதாரம் எடுத்தார் மகாவிஷ்ணு. இந்நாள் மங்களகரமான தொடக்கங்கள் மற்றும் ஆன்மீக வளர்ச்சியைக் குறிக்கிறது. க்ஷீர சாகர மந்தனத்தின் போது
பிரம்மாண்டமான மந்தாரஞ்சல் பர்வதத்தை தனது முதுகில் தூக்கியவர் கூர்ம அவதாரம். உருவு கண்டு இகழாமல், அதன் பெருமை கண்டு போற்ற வேண்டும் என்பதே கூர்ம அவதாரத்தின் நோக்கம். பணிவு கொண்டு மலை சுமந்த கூர்ம மூர்த்தி பாற்கடலில் இருந்து அனைத்தையும் மீட்டு கொடுத்தார். பாற்கடலில் பள்ளி கொண்டு
இருக்கும் மகாவிஷ்ணு அரக்கர்களை அழிக்க பல்வேறு அவதாரங்களை எடுத்துள்ளார். ஆனால் அவர் எடுத்த கூர்ம அவதாரம் யாரையும் அழிப்பதற்காக அல்ல. மேருமலையை மத்தாக கடையும் போது அதை தாங்கி நிற்பதற்காக எடுத்த அவதாரம் ஆகும். பாற்கடலில் அமிர்தம் பெறுவதற்காக தேவ அசுரர்களுக்கு உதவி செய்தார். அதே
#ஸ்ரீநரசிம்மர்
பகவானின் எல்லா அவதாரங்களுமே பக்தர்களுக்கு அனுக்ரகம் செய்தவைதான். என்றாலும், நரசிம்மாவதாரத்துக்கு ஒரு தனி ஏற்றம். பக்த பராதீனன், பக்தவத்சலன் என்கிற திருநாமங்களெல்லாம் அவனுக்கே பொருந்தும். ஏன்?
‘எங்கே இருக்கிறான் உன் ஹரி?’ என்ற ஹிரண்யனின் கேள்விக்கு, ‘எங்கும்
இருக்கிறான்’ என்று பதில் சொல்லிவிட்டான் பாலகனான பிரகலாதன். அதையடுத்து கவலை வந்துவிட்டதாம் பகவானுக்கு. ஹிரண்யன் எதையாவது காட்டி, ‘இதில் உன் பகவான் இருக்கிறானா என்று கேட்பானோ?’ என்று. அதனால், சகல வஸ்துக்களுக்குள்ளும் தன்னை நிரப்பிக் கொண்டானாம். இதைத்தான், ‘பக்தனாலே பகவானுக்கு
வந்த ஆபத்து’ என்று சொல்வார்கள் பெரியவர்கள். அவதார சூட்சுமத்தால் தன்னுடைய வியாபகத்தை உணர்த்திய பகவான், தன்னுடைய அபூர்வ குணாம்சத்தையும் வெளிப்படுத்துகிறான். அதைத்தான், ‘விஷம விலோசனன்’ என்று குறிப்பிடுகிறார் ஸ்வாமி தேசிகன். அதென்ன? நம்முடைய கண்கள் இரண்டாக இருந்தாலும் ஒரு நேரத்தில்
#நாகலிங்க_பூ
சிவலிங்கத்தை ஒரு கோயிலில் பிரதிஷ்டை செய்யவேண்டும் என்றால், லிங்கத்திற்கு மேல் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கட்ட வேண்டும். அந்த பாத்திரத்திலிருந்து சொட்டு சொட்டாக தண்ணீர் விழும். சோழமன்னர் ஒருமுறை ஒரு சிவாலயத்தை கட்டினார். அப்போது அவருக்கு ஒரு அச்சம் தோன்றியது.
நம் காலத்திற்குப் பிறகு தண்ணீர் ஊற்றுவார்களோ இல்லையோ என்ற அச்சம் தான் அது. உடனே சந்திரகாந்த கற்கலால் கருவரையின் மேற்கூறையை அமைத்து மையத்தில் ஒரு கமலத்தை அமைத்தார். என்ன அதிசயம் 24 வினாடிக்கு ஒரு முறை காற்றின் ஈரத்தை சந்திரகாந்தக் கல் உறிஞ்சி சிவ லிங்கத்தில் தண்ணீராகச் சொட்டியது.
கோயில் இருக்கும் ஊர் திட்டை. அது போல் இந்த நாகலிங்க மலரின் மேற்கூறையில், சின்னச் சின்ன ஆட்டணா இருக்கும் அந்தத் தும்பித் தாரையில் இருந்து 24 வினாடுக்கு ஒரு முறை ஒரு பனித்துளி அளவு தண்ணீர் லிங்கத்தில் விழும் அதிசயம் நடைபெறும். 1. நாகம் குடை பிடிக்க உள்ளே லிங்கம் இருக்கும்
#அழகர்கோவில்_நூபுரகங்கை
அழகர் கோவிலில் இருக்கும் நூபுர கங்கை தீர்த்தம் சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வருவதாக நம்பப்படுகிறது. பல ஆராய்ச்சிகள் மேற்க்கொண்டும் இதுவரை இந்த தீர்த்தம் உற்பத்தியாகும் இடம் எது என்று யாராலும் கண்டுப்பிடிக்க முடியவில்லை. நூபுர கங்கைக்கு ஒரு புராணக்கதை
உள்ளது. விஷ்ணு பகவான் வாமன அவதாரம் எடுத்தபோது விண்ணையும், மண்ணையும் அளப்பதற்காக விண்ணுலகத்தில் ஒரு காலையும், மண்ணுலகத்தில் ஒரு காலையும் வைப்பார். விண்ணுலகத்தில் பாதம் வைக்க செல்லும்போது பிரம்மா தன்னுடைய கமண்டலத்திலிருந்து கங்கை நீரை ஊற்றி விஷ்ணுவின் பாதத்தை வரவேற்றார். அந்த
கங்கை நீர் பெருமாளின் கணுக்காலை தொட்டு சில துளிகள் அழகர்மலையில் விழுந்ததாக சொல்லப் படுகிறது. அன்று முதல் இன்று வரை அழகரின் திருவடியில் பெருகிவரும் புண்ணிய நதியாக திகழ்கிறது. கணுக்காலுக்கு சமஸ்கிருதத்தில் நூபுரம் என்ற பெயர் உண்டு. அதனால்தான் இந்த தீர்த்தத்திற்கு நூபுர கங்கை என்ற