M.SivaRajan Profile picture
Oct 19 11 tweets 2 min read
#ராம_நாமம்

*ராம நாமத்தை இடைவிடாது
கேட்க வேண்டும் என்பதற்காகவே, ராம அவதார காலம் முடிந்த பின்னரும் வைகுண்டம் செல்லாமல் பூவுலகிலேயே தங்கிவிட்டவன் ராமதூதனான அனுமன்.*
அப்படிப்பட்ட அனுமன் ஆலயம் ஒன்றில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தொடர்ந்து 24 மணி நேரமும் ராமநாமத்தை இடைவிடாமல் ஜபம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அது எவ்வளவு சாந்நித்யம் மிக்கதாக இருக்கும்.
குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம் நகரில் அழகிய ரம்யமான சூழ்நிலையில் ரன்பால் ஏரி அமைந்துள்ளது.

இங்குள்ளவர்களால் லக்கோடா ஏரி என்று அழைக்கப்படும் இந்த ஏரிக்கரையில் சிரஞ்சீவியான ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார்.
ஏரியின் தென்கிழக்குப் பகுதியில் அழகே உருவாய் கோயிலும் மூர்த்தியும் புகழ்பெற்று விளங்குகிறது.

மூலவராக வீற்றிருக்கும் ஆஞ்சநேயர் செந்தூரம் பூசப்பட்ட திருக்கோலத்துடன் காட்சி தருகிறார்.
பிரேம் பீகுஜி மகராஜ் என்பவரால் 1961ம் ஆண்டு கட்டப்பட்ட இக்கோயிலில், தினமும் நடைபெற்று வரும் 'ராம் தூன்' என்ற 'ராம நாம சங்கீர்த்தனம்' மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.*

*1964ம் ஆண்டு முதல் இந்த ராம பஜன் தொடர்ந்து இடைவெளி என்பதே இல்லாமல் நடைபெற்று வருகிறது.*
*24 மணி நேரமும், ஸ்ரீராம ஜயராம ஜய ஜய ராம என்ற பதின்மூன்று அட்சரம் கொண்டு ராம மந்திரம் இங்கே இடைவிடாமல் ஜபிக்கப்பட்டு வருகிறது.*

இந்த ராமநாம சங்கீர்த்தனத்தில் பக்தர்கள் பங்கேற்க விரும்பினால் இரண்டுர நாட்களுக்கு முன்பே திருக்கோயில் நிர்வாகத்திடம் முன் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் நிர்வாகம் திருக்கோயில் அறவிப்பு பலகையில் அறிவித்துள்ள கால நேரப்படி, முன்னரே பதிவு செய்து கொண்ட பக்தர்கள் தவறாமல் வந்து பஜனையில் பங்கேற்க வேண்டும்.

இந்த ஜப சேவையில் சிறியவர், பெரியவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற எந்த வேறுபாடுமின்றி அனைவரும் கலந்து கொள்கிறார்கள்.*
இப்படி 'ராம் தூன்' பஜன் தொடர்ந்து இடைவிடாமல் நடைபெற ஆலய நிர்வாகம் எல்லாவித முன்னேற்பாடுகளையும் செய்கிறது.

முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் உரிய காலத்தில் வராத பட்சத்தில் நான்கு பேர் அடங்கிய
ஒரு பஜனைக் குழுவினை எந்நேரமும், எந்தவிதமான சூழ்நிலையிலும் எதிர்கொண்டு நாம பஜனை செய்திடத் தயாராக வைத்திருக்கிறார்கள்.*

*அகண்ட நாம சங்கீர்த்தனம் என்ற இந்தத் தொடர் பஜனையை கின்னஸ் உலக சாதனையாக 1984ல் உலக சாதனைப் பட்டியலில் சேர்த்துக் கௌரவித்துள்ளார்கள்.
கடந்த 2001ம் ஆண்டில் குஜராத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் போதும், இந்த அனுமன் கோயிலுக்க எந்தவிதச் சேதமும் ஏற்படவில்லை.

