#கோகுலாஷ்டமி
#பட்டத்ரியும்_குருவாயூரப்பனும்

"தாத்தா.. தாத்தா.. எழுந்துக்கோ..விடியப்போறது.."

"ஓ.. நாழியாயிடுத்தா.. செத்த கண் அசந்துட்டேன்.."

"நாராயணீயம் எழுதணுங்கற எண்ணமே மறந்துடுத்தா.. அப்புறம் எப்படி கண் அசறும்.."
"இல்லடா கிருஷ்ணா.. ராத்திரி ரொம்ப நேரம் விளக்கு வெளிச்சத்தில் எழுதினேனோன்னோ.. அதான்.."

"சரி சரி.. போய் குளிச்சுட்டு வா.."

"தோ.. இப்பவே.."

"தாத்தா.. நீ இப்ப பூஜை பண்ணனுமா.. எனக்கு பசிக்கறது.."

"அனுஷ்டானம் பண்ண வேண்டாமா.. கொஞ்சம் பொறுமையா இரு.. நைவேத்தியம் பண்றேன்.."
"நான்தான் உன்னோடயே இருக்கேனே.. அப்புறம் எதுக்கு பூஜை.."

"கொழந்தே... அதுக்கெல்லாம் அப்பாற்பட்டவனடா நீ.. பூஜை என்பது உனக்கு அல்ல.. எங்களுக்கு.. எங்கள் மனம் என்னும் கோவிலை தூய்மைப்படுத்தி அதில் பரிசுத்தமான உன்னை குடியமர்த்த.."
"நன்னா பேசற.. ஆனா நான் எவ்ளோ நேரம் பசி பொறுக்கறதாம்.. முன்னாடி வெண்ணெய வச்சுட்டு சாப்டாதங்கறே.."

"நீ கொடுத்ததுதானே.. அதுவும் உன்னோடதுதானே.."

"ஆங்.. சரி.. இப்போ நீ எழுத ஆரம்பி.. நான் பார்க்கணும்.."

"இரு.. அப்படி உட்காரு.. நான் எழுத எழுத காட்டறேன்.."
"அதெல்லாம் முடியாது.. நான் உன் பக்கத்துல நின்னுண்டு எட்டிதான் பார்ப்பேன்.."

"ச்சமத்தோன்னோ... சொன்னா கேளுடா கண்ணா.."

"சரி.. நான் ஊஞ்சல்ல உக்காண்டுக்கறேன்.."

"ஜாக்கரதை.. வேகமா ஆடினா கீழே விழுந்துடப்போறடா குட்டா.."

"சரி.. நான் தூண்ல ஏறட்டா.."
"வேணான்டா தங்கம்.. வழுக்கி விட்டுடும்.."

"சரி தாத்தா.. இந்த குடைய எடுத்துக்கட்டுமா.. "

"ஓ.. எடுத்துக்கோயேன்.. ஒரு ஓரமா உக்காந்து விளையாடு.. நான் அதுக்குள்ள இன்னிக்கு எழுத வேண்டியத எழுதறேன்.."

"ம்ம்ம்.."

"கிருஷ்ணா... விளக்குகிட்ட விளையாடாதடா செல்லம்.. கை சுட்டுடும்.."
"இல்லை தாத்தா.. திரியை நிமிண்டினேன்.. உனக்கு வெளிச்சம் வேணுமே.."

"தெய்வமே.. நீ குழந்தையா.. என் அப்பனா.."

"நீ எப்படி பார்க்கறியோ.. அப்படி.."

"ஆஹா.. உண்மைதான்டா கண்ணா.. உன்னை நான் வாரி அணைக்கும்போது என் குழந்தையாகிறாய்.. என்னை நீ அரவணைக்கும்போது என் தந்தை ஆகிறாய்.."
"சரி.. சரி.. எழுது.. நான் எட்டிப்பார்த்து ரசிக்கறேன்.. "

"நீ இப்படி அழிச்சாட்டியம் பண்ணின்டு இருந்தா நான் எப்படிடா தங்கம் எழுதுவேன்.."

"நான் அழிச்சாட்டியம் பண்றதே.. அந்த அழிச்சாட்டியத்தை நீ அழகா எழுதணுங்கறதுக்காகத்தானே தாத்தா.."
நாராயண பட்டத்ரிக்கு விளங்கியது.. பிறவிப்பயனை அறிந்தார்..

