#மனுதர்மம்_சொல்லும்_நீதி

மனுதர்மத்தில் உள்ள அத்தியாயம் 9 - இல் சொல்லப்பட்டுள்ள முக்கியமான சுலோகங்களை பார்க்கலாம்.

சுலோகம் 14 :- மாதர் ஆடவர் இடத்தில் அழகையும் பருவத்தையும் விரும்பாமலே ஆண் தன்மையை மாத்திரம் முக்கியமாக வேண்டி அவர்களை புணருகிறார்கள்.

(1) Image
சுலோகம் 15 :- மாதர்கள் கற்பு நிலையின்மையும், நிலையா மனமும் நண்பின்மையும் இயற்கையாகவுடைய வராதலால் கணவனாற் காக்கப்பட்டிருப்பினும் அவர்களை விரோதிக்கின்றார்கள்.

சுலோகம் 17 - படுக்கை ஆசனம் அலங்காரம் காமம் கோபம் பொய் துரோக சிந்தனை இவற்றினை மாதர் பொருட்டே மதுவானவர் கற்பித்தார்.

(2)
சுலோகம் 18 - மாதர்களுக்கு ஜாதகர்ம முதலியவை மந்திரத்தோடு கிடையாது மனச்சுத்தியும் கிடையாது. பாவத்தைப் போக்குகிற மந்திரோபதேசமுமில்லை ஆகையால் அபரிசுத்தாளாயிருக்கிறாள்.

சுலோகம் 19 - மாதர்கள் பெரும்பாலும் விபச்சார தோஷ முள்ளவர்களேன்று

(3)
அநேக சுருதிகளிலுஞ் சாஸ்திரங் களிலுஞ் சொல்லப்பட்டிருக்கின்றன. அதற்கு திருஷ்டாத்திரமாக அந்த விபச்சாரத்துக்கு சுருதியில் சொல்லிய பிராயச் சித்தத்தை கேளுங்கள்.

சுலோகம் 30 :- கணவன் சொற்படி நடவாதவள் உலகத் தாரால் நீந்திக்கப்பட்டு நரியாய் பிறந்து பாவப் பிணியால் வருந்துவாள்.

(4)
சுலோகம் 46 :- கணவன் மனையாளைத் தள்ளிவிட்டாலும் விற்றாலும் அந்த மனையாள் தன்மை அவளை விட்டு நீங்காது இப்படி இவர்களுக்கு பிரம்மன் சிருஷ்டி காலத்திலேயே ஏற்ப்படுத்தியிருக்கிற சாசுவதமான தருமத்தை நாமறிந்திருக்கிறோம் ஆதலாலிவ்விதமான பிறன்மனையாளிடத்தில் பிறந்த பிள்ளையும் உபயோகப்பட மாட்டான்
5
சுலோகம் 52 :- ஒருவனுக்கு நிலமில்லாமல் வித்துள்ளவனாயிருந்தால் மற்றுமொருவனையடைந்து உன்னிலத்தில் நான் பயிரிடுகிறேன். அப்பயிர் நமமிருவருக்கும் பொதுவாயிருக்கட்டுமென்று ஏற்பாடு செய்து கொண்டு பயிரிடுகிறார்ப் போல் ஒருவன் மனையாளிடத்தில்

(6)
மனையாளில்லாத மற்றொருவன் பிள்ளையையும் உண்டு பண்ணலாம். அந்த வேற்பாடு இல்லாவிட்டால் உடையவனைச் சாருமென்பது பிரத்திய கூலமாகவே யிருக்கிறது. ஏனெனில் பிரஜத்தை விட நிலமுயர்ந்ததல்லவா?

சுலோகம் 53 :- நில விஷயத்தைப் போல் மாதர் விஷயத்திலும், கணவனும் மற்றொருவனும் பயிரை குறித்தாற்போல்

(7)
புத்திரவுற்பத்தியைக் குறிக்கும் ஏற்பாடு செய்து கொண்டால் அதில் விளைகிற தானியம்போல் பிறந்த பிள்ளையும் இருவருக்கும் சொந்தமாகவிருப்பதை உலகத்திற் கண்டிருக்கிறோம்.

சுலோகம் 59 :- பிள்ளையில்லாமல் அந்தக்குலம் நசிக்கிறதாகவிருந்தால் அப்போதந்த ஸ்த்ரி தன் கணவன் மாமனார்

(8)
முதலானவர்களின் உத்தரவு பெற்றுக் கொண்டு தன் மைத்துனன் அல்லது தன் கணவனுக்கு ஏழு தலைமுறைக்குட்பட்ட பங்காளி இவர்களோடு மேற்சொல் லுகிற படி புணர்ந்து குளத்திற்குத் தக்கதான ஒரு பிள்ளையை பெற்றுக் கொள்ளலாம்.

சுலோகம் 60:- விதவையிடத்தில் பெரியோர்களின் அனுமதி பெற்றுக் கொண்டு

(9)
புணரப்போகிறவன் தன் தேகமெங்கும் நெய்யைப் பூசிக்கொண்டு இரவில் இருட்டான இடத்தில் அவளை புணர்ந்து ஒரே பிள்ளையை உண்டுபண்ண வேண்டியது. இரண்டாம் பிள்ளையை ஒருபோதும் உண்டு பண்ணக்கூடாது.

சுலோகம் 69:- ஒரு பெண்ணை ஒருவனுக்குக் கொடுக்கிறதா உண்மையாக வாக்குத்தானம் செய்த பின்

(10)
அந்த ஒருவன் இறந்துபோனால் அவன் தம்பி அல்லது அண்ணன் விவாகம் செய்து மேற்சொல்லும் விதிப்படி இருக்க வேண்டியது.

சுலோகம் 70 :- அவனந்தப் பெண்ணை விதிப்படி விவாகஞ் செய்து வெள்ளை வஸ்திரமுடையவளாயும் திரிகரண சுத்தியுடையவளாயு மிருக்கச் செய்து,

(11)
ருதுஸ்நான மானவுடன் ஒரு நாள் புணர்ந்து மறுபடி ருதுகாலம் வரையிற் பார்த்து கருப்பமுண்டாகாவிடில் கருப்பமுண்டாகிறவரையில் அந்தந்த ருதுஸ்நானமானவுடன் ஒவ்வோர் நாள் புணர வேண்டியது.

சுலோகம் 77:- கணவன் மனைவி பகைத்தால் அவன் ஒரு வருஷம் வரையிலும் பார்த்து அவள் வணங்காவிடில்

(12)
அவளுக்குத் தான் கொடுத்த ஆடையாபரணம் முதலியவற்றை வாங்கிக் கொண்டு அவளோடு பேசுதலும், புணர்தலும் ஒழிக்க ஜீவனத்துக்காக கொடுத்தது கவரத் தக்கதன்று.

சுலோகம் 78 :- கணவன் சூதாடுகிறவனாயிருந்தாலும், குடியவனாகவிருந்தாலும், நோயாளியாக இருந்தாலும்,

(13)
அவனுக்கு மனைவி கர்வத்தால் பணிவிடை செய்யா விட்டால் அவளுக்கு அலங்காரம் வஸ்த்திரம் படுக்கை இவைகளை கொடாமல் மூன்று மாதம் நீக்கி வைக்க வேண்டியது.

சுலோகம் 81:- மலடியான மனைவியை எட்டு வருஷத்திற்கு மேலும், சாப்பிள்ளை பெறுபவளை பத்து வருஷத்திற்கு மேலும்

(14)
பெண்ணையே பெறுபவளை பதினொரு வருஷத்திற்கு மேலும், தீங்கு சொல்பவளை அப்பொழுதேயும் நீக்கி வேறு விவாகம் செய்து கொள்க. இந்த மனைவியர்களுக்கு மனமகிழ்ச்சிப் பொருள் கொடுக்க வேண்டியதில்லை.

சுலோகம் 88:- குலம், நல்லொழுக்கம் இவைகளாலுயர்ந்தவனாயும், பெண்ணுக்குத் தக்க ரூபமுள்ளவனாயும்

(15)
தன் ஜாதிக்குத் தக்க ஜாதி உள்ளவனாயுமிருக்கிறவனுக்கு தனது பெண் எட்டு வயதுக்குட்பட்டிருந்தாலும், விதிப்படி விவாகம் செய்து கொடுத்து விடலாம்.

சுலோகம் 94:- முப்பது வயதுள்ள வரன் அழகான பன்னிரெண்டு வயதுள்ள பெண்ணையும், இருபத்திநாலு வயதுள்ள வரன் எட்டு வயது பெண்ணையும் விவாகம் செய்து

(16)
கொள்ளலாம், இதற்கு முன் விவாகம் செய்து கொள்ள அவசரப்பட்டால் வேதமோதல் முதலிய தர்ம காரியம் கெடும். அதனால் பின்பு துக்கப்படுவான்.

