#மனுஸ்ம்ரிதி #ஆ_ராசாவின்_இந்துமதவெறுப்பு_பேச்சு
மனு ஸ்ம்ரிதி, நால்வகை வர்ணங்கள் பற்றி சரியாக தெரிந்து கொள்ள இப்பதிவு. முதலில் மனு ஸ்ம்ரிதி பழக்கத்தில் இல்லாத ஒரு கோட்பாடு என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மின்சாரம் இல்லாத போது எப்படி வாழ்ந்தோமோ அப்படி தான் இன்றும் வாழ்கிறோமா?
அப்போது எண்ணெய் விளக்கொளியில் தான் படித்தோம் என்று இருந்திருக்கிறது. அதனால் மின்சார விளக்கையும் போட்டு எண்ணெய் விளக்கையும் ஏற்றி வைத்துப் படிக்கிறோமா அல்லது டிவியை எண்ணெய் விளக்கொளியில் பார்க்கிறோமா? பகுத்தறிவு என்று சொல்பவர்கள் தான் பகுத்தறியாது முட்டாள்களாக இருக்கிறார்கள்
என்பதே உண்மை. ஒரு மூடன் சொல்வதை மூடர் கூடம் கேட்டு வெறுப்பை உமிழ்கிறது. பிராமணன் தலையில் இருந்தும், க்ஷத்திரியன் கைகளில் இருந்தும், வைசியன் தொடைகளில் இருந்தும், சூத்திரன் பாதத்தில் இருந்தும் பிறந்தவன் என்று மனு ஸ்ம்ரிதியில் இருப்பது உண்மை. கீதையில் கண்ணன் சொன்ன, ‘நால் வகை
வர்ணத்தையும் நானே படைத்தேன்' என்பதையும் எழுதி இருக்கிறார்கள். ஆனால் இவை மட்டுமே அதில் சொல்லப் படவில்லை. அதில் ஏராளமான விஷயங்களை சொல்லி இருக்கிறார்கள். கடவுள் தத்துவம், வேதங்கள், புராணங்கள், ஸ்மிருதிகள், சூத்ரங்கள், கடவுளுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள், வேறுபட்ட உலகங்கள், தேவர்,
அசுரர், மனிதர்கள் படைப்பு, ஜீவாத்மா, மனித வாழ்வியல் பகுப்பு, மனிதனின் கடமைகள், சுத்தம் பராமரிப்பது, குழந்தை பிறந்த பிறகு என்ன செய்வது, பெரியோர்கள் இறந்த பிறகு செய்ய வேண்டியவை, வர்ணாசிரமங்கள், நால் வகை வர்ணங்கள், ஒவ்வொரு வர்ணத்தாரின் கடமைகள் என்று எண்ணில் அடங்காதவை அதில் கூறப்
பட்டுள்ளன. நால் வகை வர்ணம் குறித்து #சனாதனம் என்ன சொல்கிறது?
*பிறப்பினால் ஒருவன் உயர்ந்த, தாழ்ந்த வர்ணத்தவனாக ஆவதில்லை.
*பிறக்கும் போது ஒவ்வொருவரும் 'சூத்திரர்களே', வளர்ந்த பிறகு அவர்களின் நடத்தையே, அவனது வர்ணத்தை வகுக்கிறது.
*வேதங்களை கற்று தேர்ந்த, வேதம் வகுத்த படி
சிற்றின்பங்களை தியாகம் செய்து (ஆச்சாரமாக), இறைபணி செய்பவன் பிராமணன்.
*மக்களையும், தேசத்தையும் காக்கும் பணியை கைகொண்ட பராக்கிரமசாலிகள் சத்திரியர்கள்.
*விளைந்தவற்றை எடுத்து மற்ற இடங்களுக்கு கொண்டு சென்று விநியோகித்து, அங்கே இருப்பவற்றை கொண்டு வந்து இங்கே தேவயானவர்களுக்கு
பொறுப்புடன் கொடுப்பவன் வைசியன்
*இந்த மூவகை வர்ணத்தாரின் சொல் கேட்டு, அவர்களுக்கு பணி செய்பவன் சூத்திரன், கடை நிலையில் உள்ளவன். (அடிமை அல்ல) வேலைக்காரன்.
*சூத்திரன் குறித்து ஒரு கெட்ட வார்த்தை மனுஸ்ம்ரிதியில் கிடையாது.