"நீ ஆடுடா கண்ணா.. உன் ஆட்டமெல்லாம் என் எழுத்தில் வரும்.. உன் அருளால்..|

#ஸர்வம்_ஶ்ரீ_க்ருஷ்ணார்ப்பணமஸ்து

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with #பாரதி_வாஞ்சி ( Kaalabala )🇮🇳

#பாரதி_வாஞ்சி ( Kaalabala )🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Kaalabala1

Aug 20
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி

ஒரு கிராமத்தில் கொல்லன் ஒருவன் வாழ்ந்து வந்தான்,

"இரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான்"......!!

அவனுக்கு..,

" அன்பும் அழகும் நிறைந்த மனைவி இருந்தாள்"....!!

அவன் வாழ்க்கை...

உழைப்பும்,

காதலும்,

ஊடலுமாக Image
மகிழ்ச்சி

வெள்ளமாய்

ஒடிக் கொண்டிருந்தது.......!!

கொல்லப் பட்டறை தொழில்...,

" ஒரு சமயம் நலிவுற்றது"......!!

"அன்றாட உணவுக்கே வறுமை ".....,

என்ற நிலை வந்துவிட்டது.....!!

"கொல்லன் சோகமே உருவாகி விட்டான்".......!!

அதைக் கண்ட மனைவி ஆறுதலாய் பேசினாள்,
"எதுக்கு கலங்குறீங்க"......!!

"இந்த தொழில் இல்லைன்னா என்ன"......,

"பக்கத்து காட்டுல போய் விறகு வெட்டி".....,

"அதை அக்கம் பக்கத்து கிராமத்துல".....,

" வித்தா நாலு காசு கிடைக்குமே".......!!

"அதை வெச்சு ராஜா வாட்டம் வாழலாமே" என்றாள்,,,..!

"
Read 13 tweets
Aug 12
துறவிகளை அலட்சியம் செய்யக்கூடாது

உடல் முழுதும் புழுதி, சேறு; இடுப்பில் ஒரு கோவணம் மற்றும் அரைகுறையான மேலாடை என்னும் கோலத்தோடு,

ஊர் முழுதும் சுற்றிக் கொண்டிருந்தார் துறவி ஒருவர். சாப்பாடு கிடையாது; ஒருவேளை பசித்தால்,
ஏதாவது ஒரு வீட்டின் முன் நின்று, இருமுறை கைகளைத் தட்டுவார். ஓசை கேட்டு, யாராவது வந்து உணவு இட்டால் சரி...

இல்லையேல், பட்டினி தான். நல்லவர்கள் என்றும் எங்கும் இருப்பர் அல்லவா! அதன்படி, அந்த ஊரில் இருந்த பெண்மணி ஒருவர்,
இந்த உத்தம துறவியின் நிலை உணர்ந்து இரங்கி, தினந்தோறும் அத்துறவி வரும்போது,

அவரை வணங்கி உபசரித்து, உணவு அளிப்பார். துறவியும் அன்போடு இடப்படும் அந்த அன்னத்தை ஒரு கவளம் வாங்கி கொள்வார்.

இந்த உத்தமருக்கு உணவளிக்காமல்,
Read 13 tweets
Aug 10
பாரிமுனையிலிருந்து ராயப்பேட்டை செல்வதற்கு அந்த ஆட்டோக்காரர் ₹150 கேட்டார்.

நான் ₹100ல் இருந்தேன். பிறகு ₹120க்கு உடன்பட்டு, கிளம்பி மேம்பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்த போது

அவர் சட்டென்று வேகத்தைக் குறைத்து நடைபாதையோரத்தில்
ஆட்டோவை நிறுத்தியபோதுதான் அங்கே வெயில் சூடு உறைக்காமல் ஒருவன் விழுந்து கிடப்பதை கவனித்தேன்.

குடித்துவிட்டு விழுந்திருக்கிறான் என்று நினைத்தேன்.

இல்லையென்று பிறகு தெரிந்தது.
ஆட்டோ டிரைவர் என்னிடம் "உங்க பின்னால மீல்ஸ் பாக்கெட் இருக்கும்,
அதை எடுங்க சார்" என்றார்.

சீட்டுக்குப் பின்னால் இருந்த அந்த சாப்பாட்டு பொட்டலத்தை வாங்கிக்கொண்டு அவனிடம் சென்று தட்டி எழுப்பினார்.

