#புறத்தூய்மை
எம்பெருமானார் ஸ்ரீ ராமானுஜரின் 'தண்டு' என்று அவரே உரைத்த #ஸ்ரீமுதலியாண்டான் 74 சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். ஸ்ரீபெரும் புதுரரில் எம்பெருமானாரின் திருமேனியை எழுந்தருளப் பண்ணினவர் இவரே. அவரின் திருமாளிகை சிங்கப்பெருமாள் கோவில் அருகில் உள்ளது. அங்கு பல வருடங்களுக்கு முன
கைங்கர்யம் செய்து வந்த ஒருவரை நேற்று சந்தித்தேன். அவர் அங்கு சேவை செய்யும் போது பிரம்மச்சாரி. அவர் பணிக்கு வந்த போது, அதற்கு முன் இருந்தவர் ஒன்றே ஒன்றை மட்டும் தெளிவாக சொல்லிவிட்டுப் போனாராம், உனக்கு மந்திரம் சரியாக தெரிகிறதோ இல்லையோ உண்மையான பக்தியும் சுத்தமும் தேவை இங்கே சேவ
செய்வதற்கு, விளையாட்டாக சுத்தமின்றி கர்ப்பக்கிரகத்துள் நுழைந்து விடாதே அரவமாக ஜீயர் ஒருவர் இங்கு இருக்கிறார், அவர் அதை அனுமதிக்க மாட்டார் என்று கூறினாராம். நான் சந்தித்த அந்த அர்ச்சகர் அங்கு இருந்தது சுமார் 30 வருடங்களுக்கு முன்பு. உதவிக்கு யாரும் இல்லாத நிலையில் பக்கத்து
கிராமத்துக்குச் சென்று தான் அவர் கோவிலுக்குத் தேவையான அனைத்தும் வாங்கி வர வேண்டிய நிலை. ஒவ்வொரு முறையும் திரும்ப ஸ்நானம் செய்து மடி வேட்டி உடுத்தி கர்ப்பகிரகத்தினுள் அவர் செல்ல வேண்டும். ஒரு மாலை ஏதோ வாங்கிக் கொண்டு வந்து, பின் குளிக்காமல் கர்ப்பக்கிரகத்துள் சென்றவர், ஒரு கரிய
தடிமனான நல்ல பாம்பு சீறிக் கொண்டு நிற்பதைக் கண்டு அரண்டு விட்டாராம். அது முதல் அந்தத் தவறை செய்யாமல் இருந்திருக்கிறார். சிலர் இதை நம்பாமல் சுத்தமின்றி உள்ளே சென்றவர் வெளியே தூக்கி அடிக்கப்பட்டதையும் பகிர்ந்தார். இன்று கீழ் வரும் சம்பவத்தை வாட்சப்பில் பார்த்தேன், I was surprised
by the coincidence. Hence sharing.

உண்மை சம்பவம் நன்றி :- பாஸ்கர் கௌசிகன் & அரவிந்த் சுப்ரமண்யம்

மலேசியாவில் மாத்தாங் என்ற கிராமத்தில் அமைந்திருந்த மங்கள நாயகி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம் செய்தோம், தொடர்ந்து மண்டலாபிஷேகம் செய்விக்க என்னை கேட்டுக் கொண்டார்கள். நானும் ஒத்து
கொண்டு, மண்டலாபிஷேகம் பார்க்கலானேன். சிறிய கிராமம், அற்புதமான மக்கள், அம்பாள் அற்புதமானவள், ஆத்துக்காரி நிறை மாத கர்பிணி. கோவிலுக்கு அருகிலேயே ஒரு சிறிய வீடு! அங்கே அவளையும் கவனித்து ஆலயப் பணிகளையும் மேற்கொண்டு வந்தேன். தினமும் மடி வஸ்த்ரம் (முதல் நாள் நனைத்து காயப்போட்டு மறாநாள்
அதை குளித்தப் பின் எடுத்து தரிப்பது) தரித்தே ஆலயம் செல்வேன். முதல் நாள் சற்று வேலைப்பளு இருந்ததால் வஸ்த்ரத்தை நனைத்து காயப்போட மறந்து விட்டேன். தவறி விட்டேன். மடி வஸ்த்ரம் இல்லாத காரணத்தால் பீரோவில் இருந்து ஒரு வஸ்த்ரத்தை எடுத்து உடுத்தினேன், பீரோவை திறக்கும் போது படுக்கையையும்
தொட்டிருந்தேன். இதற்கு பேர் "விழுப்பு” அம்பாள் மன்னிப்பாள், சூழ்நிலை கருதி என அவள் மேல் பாரத்தை போட்டு சன்னதி சென்றேன். சோம்பேறித்தனமும் சேர்ந்ததால் அவள் மீது பாரத்தை போடுவது சாக்காக இருந்தது. அம்பிகைக்கு எண்ணை சாற்றி, பால் சகிதம் அபிஷேகம் செய்தேன், புடவை மடித்து அலங்காரம்
