மரபுவழிக் கலங்களும், அவற்றைச் செலுத்தும் நுட்பங்களும்...!

கப்பற்கலையில் பழந்தமிழர்கள் சிறந்து விளங்கி இருக்க வேண்டுமென்பதை அவர்கள் தொன்றுதொட்டே மேற்கத்திய நாடுகளுடனும், கிழக்கத்திய நாடுகளுடனும் கொண்டிருந்த கடல் வணிகத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.
அதற்குக் காரணம் தமிழகம் மூன்று பக்கங்களிலும் கடலாற் சூழப்பெற்றுள்ளமையேயாகும்.

பழந்தமிழ் இலக்கியங்கள், வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகள், வரலாற்றுச் சான்றுகள், கல்வெட்டுகள், தொல்பொருள் சான்றுகள் ஆகியன நமக்கு இவ்வுண்மையைத் தெளிவுப்படுத்துகின்றன.
தமிழகத்தில் பயன்படுத்தப்பட்ட #கலங்கள் கடல் வணிகத்திற்கு மட்டுமல்லாமல் மீன் பிடிப்பதற்கும், நீர் வழிப் பயணத்திற்கும், நீர்நிலை விளையாட்டிற்கும், கடற்கொள்ளைக்கும், போட்டிப் பந்தயங்களுக்கும், கடற்போருக்கும் தொழில் திறம்பெற்ற வல்லுநர்களால் ஆக்கப்பட்டுச் செலுத்தப்பட்டு வந்துள்ளன.
#கிரேக்கர், #யவனர், #பாபிலோனியர் ஆகியோர் தமிழகத்தோடு கடல் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதற்கு,

இந்தியாவில் கிடைத்திருக்கும் உரோமானியக் காசுகளில், 90 விழுக்காடு தமிழ்நாட்டில், அதுவும் அதிகம் கொங்கு நாட்டில் கிடைத்திருப்பது இதற்கு ஒரு சான்றாகும்.
பழந்தமிழர்கள் மேலை நாடுகளோடு பொ.மு 7-ஆம் நூற்றாண்டிலிருந்து வணிகம் தொடர்ந்து நடைபெற்றதாகவும்,

#கிரேக்கர்கள் பொ.மு 6-ஆம் நூற்றாண்டிலேயே வணிகத் தொடர்பு வைத்திருந்தனர் எனவும்,

கீழை நாடுகளான #சீனா, #மலேசியா, #சாவகம் ஆகியவற்றோடு பன்னெடுங்காலமாகவே வணிகம் செய்து வந்துள்ளனர் எனவும்..
பொ.மு 1000 அளவில் சீனத்தோடு தமிழர் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர் எனவும்,

பொ.மு 7-ஆம் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்து பொருள்கள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அங்கு விற்கப்பட்டதாகவும்,

சீனத்துப் பட்டும், சர்க்கரையும் தமிழகத்துக்கு வந்தன எனவும் குறிப்பிடுகின்றனர்.
▪︎ கலங்களின் வகைகள்:

தமிழ் இலக்கியங்களைப் பொறுத்தமட்டில் 18 வகையான கலங்கள் கூறப்படுகின்றன.

பொதுவாக, கலங்களை உருவத்தின் அடிப்படையிலும், வளர்ச்சி நிலையிலும், கட்டுமானப் பொருள்களின் அடிப்படையிலும் மூன்று வகைகளாக பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
1) கட்டுமர வகைக் கலங்கள்:

இவை மீன் பிடித்தொழிலுக்கும் (அகநானூறு 280:7-11), புனல் விளையாட்டுக்கும் (குறுந்தொகை 168:5, பரிபாடல் 6:3) பண்டைக் காலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

#தெப்பம், #மிதவை, #புணை, #பரிசில் ஆகியன தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் கட்டுமர வகைக் கலங்களாகும்
2) தோணி வகைக் கலங்கள்:

கட்டுமர வகைக் கலங்களில் போதிய பாதுகாப்பும் வசதியும் இல்லாததால்,

தனது வசதிக்கேற்ப நீண்ட பெரிய மரத்தின் நடுவில், குழித்து அரை வடிவ சந்திரன் அமைப்பில் கலங்களைச் செய்திருக்கிறான்.
தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டிருக்கும் #தோணி, #படகு, #சோங்கு, #ஓடம், #முடுகு, #கைப்பரிசு ஆகிய இக்கலங்கள்;

