#பேரறிஞர்அண்ணா

#ஆரிய_மாயை

அறிஞர் அண்ணாவின் "ஆரிய மாயை" நூல் வகுப்பு வாதத்தைத் தூண்டுவதாகக் கூறித் திருச்சி நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் அண்ணாவுக்கு 700 ரூபாய் அபராதமும், செலுத்தத் தவறினால் 'ஆறு மாதம் சிறைத் தண்டனையும்' விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்த மறுத்த அண்ணா
திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். உலக வரலாற்று ஆய்வாளர்கள் ஆராய்ந்து வெளியிட்ட செய்திகளின் அடிப்படையில் ஓர் ஆய்வுக் கட்டுரை எழுதியதற்காகக் குற்றவாளி ஆக்கப்பட்டார் அண்ணா.

இப்படி வெளிநாட்டு ஆய்வாளர்களால் எழுதப்பட்ட நூலுக்கும், அதை வழிமொழிந்து எழுதிய
பி.டி. ஸ்ரீனிவாச அய்யங்கார் உள்ளிட்ட வேதியர்களும் ஒப்புக்கொண்ட வரலாற்று உண்மைகளை ஆரியமாயை என்ற தலைப்பில் அண்ணா எழுதியதற்காக அவர் மீது சட்டம் பாய்ந்தது. கட்டுரையாக வெளிவந்து ஆறு ஆண்டுகள், நூலாக வெளிவந்து இரண்டு ஆண்டுகள் கடந்த பின்பு, வகுப்புவாதத்தைத் தூண்டுவதாகக் கூறி அண்ணாவுக்கு
6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால் இந்த அநீதி குறித்துச் சில நடுநிலை பத்திரிக்கைகள் கண்டனம் செய்தன. திராவிடர் இயக்க இதழ்கள் உண்மை நிலையை விவரித்து எழுதின. தொடர்ந்து கண்டனக் கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் என எதிர்ப்பு வலுக்கவே, 10 நாட்களுக்கு பிறகு அண்ணா விடுதலை
செய்யப்பட்டார். திருச்சியில் இருந்து ரயில் மூலம் சென்னை வந்த அண்ணாவுக்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அன்று மாலை சென்னை மெரினா கடற்கரையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் இலட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு அண்ணாவின் ஆற்றொழுக்கான பேச்சைக் கேட்டு
மயங்கினர். ஆற்றோர நாகரீகங்கள் குறித்துத் தமிழ்நாட்டின் ஆற்றோரங்களில் எல்லாம் தென்றலெனத் தவழ்ந்த அண்ணாவின் பேச்சு, கடற்கரைக் காற்றில் ஆர்ப்பரித்து எழுந்தது.

"முனைவர் சிவ. இளங்கோ", புதுச்சேரி.

#HBDAnna114
#HBDArignarAnna
#HBDAnna

@TRBRajaa @DrSenthil_MDRD @rajiv_dmk

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with ilango manivannan

ilango manivannan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @ma_ilango

Sep 14
#ஆரியமாயை

"பேராசைப் பெருந்தகையே போற்றி!
பேச நா இரண்டுடையாய் போற்றி! தந்திர மூர்த்தி போற்றி! தாசர்தம் தலைவா போற்றி!
வஞ்சக வேந்தே போற்றி!
வன்கண நாதா போற்றி!
கொடுமைக் குணாளா போற்றி! கோழையே போற்றி போற்றி!
பயங்கொள்ளிப் பரமா போற்றி! படுமோசோம் புரிவோய் போற்றி!
சிண்டுமுடிந்
திடுவோய் போற்றி!
சிரித்திடு நரியே போற்றி!
ஒட்டுவித்தை கற்றோய் போற்றி! உயர் அநீதி உணர்வோய் போற்றி!
எம் இனம் கெடுத்தோய் போற்றி! ஈடில்லாக் கேடே போற்றி! இரை இதோ போற்றி! போற்றி!
ஏத்தினேன் போற்றி! போற்றி!"

