இன்று #மகாளய_அமாவாசை பித்ருகளுக்கு திதி கொடுக்க வேண்டிய முக்கிய தினம். #பித்ருகள் யார், அவர்களுக்கு திதி கொடுப்பதால் என்ன நன்மை என்பதை தெரிந்து கொள்வோம். வாழும் காலத்தில் நம் பெற்றோர் நெருங்கிய சொந்தங்கள் நம்மை காப்பாற்றுகிறார்கள், உதவுகிறார்கள். அவர்கள் இல்லை என்றாலோ அவர்களால்
உதவ முடியாத சூழ்நிலையும் ஏற்படலாம். இறைவன் மட்டுமே எக்காலத்திலும் எந்த இடத்திலும் நம்மை ரட்சிக்கிறார். இறைவனுக்கு அடுத்து சுமார் 86 லட்சம் யோஜனை (1 யோஜனை = 12 Kms) தூரத்திலிருந்து ஒரு கூட்டம் நம்மை ரக்ஷிக்கிறது. இவர்களே பித்ருக்கள். இவர்கள் வசிப்பிடம் பித்ரு லோகம். (பூமிக்கும்
சொர்கத்துக்கும் இடையே உள்ளது.) இந்தக் கூட்டத்திற்கு இது பெரிய தூரம் இல்லை. அதனால் அமாவாசை, தர்ப்பணம், சிராத்தம் என்றால் நம்மை நோக்கி மகிழ்ச்சியுடன் வருகின்றனர்.
#ஆத்மா 64 உறுப்புகள் கொண்ட ஸ்துல சரீரத்தை அடைந்து அறிவு, அனுபவம், இயக்கம் பெற்று கர்மாவை கடக்கிறது. ஆத்மா சரீரத்தை
விட்டு கிளம்பியதும் அதன் பெயர் #பிரேதம். (இதில் அகாலமாக தற்கொலை, கொலை, அல்லது விபத்தில் இறந்தவர்கள் துர்மரணத்தை சம்பவிக்கிரார்கள். இவர்கள் #பிசாசுகள்) பிரேதமானது அடுத்த இலக்கை நோக்கி பயணித்து மோக்ஷமோ, சொர்க்கமோ, நரகமோ, மீண்டும் பூமியோ கர்மத்திற்கு ஏற்ப அடைகிறது. இந்தப் பிரயாணம்
செவ்வென நடக்க பரமாத்மாவால் நியமிக்கப்பட்ட தேவர்கள் இந்த பித்ருகள். இவர்கள் வேறு யாரும் இல்லை, நம் குல முன்னோர்கள் தான். நம் மூதாதையர்களில், யார் ஒருவர் பூலோகத்தில் வாழ்ந்த போது அனைத்து தர்மங்களையும் கடைப்பிடித்து தேகத்தை விடுகிறாரோ, அவர் பித்ரு லோகத்தில் தன் கர்ம வினைகளுக்கு ஏற்ப
தற்காலிகமாக இருப்பார். அந்த சமயத்தில் அவர் குலத்தை காப்பதே அவருக்கான பணி. ஆத்மா தேகத்தை விட்ட பின் சூக்ஷ்ம சரீரமோ, இந்திரியங்களோ இல்லாததால் இன்பத்தையோ, துன்பத்தையோ அனுபவிக்க இயலாது. ஆனால் பூர்வ ஜென்ம வாசனை இன்னும் இருக்கும். இந்த வாசனையை கொண்டு தேகத்தை விட்ட பின்னும் உற்றார்,
உறவினர்களையே சுற்றி் வரும். இதன் பரிணாம வெளிப்பாடே பசி, தாகம் போன்ற எண்ணங்கள் ஆத்மாவிற்கு ஏற்பட காரணம். ஆத்மாவின் இந்த பசி, தாக எண்ண ஓட்டமே அதற்கான அடுத்தஇலக்கை நோக்கிய பிரயாணத்தை தடைப்பட செய்கிறது. இது ஆத்மாவிற்கு நிற்கதியான நிலை. போக்கிடமற்று, உடல் இல்லாமல் பசி தாகத்தை தீர்த்து
கொள்ள தன் வாரிசுகளை நம்பி, அவர்கள் நம்மை கரை ஏற்றிவிடுவார்கள் என்று காத்துக் கொண்டிருக்கும். இதன் பொருட்டு அனுஷ்டிக்கப் படுவதே இறுதி வைதீகக் காரியங்கள். கர்த்தா (கொள்ளி போட்டவர் அல்லது இறந்தவருக்கு காரியம் செய்பவர்) வார்க்கும் பிண்டம், எள்ளு, நீரை கொண்டே ஆத்மாவின் எண்ணத்தில்