மீன் பிடிப்பதற்கும் (குறுந் 123), புனல் விளையாட்டிற்கும் (பரி 10), கடற்கொள்ளைக்கும், கடற்போருக்கும் (புறம் 126), முத்துக் குளித்தலுக்கும் (அகம் 350) பயன்படுத்தப்பட்டன.
3) வள்ளம் வகைக் கலங்கள்:

மேற்கூறப்பட்ட இருவகைக் கலங்களும் நீண்ட தூரக் கடற்பயணத்திற்கு ஏற்றதாகக் காணப்படாததால்,

அதைவிட வசதியும் பாதுகாப்பும் பெரிதுமான கலங்களைச் செய்ய, #ஏரா எனும் அடிமரத்தின் மேல் இரு பக்கங்களிலும் பலகைகளை அடித்து இடைவெளிகளில் நீர் புகாதவாறு...
பஞ்சு, தார் பூசி பெரிய கலங்களை உண்டு பண்ணினர். இதுவே, #வள்ளம் வகைக் கலங்களாகும்.

இவ்வகைக் கலங்களைச் செய்ய #வங்கு என்ற சட்டங்கள் மூலக் கருவாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவை ஆங்கில எழுத்தாகிய #U வடிவில் இருக்கும்.
#வள்ளம் வகைக் கலங்கள் கட்டும் பணி தமிழகத்தில் #கொற்கை, #காயல், #குலசேகரன்பட்டினம், #பூம்புகார் போன்ற பகுதிகளில் நடைபெற்றுள்ளன.

சங்க இலக்கியம் கூறும் #மரக்கலம், #நாவாய், #வங்கம், #மதலை, #கப்பல், #பஃறி, #அம்பி, #திமில் போன்ற கலங்கள் இவ்வகையைச் சாரும்.
#வள்ளம் வகைக் கலங்களின் முன் பாகமாகிய #அணியம், #யானை, #குதிரை, #சிங்கம் போன்ற முகச் சாயல்களில் அழகூட்டும் முயற்சியில் செய்யப்பட்டிருப்பதை #சிலப்பதிகாரம் (13:176.179) எடுத்தியம்புகிறது.
▪︎ காற்றின் பயன்பாட்டு அறிவு:

கடலில் கலங்கள் செல்வதற்கேற்ற காற்றின் பருவ நிலையை நன்கறிந்து கலங்களை ஓட்டியுள்ளனர் நம் தமிழர்கள்.

இதனை #புறநானூற்று வரிகள் பின்வருமாறு தெளிவுபடுத்துகின்றன.
காற்றின் உதவியால் பழந்தமிழர்கள் #திமில் எனும் ஒருவகை மீன்பிடிக்கலத்தைச் செலுத்தியதை அகநானூற்றுப் (340:18) பாடலால் அறிந்து கொள்ள முடிகிறது.

மேலும், காற்றின் துணையால் கலங்களைச் செலுத்தியதற்கான எடுத்துக்காட்டுகள் தமிழ் இலக்கியங்களில் பரவலாகக் காணப்படுகின்றன.
• கடல் நீரோட்ட அறிவு:

கலங்களைக் கடலின் நீரோட்டத் திசையிலே செலுத்திச் சென்றமையை #பரிபாடல் (10:102) மிக அழகாக எடுத்து இயம்புகின்றது.

அதில் விசையாய் ஓடும் #திமில் எனும் கலத்தில் ஏறி, விரைந்து ஒழுகும் நீரோட்டத்தோடே ஒரு சேரச் செலுத்தினர் என்றுள்ளது.
மேலும் 'செல்யாற்றுத் தீம்புனலிற் செல்மரம்போல', 'நீடு புணை வாங்க' எனும் #பரிபாடல் அடிகளாலும்,

'நீர் வழிப் படூஉம் புணைபோல்' எனும் #புறநானூற்று அடியாலும்,

பண்டைத் தமிழர்கள் கடல் நீரோட்டத்தினை நன்கு அறிந்திருந்தனர் என அறியமுடிகிறது.
• கலங்கரை விளக்கம்:

கலங்கள் திசையறியாமல் தத்தளிப்பதைத் தடுப்பதற்காக, ஒவ்வொரு துறைமுகங்களிலும் கலங்கரை விளக்கம் இருந்தது.

