#மகாபெரியவா#பூர்வாசிரம_வாழ்க்கை மஹா பெரியவா, சுப்பிரமணிய சாஸ்திரிகள், மஹாலக்ஷ்மி அம்மையார் என்ற திவ்ய தம்பதிகளுக்கு இரண்டாவது குழந்தையாக வைகாசி அனுஷத்தில் மே 20 ம் தேதி 1894 அவதாரம் செய்தார். பெரியவாளுக்கு முன் பிறந்தவர் கணபதி சாஸ்திரிகள். பிறகு ரொம்ப வருடங்கள் கழித்து
பிரார்த்தனை செய்து, அவர்கள் குலதெய்வமான சுவாமிமலை முருகனை பிரார்த்தனை செய்து குழந்தையாக பிறந்தவர் மஹா பெரியவா. அதனால் பெரியவாளுக்கு, ஸ்வாமிநாதன் என்று பேர் வைத்தனர். அடுத்து, லலிதாம்பா, பிறகு சாம்பமூர்த்தி, சதாசிவம் என்கிற சிவன் சார், கடைசியாக கிருஷ்ணமூர்த்தி பிறந்தனர். இவர்கள்
எல்லோரும் தாத்தாவில் இருந்து ஆரம்பித்து, அதற்கு முன் எத்தனை தலைமுறைகளோ தெரியாது அனைவரும் மடத்த்திலிருந்து ஒரு பைசா கூட எடுத்துக்காமல் மடத்திற்காக வாழ்க்கை முழுதும் சேவை செய்திருக்கிறார்கள். இந்த ஆறு பேரோட பேரைப் பார்த்தாலே, கணபதி, ஸ்வாமிநாதன், லலிதாம்பா, சாம்பமூர்த்தி, சதாசிவம்,
கிருஷ்ணமூர்த்தி என்று இந்த ஆறு பெயர்களும் ஷண் மதத்தில் இருக்கும் ஆறு தெய்வங்களின் பெயராக உள்ளன. அப்படி ஓர் அழகு!
ஸ்வாமிநாதன் பிறந்து, வளர்ந்து வரும் போது நல்ல சூட்டிகையா இருந்திருக்கிறார். இவர் அப்பா inspector of schools பதவியில் இருந்தார். ஒரு முறை சிங்காரவேல முதலியார் என்று ஒரு
பள்ளி கல்வி இன்ஸ்பெக்டர் விழுப்புரத்தில் இவர் படித்துக் கொண்டு இருக்கும் பள்ளியை ஆய்வு செய்ய வந்து கேள்விகள் கேட்கிறார். ஓலை தடுப்பு போட்டு ரெண்டு மூணு வகுப்புகள் கொண்ட பள்ளி அது. ஒரு வகுப்பில் அவர் கேள்வி கேட்டிருக்கிறார். யாரும் பதில் சொல்லவில்லை. தட்டிக்கு அந்தப்பக்கம் இருந்து
ஸ்வாமிநாதன் பதில் சொல்கிறார். அவர் படிப்பது ஆறாம் வகுப்பு. பதில் சொல்வது எட்டாம் வகுப்பு பாடத்திற்கான கேள்விக்கு. எப்படி உனக்கு தெரியும் என்று வாத்தியார் கேட்கிறார். “எங்க அண்ணா கணபதி வாய்விட்டு படிப்பார் அதனாலே தெரியும்” என்று சொல்கிறார். உடனே சிங்காரவேலு முதலியார், “இவன் ரொம்ப
புத்திமானா இருக்கான். ரொம்ப தேஜஸா இருக்கான். ரொம்ப நன்னா வருவான். பெரிய பதவிக்கு வருவான்” என்கிறார். அந்த பெரிய பதவி “லோககுரு” என்கிற பதவி என்பது அப்பொழுது யாருக்கும் தெரியவில்லை. இதற்கு நடுவில் சந்திரசேகரேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள், 66 வது காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் அங்கே பக்கத்து
ஊருக்கு வருகிறார். ஸ்வாமிநாதனை கூட்டிக்கொண்டு போகிறார்கள். ஸ்வாமிநாதனும் ஆசார்யாளும் கொஞ்ச காலத்திலேயே மிகவும் நெருக்கமாக ஆகிவிடுகிறார்கள். “அடிக்கடி கூட்டிண்டு வா குழந்தையை” என்று இவர் குடும்பத்தாரிடம் சொல்லி நிறைய முறை சுவாமிநாதனுடன் பேசுகிறார்.
