Newman ❤ INDIA Profile picture
Aug 19, 2022 5 tweets 3 min read Read on X
இலவசங்களால் என்ன பயன் ? தமிழ் மக்கள் வாழ்வு எப்படி மேம்பட்டிருக்கிறது எனப் பிரதமருக்கு முட்டு கொடுத்து சீமான் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
கலைஞர் தந்த இலவச டிவி திட்டத்தின் பலன்கள் பற்றி இந்த இழையில் பார்ப்போம் #thread #freebies
1996ல் கலைஞர் இலவச டிவி அறிவிக்கும் போது 14" டிவியின் சந்தை விலை ₹5000/-. திமுக அரசு 2006-11 நடந்த 5 ஆண்டு ஆட்சியில் 1,62,59,526 குடும்பங்களுக்கு 3687 கோடி ரூபாய் செலவில் டிவி வழங்கியது. அதாவது ஒரு டிவியின் விலை சுமார் ₹2200/-. டெண்டர் முறை மூலம் அரசு வாங்கியதால் மக்களிடம்
இருந்து போயிருக்கக் கூடிய ஆயிரக்கணக்கான கோடிகள் மிச்சமாகி அது புழக்கத்தில் இருந்தது. தமிழ்நாட்டில் டிவி ஊடுருவல் (penetration) 95% ஆனதால் தமிழில் இத்தனை சேனல்கள் வந்தன. மற்ற மாநிலங்களில் HUL, P& G, ITC போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் பிராண்டுகளே கோலோச்சும் போது இங்கே கோல்டுவின்னர்
சக்தி மசாலா, ஆச்சி மசாலா, சிக் ஷாம்பு, இதயம், லயன் டேட்ஸ் என தமிழ்நாட்டில் இத்தனை பிராண்டுகள் உருவானதற்கு காரணம் இந்த டிவி ஊடுருவல் தான். இந்த சேனல்கள் ஏற்படுத்திய மூதலீடுகளை கணக்கில் எடுத்தாலே அரசு போட்ட காசை விட பல மடங்கு திரும்ப வந்திருக்கும். இந்த முதலீடு
உருவாக்கிய வேலை வாய்ப்புகள் மற்றும் விஸ்காம் கல்வி தான் இன்று யுடியூப் சேனல் நடத்துவதில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னணியில் இருப்பதற்கு காரணம் எனச் சொன்னால் மிகையல்ல. கலைஞர் தந்தது வெறும் டிவியல்ல. அனைவருக்குமான சமூக, பொருளாதார முன்னேற்றம் 🖤❤

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Newman ❤ INDIA

Newman ❤ INDIA Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @roadoram

May 23
இன்றைய @Onion_Roast ல் இளையராஜா இசைக்கான காப்புரிமை பற்றி பேசிய போது தோழர் @Varavanaisen ஏ.ஆர். ரஹ்மான் 91க்கு பிறகான உலகமயமாக்கல் சூழலில் வந்ததால் தன் உரிமைகளைச் சரியாகப் பயன்படுத்தினார் எனக் குறிப்பிட்டார். இதைச் சற்று விரிவாக எழுதுகிறேன். ரஹ்மான் சினிமாவுக்கு வருவதற்கு
முன்னால் கார்ப்பொரேட் விளம்பரங்களுக்கு இசை அமைத்தவர். ஒரு விளம்பர ஏஜென்சி எடுக்கும் விளம்பரத்தில் அதன் இசையும் ஒரு அங்கம். அவ்வளவு தான். ஆனால், அங்கு போடப்படும் ஒப்பந்தங்கள் water tight ஆக இருக்கும். உதாரணத்திற்கு இந்த ஏர்டெல் விளம்பரத்திற்கு ரஹ்மான் தான்