மொழி மாறுபட்ட வேற்று நாட்டிலிருந்து வருகின்ற மரக்கலங்கள், துறையறியாது ஓடுகின்றவற்றை இது துறையென அறிவித்து அழைத்ததற்கான விளக்குக் காணப்பட்டதாக...
#சிலப்பதிகாரம் (6:141) கூறுகிறது.

மேலும், #பட்டினப்பாலை(111-112), #பெரும்பாணாற்றுப்படை (348-351), #அகநானூறு (255:5-6) ஆகியனவும்,

பழந்தமிழர்கள் கலங்களைச் செலுத்துவதற்குக் கலங்கரை விளக்கத்தைப் பயன்படுத்தியுள்ளனர் எனக் காட்டுகின்றன.
• படகு பழுதுபார்த்தலும், பாயின் பயன்பாடும்:

#கலங்கள் செலுத்துபவர்கள் மிகவும் தைரியத்துடனும், திறமையுடனும், ஆபத்துக்களைத் தவிர்த்திருப்பதை பின்வரும் இலக்கியங்கள் வாயிலாக அறியலாம்.
#பரிபாடல் (10:53-55),

பாயும் கயிறும், இன்மரக்கட்டையும் கெட்டொழிய காற்றால் அலைப்புண்டு ஓடும் மரக்கலத்தைப் பயின் எனும் ஒருவகை அரக்கினாலே சீர்திருத்தி,

அதன் உள்ளிருப்போர் நடுக்கத்தைக் களையும் திசையறிந்து செலுத்துதல் வல்ல கப்பலோட்டியைப் பற்றிக் கூறுகிறது.
#புறநானூறு (30: 10,19),

பாய் மரத்தையும் பாயையும் இறக்காமல், அதன் மேற்பாரத்தையும் குறைக்காமல்,

ஆற்று முகத்துக்குள் கலத்தைச் செலுத்தியிருக்கும் கப்பலோட்டியின் திறமை நன்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
#நாவாய் போன்ற பெரிய படகுகளில் பாய்களைக் கட்டிக் கலங்களைச் செலுத்தியதற்கான சான்றுகளைச் சீவகசிந்தாமணியில்
(2793:1) காணலாம்.

இதிலிருந்து பாயின் பயன்பாட்டினைத் தமிழர்கள் நன்கறிந்திருந்தனர் எனத் தெரிந்துகொள்ள முடிகின்றது.
மேற்கூறப்பட்ட இலக்கியச் சான்றுகளின் மூலம் பழந்தமிழர்கள் கப்பல் கட்டும் திறமையில் மட்டுமல்லாமல்,

அவற்றைச் செலுத்துவதிலும் மிகவும் தேர்ச்சிப் பெற்றிருந்தார்கள் என்பது புலனாகின்றது.

கலங்களைச் செலுத்துதற்குத் தேவையான அனைத்து அறிவையும் பெற்றிருந்தது அவர்களது மரபுவழி அறிவே காரணம்.
இன்றும் நாம் அந்த அடிச்சுவடுகளைக் கிராமப்புறக் கடலோரங்களில் காண முடிகின்றது.

பண்டைய புலவர்கள் அறிவியல் அடிப்படை இல்லாதவர்களாயிருந்தும், இவ்வரிய செய்திகளைத் தங்களது இலக்கியங்கள் வழி வெளியிட்டிருப்பதன் வாயிலாக...
உண்மையிலேயே பண்டைத் தமிழர்கள் கப்பற்கலையிலும், கலங்களைச் செலுத்துவதிலும் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

- நன்று.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தஞ்சை ஆ.மாதவன்

தஞ்சை ஆ.மாதவன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @ThanjaiMadhavan

Jun 21
இலக்கியங்களில் கொற்கையும், வணிகச் சிறப்பும்...!

#தாமிரபரணி ஆற்றின் முகத்துவாரத்தில் சங்க காலப் பாண்டியர்களின் இயற்கைத் துறைமுகம் #கொற்கை.