ஒரு நாள் இவரும் இவர் நண்பரும்
வீட்டில் கூட சொல்லாமல் கிளம்பி வெளியூரில் இருக்கும் மடத்துக்கு சென்றுவிடுகிறார்கள். வீட்டில் அனைவரும் இவரை காணாமல் தேடிக் கொண்டிருக்க, ஆச்சார்யாள் ஆள்விட்டு சொல்லி அனுப்புகிறார். “குழந்தை இங்க தான் இருக்கான். பத்திரமா இருக்கான். நான் அவனை நாலு நாள் வெச்சுண்டிருந்து, அனுப்பறேன்”
என்று சொல்லி அனுப்புகிறார் குருநாதர். இந்த பையன், ஸந்யாஸிகளை தேடிப் போறானே என்று அவர் அப்பா, கிருஷ்ணஸ்வாமி ஐயர் என்கிற தன் நண்பரிடம் சுவாமிநாதன் ஜாதகத்தை காட்டி “ஏதாவது தெரியறதா பாரேன், இவன் என்னவா வருவான்?” என்று கேட்கிறார். அந்த ஜாதகத்தை, பார்த்த உடனே, “குழந்தையை நீ அழைச்சிண்டு
வா” என்று சொல்கிறார். குழந்தையை உயரமா ஒரு திண்ணையில் உட்கார வைத்து, கிருஷ்ணஸ்வாமி ஐயர் அவர் கால்களை நன்கு அலம்பி, உத்துப் பார்த்துவிட்டு, ரெண்டு கால்களையும் எடுத்து, தலைமேல் வைத்துக் கொள்கிறார். “என்ன மாமா, என்ன மாமா”என்கிறார் சுவாமிநாதன். அவர் அப்பாவிடம், “இந்த காலை, நான்,
இன்னிக்கு பிடிச்சேன். இது ராஜாகளும், ராணிகளும், உலகத்தில் இருக்கும் எல்லாரும், எல்லா மஹான்களும் நமஸ்காரம் பண்ணப் போற பாதங்கள். இதோட பெருமையை என்னால் வாயால் சொல்ல முடியாது. நீ ரொம்ப கொடுத்து வெச்சவன் ஸுப்ரமணி” என்கிறார். அப்பேற்பட்ட, ஒரு பெரியவா🙏🏻
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ரிஷிகள்_மாகாத்மியம்
ரிஷிகள் மனிதர்கள் அல்ல, தேவர்களும் அல்ல. தேவர்களுக்கும் மேலானவர்கள். ரிஷிகள் தேவர்களையும், அசுரர்களையும், ராட்சஷர்களையும், மனிதர்களையும் படைத்தவர்கள். பரப்ரம்மான வாசுதேவனே ரிஷி தான். அவரே மும்மூர்த்திகளாக வ்யூஹ அவதாரம் செய்தார். மும்மூர்த்திகளும் ரிஷிகள்
தான். பரவாசுதேவன் மனித அவதாரம் செய்த போது கூட, தன்னை ரிஷியின் பரம்பரையை சேர்ந்தவன் என்று சொல்லிக் கொள்ள பெருமைப்பட்டார். ஸ்ரீ ராமர் வசிஷ்ட கோத்திரம் (பரம்பரை). சீதை அவதரித்தது கௌதம கோத்திரம், ஸ்ரீ ராமரை மணம் செய்து கொண்ட பின், வசிஷ்ட கோத்திரம்.
ஸ்ரீ கிருஷ்ணர் கர்க கோத்திரம்.
தர்மபுத்திரர் வியாக்ரபாதர் கோத்திரம்.
கௌதம கோத்திரம் கௌதம ரிஷியால் உருவானது.
