*மஹா பெரியவா ஒரு சிறு குறிப்பு:*

1)இவர் மிக இளம் வயதிலேயே சந்நியாசம் மேற்கோண்ட காஞ்சி சங்கர மடாதிபதியாவார்.

2)10 வயதிலேயே அப்பொறுப்பிற்கு வந்தவர்.

3)நான்கு வேதம் ஆறு சாஸ்த்திரம் புராணங்களை சுயமாக கற்றுத்தேர்ந்தவர்.

4)சுமார் 18 மொழிகளில் பேச எழுத படிக்கத் தெரிந்தவர்.
5)தமிழ் மொழி குறிப்பாக கல்வெட்டு மொழிகளில் இலக்கணத்தோடு விவாதிக்கும் ஆற்றல் பெற்றவர்.

6)இந்து மத வேதங்கள் உபநிடதங்கள் தழைக்க அருளியவர்.
7)எண்ணற்ற வசதிகள் அருட்கொடையாளர்கள் வழங்கிய போதும் கால்நடையாகவே இந்தியா முழுவதும் மும்முறை வலம்வந்து ஒவ்வொரு 15-Km அருகிலுள்ள கிராமத்தில் தங்கி பக்தி நெறி பரப்பியவர்

8) எவ்வளவு வசதிகளிருப்பினும் மாட்டுத்தொழுவத்தில் படுத்துறங்கியவர்.
9) எண்ணற்ற உணவுகள் வந்தும் அதைத் தவிர்த்து நெல் பொறி போன்ற ஆகாரம் அதுவும் ஒருவேளை மட்டும் உண்டு வாழ்ந்தவர்.

10)எளிமையான மக்களுக்கு பக்தி நெறியே சிறந்தது என அருளிய அருட்கொடையாளர்.

11)99 வருடங்கள் வாழ்ந்து 100 ஆண்டில் சில மாதங்கள் வாழ்ந்தவர்.
12)அதிகப்படியான 88 சாதூர்மாஸ்யம் என சந்திர பிறையை பார்த்தவர் (சந்யாசிகளின் வயதை கணக்கிடும் முறை) 

13)உலகம் முழுவதுமுள்ள இந்துக்களின் ஆன்மீக குரு. மேலும் எண்ணற்ற மனிதர்களின் சாதி மதம் கடந்த ஆதர்ஸன குரு.
14)போப் ஜான் பால் 2, முகம்மது கொமேனி, தலாய் லாமா, மேல் மருவத்தூர் போன்ற ஆன்மீக பிற மத குருமார்கள் இவருடன் பேசி தொடர்பிலிருந்தார்கள்.

15)இவர் சமாதி அடைந்த நேரத்தில் எண்ணற்ற முஸ்லீம்கள்/கன்யாஸ்த்ரிகள் சிந்திய கண்ணீரைப்பார்த்து இந்து மதத்தினர் கூட ஆச்சர்யபட்டார்கள்.
16)Queen Elizabeth /Canadian President முதல் உள்ளூர் அரசியல் பிரமூகர் வரை இவரிடம் தனி மதிப்பு வைத்திருந்தனர்.

