🟥. *ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார்.*

*ஒருநாள் ஏதோ வேலையாக நடந்துசென்றார்.*

*அப்போது*
*செருப்பு பிஞ்சுபோச்சு..*
*அருகே இருந்த வீட்டுக்குச் சென்றார்.*

*அந்த வீட்டுக்காரரை அழைத்து...*

*ஐயா இந்தமாதிரி வரும்போது என் செருப்பு பிஞ்சுபோச்சு.*
*புதுசெருப்பு வேற.. அதனால இதை இப்படியே தூக்கியெறிய மனசு வரல. இங்க உங்க வீட்டு வாசல் ஓரமா வெச்சிட்டுப்போறேன்...*

*காலையில என் வீட்டு வேலைக்காரனை அனுப்பி எடுத்துக்கிறேன் என்றார்.*

*அதற்குத் தாங்கள் அனுமதி தரவேண்டும் என்றார்.*
*அதற்கு அந்த வீட்டுக்காரர்*
*அந்த செல்வந்தரைப் பார்த்து...*

*ஐயா.. “ நீங்க எவ்வளவு பெரிய செல்வந்தர்..! எங்க வீட்டு வாசலில் உங்க செருப்பு கிடப்பது கூட எங்களுக்கு கௌரவம் தான்.*

*நீங்க தாராளமாக வெச்சிட்டுப்போங்க“ என்று சொன்னார்.*
*அதுக்கு பிறகு அவர் தன்னுடைய வேலைக்காரனை அனுப்பி செருப்பை பெற்று கொண்டார்*

*சில ஆண்டுகள் கடந்தன...*

*ஒருநாள் அந்த* *செல்வந்தரே இறந்து போனார்.*

*அவரின் இறுதி ஊர்வலம் செருப்பு வைத்தாரே அந்த வீட்டு வழியே வந்தது.*

*அப்போது நல்ல மழை.⛈*
*பிணத்தைத் தூக்கி வந்தவர்கள் அந்த வீட்டுக்காரரிடம் சென்று...*

*ஐயா சரியான மழையாக இருக்கிறது தூக்கிச்செல்லமுடியவில்லை.*

*அந்த உடலை இங்கு மழை நிற்கும் வரை வைத்துவிட்டு.*
*பிறகு எடுத்துக்கொள்ள அனுமதி தருவீர்களா? என்று கேட்டனர்.*

*அந்த வீட்டுக்காரர் அவர்களிடம் சொன்னார்..*
*ஏன்டா யார் வீட்டுப் பிணத்தை யார் வீட்டு வாசல்ல வைக்கப்பார்க்கிறீங்க? "மரியாதையா எடுத்திட்டுப் போயிடுங்க” என்று..*

* #அவ்வளவுதாங்க #வாழ்க்கை *

*ஒரு செருப்புக்கு கிடைக்குற மரியாதை கூட நம்ம செத்த பின்னாடி நம்ம உடலுக்கு கிடைக்காது*
*வாழ்கின்ற கொஞ்ச நாள் எல்லார்கிட்டயும் முடிஞ்ச அளவுக்கு அன்பா வாழ்ந்துட்டு போவோம்...*

*உயிர் உடம்புக்குள்ள இருக்கும் வரைதாங்க மனிதனுக்கு மரியாதை*

*#அன்பால்_இணைவோம்*

படித்ததில் பிடித்தது

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with #பாரதி_செல்லம்மா( Kaalabala )🇮🇳

#பாரதி_செல்லம்மா( Kaalabala )🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Kaalabala1

Jul 27
#பாவம்_புண்ணியம்

கிருஷ்ண ப்ரேமி அண்ணா அவர்கள் சொன்ன ஒரு அருமையான கதை தான் என் ஞாபகத்திற்கு வருகிறது.

இதை விட சிறப்பாக நாம மகிமையை எடுத்துச் சொல்ல எதனாலும் முடியாது என்பதால் இதனையே இங்கே எழுதுகிறேன்.

மகாராஷ்டிர மாநிலத்தில் பாவம் புண்ணியம் என்று கூறி
மக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தனர் சிலர்.