ராமநாம பஜனும் எந்தவிதமான தடங்களும் இன்றி தொடர்ந்து நடந்த வண்ணமிருந்தது என்பதே இத்தலத்து அனுமனின் ஆற்றலுக்குச் சான்றாக உள்ளது.*
*ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம !*

#ராம_நாம_ஜெபம்

#ஜெய்_ஸ்ரீராம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Oct 20
#நர_நாராயணர்கள்

#நர_நாராயணர்கள்_மகிமை;

தவத்தின் மகிமையை உலகுக்கு எடுத்துக்காட்ட மகாவிஷ்ணு எடுத்த இரட்டை அவதாரமே நர நாராயணர்கள்.

கடவுள் மனிதனாகவும், மனிதன் கடவுளாகவும் ஆகமுடியும் என்ற தத்துவத்தை விளக்கும் புராணக்கதை இது.
மகாவிஷ்ணுவுக்குப் பல்வேறு திருநாமங்கள் உண்டு. அவற்றில் முக்கியமான, 245-வது நாமம் 'நாராயணா’ என்று விஷ்ணு ஸஹஸ்ரநாமம் கூறுகிறது.

நாராயணா என்றால், 'எல்லா ஜீவன்களும் உறையுமிடம்’ என்று பொருள்.
ஸ்ரீமந் நாராயணனிடமிருந்துதான் சப்தரிஷிகளும், தேவர்களும், பஞ்சபூதங்களும், அனைத்து ஜீவராசிகளும் தோன்றியுள்ளன என்று விஷ்ணுபுராணம் கூறுகிறது.

'ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திரம் பகவான் விஷ்ணுவைச் சரணடையவும், மோக்ஷத்தை அடையவும் வழிவகுக்கும் உன்னத மந்திரம் என்று புராணங்கள் கூறுகின்றன.
Read 26 tweets
Oct 20
*#நவதிருப்பதி_திருத்தலங்கள்*

தசாவதாரமும் நவகிரகங்களும் :

பொதுவாக சிவன் கோயில்களில் மட்டுமே நமக்கு நவகிரகங்களின் தரிசனம் கிடைக்கும்.

பெருமாள் கோயில்களில் நவகிரகங்களுக்கு பதிலாக, சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்வோம்.
வைணவ ஸ்தலமான மதுரை கூடலழகர் திருக்கோயிலில் நவகிரகங்களின் சன்னதி உள்ளது.

ஒன்பது கிரகங்களையும் வணங்கும் விதமாக தசாவதார சுலோகம் உள்ளது.
ராமாவதார சூர்யஸ்ய சந்திரஸ்ய யதநாயக
நரசிம்ஹோ பூமிபுதரஸ்ய யௌம்ய சோமசுந்த்ரஸ்யச
வாமனோ விபுதேந்தரஸிய பார்கவோ பார்கவஸ்யச :
கேதுர்ம் நஸதாரய்ய யோகசாந்யேயிசேகர

என்ற ஸ்லோகத்தை அடிப்படையாகக் கொண்டு,
Read 36 tweets
Oct 19
#எம_தீபம்

மிக மிக முக்கியமான பதிவு :

பலரும் அறிந்திராத எம தீபம் :

தீபாவளிக்கு முந்தைய நாள் அன்று எம தீபம் ஏற்றுங்கள் !

எம தீபம் பற்றிய விளக்கம்:

தீபாவளிக்கு முந்தைய தினத்தன்று எம தீபம் ஏற்றுவது நம் மரபு. Image
எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும்.

தொழில் முன்னேறும்.

திருமணத் தடைகள் விலகும், சொத்துகள் சேரும்.

அனைத்துவிதத் தடைகளும் நீங்கி, வாய்ப்புகள் தானாகவே வரும்.

மாஹாளய பட்சத்தில் பூலோகத்துக்கு உங்கள் முன்னோர்கள் வருகிறார்கள்.
அவர்களுக்கு மாஹாளய அமாவாசை அன்று நீங்கள் திதி கொடுத்து இருப்பீர்கள்.

அப்படி வந்த அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது “எம தீபம்” மட்டுமே.