இசையமைத்தார். இதற்கு இசையமைக்கும் முன்பே இது எத்தனை நொடி விளம்பரம், எங்கெல்லாம் பயன்படுத்தப்படும், எத்தனை கால்த்திற்கு பயன்படுத்தப்படும் என்ற அனைத்தும் ஒப்பந்தத்தில் இருக்கும். இதை தமிழில் ரஹ்மான் கொடுத்தால், அவரின் இசைவு இல்லாமல் வேறெந்த மொழியிலும் மாற்ற முடியாது. அதே கம்பெனி
Read 9 tweets
Dec 11, 2023
சென்னையில் வரலாறு காணாத மழை. நகரின் 50% பால் தேவையை நிறைவு செய்யும் அம்பத்தூர் பால் பண்ணை வெள்ளக் காடாக இருக்கிறது. தனியார் பாலும் சப்ளை இல்லை. பாலுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் படங்கள் தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும் பரவுகின்றன. முதலவர் அலுவலகத்திலிருந்து
ஒரு போன் வருகிறது "மக்களுக்கு தேவையான பால் தாராளமாக கிடைக்க வேண்டும், என்ன பண்ணுவீங்களோ தெரியாது" எனக் கண்டிப்பான உத்தரவு போடுகிறார். செய்வது தெரியாமல் அதிகாரிகள் கையைப் பிசைந்து நிற்கிறார்கள். முதல்வரிடம் போய் "மற்ற மாவட்ட பால் பண்ணைகளில் இருந்து வரவழைத்தாலும் சுமார்
2 லட்சம் லிட்டர் shortage ஆகுதுங்க" என நிலைமையை எடுத்துச் சொல்கிறார்கள். முதல்வர் போனை எடுத்து கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையாவுக்கு பேசுகிறார். அடுத்த நிமிடமே நந்தினி எம்.டி ஆவின் எம்.டி.யின் லைனுக்கு வருகிறார். "எத்தனை லட்சம் லிட்டர் வேணாலும் தமிழ்நாட்டிற்கு தரச் சொல்லி
Read 6 tweets
Sep 8, 2023
மேஜிஸ்டிரேட் கோர்ட் என்றழைக்கப்படும் கீழமை நீதிமன்றங்கள் தான் நீதித்துறையின் கை, கால், உடல் முதுகெலும்பு எல்லாமே! உச்ச/உயர்நீதிமன்றங்கள் தலை மட்டும் தான். இந்த கீழமை மன்றங்களின் நீதிபதிகள் தேர்வாணையம் போட்டித் தேர்வு மூலம் 'மெரிட்'டில் வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1/6 Image
உயர் நீதிமன்ற நீதியரசர்களோ மூத்த நீதிபதிகளின் கொலீஜியம் எனப்படும் தெளிவற்ற (opaque) தேர்வு முறையில் பணிக்கு வந்தவர்கள். கீழமை நீதிமன்றங்களின் செயல்பாடுகளில் குறை இருந்தால் அதை தலைமை நீதிபதியிடமோ, உள்ளரங்கு கூட்டத்திலோ சொன்னால் அது ஆக்கபூர்வமாக இருக்கும். அதை விடுத்து 2/6
Open Courtல் விமர்சிப்பது அந்த நீதிமன்றங்கள் மேல் மக்கள் வைத்திருக்கும் மரியாதையை குறைக்க மட்டுமே உதவும். கொடுமை என்னவென்றால், இந்த விமர்சனத்திற்கு அந்த மேஜிஸ்டிரேட்டுகளால் பதில் சொல்லவே முடியாது. நடத்தை விதிகள் அதற்கு அனுமதிக்காது. தனிப்பட்ட முறையில் தலைமை நீதிபதியிடம் 3/6
Read 8 tweets
Jan 26, 2023
இந்தியாவுக்கு விடுதலை கிடைச்ச ஆகஸ்ட் 15ஐ எளிமையாக கோட்டையில் கொடியேற்றி, பிரதமர் உரையோட முடிச்சிடறோம். ஆனால், குடியரசு தினத்தை அயல்நாட்டு தலைவரை எல்லாம் அழைச்சு விமரிசையாக கொண்டாடுகிறோம். இது ஏன்னு சின்ன வயதில் யோசித்திருக்கிறேன். எதனால் குடியரசு நாளுக்கு அவ்வளவு முக்கியத்துவம்?