பேரறிஞர் அண்ணாவின் "ஆரிய மாயை" நூலின் தொடக்கம் தான் இது.

உச்ச கட்ட
நையாண்டியுடன் ஆரியர்களின் தந்திரம், நயவஞ்சகம், இரட்டை நாக்கு இவற்றுடன் மன்னர்களை அண்டிப் பதவி பெற்ற பின்னர் அநீதி, மோசம், அயோக்கியத்தனம், கொடுமை செய்தல், கலகமூட்டுதல், சிண்டு முடிதல் ஆகியவற்றை ஆரியர்கள் தொடர்ந்து செய்து வந்தனர் என்றும், இதுவே ஆரியர்களின் இயல்பு என்றும்
Read 7 tweets
Sep 9
//பார்ப்பன - இந்துத்துவ கும்பலுக்கு களத்தில் & கருத்தியல் தளத்தில் அடியாள் வேலை பார்க்கும் சூத்திரவாளுக்கு இந்த பதிவு அர்ப்பணம்...//

கலவர இந்துத்துவா போஸ்டர் boy மாறியது எப்படி..? 2002க்கு 2019 க்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்தது என்ன..??

இஸ்லாமியர்களை வேட்டையாடிய கொடூரமான 2002
குஜராத் கலவரத்தின் இரு முகங்களாக அறியப்பட்டவர்கள், ரத்த காயங்களுடன் கைகூப்பி என்னை விட்டுவிடுங்கள் என கெஞ்சும் குத்புதீன் அன்சாரி, மறுபுறம் மதவெறி கொப்பளிக்க கத்தியை வெறிகொண்டு உயர்த்தி காண்பிக்கும் அசோக் பார்மர்...

இந்த அசோக் பார்மர் அகமதாபாத்தில் புதிதாகத் துவக்கி இருக்கும்
காலணி கடையை திறந்து வைத்தவர் குத்புதீன் அன்சாரி..

இடைப்பட்ட காலத்தில் நடந்தது என்ன??

"ஹிந்து வர்ண முறை எங்களை செருப்பு தைப்பவர்களாகவே வைத்திருக்கிறது.. வர்ண அமைப்பு எங்களை முன்னேற அனுமதிக்கவே இல்லை.. " என்ற உண்மையை அசோக் பார்மர் இந்த இடைக்காலத்தில் புரிந்து கொண்டதுதான் இந்த
Read 8 tweets
Sep 7
#தந்தை_பெரியார் சிலையின் கீழ் #சங்கராச்சாரி சொன்னதையா எழுதமுடியும்..???

முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை #நீதியரசர்_M_M_இஸ்மாயில் அவர்களை தமிழுலகம் மறந்துவிட முடியாது அவரின் பல வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகள் காலத்தால் அழியாதவை. அதில் ஒரு தீர்ப்புதான் இது..

#தந்தை_பெரியார்
சிலையின் பீடங்களில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்கள் இவைதான். ///கடவுள் இல்லை கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்
கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி ///

இதனை நீக்கக்கோரி சில 'பார்ப்பன அமைப்புகள்' நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது இந்துக்கள் மட்டுமின்றி
கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் என எல்லா மதத்தினரின் மதநம்பிக்கையையும் புண்படுத்துவதாக இருக்கிறது என்று முறையிட்டார்கள்.

இந்த வழக்கு அன்றைய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த 'நீதியரசர். M.M.இஸ்மாயில்' அவர்களின், இறுதி தீர்ப்புக்காக வந்தது. வரையறுக்கப்பட்ட இந்திய நாட்டு சட்ட
Read 11 tweets
Sep 6
பெரியாரின் 'இராமாயண எதிர்ப்பு' போராட்ட வரலாறு!