அத் தீபத்தை நீங்கள் தீபாவளி காலத்தில் வருகிற திரயோதஸி திதியில் ஏற்ற வேண்டும்.
Read 6 tweets
Oct 19
#நலன்_நிலன் :

" சுதீட்சண முனிவரின் ஆஸ்ரமத்தில் ஒரு நாள் பூஜையறையில் பாத்திரங்கள் உருளும் சப்தம் கேட்டது.

முனிவர் சென்று பார்த்த போது அவர் பூஜைக்கு வைத்திருந்த சாளக்கிராமங்களை இரண்டு குரங்குகள் தலைக்கு ஒன்றாக எடுத்துச் செல்வதைக் கண்டார்.

அவற்றின் பின்னால் ஓடினார். Image
அவை அதை ஏரியில் எறிந்து விட்டு ஓடி விட்டன.

பிறகு முனிவர் அதை தேடி பிடித்து மீண்டும் ஆஸ்ரமத்திற்கு கொண்டு வந்து சேர்த்தார்.

இப்படி ஒரு முறை அல்ல பலமுறை நடந்தது.
அவருக்குக் கோபம் வந்தது.

எனினும் குரங்குகளுக்குச் சாபம் கொடுத்து என்ன பயன்? என்ற எண்ணம்தான் அவருக்குத் தோன்றியது.
பிறகு சிறிது யோசித்து விட்டு,

ஏ.... குரங்குகளே....இனி நீங்கள் இருவரும் எதைத் தண்ணீரில் எறிந்தாலும் அவை மிதக்கக் கடவது என்று சாபம் கொடுத்தார்.

அன்று முதல், அவரது சாளக்கிராமங்கள் அந்தக் குரங்குகளால் அவ்வப்போது ஏரியில் எறியப்பட்டு மிதப்பதும்,
Read 7 tweets
Oct 19
#குடந்தை_நகர்_சிவன்_கோவில்_வழிகாட்டி

அனைவருக்கும் மிக மிக உதவும்  பயனுள்ள பதிவு...!

ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் ஒரு Code Number உள்ளது.

Google Map-ல் அதனை Type செய்தால் கோயிலை எளிதில் அடையலாம்.

திருக்கோயிலின் Code Number கோயிலின் பெயருக்கு அருகில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
I. கும்பகோணம் to திருவைக்காவூர்

1. திருக்கொட்டையூர் - கோடீஸ்வரர் திருக்கோயில் (NCN044)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.
2. திருவலஞ்சுழி - கபர்தீஸ்வரசுவாமி திருக்கோயில் (SCN025)
(தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்)
திருக்கொட்டையூரிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது.

3. சுவாமிமலை - சுவாமிநாதசுவாமி திருக்கோயில்
(முருகரின் நான்காவது படை வீடு)
திருவலஞ்சுழியிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.
Read 42 tweets
Oct 18
#செவ்வாய்க்கிழமை_விரதம்

மங்களகாரகன் என்று அனைவராலும் போற்றப்படுவது செவ்வாய்.

வீரத்தின் நாயகன் செவ்வாய்க்கு உகந்த நாள் செவ்வாய்கிழமை.
புனிதமான இந்த கிழமையைத் தான் பலரும் விரதமிருக்க தேர்ந்தெடுக்கின்றனர்.

முருகனுக்கும், அம்மனுக்கும் உகந்த கிழமை செவ்வாய்.

செவ்வாய்க்கு மங்களன், பூமிகாரகன் என்று பெயர் உண்டு.

பெயரிலேயே மங்களம் இருப்பதால், அந்நாளில் தொடங்கும் செயல் சுபமாக நிறைவேறும்.
ஒருவர் வீடு கட்ட வேண்டுமென்றால் செவ்வாய் கிரகத்தின் அனுகூலம் இருக்க வேண்டும்.

தமிழ்க்கடவுளான முருகப் பெருமான் செவ்வாய்க்குரியவர்.

இவரை வணங்கி துவங்கும் செயல்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை.

கேரள மக்கள் செவ்வாய்க்கிழமையில் திருமணம் நடத்துகின்றனர்.
Read 22 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(