*அப்புறம் ஏன், சூத்திரன் இறைவனின் பாதத்தில் இருந்து பிறந்தான்
என்கிறது வேதம்? அறிவார்ந்த மூளையும், பலம் மிகுந்த தோள்களும், வலிமையான தொடைகளையும் பெற்ற ஒருவனுக்கு, பாதங்கள் இல்லை என்றால் அவனது நிலை என்ன? அவனால் எவ்வாறு இயங்க முடியும்? 'சூத்திரர்கள் தான் இந்த அகில உலகமே இயங்க காரணம்.' மூவகை வர்ணத்தாரும், நான்காம் வகை சூத்திரன் இல்லை என்றால்
அவரவர் தர்மத்தை, கடமையை செய்ய முடியாது. யாகங்களை செய்யும் பிராமணர்களே அதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் உருவாக்குகிறார்களா?
மக்களையும், மண்ணையும் காக்கும் சத்திரியர்களே தங்களது பாதுகாப்பு கருவிகளை செய்து கொள்கிறார்களா?
விளைந்தவற்றை விற்று பொருள் ஈட்டும் வைசியனே, அனைத்தையும்
விளைய வைத்து வண்டி செய்து வேற்றிடம் சென்று விற்று வருகின்றானா?
பிராமணன், சத்திரியன், வைசியன் மூவரும் சூத்திரன் எனும் 'வேலை'க்காரன் இல்லை என்றால் தத்தமது தர்மங்களை ஆற்றிட முடியாது. இதைத்தான் சனாதன தர்மம் சொல்கிறது. எவ்வளவு அருமையான விஷயத்தை இவர்கள் திரித்து சொல்லி வாதிடுகின்றனர்?
வேத காலத்தில் ஒரு நிகழ்ச்சியை குறிப்பிடுகின்றனர், தன்னிடம் கல்வி கற்க வந்த சிறுவனிடம் அவனது கோத்திரம் என்ன என்று கேட்கிறார் குரு, அதற்கு சிறுவன் 'எனக்கு தாயின் பெயர் மட்டுமே தெரியும், எனது குலத்தை பற்றி தெரியாது' என்கிறான். அவனது பதில் உண்மையானது, நேர்மையானது அதனால் அவனை தனது
சீடனாக ஏற்று கொள்கிறார் அந்த குரு. அப்படி என்றால் மகாபாரத கர்ணன் ஏன் பிறப்பால் புறக்கணிக்கப் பட்டான் என்று நீங்கள் கேட்கலாம். இங்கே தான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் 'கால வேறுபாடு'. முந்தைய நிகழ்வு நடந்தது வேத காலத்தில். இரண்டாவது நடந்தது பல யுகங்களுக்கு பிறகு. இங்கே தான் கண்ணன்
சொல்கிறான், ‘நால்வகை வர்ணத்தை நானே படைத்தேன். ஆனால் பிறப்பினால் ஒருவனது உரிமைகளை புறக்கணிக்க சொல்லவில்லை' என்று. பிராமணனாக பிறந்த ஒருவன் தனது கடமைகளில் இருந்து தவறிவிட்டால், அவனது நிலை கீழிறக்கப்படுகிறது. அதேவேளையில் 'சூத்திரன்' ஒருவன் தனது மேம்பட்ட எண்ணங்களால், அப்பழுக்கற்ற
சிந்தனைகளால், நேர்மையான நடத்தையால் 'பிராமணனாக' உருவெடுக்கிறான். ஒருவனின் நடத்தையே அவன் எந்த வர்ணத்தை சார்ந்தவன் என்பதை முடிவு செய்கிறது.
'பிறப்பால் உயர்வு, தாழ்வு இல்லை'
இதைத்தான் சனாதன தர்மம் சொல்கிறது. ஆனால் யுகங்கள் மாற மாற, மக்கள் மனம் விசாலமாக தனது கண்களை விரித்து இந்த
அண்டத்தை காண்பதற்கு பதிலாக, தனது சிந்தனைகளை சுருக்கி கொண்டு
தர்மங்களை மறந்து விலகி சென்று விட்டதால் ஏற்பட்டதே, இன்றைய குறுகிய சாதிய கண்ணோட்டம். (கதைகளும் இவ்வாறே ஏற்பட்டன. ஜாதிகள் வேறு வர்ணம் வேறு)
இதை 'சனாதன தர்மம்' போதிக்கவில்லை, இது சத்தியம்.