செய்தேன். அன்று வெள்ளிக்கிழமை, எல்லா விளக்குகளையும் பிரகாசமாய் ஏற்றினேன். ஆறுக்கு ஐந்து என்ற அளவிளான கற்பக்ரகம் அது. உள்ளே மின்சாரம் பயன்படுத்த மாட்டேன். நான் கைங்கர்யம் செய்யும் எந்த ஆலயத்திலும் கற்பக்ரகம் விளக்கில் மட்டுமே ஒளி பெறுவதை உறுதி செய்வேன். அம்பிகைக்கு பெரிய பொட்டு
வைத்தால் இன்னும் நன்றாக இருக்குமே என எண்ணி, சந்தனம் எடுத்து குலைக்க நீர் பானை அருகில் சென்று குனிந்து நீர் எடுக்க எத்தனித்தேன். விளக்கு ஒளியில் கருப்பாய் நெழு நெழுவென ஏதோ இருப்பதை கண்டேன். கிட்டத்தட்ட தண்ணீர் ஹோஸ் சுருண்டு கிடப்பதைப் போல, கருப்பு நிறத்தில் அது அசைவதைக் கண்டு பயம்
தொண்டை அடைக்க அசைவற்ற நிலைக்குச் சென்றேன். அது கருநாகப் பாம்பு. மரண பயம் வந்தது. செய்வதறியாது அம்பிகையின் இடப்பக்கம் ஒதுங்கி விட்டேன். என் முன்னே அரவம், அதைத் தாண்டினால் தான் வாசலை அடைய இயலும். அது நகர்ந்து வாசல் முன்னே சென்று படமெடுத்தது. விளக்கு வெளிச்சத்தில் அது மின்ன வேறு
செய்கிறது. நானோ அம்பிகை அருகில், கத்தினால் கொத்தி விடும். அதுவரை ஒரு பாம்பை இவ்வளவு அருகில் கண்டதே இல்லை. எவ்வளவு நேரம் அது படமெடுத்து நின்றது என்பதை சொல்ல இயலவில்லை. ஆனால் அது என்னையும் நான் அதையும் பார்த்திருந்தோம். அது மெல்ல நகர்ந்து படிகள் இறங்கி வெளியே சென்றது. ஓட்டமாய் ஓடி
வெளியே வந்து கூச்சலிட்டேன். நான் அறைக்குச் சென்று மனைவியிடம் விஷயத்தை கூறிவிட்டு, அம்மாவிற்கு போன் செய்தேன், மனைவி கர்ப்பவதியாய் இருந்ததால் ஏதேனும் துர்சகுணமா என அம்மாவிடம் கேட்டேன். அதெல்லாம் இருக்காது என்றவள், அவள் கேட்ட முதற்கேள்வி, “விழுப்போட சன்னதி போனியா? ” பல ஆயிரம்
கிமீக்கு அப்பால் இந்தியாவில் உள்ளவள் ஒரு விஷயத்தை ஊகிக்கிறாள். அது சரியாகவும் இருக்கிறது. பாம்பை பார்த்ததை விட அவள் கேள்வி மேலும் அதிர்ச்சி தந்தது. விழுப்போட சன்னதி போனா பாம்பு கண்ணில் படும் என்று அவள் அறிந்திருக்கிறாள்.
நண்பர்களே, அம்பிகை சில நேரங்களில் நம் மீது மரக்கருணை
புரிவாள். அன்று நான் உணர்ந்த விஷயங்களை இந்த பதிவிற்குள் அடக்க இயலாது. ஐயர் கட்டிப்பிடித்து விபூதி தர வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள்! சன்னதிக்கான மாண்பு உண்டு. அருட்சக்தியை தீண்ட விதிமுறைகள் உண்டு. தந்தையே ஆனாலும் அவரை தீண்டினால் விழுப்பே. அன்று நடந்தது ஏதேச்சையாக கூட இருக்கலாம்
ஒரு சிறு நோக்கம் கொண்ட கடையனான எனக்கு அது 'அம்பிகை அருளே'. அவள் அங்கே உரைந்திருப்பதை எனக்கு உணர்த்தினாள் என்றே நான் கருதுகிறேன். அந்த சிறிய அறையில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் சுற்றி வந்திருக்கிறேன். அந்த அரவம் என்னை தீண்ட நினைத்திருந்தால் அதற்கு ஏராள சந்தர்ப்பம். ஆனால் அங்கே
நடக்கும் நாடகத்தின் தலைவி அதை விரும்பவில்லை. அவள் வேறேதோ நோக்கம் கொண்டிருந்தாள், அதில் வெற்றியும் பெற்றாள். விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழுத்துணையே.
உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாள்...
அம்பிகை அருள் தொடரட்டும்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jul 28
#கோவிலில்_வழிபடும்_முறை நம் இந்து மதத்தில் தான் இறைவனை நம் உள்ளப்படி எப்படி வேண்டுமானாலும் வழிபடலாம் என்றிருக்கிறது. வழிபட முக்கிய தேவை பக்தியும் பணிவும் தான். ஆனால் கோவிலுக்குச் சென்று வழிபடும்போது நாம் சிலவற்றை கடைபிடிக்க வேண்டும். கோயிலுக்கு செல்லும்போது உடல், ஆடை, மனம் ஆகியவை Image
தூய்மையாக இருக்க வேண்டும். குளித்து விட்டு துவைத்த துணிகளை அணிந்து (கோவிலுக்கு உகந்த வேட்டி சட்டை, புடைவை) செல்ல வேண்டும். ஆண்கள் நெற்றியில் திருநீறு, சந்தனம், திருமண் காப்பு ஏதாவது ஒன்றை தரித்திருக்க வேண்டும். பெண்கள் குங்குமம் அல்லது சந்தனம், அல்லது திருநீறு இல்லாமல் வழிபடக்
கூடாது. வெறும் கைகளோடு கோவிலுக்கு செல்லாமல், நம்மால் இயன்றவரை இறைவனுக்கு பூக்கள், பழங்கள் அல்லது ஒரு கற்பூரமாவது எடுத்துச் செல்ல வேண்டும். சிவனுக்கு வில்வ இலையையும், பெருமாளுக்கு துளசியையும் அர்ச்சனைக்கு வாங்கி செல்வது இன்னும் சிறப்பு. கோவில் வாயிலில் நுழையும் போது தண்ணீரால் கை,
Read 12 tweets
Jul 28
#சொர்க்கவாசல் 108 திவ்யதேசங்களில் பெரும்பாலும் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் இருக்கும். ஆனால் கும்பகோணம் #ஸ்ரீசாரங்கபாணி ஆலயத்தில் சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசல் கிடையாது. இதற்கு காரணம் இத்தலத்து சுவாமி நேரே வைகுண்டத்தில் இருந்து இங்கே வந்து மகாலட்சுமியின் அவதாரமான ImageImage
கோமளவல்லியை மணமுடிப்பதற்காக திருமால், தான் எழுந்தருளியுள்ள ரதத்துடன் வைகுண்டத்தில் இருந்து இங்கு வந்து கோமளவல்லியை மணந்து கொண்டார். எனவே, இவரை வணங்கினாலே பரமபதம் (முக்தி ) கிடைத்து விடும் என்பதால், இந்த ஆலயத்தில் சொர்க்கவாசல் கிடையாது. மேலும், இங்குள்ள உத்ராயண, தட்சிணாயண வாசலைக் Image
கடந்து சென்றாலே பரமபதம் கிட்டும் என்ற நம்பிக்கையும் உள்ளது. உத்ராயண வாசல் வழியே தை முதல் ஆனி வரையும், தட்சிணாயண வாசல் வழியே ஆடி முதல் மார்கழி வரையும் சுவாமியை தரிசிக்க செல்லவேண்டும். ஏதாவது ஒரு வாசல் தான் இங்கு திறக்கப்பட்டு இருக்கும். பெருமாள் தேரில் வந்து மணமுடித்ததால் கோவில் Image
Read 6 tweets
Jul 28
#மஹாபெரியவா
ஸ்ரீமடம் பாலு மகாபெரியவாளின் நிழல் என்றுதான் சொல்ல வேண்டும். 1954-ம் வருடம் முதல் மகானை மிகவும் கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தவர். ஒரு சமயம் மகா பெரியவாளுக்கு மார்வலி வந்து அவஸ்தைப் படுவதைக் கண்ட பாலு, அதற்காகவே சபரிமலை ஐயப்பனிடம் வேண்டிக் கொண்டார். எனவே சபரிமலை Image
சென்று வர மகாபெரியவாளிடம் உத்தரவு கேட்டார். கேலியான புன்னகையுடன்,
"என்னடா உன் அப்பா, தாத்தா யாராவது சபரி மலைக்குப் போயிருக்காளா? உனக்கென்ன தெரியுமுன்னு நீ போறேங்கறே?" என்று கேட்டார் ஆசார்யா.