சாந்தி நிலவி அதன் அடுத்த கட்ட பிரயாணத்தை தொடங்கும். அபர காரியம் தடைப்பட்டால் ஆத்மாவிற்கு பிரயாணம் இயலாமல் போகக்கூடும். அவ்விதமான ஆத்மா துர்வாசனைகளுடன் கர்த்தஉற்றாரை சுற்றியே இருக்கும். அபர காரியத்தின் முக்கியமான அங்கம் துக்கம் விசாரிப்பது. துக்கம் விசாரிப்பது என்றால் அபர காரியம்
நிறைவேற வசதி வாய்ப்பை (பொருள், பணம், பிராமணர்) விசாரித்து ஏற்படுத்தி கொடுப்பது. ஆகையால் தான் துக்கம் எவ்வளவு சீக்கிரம் விசாரிக்க முடியுமோ, செய்து விடவேண்டும் இந்த அபர சம்ஸ்காரத்தை கண்காணிப்பதே பித்ருகளின் கர்மம். இங்கே தான் நாம் தவறிழைத்து நம் முன்னோர்கள் தானே என மெத்தனத்துடன்
இருந்து விடுகிறோம். பித்ருகளின் பலம் நம்மைவிட 1000 மடங்கு அதிகம். அவர்கள் ஆசீர்வதித்தாலும் 1000 மடங்கு, சபித்தாலும் 1000 மடங்கு! தன் வம்சாவளியான தேகத்தை விட்ட ஆத்மாவிற்கு, தர்ப்பணம், சிராத்தம் போன்ற அபர காரியம் செய்யாமல் இருந்தால் அங்கே நிகழ்கிறது பித்ருகளின் சாபம். தேகத்தை விட்ட
ஆத்மா, வாழ்ந்த பொழுது யாரெல்லாம் எந்தெந்த விகிதத்தில் உறவு கொண்டு இருந்தனரோ அதற்கேற்ப அமையும் 1000 பங்கு சாபம். தெய்வம் நின்று கொல்லும், பித்ரு அன்றே கொல்வான். அபர காரியம் நின்ற அந்த நொடியே சாபம் உருபெறும். பித்ருக்களின் சாபம் இருப்பதை எப்படி அறிந்து கொள்ளலாம்? திருமண தடை, வியாதி
குழந்தையின்மை, குடும்ப சண்டை, எல்லாம் இருந்தும் விளங்காமல் இருப்பது ஆகியவை. கரை சேராத ஆத்மாவை சாந்தி செய்து அதன் இலக்கை நோக்கி பயணிக்க உதவும் வரை, வம்ச வழித்தோன்றல்களுக்கு பித்ருகளின் சாபம் தொடரும். இந்த சம்ஸ்காரம் நடைபெறுவதற்கு உறுதுணையாக யார் இருந்தாலும் அப்பொழுதே 1000 பங்கு
அனுக்ரஹம் அவர் மற்றும் அவர் வம்சத்திற்கு நிகழும். நமது மூதாதையர்களான பித்ருக்கள் அவர்கள் நினைக்கிற போதெல்லாம் பூலோகத்திற்கு வர இயலாது. ஆனால் அமாவாசை, மாதப்பிறப்பு, இறந்த அவர்கள் திதி மற்றும் மஹாளயபட்ச தினங்களில் தான் அவர்கள் பூலோகத்திற்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே அவர்கள்
சூட்சும தேகத்துடன் நம்மைத் தேடி பூலோகத்திற்கு வருகிற நாட்களில் நாம் பித்ரு தர்ப்பண பூஜைகளை நிறைவேற்றினால் அவர்களும் அதை இங்கு நேரடியாகப் பெற்று ஆசியளிக்கின்றனர். நம் மூன்று தலைமுறையில் உள்ள முன்னோருக்குச் செய்கிற ஆராதனை, நம்மையும் நம் சந்ததியையும் இனிதே வாழ வைக்கும் என்கிறது
கருடபுராணம். எள்ளும் தண்ணியும் தான் அவர்கள் கேட்கிறார்கள். அதை அளித்து அவர்களை மகிழ்வித்து இன்பமான வாழ்வை நாம் பெற முடியும். அமாவாசை தினம் பித்ரு கடன் செய்வதால் மூதாதையர், ரிஷிகள், தேவர்களின் ஆசி கிடைக்கிறது.