'ஒருவர் உயிரிழந்த பிறகு, அந்த
ஆத்மாவிற்கு செய்யவேண்டியதாக சில கடமைகளை வலியுறுத்தி சொல்லும் சனாதன தர்மம், உயிருள்ள மனிதனை பிறப்பால் தாழ்த்தி சொல்லுமா?' அறிவுள்ள அனைவரும் இதை கவனமாக சிந்திக்க வேண்டும்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Sep 26
#மகாபெரியவா #நவராத்திரியில் பராசக்தியான துர்கா பரமேசுவரியையும், மகாலக்ஷ்மியையும், ஸரஸ்வதி தேவியையும் பூஜிக்கிறோம். மூன்று மூர்த்திகளாகச் சொன்னாலும், முப்பத்து முக்கோடி மூர்த்திகளாகச் சொன்னாலும், அத்தனையாகவும் இருப்பது ஒரே பராசக்திதான். இந்த உண்மையைத்தான் லலிதா ஸஹஸ்ரநாமம் Image
பரதேவதைய வர்ணிக்கும்போது அவளே சிருஷ்டி செய்பவள் (ஸ்ருஷ்டிகர்த்ரீ – ப்ரஹ்ம ரூபா) அவளே பரிபாலனம் செய்பவள் (கோப்த்ரீ – கோவிந்த ரூபிணீ), அவளே சம்ஹாரம் செய்பவள் (ஸம்ஹாரிணீ – ருத்ரரூபா) என்று சொல்கிறது. லலிதையாக, துர்க்கையாக இருக்கிற பராசக்திதான் மஹாலக்ஷ்மியாகவும், ஸரஸ்வதியாகவும்
இருக்கிறது. லக்ஷ்மி அஷ்டோத்தரத்தில் ‘பிரம்ம விஷ்ணு சிவாத்மிகாயை நம:’ என்று வருகிறது. ஸரஸ்வதி அஷ்டோத்தரத்திலும் இப்படியே ‘பிரம்ம விஷ்ணு சிவாத்மிகாயை நம:’ என்று வருகிறது. படைப்பு, அழிப்பு, காப்பு எல்லாம் செய்வது ஒரே சக்திதான் என்று இந்த நாமங்கள் நமக்கு நன்றாக உணர்த்துகின்றன. ஒரே
Read 14 tweets
Sep 26
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
பண்டரிபுரத்தில் பிறந்து செருப்பு தைக்கும் வேலையில் கிடைக்கும் சிறிய வருமானத்தில் தன்னுடைய குடும்பம் வயிறு கழுவினாலும், இரவும் பகலும் பாண்டுரங்கன் மேல் அளவில்லாத பக்தி கொண்டு அவனை போற்றி பாடுவதிலே தான் பெரும்பகுதி நேரத்தை செலவிட்டவர் ஸந்த் ரோகிதாசர். ஏகாதசி Image
அன்று அவர் பஜனை நாள் பூரா கோவில் அருகே நடக்கும். அனைவரும் பக்தி ரசத்தில் மூழ்கி அனுபவிப்பார்கள். இதனால் அவரால் ஒரு மாசத்துக்கு 10 ஜோடி செருப்பு தான் பண்ண முடிந்தது. அதை வைத்து அரை வயிற்று கஞ்சி தான் அவருக்கு இருந்தாலும் பகவன் நாமா சொல்லி ஆனந்தமாக நாட்களை நகர்த்தினார். அப்படி
இருக்க ஓர் நாள் அந்த ஊர் ராஜாவுக்கு திடீரென்று அடுத்த ஊர் ராஜாவின் மேல் படையெடுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததால் படை வீரர்களுக்கு காலணி வழங்க ஊரிலுள்ள அனைத்து செருப்பு தைக்கும் தொழிலாளிகளிடமும் ஒருமாத காலத்தில் தலா 1000 ஜோடி செருப்பு தைக்க வேண்டும் என்று ஆணையிட்டான். எல்லா
Read 13 tweets
Sep 26
#Navarathiri #MahaPeriyava
Kanchi Mahaperiyava had asked Shri Joshi to make a Kuthu Vilakku (lamp) of gold and bring it to Him. For some reason Shri Joshi could not go to the Matam and instead sent it through another devotee Shri Ramanan. Shri Ramanan submitted the lamp to Him Image
when he went to have His Darshan. It was around 8.30 pm and He was sitting in the Mena. On seeing the lamp Periyava took it in His Hand and tells those who had assembled near Him:
“During all days of Navarathri, Ambal comes physically and sits exactly at 8 pm on the Meru in
Kamakshi Amman Temple in Kanchipuram. So, take this lamp, light it and place it near the Meru! Since the Meru will become hot due to the heat of the flame, prepare a ball of sandhanam (sandalwood paste) and place the lamp on top of it!”