17) கடவுள் நம்பிக்கையற்ற M.R. ராதா; ப்ளீட்ஸ் ஆசிரியர் கரஞ்சியா கண்ணதாசன் போன்றோரும் பின்னாளில் இவரை சந்தித்து ஆன்மீகவாதியானார்கள்.
18)கலைஞர் அவர்களின் காஞ்சியிலே ஒரு பெரியவருண்டு என்ற பேச்சு இவரது உள்ளன்பை வெளிப்படித்திய கட்டுரையாகும்.முனி வாழ்க்கை வாழ்ந்தார் எனவும் பேசியுள்ளார்.
19)காஞ்சி சங்கரமடத்திற்கு ஒட்டியுள்ள சிறு மசூதி தாமே மனமுவந்து வழங்க வந்தபோது அதை மறுத்து உங்களின் பாங்கொலியில் அல்லாவிடமிருக்கிறேன் என பகர்ந்தவர்..5 வேளை தொழுக முஸ்லீம்களை வலியுறுத்தியவர்.
20)உலகப் புகழ் வாய்ந்த கிறிஸ்தவ பாடகர் இந்துமதம் தழுவ அவரிடம் சென்ற போது "உன் மதத்தில் என்ன இல்லை என இங்கு வருகிறாய் "என வினவி இன்றளவும் அப்பாடகர் தன் கிருத்தவ மதத்திலேயே இருக்கச் செய்தவர்.
21)நீதியரசர் மூ.மூ.இஸ்மாயில் அவர்களின் எண்ணற்ற சந்தேகங்களுக்கு அறிவு விளக்கமும் சிக்கலான தீர்ப்புகளில்"உள்முகமாக" உதவியவர் என அவர் வாயிலாகவே வெளிப்படுத்தியுள்ளார்.

22)சுதந்திர போராட்டத்தில் தானும்கலந்து , சாத்வீகமான அவர் முறையில் மக்களை கலந்து கொள்ளச்செய்தவர்.
23)ரமண பகவான் புகழ் 
வெளியுலகுகத் தெரிய
காரணமாயிருந்த "பால் பிரண்டன் "என்ற ஐரோப்பிய பயணி ஞானம் தேடி இவரை அணுகியபோது உனக்கான குரு திருவண்ணாமலையில் இருக்கிறார் என சிஷ்யனுக்கு குருவைக்காட்டிய 
ஞான குரு.
24)தன்னை நாடி இன்றளவும் வரும் எண்ணற்ற ஆத்மாக்களுக்கு அற்புதங்கள் நிகழ்த்திக்கொண்டிருப்பவர்.

25)தர்க்க சாஸ்திரம் ஜோதிடம் மருத்துவம், வான சாஸ்திரம் போன்றவற்றில் அத்துறையில் வல்லுவர்களோடு உரையாடும் அளவு ஆழ்ந்த ஞானமுள்ளவர்.

26) எண்ணற்ற நூல்கள் வியாக்கியானம் எழுதியவர்.
27)திருப்பாவை திருவெம்பாய் திருப்பள்ளி எழுச்சி தேவாரம் திருவாசகம் திவ்விய பிரபந்தம் போன்றவை இன்று எழுச்சியோடு கோவில்களில் பாடப்படுவதற்கு இவரது எழுச்சியூட்டலே காரணமாகும்.
28)இன்றளவும் நாகப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரத்தில்  விளையும் முதல் சாகுபடி நாகூர் ஆண்டவருக்கே அர்ப்பணியுங்கள் என்று கூறியவர்.
29)டாடாவிலிருந்து பிர்லா நாட்டுக்கோட்டையார் ஆற்காடு நவாப்கள் VGP போன்ற அனைத்து மதத்தினருக்கும் "மக்கள் சேவையே மகேசன் சேவை" என உணர்த்தி அப்பாதையில் இவர்களை திருப்பச் செய்து இழுத்து வந்தவர்.
30)இன்று பிரதோஷம் போன்ற கூட்டங்கள் சேர்வதற்கு இவரே காரணம்.பல ஆயிரம் ஆலயங்களில் இன்று ஒரு வேளை பூஜையாவது நடைபெறுவதற்கு இவரே காரணம்.

31) இசைஞானி இளையராஜா இவர்மீது ஆழ்ந்த பற்று கொண்டவர்.
32) விமான விபத்தில் 300 பேர் இறந்த போது கூட்டுபிரார்த்தனை என ஒன்றை ஏற்படுத்தி மோக்ஷ தீபம் என்ற முறையை ஏற்படுத்தியவர்.

