சங்ககாலத்தில் பயிர்த்தொழிற் கருவிகள்!

நீர் வளமும், நில வளமும் மிக்க தமிழ் நாட்டில் பண்டைக் காலந்தொட்டே நிலத்தின் தன்மைக்கேற்பப் பயிர்களைத் தேர்ந்தெடுத்து, செய்வனயாவும் செவ்வனே செய்து நல்ல வருவாய் பெற்று வளமுடன் வாழ்ந்தனர்.
பயிர்த்தொழிலுக்கு வேண்டிய கருவிகளான கொழு, கணிச்சி, கோடரி, அரிவாள், உளிவாய்ப் பாரை ஆகியவற்றைக் கொல்லர்கள் வடித்துக் கொடுத்தனர்.

▪︎ கொழு:

உழவுத்தொழிலில் நன்கு பயின்ற பெரிய எருதுகளை நுகத்தில் பூட்டி உழவர்கள் உழச்சென்றனர். பெண் யானையின் துதிக்கை போன்று வளைந்த வாயை உடைய...
கலப்பையில் பொருத்தப்பட்ட, உடும்பு முகத்தை ஒத்த #கொழு, நிலத்தில் முழுவதும் ஆழ அழுந்துமாறு உழுதனர்.

புன்செய் நிலத்தில் வித்திட வேண்டி வலிமையான கைகளை உழவர்கள் கடாக்களை நுகத்தில் பூட்டி உழுதனர்.
நிலத்தில் கலப்பையின் #கொழு சென்ற படைச்சாலெங்கும் ஒளிவிளங்கும் மணிகளைக் கொண்ட கதிர்கள் விளைந்தன.

புன்செய் நிலத்தை உழுத கொழுப்போல, எம் பற்கள் இரவும் பகலும் இறைச்சியைத் தின்றதால் முனை மழுங்கியது.
▪︎ கணிச்சி (#குந்தாலி):

பாறைப் பகுதியைத் தோண்டி நீர் பெறுதற்கும், கற்கள் நிரம்பிய இடங்களைச் சமன் செய்யவும், பரற்கற்கள் உள்ள பகுதியில் பள்ளம் தோண்டவும் பயன்படும் கருவி #கணிச்சி.

இதனைக் #குந்தாலி, #கூந்தாலம் எனவும் ஆங்கிலத்தில் Pick-Axe எனவும் கூறுவர்.
காட்டைச் சார்த்த இடத்தே, குந்தாலியால் பாறைகளை உடைத்துத் தோண்டப் பெற்ற கிணற்றுள் மிக்க ஆழத்தில் நீர் ஊறிக்கிடக்கும்.

வெயிலின் வெம்மையால் கொதிப்புற்ற பரற்கற்களை உடைய பள்ளங்களில், கணிச்சியால் குழிதோண்டி உருவாக்கிய கிணறுகளில் பசுக்கூட்டத்தை மேய்க்கும் #ஆயர்கள் நீரைக் காணாராகி...
அவ்விடத்தே மேலும் தோண்டி ஊறிவரும் நீரைத் தாமும் குடித்து ஆனிரையின் விடாயும் தீர்ப்பர்.

▪︎ நவியம் (கோடரி)

இக்கருவி #கோடாலி என்றும் அழைக்கப்பெறும். இக்கருவி மரங்களை வெட்டுதற்குப் பயன்படுவது. வடித்தலினால் செய்யப்பட்ட #கோடரி வெட்டுவதனால்...
ஊர் தோறுமுள்ள காவல் மரங்கள் உள்ள சோலைகள் நிலை குலைந்தன.

நெடிய காம்புகளை உடைய கோடரி பாய்தலால் மணமிகு பூக்கள் உள்ள, நெடுங்கிளைகள் முறிந்து தனியே கிடப்பவும், சோலைகள் தோறும் உள்ள காவல் மரங்கள் வெட்டப்படுகின்றன.
▪︎ அரிவாள்:

நன்கு விளைந்த நெல், வரகு முதலிய கதிர்களைக் கூரிய அரிவாளால் அறுத்து, கட்டாகக் கட்டி, களத்து மேட்டிற்கு எடுத்துச்செல்வர்.

நெற்கதிரை அரிகின்ற உழவரது கூரிய #அரிவாள் பற்றி #நற்றிணை கூறுகிறது.
நெற்கதிர்களை அறுவடை செய்யும் உழவர்கள், தம் அரிவாள்கள் கூர் மழுங்கின், மீண்டும் அவை வலிமையுடன் கதிர் அறுக்க, தீட்டும் கல் #அரியக்கல் என்று அழைக்கப்படுவதைப் புறம் சுட்டுகிறது.
குயம், இரும்பு ஆகிய சொற்கள் கதிர், அரிவாள் என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளன.

குனிந்து நின்று அரிவாளின் வாயாலே நெற்கதிரை அறுத்து,

அரிவாளால் அரிதலுற்றன பெரிய புனத்திலுள்ள வரகுக் கதிர்கள்.
▪︎ உளிவாய்ப் பாரை:

இக்காலத்து #பாரை என்று வழங்கும் கருவி போன்றது.