அவன் எழவில்லை. மீண்டும் ஆட்டோவுக்கு வந்து அவருடைய இருக்கைக்கு பின்னாலிருந்து
Read 8 tweets
Aug 10
_*நீ அழுதபோது..*_

_*உன்னை*_ _*தரதரவென்று*_
_*இழுத்துப் போய்*_
_*பள்ளிக் கூடத்தில் சேர்த்தேன்...!*_

படித்து பெரிய ஆளாக
வர வேண்டும் என்ற எண்ணத்தில்...!

இன்று...!

நான் அழுகிறேன் என்னை இழுத்துப்போய்
முதியோர் இல்லத்தில் சேர்க்கிறாயே
அங்கே நான் எதை படிக்க வேண்டுமென்று....?
பத்துமாதம் உன்னை
வயிற்றில் சுமந்தபோது
பாரமாக
நான் நினைக்கவில்லை...!

உன் பத்தினி வந்ததும்
உன் வீட்டில் நான் ஒரு ஓரமாக
இருப்பதையே....
நீ பாரமாக நினைக்கிறாயே...!

நீ ஓடி ஓடி விளையாடிய போது
நீ செல்லும் இடமெல்லாம்
உன் பின்னாலே வந்து
உனக்கு சோறு ஊட்டி
உன் வயிறு நிறைந்ததில் என் வயிறும் மனமும் நிறைந்தது...!

எனக்கு வயிறாற
உணவு வேண்டாம்..
ஒரு வேளையானலும்
உன் வீட்டு சோறு போதும்...!

உன் வருங்காலத்திற்காக உன்னை பெற்று வளர்த்து
படிக்க வைத்து,
கல்யாணம் முடித்து
நீ வாழ்வதற்காக உன்னை ஆளாக்கினேன்....
Read 5 tweets
Aug 10
ராம நாமத்தால் வந்த மதிப்பு...!

தஞ்சாவூர் அருகே உள்ள கிராமத்தில்‌ லக்ஷ்மி என்பவர் வசித்துவந்தார். மிக இளம் வயதிலேயே திருமணம் நடந்து ஐந்து வயதிலேயே கணவரையும் இழந்துவிட்டார்.
விவரம் தெரிவதற்குள் வாழ்க்கையை இழந்துவிட்ட அந்தப் பெண்ணை எல்லோரும் துக்கிரி அத்ருஷ்டம்‌கெட்டவள் என்று அழைக்கத் துவங்கினர்.

வீட்டை விட்டு எதற்காகவும் வெளியே வர இயலாது. பெற்றோர் இருந்தவரை அவளைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக்கொண்டே காப்பாற்றி வந்தனர்.
நாளடைவில் பெற்றோரும் காலகதியை அடைந்துவிட்டனர்.

நிராதரவாக இருக்கும் உறவினருக்கு உணவிடும் பழக்கம் இருந்ததால், தூரத்து உறவினர், லக்ஷ்மிக்கு வேண்டியதை அவள் வீட்டிற்கே அனுப்பிவிடுவர்.

யாரும் இல்லை. பேசவும் ஆளில்லை. வெளியிலும் போக முடியாது.
Read 14 tweets
Aug 10
🍀⭕ இந்தியர்கள் தேவையில்லாமல் எங்கள் வழியில் குறுக்கிடுகிறார்கள் -- புலம்பும் சீனா.

இது எப்படி இருக்கிறது....⁉️

சீனா அமெரிக்க இடையே ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக தைவான் நீரிணை பகுதியில் தனது போர் ஒத்திகையை மேற்கொண்டு வரும் சீனா,
அதன் ஓர் பகுதியாக இலங்கையில் தனது கட்டுப்பாட்டுக்குள் வரும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தனது உளவு கப்பல் ஒன்றை நிறுத்தி வைக்க ஏற்பாடுகளை மிகத் தீவிரமாக மேற்கொண்டது. ஏற்கனவே தைவான் விஷயம் தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வந்த இந்தியா
இந்த விஷயத்திலும் பேசாமல் தான் இருந்தது. ஆனால் திரை மறைவில் காரியங்கள் வேக வேகமாக நடந்தது.

இலங்கை அரசாங்கத்தை விட்டு சீன கப்பலுக்கு அனுமதி இல்லை என்று சொல்ல வைத்தது. எங்கோ தென் சீனக் பசிபிக் பெருங்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த
Read 25 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(