வேதாத்ரி மகரிஷி, விசிறி சாமியார் ரவிசங்கர் குருஜி தலாய் லாமா போன்றோர் இவரிடம் தனிப்பட்ட முறையில் மரியாதை வைத்திருந்தனர்.
இப்படி சிறுவராக இளைஞராக மனிதராக தனி ஒருவராக ஞானியாக அவதரித்த அற்புத மகான்

உலகிலுள்ள அனைத்து மத நல்லுள்ளங்களாலும் 
"காஞ்சிப் பெரியவர்", 
"மகா பெரியவா" , "நடமாடும் காமாக்ஷி" என போற்றப் படுபவரின் பெயர்

*சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்!*
இது அவர் புகழில் ஒரு பகுதியே... தெய்வத்தின் புகழை யார் தான் முழுவதும் உரைக்க முடியும்...

#ஜெய_ஜெய_சங்கர...

#ஹர_ஹர_சங்கர...

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

Nov 7
*கஞ்சமலை சித்தேஸ்வரர்*

சித்தர் கோயில் ஒன்றில், கிரிவலம் நடப்பது சிறப்பம்சமாகும்.  

அழகிய விமானத்துடன் கூடிய சிறிய கோயில் உள்ளது. காலாங்கிசித்தரும், திருமூலரும் மலை உச்சியில் இருந்த கோயிலுக்கும் பாதை இருக்கிறது. 

1 Image
இங்கு நடந்து தான் செல்ல முடியும். கோயிலுக்குள் சித்தர் சன்னதியைத் தவிர விநாயகர், சுப்பிரமணியர் மட்டுமே உள்ளனர். கி.மு.5ம் நூற்றாண்டு கால கோயில் இது. 

2
மலையடிவாரத்தில் இருந்து சற்று தூரம் நடந்தால் சமீபத்தில் உருவாக்கப்பட்ட முருகன் கோயில் உள்ளது. "ஞானசற்குரு பால முருகன்' என இவரை அழைக்கின்றனர். நாரதர், சிவனுக்கு உபதேசிக்கும் முருகன் சிலைகள் சிறப்பாக இருக்கின்றன. 

3
Read 22 tweets
Nov 6
#படித்ததில்_பிடித்தது

உடல் நலம்:

குளிர் காலம் ஆரம்பமாகிவிட்டால்
Middleage, senior citizens க்கு 
பொதுவாக ஒரு problem வரும்.

Cramp...

பெரும்பாலும் இரவு நேரத்தில் வரும். கெண்டைக்கால் சதை, கால் விரல்கள், பாதங்கள், etc ,etc severe தசை பிடிப்பு.
சதையும் நரம்புகளும் சேர்ந்து கட்டி போல் ஆகிவிடும். வலி உயிர் போய் விடும். எழுந்திருக்கவும் முடியாது படுக்கவும் முடியாது. யாராவது உதவ வேண்டும்.
அந்த கடின தசை பகுதியை மெல்ல அழுத்தமாக தடவி, சமநிலைக்கு கொண்டு வர வேண்டும். பின் Volini gel ஏதாவது தடவ வேண்டும். இரண்டு நாட்களுக்காவது அந்த வலி லேசாக இருக்கும்.
Read 16 tweets
Nov 6
*ஒன்று வந்தால் மற்றொன்று போய்விடுமாம்*

*எது வந்தால் எது போகும்?*

1. முதுமை வந்தால் அழகு போகும்.
2. பொறாமை வந்தால் தர்ம மார்க்கம் போய்விடும்.
3. கோபம் வந்தால் செல்வம் போய்விடும்.
4. பேராசை வந்தால் தைரியம் போய்விடும்.
5. கெட்டவர்கள் சவகாசம் வந்தால் நமது ஒழுக்கம் போகும்.
1. முதுமை வந்தால் அழகு போகும்.
இளமையில் இருக்கும் உடல் அழகு முதுமை வந்து விட்டால் போய்விடும். இது இயற்கை.
2. பொறாமை வந்தால் தர்ம மார்க்கம் போய்விடும்.
நமக்கு அடுத்தவரைப் பார்த்து பொறாமை வராதவரை நாம் தர்ம மார்கத்தில் இருப்போம்.எப்போது பொறாமை வருகிறதோ , உடனே நாமும் அவர் போல் இருக்க வேண்டும் என ஆசைப்படுவோம்.
Read 9 tweets
Nov 6
கேரளா பல்லசேனா ஶ்ரீ மீன்குளத்தி அம்மன்
திருக் கோயில்
இத்திருத்தலம் கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் பசுமையான அழகிய நெல் வயல்களுக்கு மத்தியில்
பல்லசேனா எனும் இடத்தில் அமைந்துள்ளது.