ஆனால் #பாரை போலல்லாது ஒரு பக்கம் உளிபோன்று கூர்மையான அமைப்பும், மற்றொரு பக்கம் கருங்காலி மரம் போன்ற வலிமையான மரங்களாலான பிடியும் கொண்டது.

இப்பிடியின் தலையில் #இரும்புப்பூண் கட்டப்பட்டிருக்கும்.
இக்கருவி கரிய கரம்பு நிலத்தைக் குத்திக்கிளரப் பயன்பட்டது.

இரும்பாலான பூண் தலையிலே கட்டப்பட்டுத் திரட்சி உடைய மரத்தாலான கைப்பிடி உடையதும், உளி போலும் வாயை உடைய பாரைகளாலே கட்டிகள் கீழ் மேலாக வரும்படி குத்திக் கிண்டினர்.

- நன்று.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தஞ்சை ஆ.மாதவன்

தஞ்சை ஆ.மாதவன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @ThanjaiMadhavan

May 9
சங்க கால இனக்குழு சமூகத்தின் வேட்டை வாழ்க்கை முறை...!

இனக்குழு வாழ்வில் குழு வேட்டையே முதன்மையானது. மிகச்சில தருணங்களில் தனிநபர்களும் வேட்டைக்குச் சென்றார்கள் (நற். 59).

சங்க காலத்தில் உடும்பு, நுணல், ஈயல், முயல் போன்ற சிறு விலங்குகளைத் தனிநபர்கள் வேட்டையாடினார்கள்.
இதற்கு மாறாக #கானவர், #வேட்டுவர், #குறவர் முதலானோர் காடுகளிலும் மலைகளிலும் குழுவாகச் சேர்ந்து வேட்டையாடினார்கள்.

இனக்குழுச் சமூகத்தில் வேட்டையாடி உணவு சேகரித்தல் அடிப்படை வாழ்வாதாரமாக இருந்ததால், விலங்கினப் புரதமும் தாவரவினப் புரதமும் ஏறக்குறைய சம அளவு இருந்தன.
இது உலகளாவிய நிலையில் இனவரைவியல் கண்டுள்ள உண்மையாகும்.

சங்க கால இனக்குழுச் சமூகத்தினரும் இதனையே பிரதிபலிக்கின்றனர்.

சங்க கால #வேட்டுவர்கள் அனைவரும் சிறுவயதிலேயே #விற்பயிற்சி மேற்கொண்டனர்.

ஊகம்புல்லின் நுண்ணிய குச்சியில் புழையையுடைய வெள்ளிய முள்ளைச் செருகி, அம்புகளாக்கி...
Read 20 tweets
Apr 25
சங்ககாலத்தில் கட்டிலும், சேக்கையும் (மெத்தையும்)...!

சங்ககாலத்தில் நகரங்களில் 'மாமதில் மஞ்சு சூழும்', 'மாளிகை நிரை விண் சூழும்' என்றவாறு உயர்ந்த மதில்களும் மாளிகைகளும் நிறைந்திருந்தன.

மன்னர்கள் வாழ் அரண்மனைகளும், நகர மாந்தர் வாழ் இல்லங்களும் மிகவும் அழகுற அமைக்கப்பட்டிருந்தன.
இவற்றில் அமைக்கப்பட்டிருந்த கதவுகளில் தெய்வ உரு, குவளை மலர் ஆகியவை செதுக்கப்பட்டிருந்தன.

அக்கதவுகளில் பருத்த இருப்புப் பட்டைகள் ஆணிகளால் பொருத்தப்பட்டிருந்ததோடு, நுண் திறத்துடன் தாழ்க்கோல்களும் பொருத்தப்பட்டிருந்தன என்பன போன்ற தச்சுத் தொழில் நுட்பத்தைக் #கட்டுமானவியல்...
... என்ற பகுதியில் அறிந்து வியப்படைந்தோம்.

உரோமப்பேரரசு, எகிப்துப் பேரரசுகளின் மன்னர்களும் அவர்தம் குடும்பத்தாரும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தனர் என்பது உலகமறிந்த செய்தி.

நம் மூத்த குடியினரான சங்க மாந்தர் சொகுசு வாழ்க்கையில் அவர்களையும் விஞ்சியவர்கள் என்பதை...
Read 23 tweets
Apr 24
சங்ககாலத்தில் கண்ணாடி தொழில்நுட்பம்...!

#கண்ணாடி இரு வகையது. ஒன்று ஒளி ஊடுருவும் தன்மையது, மற்றொன்றோ ஒளியை எதிரொளிப்பது. பின்னதை முகம் பார்க்கும் கண்ணாடி என்பர்.

இவ்விருவகைக் கண்ணாடிகளுமே சங்ககால மாந்தர் அறிந்தவை, பயன்படுத்தியவை என்பனவற்றைச் சங்கப் பாடல்கள்வழி அறிகிறோம்.
திருப்பரங்குன்றின் மீது, பேரழகு படைத்த ஆடல்மகள் ஒருத்தி கள்ளுண்ட மயக்கத்தில் நடனமாடுகிறாள்.