சிரத்தையுடனும் பக்தியுடனும் இதை செய்து நீத்தார் கடனை தீர்ப்பத்துடன் நம்
சந்ததியினர் வாழ்வையும் வளம் பெறச் செய்வோம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Sep 27
#மகாபெரியவா #நவராத்திரி சிவாஸ்தானத்தில் தங்கியிருந்தபோது நவராத்திரி வந்தது. பக்தர் குழுவில் மூன்று வயதுக் குழந்தை ஒன்று, எல்லோரையும் போல் நமஸ்காரம் செய்துவிட்டு, பெரியவாளை நோக்கிப் போயிற்று. பெரியவாள் எதிரில், தட்டுத் தட்டாக பழங்கள், கற்கண்டு, திராட்சை. பெரியவாள் அருகிலிருந்த Image
தொண்டர் பிரும்மசாரி ராமகிருஷ்ணனைப் பார்த்து ஒரு ஆப்பிள் எடுத்து குழந்தை பழத்துக்காக வந்திருக்கிறதோ என்று குழந்தையிடம் கொடுக்கச் சொன்னார்கள். குழந்தை ஆப்பிளை லட்சியம் செய்யவில்லை. பெரியவாளைப் பார்த்து, "ஏன் கொலு வைக்கல்லே?" என்று கேட்டது. குழந்தை சொன்னது, தெய்வம் சொன்ன மாதிரி.
கூடியிருந்த பக்தர்களை, ஆளுக்கு ஒரு பொம்மை வாங்கி வரும்படி கூறினார்கள் பெரியவா. ஒரு மணி நேரத்தில் ஏராளமான பொம்மைகள் வந்து சேர்ந்து விட்டன. அதற்குள் படிக்கட்டு தயார். தினந்தோறும் இரவில், சுண்டல் நைவேத்தியம் விநியோகம்.சுமங்கலிகளுக்குத் தாம்பூலம், குங்குமம். நவராத்திரி முடிந்ததும்,
Read 6 tweets
Sep 27
#MahaPeriyava #Navarathiri This is an incident that happened many years ago. It was a time when the construction work of Uttara Sri Nataraja temple was going on in accordance with Kanchi Paramacharyal's orders in the Satara town of Maharashtra. People thronged daily to have Image
darshan of Sri Maha Periyava who was camping in the town. It was three o' clock in the afternoon on a Sunday. A 30-year-old youth prostrated before Periyava and got up. Tears were seen in his eyes. Noticing it, Periyava asked him with affection, "Enpa, Who are you? Where are you
from? Why are your eyes watery?" Without replying, he started crying. People nearby consoled him and made him sit before Periyava.
"Where are you from Appa?" Periyava asked him.
"Palakkad, Periyava."
"You are coming all the way from Palakkad?" asked Periyava immediately.
"Yes
Read 30 tweets
Sep 26
#தசகம்_25
நரசிம்ம அவதாரம்
1. ஹிரண்யகசிபு தூணை அடித்தான். உடனே, காதுகளைக் கிழிக்கும் பயங்கரமான சத்தம் கேட்டது. அந்த சத்தம், அண்டங்களை நடுங்கச் செய்வதாக இருந்தது. இதுவரை எவராலும் கேட்கப் படாத சத்தமாக இருந்தது. அந்த சத்தத்தைக் கேட்ட ஹிரண்யகசிபுவின் உள்ளம் நடுங்கியது. பிரும்மதேவன் Image
கூட நடுங்கினாராமே? என்று பட்டத்ரி கேட்க குருவாயூரப்பான் “ஆம்” என்று தலையை ஆட்டி அங்கீகரித்தாராம்.
2. எங்கும் நிறைந்தவரே! அந்த அசுரன், எல்லா திசைகளையும் கண்களால் பரபரப்புடன் நோக்கினான். அப்போது, தூணிலிருந்து, மிருக வடிவமும் அல்லாத, மனித வடிவும் அல்லாத உருவத்துடன் நீ தோன்றினாய்.
இது என்ன என்று அசுரன் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, பிரகாசிக்கின்ற பிடரியுடன், சிங்க உருவத்துடன் நீ பெரிதாக வளர்ந்தாய்.
3. சுழலும் உன் கண்கள், உருக்கிய தங்கத்தைப் போல ஜொலித்தன. பிடரி மயிர்கள், விரிந்து ஆகாயத்தை மறைத்தன. வாய் குகையைப் போன்றிருந்தன. வாளைப்போல் கூர்மையாக சுழன்று
Read 10 tweets
Sep 26
#மகாபெரியவா #நவராத்திரியில் பராசக்தியான துர்கா பரமேசுவரியையும், மகாலக்ஷ்மியையும், ஸரஸ்வதி தேவியையும் பூஜிக்கிறோம். மூன்று மூர்த்திகளாகச் சொன்னாலும், முப்பத்து முக்கோடி மூர்த்திகளாகச் சொன்னாலும், அத்தனையாகவும் இருப்பது ஒரே பராசக்திதான். இந்த உண்மையைத்தான் லலிதா ஸஹஸ்ரநாமம் Image
பரதேவதைய வர்ணிக்கும்போது அவளே சிருஷ்டி செய்பவள் (ஸ்ருஷ்டிகர்த்ரீ – ப்ரஹ்ம ரூபா) அவளே பரிபாலனம் செய்பவள் (கோப்த்ரீ – கோவிந்த ரூபிணீ), அவளே சம்ஹாரம் செய்பவள் (ஸம்ஹாரிணீ – ருத்ரரூபா) என்று சொல்கிறது. லலிதையாக, துர்க்கையாக இருக்கிற பராசக்திதான் மஹாலக்ஷ்மியாகவும், ஸரஸ்வதியாகவும்
இருக்கிறது. லக்ஷ்மி அஷ்டோத்தரத்தில் ‘பிரம்ம விஷ்ணு சிவாத்மிகாயை நம:’ என்று வருகிறது. ஸரஸ்வதி அஷ்டோத்தரத்திலும் இப்படியே ‘பிரம்ம விஷ்ணு சிவாத்மிகாயை நம:’ என்று வருகிறது. படைப்பு, அழிப்பு, காப்பு எல்லாம் செய்வது ஒரே சக்திதான் என்று இந்த நாமங்கள் நமக்கு நன்றாக உணர்த்துகின்றன. ஒரே
Read 14 tweets
Sep 26
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
பண்டரிபுரத்தில் பிறந்து செருப்பு தைக்கும் வேலையில் கிடைக்கும் சிறிய வருமானத்தில் தன்னுடைய குடும்பம் வயிறு கழுவினாலும், இரவும் பகலும் பாண்டுரங்கன் மேல் அளவில்லாத பக்தி கொண்டு அவனை போற்றி பாடுவதிலே தான் பெரும்பகுதி நேரத்தை செலவிட்டவர் ஸந்த் ரோகிதாசர். ஏகாதசி Image
அன்று அவர் பஜனை நாள் பூரா கோவில் அருகே நடக்கும். அனைவரும் பக்தி ரசத்தில் மூழ்கி அனுபவிப்பார்கள். இதனால் அவரால் ஒரு மாசத்துக்கு 10 ஜோடி செருப்பு தான் பண்ண முடிந்தது. அதை வைத்து அரை வயிற்று கஞ்சி தான் அவருக்கு இருந்தாலும் பகவன் நாமா சொல்லி ஆனந்தமாக நாட்களை நகர்த்தினார். அப்படி
இருக்க ஓர் நாள் அந்த ஊர் ராஜாவுக்கு திடீரென்று அடுத்த ஊர் ராஜாவின் மேல் படையெடுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததால் படை வீரர்களுக்கு காலணி வழங்க ஊரிலுள்ள அனைத்து செருப்பு தைக்கும் தொழிலாளிகளிடமும் ஒருமாத காலத்தில் தலா 1000 ஜோடி செருப்பு தைக்க வேண்டும் என்று ஆணையிட்டான். எல்லா
Read 13 tweets
Sep 26
#Navarathiri #MahaPeriyava
Kanchi Mahaperiyava had asked Shri Joshi to make a Kuthu Vilakku (lamp) of gold and bring it to Him. For some reason Shri Joshi could not go to the Matam and instead sent it through another devotee Shri Ramanan. Shri Ramanan submitted the lamp to Him Image
when he went to have His Darshan. It was around 8.30 pm and He was sitting in the Mena. On seeing the lamp Periyava took it in His Hand and tells those who had assembled near Him:
“During all days of Navarathri, Ambal comes physically and sits exactly at 8 pm on the Meru in
Kamakshi Amman Temple in Kanchipuram. So, take this lamp, light it and place it near the Meru! Since the Meru will become hot due to the heat of the flame, prepare a ball of sandhanam (sandalwood paste) and place the lamp on top of it!”
So, please do visit Kamakshi Amman temple
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(