1
பல்லசேனா கிராமம் பால்காட் நகரத்திலிருந்து 18 கிமீ தொலைவில் உள்ளது. திருச்சூர் 56 கி.மீ. கொடுங்கல்லூர் 93 கி.மீ. சோட்டானிக்கரை 120 கி.மீ.பொள்ளாச்சி 42 கி.மீ. கொயம்புத்தூர் 68 கி.மீ. தூரம் உள்ளது.  

2
பால்காட்டில் இருந்து இந்த இடத்திற்கு KSRTC பேருந்துகள் மற்றும் பிற தனியார் பேருந்துகள் உள்ளன. தனியார் வாகன வசதி உள்ளது.

இக்கோயில் மண்ணடியர் குடும்பத்தால் நிறுவப்பட்டது. இந்தக் குடும்பம் தமிழ்நாட்டின் சிதம்பரத்தைச் சேர்ந்தது.

3
Read 27 tweets
Nov 5
அடர்ந்த அச்சமூட்டும்
காட்டுப் பகுதியில் ஆழ்ந்த தவத்தில் இருந்தார் அந்த மகரிஷி, 

அவர் தவத்தின் போது அவ்வப்போது  கண் திறக்காமல் தினமும் ஒருமுறை கையை நீட்டுவார், 

கையில் யாராவது எதையாவது வைத்தால் அது என்ன ஏதென்று பார்க்காமல் அப்படியே விழுங்கி விடுவார் அந்த  முனிவர்,
கையை நீட்டும் நேரம் பார்த்து பக்தர்கள் நறுக்கிய கனிகள், 
அப்பம் முதலியவற்றை வைப்பார்கள் இதனால் தங்களுக்கும் புண்ணியம் சேரும் என்றும் அவர்களும் கருதினர்.
ஒருநாள் அந்த நாட்டின் அரசன் வேட்டைக்கு வந்தான், 
அன்று பக்தர்கள் யாருமே வரவில்லை அந்நேரம் 
பார்த்து மகரிஷி கையை நீட்டினார் மன்னன் மகரிஷியைப் பரிகாசம் செய்யும் நோக்கத்தில் 
தான் வந்த குதிரை போட்ட சாணத்தில் சிறிது எடுத்து மகரிஷியின் கையில் வைத்தான்
Read 20 tweets
Nov 5
*ஒரு அனுபவம் மிக்க தோட்டக்காரர் அவருடைய தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது பறவையின் சிறிய கூடு ஒன்றைக் காண்கிறார்..*
அதன் அருகில் போய் அந்த கூட்டில் என்ன இருக்கிறது என்று பார்க்க ஆசைப்பட்ட தோட்டக்காரர் அதன் அருகில் சென்று பார்த்த போது அதில் *பறவையின் சில முட்டைகள் இருப்பதைக் கண்டு அந்த கூட்டைப் பத்திரமாக எடுத்து வைத்துவிட்டுச் செல்கிறார்.
அடுத்த நாள் வந்து பார்க்கிறார்..அந்த *முட்டைகளில் ஒரு சிறிய வெடிப்பு (cracks) ஏற்பட்டிருப்பதைக் காண்கிறார்.* அப்போது இந்த முட்டைகளிலிருந்து குஞ்சிப் பறவைகள் வெளிவரப்போகிறது என்பதை உணர்ந்த தோட்டக்காரர் சந்தோசத்தில் கூட்டை மேலும் கவனமாகப் பார்த்துக் கொண்டார்.
Read 18 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(