அதாவது இது செய்தால் பாவம், இது செய்தால் புண்ணியம் என்றெல்லாம் சொல்லி,
இந்த பாவத்தில் இருந்து விடு பட இந்த பரிஹாரம் செய்ய வேண்டும்,

இந்த ஹோமம், இந்த யாகம், இந்த பூஜைகள் செய்யவேண்டும் என்று கூறி
மக்களை இந்த யாகம், இந்த பூஜை, இந்த தானம் என்று மக்களை செய்யவைத்து,

அதற்காக அந்த மக்களிடம் இருந்து தானமாகவும், தக்ஷனையாகவும் நிறைய பணத்தை சம்பாதித்துக் கொண்டிருந்தனர் சிலர்.

இதை கண்டு சற்றும் சகியாத ஸந்த் ராமதாசர் ஒரு வேலை செய்தார்.
Read 12 tweets
Jul 27
நம்மில் பலர் ஊர்களுக்கு செல்லும்போது ஆங்காங்கே ஒரு சில கட்சியின் மாநாடுகள் நடந்து கொண்டிருப்பதை பார்த்திருப்போம்.

அப்படி மாநாடுகள் நடந்து கொண்டிருக்கும் திடலுக்கு வெளியே ஒரு சில பேர் கட்சியின் கரை போட்ட டவல், பேட்ச், விசிறி, தொப்பி என்று பலதை விற்றுக் கொண்டிருப்பார்கள்.
மிக மோசமான தரத்தில் இருக்கும் அவை. அந்த மாநாடு முடியும் போது கூட இருக்குமா அல்லது நஞ்சு போய் பியிந்து விடுமா என்று தெரியாத அளவுக்கு ஒரு தரத்திலேயே இருக்கும்.

மகாபலிபுரத்தில் நடக்கும் இந்த உலகளாவிய செஸ் ஒலிம்பியாட்டை
நமது மாநில அரசு இதுபோல ஏதோ ஒரு மாநாடு என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறது.

எவ்வளவு கேவலமான ஒரு துண்டை வருகின்ற விருந்தினர்களுக்கு போட்டிருக்கிறார்கள் என்று பாருங்கள்.

20 ரூபாய்க்கு ஒரு மாலை பத்து ரூபாய்க்கு ஒரு துண்டு. இதற்கு எதையும் போடாமலே இருந்திருக்கலாம்.
Read 5 tweets
Jul 27
#காத்திருந்த_பேதை_நெஞ்சம்

அன்று ராகவ்க்கு 10 வது பிறந்தநாள். அவன் அப்பா ராஜேஷ் ஒரு பெரிய சாப்ட்வேர் கம்பெனியின் எம்டி.பணத்திற்கும் வசதிக்கும் குறைவே இல்லை . அம்மா சாருலதா ஒரு சாப்ட்வேர் கம்பனியில் சீனியர் வைஸ் பிரசிடென்ட்.
ராகவ் எதை வேண்டும் என்று கேட்கவே
வேண்டாம் நினைத்தாலே போதும் உடனே அது அவன் கையில் இருக்கும்.
அப்பாவும் அம்மாவும் அன்று விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டை படாடோபமாக அலங்கரிக்க ஆர்டர் செய்து இருந்தார்கள்.
மாலை நான்கு மணிக்கு தடபுடல் பர்த்டே பார்ட்டி.
ராஜேஷும் சாருவும் தனக்கு தெரிந்த பிரபல நணபர்களை அழைத்திருந்தார்கள்.
நகரத்தின் ஐந்து நட்சித்ர ஹோட்டலில் இருந்து சிறப்பு உணவு வகைகளை எடுத்து வந்து பரிமாற ஏற்பாடு.
ராகவ்வின் நெருங்கிய நண்பர்களுக்கும் அழைப்பு.
ராகவ்க்கு விலையுயர்ந்த கோட் சூட்டும் ரெடி.
Read 11 tweets
Jul 25
#மனிதம்

பகுதி 2

"ரொம்ப நன்றிப்பா... எனக்காக ரொம்ப சிரமப்பட்டுட்டே. நான் இப்படியே ஊருக்கு கிளம்பறேன். இப்ப பஸ் புடிச்சா, ராத்திரிக்குள்ளே காரைக்கால் போயிடலாம். என் மனைவி தனியா இருக்கா; துணைக்கு ஆள் இல்லை...'' Image
""நானே பஸ் ஏத்தி விடறேன் வாங்க,'' என்றவன், ஓட்டலுக்கு அழைத்துப் போய், அவர் மறுத்தும் கேளாமல், சாப்பிட வைத்து, தானும் சாப்பிட்டான்.