ஆடல்மகள் அழகிலே தன் கணவன் மயங்கிவிடுவானோ என்று அஞ்சிய ஒருத்தி, தன் கணவனைச் சினந்து நோக்குகிறாள்.
மற்றொருத்தி அந்நாட்டிய மகளிலும் தன்னழகு கூடி இருப்பின் கணவன் தன்னைப் பிரியான் என்று நினைத்துக் கண்ணாடியில் பார்த்து, தன்முகம், அணிகலன் ஆகியவற்றைத் திருத்திக் கொள்கிறாள்.

தலைவியின் தோழிகள் கேட்குமாறு, காதற்பரத்தை கூறுமாறு அமைந்த பாடல் மற்றொன்று.
Read 16 tweets
Apr 21
சங்க காலத்தில் #பொற்றொழில்!

உலோகங்களில் உயர்ந்தது பொன். ஈரம், காற்று ஆகியவற்றால் ஒளி மங்குதல் இல்லாமையானும், அமிலம் போன்றவற்றில் கரையாத் தன்மையானும் #பொன் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.

பண்டைக் காலம் முதலே அறியப்பட்ட உலோகம் #பொன்.
இவ்வுலோகம் #பொன் என்றும் #பொலம் என்றும் இரு சொற்களால் சங்க இலக்கியங்களில் பயிலப்படுகிறது.

"யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னோடு வந்து கறியோடு பெயரும்" (அகம் 149:9,10)

▪︎ கறி - மிளகு

#யவனர் செய்த அழகு மிகு மரக்கலங்கள் #பொன் கொணர்ந்து இறக்கி, #மிளகு ஏற்றிச் செல்லும்.
'ஆய்பொன் அவிர்இழை தூக்கி யன்ன' (அகம்- 364:4)

(சிவந்த பொன்னினால் ஆகிய அணிகலன்களைத் தொங்க விட்டாற் போல)

மேற்கண்ட அடிகளில் #பொன் என்னும் சொல் ஆட்சி பெற்றுள்ளது.

பொதுவாக #இரும்பு போன்ற உலோகங்களையும் #பொன் என்ற சொல்லால் குறிப்பிடுவதைச் சங்கப் பாடல்களில் காணலாம்.
Read 20 tweets
Apr 17
பழந்தமிழர்களின் #கட்டுமானவியல் தொழில்நுட்பம்!

சங்க காலத்தில் வானத்தைத் தொடும் வனப்புறு அரண்மனைகள், உயர்ந்த மதிற்சுவர்கள், காற்று உள்ளே வர சன்னல்கள் பொருத்தப்பட்ட இல்லங்கள், குழாய்களை மண்ணுக்குள் புதைத்து நீர்கொண்டு செல்லும் அமைப்புகள் இருந்தமையைச் சங்கப்பாடல்கள் உணர்த்துகின்றன.
#அரண்மனைகள்
அக்காலத்தே அரண்மனைகள் எவ்வாறு அமைந்திருந்தன என்பதைப் பத்துப்பாட்டில் ஒன்றாய #நெடுநல்வாடை வழிக் காண்போம்.
க) மனை அமைப்பு:

#அரண்மனை அமைக்கும் முன், நல்லதொரு நாளில் நல்ல நேரத்தில் மனைநூலில் கண்டவாறு மனையைப் பிழை ஏதும் வாராமல் நூலிட்டு அளந்து, அரண்மனைக்குத் திருமுறைச் சாத்துச் செய்வர் என்பதைக் கீழ்க்கண்ட அடிகள் புலப்படுத்தும்.
Read 10 tweets
Apr 13
வைகைப் பெருவழி!

ஆற்றங்கரை வழியாகச்சென்ற வைகைப் பெருவழியை வைகைவெளியில் கிடைத்த தொல்லியல் சான்றுகள், சமணத்தடயங்கள் மூலமாகக் கண்டுகொள்ள முயல்வோம்.

முசிறி, தொண்டி, கொற்கை, அழகன்குளம், பூம்புகார், அரிக்கமேடு, கோடிக்கரை முதலிய துறைமுகங்களிலிருந்து மதுரைக்குப் பெருவழிகள் சென்றுள்ளன.
வட இந்தியாவிலிருந்து மதுரை வழியாகக் கன்னியாகுமரி வரை வரும் தட்சிணப் பெருவழியும்,

பாலக்காட்டுக் கணவாயிலிருந்து கிழக்கு நோக்கி வந்து மதுரை வழியாக ராமேஸ்வரம் செல்லும் பெருவழியும்,

கொங்கு நாட்டிலிருந்து அயிரை மலை, பழநி வழியாக மதுரைக்குச் செல்லும் கொங்குப் பெருவழியும்,
கொடைக்கானல் மலை நாட்டிலிருந்து மதுரைக்குச் செல்லும் மலைநாட்டுப் பெருவழியும்,

சோழ நாட்டிலிருந்து பொன்னமராவதி, திருமயம் வழியாகவும், கிழக்குக் கடற்கரையை ஒட்டி மணல்மேல்குடி வழியாகப் பாண்டிய நாட்டிற்குள் நுழையும் பெருவழியும்,
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(