ஜாபாலி என்ற சிறுவன் தன் கோத்திரம்/பரம்பரை தெரியாமல் இருந்தான். கௌதம ரிஷி அவனை ஏற்றுக் கொண்டு, தனது கோத்திரத்தை கொடுத்து, உபநயனம் செய்து, ஸத்யகாம ஜாபாலி என்று பெயர் கொடுத்தார். கௌதம ரிஷியின் ஆசியால்,
#வடநாகேஸ்வரம்_நாகேஸ்வரர்_கோயில்
குன்றத்தூர் காஞ்சிபுரம் மாவட்டம்.
பாம்பு என்றாலே தீய சக்தி விலங்காக கருதும் பல மதங்களுக்கு முன்பே பாம்பிற்கு இருக்கும் தெய்வீக குணத்தை கண்டுகொண்டவர்கள் நம் சித்தர்கள், ஞானிகள் ஆவர். ஜோதிடத்தில் நிழல் கிரகங்களான ராகு – கேது பாம்பின் அம்சமாக
கருதப்படுகின்றன. ராகு – கேது கிரகங்களின் தோஷங்களை போக்கும் வடநாகேஸ்வரம் நாகேஸ்வரர் கோயில் 500 முதல் 1000 ஆண்டுகள் பழமையானது.
மூலவர் நாகேஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
தாயார் காமாட்சி அம்மன்
தீர்த்தம்: சகல பாவங்களையும் போக்கும் சூரிய புஷ்கரணி தீர்த்தம்.
தல விருட்சம் செண்பக மரம்.
கோயில் வரலாற்றின் படி இப்பகுதியை ஆட்சி புரிந்து வந்த அனபாயன் என்கிற சோழ மன்னன் அரசவையில் இப்பகுதியை சார்ந்த அருண்மொழி ராமதேவர் என்பவர் பணியாற்றினார். இவர் தான் பிறந்த குலத்தின் பெயரால் #சேக்கிழார் என அழைக்கப்பட்டார். இவர் தான் புகழ் பெற்ற தமிழ் இலக்கியங்கள் ஆன #பெரியபுராணம்
#தண்டபாணி_பைரவர் #காசி_வைபவம்
காசியில் 2 பைரவர் கோயில்கள் உண்டு. ஒன்று கால பைரவர் கோயில், மிகவும் பிரசித்தி பெற்றது. அதே போல காசி விஸ்வநாதர் ஆலய கருவறைக்கு நேர் எதிரில் அமைந்துள்ள சந்நதியில் பைரவர் தண்டபாணி என்னும் பெயரில் எழுந்தருளி உள்ளார். காசியிலேயே பாவம் செய்பவர்களும்
இருக்கிறார்கள். காசியில் சுற்றித்திரியும் போதும், பாவ எண்ணங்களுடன் திரிபவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் வாழ்வில் முக்தியே கிடைக்காதபடி செய்து விடுவார் இந்த தண்டபாணி பைரவர். தண்டபாணி மந்திரிலிலுள்ள தண்டநாயகர் என்னும் தண்டபாணி பைரவர், காசிக்குப் போகிறவர்களைத் தரம்
பிரித்து பாவ புண்ணியங்களை வழங்குபவராக உள்ளார். குபேரனைத் தலைவராகக் கொண்ட இனத்தவர் யட்சர்கள் எனப்படுவர். பூர்வத்தில் பூர்ணபத்திரன் என்ற யக்ஷன் ஒருவன் மிகவும் புகழ் பெற்றவனாக விளங்கி கந்தமாதன பர்வதம் என்ற மலையில் வசித்து வந்தான். அவனுக்கு ஹரிகேசன் என்ற மகன் ஒருவன் இருந்தான். இவன்
திருவிடைமருதூர் ஆலயத்தில் அருள் பாலிக்கும் அன்னை #அன்பிற்பிரியாள்
காவிரிப்பூம்பட்டினத்தைச் சேர்ந்த பெரும் வணிகரான மருதவாணனுக்குக் குழந்தைப் பேறு இல்லாமல் இருந்தது. அதனை நினைத்து வருந்திய அவர், தனக்குக் குழந்தைப்பேறு அளிக்க வேண்டி அங்கிருந்த சிவபெருமான் கோவிலில் தினமும் வழிபட்டு
