#Thread

#விநாயகர்_சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகரின் பிறந்தநாள் என்று சொல்கிறார்கள், சரி அது அவர்களின் நம்பிக்கை சார்ந்தது என்பதற்காக அதை ஒப்புக்கொண்டாலும், இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் விதம் எப்படி இருக்கிறது!?

(1)
விநாயகரின் ஒரு சிலை பொதுவெளியில் வைக்கப்பட்டு சில நாட்கள் பூஜை செய்த பிறகு அதை கடலிலோ ஆற்றிலோ கொண்டு போய் கரைத்து விடுகிறார்கள். ஆனால் புராணங்களின் அடிப்படையில் இந்த மாதிரியான வழிபாடு இல்லவே இல்லை.

(2)
சிவமகா புராணத்தில் விநாயகர் சதுர்த்தி எப்படி செய்ய வேண்டும் என குறிப்புகள் உள்ளது.
மார்கழி மாதம் தேய்பிறையில் வரும் நான்காவது நாள் சதுர்த்தி அன்று இதை துவங்க வேண்டும், உலோகம் பவளம் அல்லது மண் ஆகியவற்றால் செய்யப்பட்ட விநாயகரின் சிலையை வைத்து,

(3)
நெய் விளக்கு அருகம்புல் ஆகியவற்றை கொண்டு பூஜை செய்ய வேண்டும்.

இதில் அந்தணர்களுக்கும் பூஜை செய்து அவர்களுக்கு சுவையான உணவை அளிக்க வேண்டும், மற்றவர்கள் உப்பில்லாத உணவை உண்ண வேண்டும். மிகவும் முக்கியமானது ஒரு ஆண்டில் இந்த சதுர்த்தி வழிபாடை துவங்கும் அன்று முதல்

(4)
அடுத்த ஆண்டு அந்த சதுர்த்தி நாள் வரும் வரையில் இந்த வழிபாடை செய்ய வேண்டும். வழிபாடை முடிக்கும் போதும் அந்தணர்களுக்கு உணவளிக்க வேண்டும்.

இன்றைய விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் விதமும் சிவ மகா புராணத்தில் கொடுக்கப்பட்டுள்ள விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் விதமும் ஒன்றா!? இல்லை.

(5)
பிறகு எப்படி இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் விதம் உருவானது!?

அதற்கு ஒரே காரணம் லோகமான்ய திலகர் என்ற இந்துமத அடிப்படைவாதம் பேசிய சுதந்திர போராட்ட வீரர் தான்.

(6)
இவர் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் அவர்களுக்கு எதிராக இந்துக்களை அணிதிரட்ட மஹாராஷ்டிராவில் இப்போது நடைமுறையில் உள்ளது போன்ற விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை ஒருங்கிணைக்கிறார். அன்றிலிருந்து இன்று வரை இந்து மத அடிப்படைவாதிகளால் இந்து மக்களை ஒன்று திரட்டும் ஒரு ஆயுதமாக உள்ளது.

(7)
இங்கு நமக்கு ஒரு கேள்வி எழலாம், திலகரால் வேறு ஏதாவது தெய்வங்களுக்கு விழா எடுத்து இந்துக்களை ஒன்றிணைத்திருக்க முடியும் ஆனாலும், ஏன் விநாயகரை கொண்டாட வேண்டும் என தீர்மானித்தார்!?

அதற்கு காரணம் இந்து மதத்தில் இருக்கும் அடிப்படையான கூறு,

(8)
அது என்ன இந்து மதத்தின் அடிப்படை!? இதற்கான பதிலை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் "Riddles in Hinduism" என்ற புத்தகத்திலிருந்து காணலாம்.

இந்து மதத்தின் புதிர்கள் என்ற இந்த புத்தகத்தில் அம்பேத்கர் கூறுகிறார், //ஒருவர் தன்னை பார்சி என்று சொல்லுவார் எனில்,

(9)
அவர் ஜோரோஸ்ட்ரரை பின்பற்றுபவர், ஒருவர் தன்னை கிறிஸ்டியன் என்று சொல்லி கொள்வாரானால் அவர் கிறிஸ்துவை பின்பற்றுபவர், ஒருவர் தன்னை இஸ்லாமியர் என்று சொல்லிக் கொள்வாரானால் அவர் அல்லாஹ்வை பின்பற்றுபவர்.

அதுவே ஒரு இந்து தன்னை இந்து என்று சொல்லிக் கொள்பவராக இருந்தாலும்,

(10)
இந்து சமூகம் வணங்கும் கடவுளை அவர் வணங்குவதால் தன்னை அவர் இந்து என்று சொன்னால்,
அவரது பதில் உண்மையாக இருக்க முடியாது. ஏனெனில் எல்லா இந்துக்களும் ஒரு கடவுளை வணங்குவதில்லை. சில இந்துக்கள்
ஏகத்துவவாதிகள், சிலர் பலதெய்வவாதிகள் மற்றும் சிலர் இறை நம்பிக்கையாளர்கள்.

(11)
இந்து ஏகத்துவவாதிகள் கூட ஒரே கடவுளை வணங்குபவர்கள் அல்ல. சிலர் விஷ்ணுவையும், சிலர் சிவனையும் வணங்குகிறார்கள்.
சிலர் ராமர், சிலர் கிருஷ்ணர். சிலர் ஆண் கடவுள்களை வணங்குவதில்லை. அவர்கள் ஒரு பெண் தெய்வத்தை வணங்குகிறார்கள்.

(12)
அப்போதும் அவர்கள் ஒரே தெய்வங்களை வழிபடுவதில்லை. அவர்கள் வெவ்வேறு தெய்வங்களை வழிபடுகிறார்கள். சிலர் காளியை வழிபடுகிறார்கள், சிலர் பார்வதியை வணங்குகிறார்கள், சிலர் லட்சுமியை வணங்குகிறார்கள்.//

இம்மாதிரியான பல குழப்பங்கள் உள்ளதால் தான் திலகர் அனைத்து மக்களும் ஏற்றுக்கொண்ட

(13)
விநாயகரை முன்னிறுத்தி இந்துக்களை ஒருங்கிணைக்க முயற்சி செய்கிறார்.

ஆம். விநாயகர் தான் இந்து மதத்தின் எல்லாப் பிரிவினரும் ஏற்கும் கடவுள். வைணவர்களும் கூடத் விநாயகரை தும்பிக்கை ஆழ்வார் என கொண்டாடுகிறார்கள்.

(14)
சரி அடிப்படைவாதிகள் இந்த கொண்டாட்டத்தை ஒருங்கிணைத்தாலும் அதில் கலந்து கொள்வது சாமானிய மக்கள் தான் இதற்கு காரணம் என்ன?

என்றுமே சாமானிய மக்களால் ஒரு கோவிலுக்கு உள்ளே இருக்கும் கருவறையில் உள்ள விநாயகரையோ மற்ற எந்த தெய்வங்களையோ தொட்டு பூஜிக்கவும் வழிபடவும் முடியாது.

(15)
ஆனால் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் பொதுவெளியில் வைக்கப்படும் விநாயகர் சிலையை தொடவும் தனக்கு பிடித்தார் போல பூஜைகள் செய்து கொள்ளவும் அவர்களால் முடியும்.

என்றுமே கிடைக்காத அந்த உரிமை விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் கிடைப்பதால் சாமானிய மக்கள் அதை வரவேற்கிறார்கள்.

(16)
சாமானிய மக்களின் உளவியல் ரீதியான இந்த அணுகுமுறையும், இந்த கும்பல் மனப்பான்மையும் மாற வேண்டுமெனில், எப்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் கொண்டு வந்து ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே இருந்த உரிமை அனைவருக்கும் பகிரப்பட்டதோ,

(17)
அதேபோல பூஜை வழிபாடு போன்றவற்றையும் அனைவருக்கும் பொதுமை படுத்தும்போது இந்த மனநிலைக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.

கடவுள் மறுப்பு பேசுபவர்களுக்கு விநாயகர் என்பது அறிவுக்கு அறிவியலுக்கும் பொருந்தாத ஒன்று.

(18)
ஆனால், சாமானியர்களுக்கு அது கடவுளாகவே உள்ளது எனவே அதை பற்றிய புரிதலை ஏற்படுத்துவது மிகவும் முக்கியமானது.

"*புடிச்சா பிள்ளையாரு
வழிச்சா சாணி*"

எனும் இந்த பழமொழியை சாமானியர்களுக்கு சரியாக புரிய வைத்தாலே போதும் மக்கள் தெளிந்துவிடுவார்கள்.

(19)

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Dr. Nagajothi 👩🏽‍⚕️

Dr. Nagajothi 👩🏽‍⚕️ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @DrNagajothi11

Aug 29
சங்கிஸ் : மனுஸ்மிருதியில் எல்லாம் நல்ல விஷயங்கள் தான் சொல்லி இருக்கு,

நாம் : இல்ல, அதுல பெண்களை ஒடுக்கப்பட்டவரை ரொம்ப கேவலமா எழுதியிருக்கு,

சங்கிஸ் : உனக்கு எப்படி தெரியும், நீ படிச்சையா!?

நாம் :- ஆமா, மனுஸ்மிருதியைப் படிச்சேன்

(1)
சங்கிஸ் : நீ தமிழ்ல படிச்சிருப்ப இல்ல ஆங்கிலத்தில் படிச்சிருப்ப அதுல தப்பா மொழி பெயர்த்திருக்காங்க.

நாம் : சமஸ்கிருதம் படிக்க தெரியும், மனுஸ்மிருதிய படிச்சாச்சு, இதோ சமஸ்கிருதத்தில் மனுஸ்மிருதி புத்தகம், நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கோங்க.

(2)
சங்கிஸ் : இந்த சமஸ்கிருத மனுஸ்மிருதி புத்தகம் பொய், மனுஸ்மிருதி புத்தகம் யார் கிட்டயும் இல்ல.

நாம் : அது எப்படி உங்களுக்கு தெரியும்?

சங்கிஸ் : மனுஸ்மிருதின்னு ஒரு புத்தகமே இல்லை, இருந்தா தான மூல புத்தகம் இருக்கும்.

(3)
Read 4 tweets
Aug 29
சிவ பக்தனான அரக்கன் இரணியனின் மகன் பிரகலாதன் தீவிரமான விஷ்ணு பக்தன், இதை எதிர்த்த இரணியன் தன் மகனை கொல்லும் அளவிற்கு சென்றான், தன் பக்தனுக்கு ஆபத்து வந்ததால் அரக்கன் இரணியனைக் கொன்று பிரகலாதனை காப்பாற்ற விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்தார்.

(1)
ஏன் விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை கொல்ல வேண்டும், காரணம் இரணியன் ஒரு ஸ்பெஷல் வரம் வாங்கியிருந்தான், கிட்டத்தட்ட அது சாகா வரம் எப்படி என்றால், பகலிலோ இரவிலோ, வீட்டிற்கு உள்ளேயோ வெளியேயோ, போர் ஆயுதங்களோ, மனிதனாலோ மிருகத்தாலோ தான் கொல்லப்படக்கூடாது என்பதுதான்.

(2)
ஆனால் இந்த வரத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி விஷ்ணு புது உத்தியை கண்டுபிடித்து நரசிம்மாவதாரம் எடுத்தார், நரசிம்ம அவதாரம் மனிதனும் அல்ல விலங்கும் அல்ல ஒரு தூணை உடைத்த போது அதற்குள் இருந்து வந்த மனித உடலும் சிங்க தலையும் பொருந்திய ஒருவர்,

(3)
Read 17 tweets
Aug 29
எனக்கும் சின்ன சந்தேகம் இருந்துச்சு நீங்க ஆதாரம்னு வீடியோ எல்லாம் போடுறீங்க அண்ணன் படிக்க சொல்லியிருக்காரோன்னு,அந்த வீடியோவ முழுசா பார்த்துட்டு தான் நீங்க பகிர்ந்தீங்களான்னு தெரியல, அதுல மெக்காலே கொண்டு வந்த கல்வி முறை சரியில்லைன்னு சொன்னது சரி, அதை மெக்காலேவே சொல்லியிருக்கர்
(1)
இந்தியர்களை அடிமைப்படுத்தனும்னா அவர்களின் வேளாண்மையையும் கல்வியையும் ஒழிக்கனும்னு மெக்காலே சொன்னதாக அண்ணன் சொல்றாரு, மெக்காலே இந்தியாவிற்கு ஒரு கல்வி முறையை கொண்டு வருவதற்கு முன்னாடி இந்தியால எந்த மாதிரியான கல்வி அமைப்பு இருந்துச்சு!?

(2)
வெறும் வேத குருகுல கல்வி மட்டும், அதுவும் யாருக்கு இருந்துச்சு தங்களை உயர் சாதி என்று சொல்லிக் கொண்ட அவளுக்கு மட்டும். மெக்காலே பல குறைபாடுகள் கொண்ட கல்விமுறையை இங்கு கொண்டு வந்ததாலும் அது அடிப்படையான கல்வி அறிவு கிடைக்க உதவியது.

(3)
Read 8 tweets
Aug 27
#மனுதர்மம்_சொல்லும்_நீதி

மனுதர்மத்தில் உள்ள அத்தியாயம் 9 - இல் சொல்லப்பட்டுள்ள முக்கியமான சுலோகங்களை பார்க்கலாம்.

சுலோகம் 14 :- மாதர் ஆடவர் இடத்தில் அழகையும் பருவத்தையும் விரும்பாமலே ஆண் தன்மையை மாத்திரம் முக்கியமாக வேண்டி அவர்களை புணருகிறார்கள்.

(1) Image
சுலோகம் 15 :- மாதர்கள் கற்பு நிலையின்மையும், நிலையா மனமும் நண்பின்மையும் இயற்கையாகவுடைய வராதலால் கணவனாற் காக்கப்பட்டிருப்பினும் அவர்களை விரோதிக்கின்றார்கள்.

சுலோகம் 17 - படுக்கை ஆசனம் அலங்காரம் காமம் கோபம் பொய் துரோக சிந்தனை இவற்றினை மாதர் பொருட்டே மதுவானவர் கற்பித்தார்.

(2)
சுலோகம் 18 - மாதர்களுக்கு ஜாதகர்ம முதலியவை மந்திரத்தோடு கிடையாது மனச்சுத்தியும் கிடையாது. பாவத்தைப் போக்குகிற மந்திரோபதேசமுமில்லை ஆகையால் அபரிசுத்தாளாயிருக்கிறாள்.

சுலோகம் 19 - மாதர்கள் பெரும்பாலும் விபச்சார தோஷ முள்ளவர்களேன்று

(3)
Read 17 tweets
Aug 18
#இலவசங்கள்

காலையில் எழுந்து அடுப்பு மூட்டி புகையில் வாடும் பெண்களுக்கு விடிவு வந்தது, அரசாங்கம் கொடுத்த இலவச கேஸ் அடுப்பால்,

கை வலிக்க அம்மியிலும் உரலிலும் ஆட்டி சமையல் செய்வதிலிருந்து விடுதலை அளித்தது அரசாங்கம் இலவசமாக கொடுத்த மிக்ஸி கிரண்டர்,

(1)
கொஞ்சம் தொலைவில் உள்ள பள்ளிக்குச் செல்ல பஸ்ஸுக்கு பணம் இல்லாமல் பலரின் படிப்பு நின்று போகும் நிலையில் அதை தடுத்தது, அரசாங்கம் அளித்த இலவச பஸ் பாஸ்,

பள்ளிக்குச் சென்றாலும் சரியான நோட்டு புத்தகமும் உடையும் காலனியும் இல்லாமல் மற்றவர் முன் கூனி குறுகி நின்ற குழந்தைகளின்

(2)
துயரைப் போக்கியது அரசாங்கம் இலவசமாக கொடுத்த சீருடை நோட்டு புத்தகம், மற்றும் செருப்பு,

பண்ணையார்களின் வீட்டில் ஒரு படி அரிசிக்காக கையேந்தாமல் சாதாரண மக்களை காப்பாற்றியது அரசாங்கம் கொடுத்த இலவச அரிசி

(3)
Read 5 tweets
Aug 18
#முச்சந்துமன்றம்

நேரு அவர்கள் இந்திரா அவர்களுக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு,

"தந்தை மகளுக்கு எழுதிய கடிதங்கள் - நேரு

புத்தக வாசிப்பு இன்று மாலை 6.00 மணிக்கு இணையுங்கள் தோழர்களே

@Greatgo1
@esemarr3
@The_69_Percent

Set a reminder for upcoming Space twitter.com/i/spaces/1mnGe…
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(