'தந்தை பெரியார்' அவர்கள் 'இராமாயணம்' பற்றி எழுதிய ஆங்கில நூல் 'Ramayana a True Reading' 1957-ல் சென்னையில் வெளியிடப்பட்டது. இதன் இந்தி மொழிபெயர்ப்பான "சச்சி இராமாயண்" இராமாயணப் பாத்திரங்கள் நூல் 1968-ல் கான்பூரில் வெளியிடப்பட்டது.
நூலின் விற்பனையையும், அதன் பிரச்சார வேகத்தையும் கண்டு ஆட்டம் கண்ட பார்ப்பனக் கும்பல், இந்துக்களின் மத உணர்ச்சியைப் புண்படுத்துவதாக கூறி உத்தரபிரதேச அரசு 1970 ஜனவரியில் நூல்களைப் பறிமுதல் செய்து, நூலையும் தடை செய்தது. இவ்வாறு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தோழர் லாலாபாய்சிங் யாதவ்
என்பவர் அப்போது அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கை உயர்நீதிமன்ற "புல் பெஞ்ச்" விசாரணை செய்து, உத்தரபிரதேச அரசு விதித்த தடை உத்தரவு செல்லாது என்று தீர்ப்பு கூறியது. தீர்ப்பில், இ.பி.கோ.124 ஏ, 153 ஏ, 295 ஏ ஆகிய பிரிவுகளைச் சுட்டிகாட்டி இ.பி.கோ. 99 ஏ பிரிவின்
Read 8 tweets
Sep 5
ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளில் சனாதன தர்மத்தின் சிறப்புகளை விவரித்து, அதை பின்பற்றுவதே சிறப்பு என வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் சனாதன தர்மம், இந்து மதம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து RTI சட்டத்தின் கீழ் பதிலளிக்க கோரி தமிழக ஆளுநர்
ஆர்.என்.ரவிக்கு தந்தை பெரியார் தி. க துணைத்தலைவரும், சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான எஸ். துரைசாமி அவர்கள் 19-08-2022 அன்று மனு அனுப்பியுள்ளார்.

அதில், சனாதன தர்மம் குறித்து அதிகம் பேசும் நபராக இருப்பதால், அதுகுறித்த கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க சரியான நபர் என
குறிப்பிட்டு, 19 கேள்விகளை மனுவில் முன்வைத்துள்ளார்.

அது குறித்த காணொளி அவசியம் பாருங்கள்...



@TRBRajaa @rajiv_dmk @Tr_Gayathri @Ayalraju @edwinarockia @Aathiraj8586 @Anti_CAA_23 @AravindRajaOff @IlovemyNOAH2019 @ajmalnks @angry_birdu @anasnagoor_mecc
Read 5 tweets
Sep 3
#ஆர்_எஸ்_எஸ் யார் அவர்கள் என்பதை #சாகித்ய_அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் #ஜெயகாந்தன் சொல்கிறார்...

'ஆர்.எஸ்.எஸ்' பற்றிய சரித்திரபூர்வமான உண்மைகளை மக்கள் மறந்துவிட்டார்கள் என்ற நம்பிக்கையில் அந்த இயக்கம் மீண்டும் தலைதூக்குகிற அபாயத்தைக் குறித்து நாம் எச்சரித்திருந்தோம். நமது
அனுபவங்களையும், நாட்டின் அனுபவங்களையும் விலக்கி வைத்துவிட்டுப் பல சமூகப் பெரியார்கள் 'ஆர்.எஸ்.எஸ்' வகுப்புவாத ஸ்தாபனம் அல்ல என்று முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் முயற்சியில் இறங்குகிறார்கள். அவர்கள் எவரே வேண்டுமாயினும் ஆகுக; எக்கேடும் கெடுக!

இந்து-முஸ்லீம் பகைமை என்பது
இந்தியாவை அடிமை கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சார்பு நடவடிக்கையாகவே உருவாக்கப்பட்டது அது. காரணம் பற்றி அக்கால தேசிய இயக்கத்தின் உயிர்மூச்சே ஒற்றுமை என்பதாக ஒலித்தது. பாரதியாரின் பாடல்களும் கருத்துகளும், ஹிந்து முஸ்லீம் ஒற்றுமையை உறுதிப்படுத்தியே நிற்பதைக் காண்கிறோம்.
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(