வந்ததுடன், அங்கு வருபவர்களுக்கு அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு தானங்களையும் வழங்கி வந்தார். அவரது வழிபாட்டில் மகிழ்ந்த பார்வதி தேவி, இறைவன் சிவபெருமானிடம் அவருக்குக் குழந்தைப்பேறு அளிக்கும்படி வேண்டினாள். ஆனால் இறைவனோ, “இந்தப் பிறவியில் மருதவாணனுக்குக் குழந்தைப்பேறு இல்லை. எனவே,
அவருக்குக் குழந்தைப்பேறு தருவது சாத்தியமில்லை” என்றார். அதனைக் கேட்டு வருத்தமடைந்த பார்வதி, தானே அவருக்குக் குழந்தையாகப் பிறப்பதாகச் சொல்லி, மருதவாணன் மனைவியின் வயிற்றில் கருவாக உருவாகிப் பிறந்தாள். அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவளாக ஆன நிலையில், நகர்வலம் வந்த சோழநாட்டு மன்னன்
#பாரியூர்_கொண்டத்துக்_காளியம்மன்
#ஆடிமாத_சிறப்புப்_பதிவு
பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் என்று எல்லோராலும் போற்றிக் கொண்டாடப்படும் அன்னை அற்புதமான சக்தி வாய்ந்தவள். இவ்வூர் புராண காலத்தில் பராபுரி என்று அழைக்கப் பட்டது. பரா என்றால் போற்றுதல், வழிபடுதல் என்றும் புரி என்றால் ஊர்,
என்பதற்கு ஊர், கோட்டை மதில் என்றும் பொருள். கோட்டை மதில்களால் சூழப்பட்ட தலமே பாரியூர் என்பதாக கல்வெட்டுக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது. கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் குல தெய்வம் கொண்டத்துக் காளியம்மன் என நம்பப்படுகிறது. எனவேதான் பாரியூர் என்று அழைக்கப்படுவதாகவும்
கூறுகின்றனர். வள்ளலின் பெருமைக்கும், செழிப்புக்கும் அன்னையே காரணம் என்று குறிப்பிடப் படுகிறது. இன்றும் பாரியூரைச் சுற்றியுள்ள பகுதிகள் பச்சைப் பசேல் என்று வயல்வெளிகளும், குளுமையான நீர் நிலைகள், அடர்ந்த மரங்களுமாகச் செழித்து காணப்படுகின்றன. கோயில் ராஜகோபுரம் 5 அடுக்குகள் கொண்டது.
#ஸ்ரீகாட்டுவீர_ஆஞ்சநேயர்
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேவ சமுத்திரம் கிராமத்தில் உள்ளது அருள்மிகு ஸ்ரீகாட்டுவீர ஆஞ்சநேயர் திருக்கோயில். அனுமன் சிறுவயது முதலே காடுகளில் வலம் வந்தமையாலும் , இந்த பகுதி பல ஆண்டுகளுக்கு முன்பு வனமாக இருந்தமையாலும், மூலவரானவர் காட்டுவீர ஆஞ்சநேயர் என்ற
என்ற திருநாமம் கொண்டு அழைக்கப் பெறுகிறார். இக்கோவிலில் உள்ள கர்ப்ப கிரகம் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் விக்கிரகமாக உள்ளது. இப்பகுதி குன்றுகளாக விளை நிலங்களாக இருந்தது. இந்த விளை நிலங்கள் யாவும் வெங்கட்ராம செட்டியாருடையது என்கிறது வரலாறு. அப்போது நிலத்தில் உள்ள பாறையின்
மீது ஆஞ்சநேயர் திருவுருவம் செதுக்கப் பட்டிருந்தது. இதனைப் பார்த்த மக்கள் ஆஞ்சநேயரை பூஜித்து வழிபட்டு வந்தனர். மூலவருக்கு பின்புறம் இருந்த குன்றில் வளர்ந்து கொண்டிருக்கும் நந்தீஸ்வரரும், நாகர்களின் சிலைகளும் காணப்பட்டன. இந்த அதிசயத்தைக் காண நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை