முக்கூர் #ஸ்ரீமதழகியசிங்கர் சாமான்யமான லௌகிக விஷயங்களின் மூலம் ஆழமான சம்பிரதாயக் கருத்துக்களை சிஷ்யர்களின் மனதில் பதிய வைப்பதில் வல்லவர். ஒரு சமயத்தில் சிஷ்யர் ஒருவா் ஸ்ரீமதழகியசிங்கரிடம் விண்ணப்பித்தார், ஸ்வாமி! விஞ்ஞானத்தின் அபரிதமான வளர்ச்சியால் சந்திரனுக்கும் பூமிக்கும் உள்ள
தூரத்தை அளக்க முடிகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரத்தை அளக்க முடிகிறது. இதே போல் பெருமாளுக்கும் நமக்கும் உள்ள தூரத்தை அளப்பது சாத்யமா? என்று கேட்டார்.
ஸ்ரீமதழகியசிங்கரும் “ஆஹா! அளக்கலாமே! நாளை வரும்போது ஒரு பேப்பரும் பேனாவும் கொண்டு வா” என்றார். அந்த சிஷ்யரும் மறுநாள்
பேப்பா் பேனா ஸகிதமாக வந்தார்.
ஆசார்யனும், “இந்த பேப்பரில் என்னுடையவை என்று ஒரு தலைப்பு போட்டுக் கொண்டு, என் பத்னீ, என் புத்ரன், என் வீடு, என் கார், என் பேனா, என் கடிகாரம், என் வேஷ்டி என்று உன் உடமைகளாக நீ நினைப்பவை எல்லாவற்றையும் ஒரு பட்டியலிடு. எல்லாம் முடிந்தபின் கடைசியில்
போனால் போகிறதென்று என்னுடைய பெருமாள் என்று எழுதிக் கொள்” என்று சாதித்தார். சிஷ்யனும் ஆசார்யனின் கட்டளையை சிரமேற்கொண்டு என் பத்னீ, என் புத்ரன் என்று ஆரம்பித்து என்னுடைய பெருமாள் என்று எழுதி முடித்தாராம்.
அடுத்து என்ன செய்வது? என்று ஆசார்யனை பார்த்தாராம். ஆசார்யன் சிஷ்யனைப்
பார்த்து “இப்போது அந்தப் பட்டியலில் இருந்து என்னுடையது என்று ஆரம்பித்து நீ எழுதியவை எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக அடித்துக் கொண்டு வா. உனக்கும், நீ கடைசியாகப் பட்டியலில் எழுதிய பெருமாளுக்கும் இடையே உள்ள தூரம் குறைந்து கொண்டே வரும். கடைசியில் உன்னுடையது என்று எதுவுமே இல்லாமல் நீயும்
பெருமாளுமே எஞ்சியிருப்பீர்கள். இதுதாண்டா உண்மை நிலை! நான் எனது உடமை என்கிற நிலை மாறி, யானும் நீயே! எனது உடமையும் நீயே! என்று உனக்கும் பெருமாளுக்கும் உள்ள தூரம் குறைவது மட்டுமல்ல, தூரமே இல்லாமல் போய்விடும்” என்று சாதித்தாயிற்றாம். அஹங்கார, மமகாரங்களை விட்டொழிக்க வேண்டும் என்பதனை
எத்தனை அழகாக, தெளிவாக விளக்கினர் ஸ்ரீமதழகியசிங்கர்.
ஆசார்யன் திருவடிகளே சரணம்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Oct 17
#வால்மீகிராமாயணம் #சுந்தரகாண்டம்
ராமாயணத்தை எழுதி முடித்த வால்மீகி முனிவர் ஒவ்வொரு காண்டத்திற்கும் அது நிகழும் சூழலை வைத்தப் பெயர் சூட்டினார். சுந்தர காண்டத்திற்கு மட்டும் ஆஞ்சநேயர் பெயரை சூட்டினார். ஆனால் ஆஞ்சநேயர் தன் பெயரை சூட்ட வேண்டாம் என்று உறுதியாக சொல்லிவிட்டார். Image
வால்மீகி முனிவர் ஆஞ்சநேயரை போன்று சமயோசித புத்தி கூர்மையால், சரி வாயு புத்ரா, சுந்தர காண்டம் என்று பெயர் சூட்டுகிறேன் என்று சூட்டினார்.
ஆஞ்சநேயர் ஆஹா அருமை என்று பாராட்டி இது நம் பெயர் இல்லையே என்று சென்று விட்டார். வெகு காலம் ஆனதால் ஹனுமான் தன் தாயை பார்க்க ஆசைப்பட்டு அஞ்சனா
தேவியை காணச் சென்றார். மகன் ஹனுமனின் வரவால் மகிழ்ச்சி அடைந்து, வா சுந்தரா வா என்று அழைத்தாள். ஹனுமானுக்கு தூக்கி வாரி போட்டது. தாயே என்னை எப்படி அழைத்தீர்கள் என்றார். அதற்கு, சுந்தரா அதுதானே உன் பால்ய பருவ பெயர்! நீ தான் மறந்து விட்டாய் ஹனுமான் என்றார். அப்போது தான் ஹனுமானுக்கு
Read 17 tweets
Oct 17
#மகாபெரியவா #கவியரசர்_கண்ணதாசன்

சாண்டோ சின்னப்ப தேவரும் கண்ணதாசனும் ஒரு படப்பிடிப்பிற்காக காரில் போய்க் கொண்டிருந்தபோது மிக மோசமான விபத்து ஏற்பட்டது. அதில் சின்னப்பா தேவருக்கு அவ்வளவாகக் காயம் இல்லை. ஆனால் கண்ணதாசனுக்கு படுகாயம் ஏற்பட்டு நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் Image
இருந்தார். காஞ்சிப் பெரியவரிடம் மிகுந்த பக்தியும் மரியாதையும் கொண்ட தேவர் அவர்கள், சிவஸ்தானம் எனப்படும் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பெரியவரைப் பார்த்து வணங்கி ‘விபத்து நேர்ந்து விட்டது’ என்று சொன்ன மாத்திரத்தில் ‘கண்ணதாசன் எப்படியிருக்கிறான்’ என்றும் பெரியவர் கேட்க, அதிர்ந்து
போனார் தேவர். கண்கள் கலங்க வியப்பும் வருத்தமுமாய் “அவர் படுகாயத்துடன் நினைவில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறார்” என நா தழுதழுக்கக் கூறினார். தேவரின் கவலையை உணர்ந்த பெரியவர், ‘சரி, கவலைப்படாதே. இந்த விபூதியைக் கொண்டுபோய், அவன் நெற்றியில் இட்டு, வாயிலும் சிறிதளவு போடு, மீதி
Read 17 tweets
Oct 17
#நாமசங்கீர்த்தனம் #பூந்தானம் #குருவாயூரப்பன் நாம சங்கீர்த்தனம் செய்வது புண்ணியம் என்றால், அதைக் கேட்பது, நம் பிறவி பிணியை தீர்த்து, முக்தி அளிக்கும் வல்லமை பெற்றது. குருவாயூரப்பன் மீது மிகுந்த பக்தி கொண்டவர், பூந்தானம் எனும் பக்தர். ஒரு நாள், இவர் கண்ணனை துதித்து, கவிதை எழுதிக் Image
கொண்டிருந்தார். அப்போது, வைகுண்டத்தை வர்ணிக்க கூடிய பகுதி வந்தது. அதை எப்படி வர்ணிப்பது என தெரியாமல், அவ்வருத்தத்திலேயே, உறங்கி விட்டார். தூக்கத்தில் அவருக்கு ஒரு கனவு வந்தது. அக்கனவில், அழகிய விமானத்தில் ஏறி, வைகுண்டம் செல்கிறார், பூந்தானம். வானவர் இருவர், அவரை வரவேற்று,
வைகுண்டம் முழுதும் சுற்றிக் காண்பித்து, பகவான் சன்னிதியில் அவரை நிறுத்துகின்றனர். பகவானை தரிசித்து, பரமானந்தமடைந்தவர், பூலோகம் திரும்பும் போது, அவ்வானவர்கள், அவரை வணங்கி, 'குருதேவா உங்கள் கருணையால் தான்,நாங்கள் கடவுள் அடியார்கள் எனும், இவ்வுயர் நிலையை அடைந்தோம். நாங்கள்
Read 8 tweets
Oct 17
#சனாதனதர்மம் #யோகிகள் #யோகி_பரமஹம்ச_யோகானந்தா தன் உடலை விட்டு நீங்கும்பொழுது, அவர்முன் 700 பேர் இருந்தனர். அமெரிக்காவில், போஸ்டன் நகரில், அவர் மஹாசமாதி அடைந்தார். உடலை விடும் முன்பே, ‘நான் உடலை விடப்போகிறேன்’ என்று அவர் அறிவித்திருந்தார். இந்திய தூதரக விருந்து நிகழ்ச்சியில் அவர் Image
பேசிக் கொண்டிருந்த போதே தன் உடலை நீத்தார். மருத்துவர்கள் எத்தனை சோதனை செய்தாலும் அவர்களுக்கு புலப்படாத ஒரு விஷயமிது. ஏனெனில், மருத்துவ அறிவியலைப் பொருத்தவரை, உடலில் ஏதேனும் சிதைவு ஏற்பட்டு, உடல் இயங்க முடியாத நிலையில் மட்டுமே உயிர் பிரியும் என்று நம்பப்படுகிறது. இதயமோ நுரைஈரலோ
வேறு எதோ ஒன்று கெட்டுப் போனால் உயிர் நீங்கும் என்பது விஞ்ஞானிகள் நம்பிக்கை. நன்றாக, ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர், ‘இப்போது நான் போகப்போகிறேன்’ என்று சொல்லிவிட்டு தன் உடல் நீப்பதை அவர்கள் எங்கும் பார்த்திருக்கவில்லை. அது மட்டுமில்லை, பரமஹம்ச யோகானந்தா உடலை விடும்போது, "33
Read 11 tweets
Oct 17
#MahaPeriyava #Kannadasan The great poet and song writer Kannadasan was once an atheist. He then became an ardent believer of God and wrote many epics, one of which is #Arthamulla_indhu_madham #அர்த்தமுள்ள_இந்து_மதம் He was also an ardent devotee of Maha Periyava. Once when he
came to Kanchi for dharshan, he asked Periyava, the milky ocean (பாற்கடல்) must actually be white, how come it is blue in colour. Those gathered there thought he was asking this question just to irritate Maha Periyava. Maha Periyava just smiled to his query and did not give him
any answer. Kannadasan was given to understand though, that he will get the reply to his question that day afternoon and he had to wait till then. That afternoon Vummidi Bangaru Chettiyar came to see Maha Periyava. He had brought with him a very large emerald stone which he
Read 8 tweets
Oct 16
#டாலர் வலுவாகிறதா அல்லது #ரூபாய் வீழ்ச்சி அடைகிறதா?
விளக்கம் இழையில்👇
பொருளாதாரம் பற்றிய அடிப்படை அறிவு இருந்தாலே, இந்தக் கேள்விக்கான பதில் தெரியும். ஆனால் இந்தியாவில் பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் தரம் மிகக் குறைவு!அடிப்படைகள் கூட அவர்களுக்குத் தெரியாதது சோகம். Image
உலகில் சுமார் 200 நாடுகள் உள்ளன, ஒவ்வொரு நாட்டுக்கும் அந்த நாட்டுக்கான பணம்! அது மற்ற நாடுகளின் பணத்துடன் மாற்று விகிதத்தை பராமரிக்கின்றன. அதற்குப் பெயர் நாணய மாற்று விகிதம் அந்த நாணயத்தின் வழங்கல் மற்றும் தேவையைப் பொறுத்து அது அமையும். (demand and supply)
இப்பொழுது அமெரிக்க டாலர
வலுவடைகிறதா (அ) ரூபாய் வலுவிழக்கிறதா என்பது கேள்வி
கடந்த 1 வருடத்தின் USD INR செயல்திறனைப் பார்க்கவும்.
அக்டோபர் 2021 : $1 = ரூ 75
அக்டோபர் 2022 : $1 = ரூ 82
இது, USD இன் நல்ல செயல்திறன் காரணமாகவா? அல்லது INR இன் மோசமான செயல்திறன் காரணமாகவா?
அதை இந்த வளைவின் அடிப்படையில் சொல்ல
Read 20 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(