So, please do visit Kamakshi Amman temple
Read 4 tweets
Sep 25
#மகாபெரியவா
வெளியூரிலிருந்து அடிக்கடி பெரியவாளை தரிசனம் பண்ண ஒரு அம்மா வருவார். மடத்தில் எல்லாருக்கும் அந்த அம்மா மிகவும் பரிச்சியமாகி இருந்தார். உள்ளே நுழையும் போது எதிரில் வந்த பெரியவா உதவியாளரிடம் அந்த அம்மா சொன்னார்
"பெரியவாட்ட முக்கியமா ஒரு கேள்வி கேக்கணும்"
"என்ன கேள்வி?" Image
“எங்க தோப்புல புளியமரம் நாலு வருஷமா காய்க்கவேயில்லே! என்ன காரணம்னு பெரியவாளை கேக்கணும்"
உதவியாளருக்குக் கொஞ்சம் கோபமே வந்துவிட்டது
“என்ன மாமி இது? பெரியவாட்ட ஆன்மீக விஷயமா, பூஜை புனஸ்காரம் பத்தி கேக்கலாம். ஒங்காத்து புளியமரம் காய்க்கலைன்னா அவர் என்ன பண்ணுவார்? இதைப்பத்தி எல்லாம்
பேசாதீங்கோ" என்று கடிந்து சொன்னார். மகாபெரியவா இதை கவனித்து கொண்டிருந்தார். பக்கத்தில் நின்று கொண்டிருந்த மற்றொரு சிப்பந்தியிடம் “அந்த அம்மா என்ன சொல்றா கேளு." என்றார். அவர் விசாரித்து விட்டு, "அவா தோப்புல புளிய மரமெல்லாம் நாலு வர்ஷமா காய்க்கவே இல்லியாம்”
"புளிய மரத்து பிஸாசுன்னு
Read 8 tweets
Sep 25
#MahaPeriyava This narration is about the experience of my grandfather with Periva. It was my father who revealed it to me.
A brief background: My grandfather Dr. Narayanswamy was a physician who practised with the great medical practitioner Dr. Rangachary (in whose memory is Image
Ranga Road in Chennai) during 1920s. At that time, my grandfather was living in Mylapore close to the Kapali Temple. My father was then a student of P.S. high school. My father used to recall that Dr. Rangachary used to take my grandpa in his Rolls Royce car to the government's
general hospital. Although my grandfather was an allopathic doctor, he was proficient in homeopathy too and saved many critically sick patients through homeopathy. In the years he lived in Mylapore, my grandfather had very little faith in religious rituals. He never performed
Read 9 tweets
Sep 25
#மகாபெரியவா
'பிற்காலத்தில் த்ரோணருக்கு தரித்ர காலம் ஸம்பவிக்கிறது. அவர் அப்போது அரசாட்சிக்கு வந்துவிட்ட த்ருபதனிடம், 'நம் பழைய க்ளாஸ்-மேட் ஆச்சே!’ என்ற நினைப்பில், உரிமையுடன் உதவி கேட்டுப் போகிறார். அவன் அதிகார போதையில், 'இந்தப் பஞ்சாங்கக்காரப் பிச்சு நம்மோடு friendship Image
கொண்டாடவா?’ என்று நினைத்து, அவரை அவமரியாதை பண்ணி விடுகிறான். இதிலே, அவனுக்கு எதிரடி தர வேண்டுமென்று த்ரோணருக்குத் தோன்றி, அவர் பிற்காலத்தில் அர்ஜுனனைக் கொண்டு த்ருபதனைச் சிறைப் பிடிக்கிறார். அப்புறம், போனால் போகிறதென்று பாதி ராஜ்ஜியத்தைக் கொடுத்து அனுப்பி விடுகிறார். இந்த மான
பங்கத்தில் அவனுக்கு வர்மம் வளர்ந்து, த்ரோணரை வதம் பண்ணுவதற்கென்றே ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று யாகம் பண்ணுகிறான். யாகாக்னியில் இருந்து த்ருஷ்டத்யும்னன் உண்டாகிறான். த்ரௌபதியும் அப்போது உத்பவித்தவள்தான். பிற்காலத்தில் அர்ஜுனன் ஸ்வயம்வரப் போட்டியில் ஜயித்து இவளைக்
Read 17 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(