"அவா யாரும் போனதில்லே பெரியவா. பெரியவாளுக்கு அடிக்கடி வரும் மார்வலி சரியாகணும்னு ஐயப்பனை
வேண்டிண்டேன். அதனாலே மலைக்குப் போயிட்டு வரேன்" என்று மகானிடம் வேண்டி நின்றார் பாலு. பாலு சொன்னதைக் கேட்ட மகான் சற்று நேரம் யோசிப்பது போலிருந்தது, பிறகு சொன்னார்.
"நீ வெள்ளை வேட்டியோடேயே போலாம். நீ பிரம்மச்சாரிதானே, அதனாலே தோஷமே இல்லே. ஆனால் மலைக்குப் போனதும் சிகப்புத் துண்டைக்
Read 8 tweets
Jul 28
#MahaPeriyava
A gentleman greatly devoted to Periyaval was very poor. His daughter’s wedding was to be held. He came to Periyaval and made a prayer.
“There is still time. Do not worry,” said Periyaval and sent the devotee away.
Later, Periyaval sent one of his attendants to Image
another devotee in Madras. This devotee was a wealthy man. Besides, on Periyaval’s instructions, he would also help those in need now and then. When the attendant informed him of the matter, he gave a small amount of money. “But one needs much more for the wedding. Five hundred
rupees will not be sufficient,” said the attendant. “Look here,” said the devotee. “Do you know what I did? I wrote Rs.200, Rs.500, Rs.1000 and so on right up till Rs.5000, on little slips of paper and placed them in front of the altar. I called my grand-daughter and told her to
Read 11 tweets
Jul 27
#தென்திருப்பேரை குழைக்காது வல்லி நாச்சியார், திருப்பேரை நாச்சியார் உடனுறை மகரநெடுங் குழைக்காதர், நிகரில் முகில் வண்ணன் திருக்கோவில், தென் திருப்பேரை, தூத்துக்குடி மாவட்டம். இத்திருக்கோயில் நவதிருப்பதிகளில் 7வது திருப்பதியாகவும் 108 திவ்ய தேசங்களில் 53வது திவ்ய தேசமாகவும் Image
விளங்குகிறது. மூலவர் வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம். திருமாலின் தேவியரில் ஸ்ரீதேவி சிவந்த நிறம் கொண்டவர். பூதேவி கருமை நிறம் கொண்டவர். "திருப்பேரை" என்பது ஸ்தலம் பெயர் என்று நினைக்கின்றனர். அது பூதேவி தாயாரின் பெயர். எப்படி வந்தது என்று பார்ப்போம். திருமாலின்
திருமடியில் சயனித்து இருந்த பூதேவி துர்வாசரின் வருகையை கவனிக்கவில்லை. இதனால் கோபமுற்ற துர்வாசர் பூதேவி கரிய நிறம் நீங்கி சிவந்த நிறம் அடையுமாறு சபித்தார். பூதேவியும் குற்றத்தை பொருத்தருள வேண்டி சாப விமோசனம் வேண்டினார். தாமிரபரணி நதிக்கரையில் உள்ள அரிபதம் என்ற இடத்திற்கு சென்று
Read 9 tweets
Jul 27
#அனுமந்தன்பட்டி #அனுமந்தராயப்பெருமாள் கோயில். தேனி மாவட்டம்.
இலங்கைப் போரின் போது, இந்திரஜித்தின் அஸ்திரத்தால் மயங்கி வீழ்ந்து உயிருக்குப் போராடிய லட்சுமணனையும் வானர சேனைகளையும் காப்பாற்ற, அனுமன் சஞ்ஜீவி மலையைப் பெயர்த்தெடுத்து வந்தார். அப்போது, ராவணனின் ஆணைக்கு இணங்க, அப்போது Image
அவனுடைய கட்டுப் பாட்டில் இருந்த சனி பகவான், அனுமனைத் தடுத்து நிறுத்த முற்பட்டார். தன்னை வழிமறித்த சனியிடம், நண்பா, போர்க்களத்தில் மலையைச் சேர்த்து விட்டுத் திரும்பும்போது நாம் பலப்பரீட்சை செய்யலாம். இப்போது வேண்டாம் என்றார் அனுமன். ஆனால் சனி, அனுமனின் வேண்டுகோளை ஏற்கவில்லை.
ஆவேசத்துடன் அனுமன் மீது பாய்ந்தார். இதனால் கோபம் கொண்ட அனுமன், சனியைத் தன் காலில் சுற்றிக் கட்டிக் கொண்டு போர்க்களத்தை நோக்கிப் பறந்தார். பிறகு, அவர் மீண்டும் அதே இடத்துக்குத் திரும்பி வந்து, சனி பகவானுக்கு விமோசனம் தந்ததாக புராணம் உள்ளது. விமோசனம் பெற்ற சனிபகவான், ‘இனி தங்களை
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(