கொற்கைத் துறைமுகத்தில் முத்துக் குளித்தல் தொழிலும், முத்து ஏற்றுமதியும் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளன. Image
செங்கடல் வழி நூலாசிரியர் இதை #கொல்சி என்று எழுதியுள்ளார்.

#கொற்கை தமிழகத்திலுள்ள #புகார், #மாமல்லபுரம், #தொண்டி, #உவரி, #முசிறி ஆகிய பிற துறைமுகங்களை விட மிக அழகு நிறைந்த துறைமுகமாகவும்;

கடற்கொள்ளையர்களால் தலைகாட்ட முடியாத நல்ல பாதுகாப்பான துறைமுகமாகவும்;
#உரோமர் நாட்டு மக்களை மிகவும் வசீகரித்த 'ஆணி முத்துக்களை' அளிக்கும் பட்டினமாகவும் இருந்தது.

மேலும் அயலவர்களை கொற்கை மக்களும், பாண்டிய பார்வேந்தர்களும் அன்புடன் வரவேற்றுப் போற்றி விருந்தோம்புபவர்களாக விளங்கினர் என்பர்.
Read 23 tweets
Jun 19
சங்ககால மக்கள் வாழ்வியலில் மது வகைகள் - 7). #வெப்பர், #வேரி, #கந்தாரம்

#வெப்பர் - வீரன் ஒருவன் அதிரல் எனும் புனலிக்கொடியின் மலரைத் தலைமுடியில் சூடிக்கொண்டு, புலியன் கண் போன்ற நிறத்தையுடைய மதுவை (வெப்பர்) ஓரிருமுறை மாந்தியப் பின்னர் பசுவைக் கவர்ந்து சென்றோரிடம் போரிட்டு மீட்டான்
#வேரி - மலைநாடன் 'வல்வில் ஓரி' வேட்டையில் கொன்ற மான் தசைப் புழுக்கையும் பசுவின் நெய்யுருக்குப் போல் மதுவையும்,

தன் மலையில் உண்டாகிய குற்றமில்லாத நல்ல பொன்னையும் மணிகளையும், கொல்லிப் பொருநனுக்குத் தந்தான்.
#பாண் சமூகத்தார் தன்னை நாடி வந்தபோது, வல்வில் ஓரிக்கு #வேரி எனும் மதுவைத் தந்து மகிழ்வித்தான் என்பதை மேற்காணும் #புறநானூறு வழி அறிகிறோம்.

#கந்தாரம் - #புறநானூறு வெட்சித் திணைப் பாடல் ஒன்று (258) #கந்தாரம் எனும் #கள் வகையைப் பின்வருமாறு குறிப்பிடுகிறது.
Read 5 tweets
Jun 19
சங்ககால மக்கள் வாழ்வியலில் மது வகைகள் - 5). #நறவு, #நறா, #நனை

சங்க இலக்கியத்தில் #நறவு எனும் சொல் 47 இடங்களில் வந்துள்ளது.

பெரிய மலைகளில் விளைந்த மூங்கில் குப்பிகளில் நிரப்பி முற்ற வைத்த நறவினைக் குறிஞ்சி மக்கள் உண்டதை,

‘வாங்கமை பழுனிய நறவு உண்டு' என்கிறது #நற்றிணை (276:9).
தேறலையும், புளித்த கள்ளையும் உண்டதால் மக்கள் மயங்கி இன்புற்றிருந்தனர் என்பதை,

‘தேறுகள் நறவு உண்டார் மயக்கம் போல்' என்கிறது #கலித்தொகை (147: 2).
#ஆநிரை கவர்ந்து வரும் களைப்புற்ற தலைவனின் களைப்பினைப் போக்க;

'நறவைப் பிழியுங்கள்,
கடா வெட்டுங்கள், பந்தர்க்கீழ் இளமணல் பரப்புங்கள்'

- என்று முழக்கமிடும் சூழலை #புறநானூறு பின்வருமாறு பதிவிடுகிறது.
Read 6 tweets
Jun 10
கோட்டாற்றுச் சிற்பிகள்...!