நம் கூடவே சுதந்திரம் பெற்ற பாகிஸ்தான், இலங்கையில் ராணுவ ஆட்சி, அதிபர் என்ற பெயரில் தனி மனித ஆட்சி எல்லாம் பார்த்து விட்டோம். ஆனால், 75 ஆண்டுகளாக மக்களாட்சி என்ற பாதையிலிருந்து விலகாமல் நாம் பயணம் செய்து கொண்டிருப்பதற்கு காரணம் நம்முடைய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கிய
குடியரசு என்ற அமைப்பு தான். தமிழ்நாடு என்ற பெயரை மாற்றணும்னு சொன்ன ஆளுநரை 'வாழ்க தமிழ்நாடு' என்று சொல்ல வைத்தது நம்முடைய அரசியலமைப்பு தான். இங்கே எந்த தனி மனிதனும் ஆட்சி அதிகாரத்தை தன் இஷ்டப்படி துஷ்பிரயோகம் செய்து விட முடியாது. நாட்டு நடப்பு தெரியாதான்னு நீங்க கேட்கலாம்
Read 10 tweets
Nov 20, 2022
செல்வி. ப்ரியா இறந்த வழக்கில் டாக்டர்களை கைது செய்வது அவசியமா?
நடந்த மரணத்திற்கு அனைவரும் வருந்துகிறோம். இதற்கு மருத்துவர்கள் தான் காரணம் என்றால் அவர்கள் தண்டிக்கப் பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், மருத்துவர்களைக்
#health #law #thread
கைது செய்வது சட்டப்படி சரி தானா? உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தில் சில வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது:
1. மருத்துவர் என்பவர் கொலை செய்யும் நோக்கில் மருத்துவம் பார்ப்பதில்லை. உயிரைக் காப்பாற்றும் வேலையில் அறிந்தோ அறியாமலோ தவறு நிகழலாம்.
2. மருத்துவர் அந்த சிகிச்சையை செய்ய
தகுதி படைத்தவர் தானா என பார்க்க வேண்டும்.
3. அந்த சிகிச்சையை ஏற்றுக்கொள்ளப்பட்ட தரத்திற்கு வழங்கினாரா?
4. அப்படி வழங்கவில்லை என்றால் தவறு சிறியதா, பெரியதா? Mistake or a blunder?
5. நிகழ்வை ஒரு சிறப்பு அரசு மருத்துவர் ஆய்வு செய்து நடந்தது மிகப் பெரிய தவறு என்று அறிக்கை தந்தால்
Read 7 tweets
May 24, 2022
பட்டினப் பிரவேசம் நிகழ்வில் வலதுசாரிகளுக்கு கிடைத்திருப்பது தற்காலிக வெற்றி மட்டுமே. மனிதனை மனிதனே சுமந்து செல்வது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று நீதிமன்றம் சொல்லவே வாய்ப்புகள் அதிகம் என்கிறது இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளிவந்துள்ள கட்டுரை. 1/4
மத சம்பந்தப்பட்ட விவகாரங்களில் "அவசியமற்ற பழக்கங்கள்" (non essential practices) என பலவற்றை நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது. உ.தா. சபரிமலையில் பெண்கள் அனுமதி, ஹிஜாப் விவகாரம். 50 ஆண்டுகளுக்கு முன்பே தருமபுரம் ஆதீனம் கைவிட்ட பல்லக்கில் புதிய ஆதீனகர்த்தர் ஏறியதை எந்த விதத்திலும் 2/4
நியாயப்படுத்த முடியாது. ஏற்கனவே தமிழ்நாடு திருக்கோயில் பணியாளர்கள் சங்கம் யாரையும் பல்லக்கில் சுமக்க முடியாது எனத் தீர்மானம் இயற்றி உள்ளது. சம்பிரதாயம் என்னும் பெயரில் மடத்தின் ஊழியர்களை பல்லக்கு தூக்க யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அது மனித உரிமைக்கு எதிரானது 3/4
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(