~ 1919 - இல் வெளியிடப்பட்ட திருவைந்திபுரம், கோமாண்டூர், இளைய வில்லி இராமாநுஜாசாரியாரால் மொழிபெயர்க்கப்பட்ட "அசல் மனுதரும சாஸ்திரம்" நூலிலிருந்து.

Con...

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Dr. Nagajothi 👩🏽‍⚕️

Dr. Nagajothi 👩🏽‍⚕️ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @DrNagajothi11

Aug 29
சிவ பக்தனான அரக்கன் இரணியனின் மகன் பிரகலாதன் தீவிரமான விஷ்ணு பக்தன், இதை எதிர்த்த இரணியன் தன் மகனை கொல்லும் அளவிற்கு சென்றான், தன் பக்தனுக்கு ஆபத்து வந்ததால் அரக்கன் இரணியனைக் கொன்று பிரகலாதனை காப்பாற்ற விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்தார்.

(1) Image
ஏன் விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை கொல்ல வேண்டும், காரணம் இரணியன் ஒரு ஸ்பெஷல் வரம் வாங்கியிருந்தான், கிட்டத்தட்ட அது சாகா வரம் எப்படி என்றால், பகலிலோ இரவிலோ, வீட்டிற்கு உள்ளேயோ வெளியேயோ, போர் ஆயுதங்களோ, மனிதனாலோ மிருகத்தாலோ தான் கொல்லப்படக்கூடாது என்பதுதான்.

(2) Image
ஆனால் இந்த வரத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி விஷ்ணு புது உத்தியை கண்டுபிடித்து நரசிம்மாவதாரம் எடுத்தார், நரசிம்ம அவதாரம் மனிதனும் அல்ல விலங்கும் அல்ல ஒரு தூணை உடைத்த போது அதற்குள் இருந்து வந்த மனித உடலும் சிங்க தலையும் பொருந்திய ஒருவர்,

(3) Image
Read 17 tweets
Aug 29
எனக்கும் சின்ன சந்தேகம் இருந்துச்சு நீங்க ஆதாரம்னு வீடியோ எல்லாம் போடுறீங்க அண்ணன் படிக்க சொல்லியிருக்காரோன்னு,அந்த வீடியோவ முழுசா பார்த்துட்டு தான் நீங்க பகிர்ந்தீங்களான்னு தெரியல, அதுல மெக்காலே கொண்டு வந்த கல்வி முறை சரியில்லைன்னு சொன்னது சரி, அதை மெக்காலேவே சொல்லியிருக்கர்
(1)
இந்தியர்களை அடிமைப்படுத்தனும்னா அவர்களின் வேளாண்மையையும் கல்வியையும் ஒழிக்கனும்னு மெக்காலே சொன்னதாக அண்ணன் சொல்றாரு, மெக்காலே இந்தியாவிற்கு ஒரு கல்வி முறையை கொண்டு வருவதற்கு முன்னாடி இந்தியால எந்த மாதிரியான கல்வி அமைப்பு இருந்துச்சு!?

(2)
வெறும் வேத குருகுல கல்வி மட்டும், அதுவும் யாருக்கு இருந்துச்சு தங்களை உயர் சாதி என்று சொல்லிக் கொண்ட அவளுக்கு மட்டும். மெக்காலே பல குறைபாடுகள் கொண்ட கல்விமுறையை இங்கு கொண்டு வந்ததாலும் அது அடிப்படையான கல்வி அறிவு கிடைக்க உதவியது.

(3)
Read 8 tweets
Aug 18
#இலவசங்கள்

காலையில் எழுந்து அடுப்பு மூட்டி புகையில் வாடும் பெண்களுக்கு விடிவு வந்தது, அரசாங்கம் கொடுத்த இலவச கேஸ் அடுப்பால்,

கை வலிக்க அம்மியிலும் உரலிலும் ஆட்டி சமையல் செய்வதிலிருந்து விடுதலை அளித்தது அரசாங்கம் இலவசமாக கொடுத்த மிக்ஸி கிரண்டர்,