#கோட்டாறு என்ற ஊர்ப்பகுதி #கன்னியாகுமரி மாவட்டத்தில் #நாகர்கோயில் அருகில் அமைந்துள்ள பகுதியாகும்.

இவ்வூர் வரலாற்றில் மிகச்சிறந்த இடத்தைப் பெற்று வந்திருக்கின்றது.

முற்காலப் பாண்டியர், சோழர், சேரர் கல்வெட்டுக்களில் இவ்வூர் இடம் பெற்றிருக்கின்றது.
'மும்முடிச் சோழபுரம்', 'மும்முடிச் சோழநல்லூர்', 'சோழ கேரளபுரம்' என்று இவ்வூருக்குப் பல பெயர்கள் இருந்திருக்கின்றன.

இது சமயம், அரசியல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க இடத்தைப்பெற்று வந்திருப்பதை, #சோழபுரம், #கோட்டாறு, #நாகர்கோயில் இடங்களில் காணப்படும் கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன.
இவ்வூரில் சமண சமயத்தைச் சார்ந்த முனிவர்கள் முற்காலப் பாண்டியர் காலத்தில் வாழ்ந்திருக்கின்றனர்.

சோழர்களது படைத்தலைவர்கள் முகாமிட்டுத் தங்கி, காவல் பணி புரிந்திருக்கின்றனர்.

இதே போன்று இவ்வூரில் கல்வெட்டு பொறிக்கும் கற்சிற்பிகளும், கோயில் திருப்பணி செய்யும் சிற்பிகளும்...
Read 12 tweets
Jun 10
மக்கள் வாழ்வியலில் #புடவை...!

பழைய கற்காலத்தில் மனிதன் மலைகளிலும், காடுகளிலும் அலைந்து திரிந்தான்.

விலங்கோடு விலங்காக வாழ்ந்து வந்தான்.

விலங்கின் தோல்களையும், மரப்பட்டைகளையும், மரத்தழைகளையும் ஆடையாக அணிந்து கொண்டான்.
புதிய கற்காலத்தில் மனிதன் ஒரு இடத்தில் தங்கி வாழத்தலைப்பட்டான்.

அப்பொழுது பயிர்த் தொழிலையும் மீன் பிடித்தலையும், நெசவுத் தொழிலையும் கற்றுக் கொண்டான். இதுவே மனிதனின் முன்னேற்றத்தின் முதற்படியாக அமைந்தது.
புதிய கற்காலத்தில் மனிதன் ஏதோ ஒருவகை வாழ்ந்த ஆடையினை உடுத்தியிருக்கின்றான் என்பது தெரிகிறது.

#ஆடை அணிகின்ற பழக்கம் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்தே வந்திருக்கிறது.

'ஆடையைக்’ குறிக்கின்ற சொல் தொடக்க காலத்தில் #புடவை என்ற பெயரில் வழங்கி வந்திருக்கிறது.
Read 31 tweets
Jun 9
சங்க காலப் போர் முறைகளும், அறங்களும்...!

போரானது ஒரு நாட்டாரின் வீரத்தைப் பறைச்சாற்றுவதற்காக
இருந்ததால், பண்டைத் தமிழர்கள் போரினைப் பெரிதும் போற்றினர்.

போரானது மிக முக்கியத்துவம் பெற்றிருந்த காரணத்தினால், தமிழர்கள் போர்முறைகளைப் பலவாறாகப் பிரித்திருந்தனர்.
வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை முதலியன போருக்குரிய புறத்திணைகளாக வகுத்தனர். ஒவ்வொரு திணையும் பல துறைகளைப் பெற்றிருந்தது.

#வெட்சி - ஒரு நாட்டின் மீது படையெடுக்க விரும்பும் வீரர்கள் முதலில், அந்நாட்டு ஆநிரைகளைக் கவரும் முயற்சி.
#கரந்தை - ஆநிரைகள் பகைவரிடம் சிக்காதவாறு காக்கும் முயற்சி

#வஞ்சி - பகைவர் நாட்டின் மீது படையெடுத்துச் செல்லுதல்

#காஞ்சி - அங்ஙனம் படையெடுத்து வருவோரை, எதிர்த்துப் போரிடுதல்

#உழிஞை - கோட்டையை முற்றுகையிடுதல்.
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(