கோயம்பேடு வரை, பைக்கில் அழைத்துச் சென்று, காரைக்கால் பஸ்சில் ஏற்றி விட்டான். Image
டிக்கட் வாங்க என்று ஐநூறு ரூபாயை, பிடிவாதமாக அவர் சட்டைப் பையில் திணித்தான்.

""ஒரு நிமிஷம்...'' என்று போனவன், ஒரு பிளாஸ்டிக் பையுடன் வந்தான்.

""ஊர் போய் சேர எத்தனை நேரம் ஆகுமோ, வழியிலே சாப்பிட்டுக்குங்க...'' என்று, Image
Read 13 tweets
Jul 25
#மனிதம்

#கண்களில்_கண்ணீருடன்

பூட்டிய கிரில்லுக்கு அப்பால், ஒரு பெரியவர், கசங்கிய சாதாரண வேட்டி சட்டை, முகத்தில் கருப்பும், வெள்ளையுமாக மண்டிய ரோமக் காடு, நீண்ட பயணத்தால் களைத்த முகம் என, கையில் நகைக்கடை விளம்பரத்துடன் இருந்த ரெக்சின் பையுடன் நின்றிருந்தார். Image
அவர் கையிலிருந்த சீட்டை பார்த்தார்.

""ஆனந்த், நம்பர். 8, யோகானந்தம் நகர்?''

""ஆமாம்... இது தான். நான் தான் ஆனந்த்... நீங்க... என்ன வேணும்?''

அவர் வறண்ட உதடுகளை, நாவால் ஈரப்படுத்திக் கொண்டார்.

" Image
"நான் உங்கப்பாவோட நண்பன்,காரைக்காலேருந்து வர்றேன். உங்கப்பா லெட்டர் கொடுத்து அனுப்பியிருக்கார்.''

பெரியவர் ரெக்சின் பை ஜிப்பை திறந்து, ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினார்.

வாங்கிப் பார்த்த ஆனந்த், ""அப்பாவா?'' என்று வினவியபடி, கடிதத்தை படித்தான். Image
Read 17 tweets
Jul 25
#சம்பாத்தியம்

- கதை டைம்

பஸ் ஸ்டாண்டின் எதிரிலிருந்த அந்த ஓட்டலில் எப்போதும் கூட்டம் அலைமோதும். ருசி கண்டவர்கள் மீண்டும் மீண்டும் சாப்பிட வருவதால்தான் அப்படி. ஓட்டலுக்குள் புகுந்த சரவணன் அவனின் அப்பா அங்கு சமையல்காரராக வேலை பார்ப்பதால் நேராக சமையலறைக்குள் சென்றான்.
பொள்ளாச்சிக்கு பக்கத்தில் உள்ள ப.க.புதூர்தான் அவன் சொந்த ஊர்.தென்னந்தோப்பு வைத்திருந்த அவனின் அப்பா மாசிலாமணி அவருடன் கூடப் பிறந்த நான்கு பெண்களையும் கரை சேர்ப்பதுக்குள் எல்லாவற்றையும் விற்றாக வேண்டியதாகிவிட்டது.
குடும்பத்தை காப்பாற்ற அந்த ஓட்டலில் சமையல்காரருக்கு உதவியாளனாக வேலைக்கு சேர்ந்து படிப்படியாக முன்னேறி இன்று அந்த ஓட்டலின் சீஃப் குக் ஆக இருந்தார்.

ஒவ்வொரு மாதமும் சம்பள நாள் அன்று மாலை சரவணனை ஓட்டலுக்கு வரச்சொல்லிவிடுவார்.
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(