(1)
கொஞ்சம் தொலைவில் உள்ள பள்ளிக்குச் செல்ல பஸ்ஸுக்கு பணம் இல்லாமல் பலரின் படிப்பு நின்று போகும் நிலையில் அதை தடுத்தது, அரசாங்கம் அளித்த இலவச பஸ் பாஸ்,

பள்ளிக்குச் சென்றாலும் சரியான நோட்டு புத்தகமும் உடையும் காலனியும் இல்லாமல் மற்றவர் முன் கூனி குறுகி நின்ற குழந்தைகளின்

(2)
துயரைப் போக்கியது அரசாங்கம் இலவசமாக கொடுத்த சீருடை நோட்டு புத்தகம், மற்றும் செருப்பு,

பண்ணையார்களின் வீட்டில் ஒரு படி அரிசிக்காக கையேந்தாமல் சாதாரண மக்களை காப்பாற்றியது அரசாங்கம் கொடுத்த இலவச அரிசி

(3)
Read 5 tweets
Aug 18
#முச்சந்துமன்றம்

நேரு அவர்கள் இந்திரா அவர்களுக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு,

"தந்தை மகளுக்கு எழுதிய கடிதங்கள் - நேரு

புத்தக வாசிப்பு இன்று மாலை 6.00 மணிக்கு இணையுங்கள் தோழர்களே

@Greatgo1
@esemarr3
@The_69_Percent

Set a reminder for upcoming Space twitter.com/i/spaces/1mnGe…
Read 6 tweets
Aug 17
#Gender_is_not_A_binary_Thing

#LGBTQIA

மனிதர்களின் பால் அடையாளங்களை பொதுவாக அனைவரும் ஆண் பெண் என மட்டுமே வகைப்படுத்துகிறார்கள், ஆனால் அது உண்மையல்ல.

பால் என்பது ஆண் பெண் என இரண்டு வகை மட்டுமல்ல, அது ஒரு ஸ்பெக்ட்ரம், எப்படியெனில்,

(1)
ஆணுக்கான இனப்பெருக்க உறுப்புடன் பிறந்து ஆணாகவே உணர்பவர்கள் ஆண், அதே போல பெண்ணின் இனப்பெருக்க உறுப்புடன் பிறந்து தன்னை பெண்ணாகவே உணர்பவர் பெண்,

ஆனால் இது மட்டுமே பால் என சமூகம் அடையாளப்படுத்துவது தவறு. காரணம், பால் மாற்றம் உள்ளவர்களும் நம்முடன் வாழ்கிறார்கள்,

(2)
அதுவும் இயற்கையான ஒன்றே ஆகும். இதற்கான அறிவியல் காரணங்கள் பல உள்ளது ஆனாலும் இது தான் காரணம் என எதையும் குறிப்பிட்டு சொல்ல இயலாது.

ஆணுக்கான இனப்பெருக்க உறுப்புடன் பிறந்து பெண்ணாக உணர்பவர்கள் "திருநங்கை",

(3)
Read 8 tweets
Aug 14
#thread

புளித்த மாவிற்கும் கொலஸ்ட்ராலுக்கும் என்ன சம்பந்தம்!?

புளிச்ச மாவும் கொலஸ்ட்ராலும் உடம்புக்கு கெட்டதா!?

கொலஸ்டிரால் என்றாலே வில்லன் மாதிரியும், புளித்த பொருள் என்றால் அது கெட்டுப்போனது போலவும் பெரும்பான்மையானோர் நினைப்பது சரியா!?

(1)
கொலஸ்டிரால் எப்பவுமே கெட்ட விஷயம், அது தான் இதய நோய்களுக்கு காரணம், அது இருந்தா நம்ம உடல் கெட்டு போயிரும்னு எப்பவும் கொலஸ்டிரால் மேல எதிர்மறையான கருத்தை மட்டுமே நாம கேள்விப்பட்டிருக்கோம்.

உண்மையிலேயே கொலஸ்டிரால் கேட்டதை மட்டும் தான் செய்யுதான்னு கேட்டா இல்ல,

(2)
கொலஸ்ட்ராலை பற்றி முழுமையாக விரிவாக அறிந்துகொள்ளும் முன், அது நம் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் இன்றியமையாதது என்பதை முதலில் நாம் உணர வேண்டும்.

இரத்தத்தில் தான் கொலஸ்ட்ராலின் அளவை அளக்கிறோம், ஆனாலும் அது நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் காணப்படுகிறது.

(3)
Read 23 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(