M.SivaRajan Profile picture
Nov 10 16 tweets 3 min read
#கடன்_நிவர்த்தி

*தீராத கடன் பிரச்சனை தீர எருமைக்கன்று நேர்த்திக்கடன்!!!

தஞ்சாவூருக்கு அருகில் வல்லம் எனும் ஊருக்கு அருகில் அமைந்துள்ளது கெளரியம்மன் திருக்கோயில்.

சோழர்கள் காலத்துக் கோயில். கரிகாற் சோழன் காலத்துக் கோயில்.

சக்தியும் சாந்நித்தியமும் நிறைந்த ஆலயம்
என்கிறார்கள் பக்தர்கள்.

சோழரின் கட்டிடக் கலைக்கு எடுத்துகாட்டாக விளங்கும் கோயிலின் கருவறை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. 

தஞ்சாசுரன் எனும் கொடிய அரக்கன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் செய்து, தவத்தின் பலனாக வரம் கிடைக்க வேண்டும் என விரும்பினான்.
சிவபெருமானும் வரம் தர முன்வந்தார். அவனும் வரம் கேட்டான்.

‘சிவபெருமானாகிய நீங்கள், மகாவிஷ்ணு, பிரம்மா என மூவராலும் எனக்கு மரணம் வரக்கூடாது.

மேலும் எந்த ஆணாலும் எனக்கு உயிர் போகக்கூடாது.

பெண்ணைத் தவிர யாராலும் எதுவாலும் நான் மாண்டு போகக்கூடாது.
இந்த ஊர் என் பெயரால் அழைக்கப்பட வேண்டும்’ என்று வரம் கேட்டான். அப்படியே தந்தார் சிவனார்.

அவ்வளவுதான். பேயாட்டம் ஆடினான் தஞ்சாசுரன். தேவர்கள் கலங்கினார்கள். முனிவர்கள் நடுங்கினார்கள்.

மக்கள் எல்லோரும் கண்ணீர் விட்டு கதறினார்கள்.
தேவர்களும் முனிவர்களும் பிரம்மாவை சந்தித்து முறையிட்டார்கள்.

மகாவிஷ்ணுவை சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்கள்.

பிரம்மாவும் மகாவிஷ்ணுவும் சிவபெருமானை சந்தித்து வணங்கினார்கள்.

‘எந்த ஆணாலும் உயிர் போகக் கூடாது என்றும் நம் மூவராலும் உயிர் போகக் கூடாது என்றும் அவன் வரம் கேட்டான்.
நீங்களும் கொடுத்துவிட்டீர்களே…

இது நியாயமா? என்ன செய்வது?’ என்று வேண்டினார்கள்.

சிவபெருமான், உமையவளைப் பார்த்தார். அழைத்தார். பார்வதி தேவி புரிந்துகொண்டார்.

தன் வாகனமான சிங்கம் கர்ஜித்து வந்தது. அதில் அமர்ந்துகொண்டாள்.
கௌரி காளியானாள். எண்கரங்களிலும் ஆயுதங்கள் ஏந்தி, ரத்தச் சிவப்பேறிய கண்களுக்குள் கோபம் கொப்பளிக்க, தஞ்சன் முன்பு தோன்றினாள்.

தஞ்சன் வெறிபிடித்து அலறினான். யுத்தத்துக்குத் தயாரானான். வில் வளைத்து மழையாகப் பாணங்களை தொடுத்தான்.

தேவி தன் சிறு அசைவால் அந்த பாணங்களைப் புறந்தள்ளினாள்.
சிம்மத்தின் மீதேறி அமர்ந்து கர்ஜித்தாள்.

தஞ்சனின் மார்பு மீது கதையால் அடித்து உதைத்துத் தள்ளினாள்.

மாய உருவங்கள் எடுத்து அம்பிகையை தாக்கினான் தஞ்சன்.

இறுதியில் தன் மூதாதையர் போல எருமை உருகொண்டு ஆக்ரோஷமாக தேவி மீது பாய்ந்தான்.
சிறிதும் தயங்காமல் கௌரியானவள் தஞ்சாசுரனின் தலையை சீவி எறிந்தாள்.

தேவர்கள் ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார்கள்.

தஞ்சனை வதைத்த பின்னும் சீற்றம் குறையாத தேவி, வனமெங்கும் அலைந்தாள்.

அவளுடைய வெப்பத்தால் நீர் நிலைகள் வறண்டன.
தேவர்களும், மனிதர்களும் சிவனிடம் முறையிட்டனர்.

ஈசனும் ‘ஏ, கௌரி, சாந்தம் கொள்’ என்று கேட்டுக் கொண்டார்.

அமைதியடைந்த தேவி நெல்லிப் பள்ளம் என்று அழைக்கப்பட்ட வல்லத்தில் அமர்ந்தாள்.

சீற்றம் குறைந்து கருணை கொண்டாள். அண்டி வந்தவர்களுக்கு வேண்டியதை அள்ளிக் கொடுத்தாள்.
அசுரன் கேட்டுக் கொண்டபடி அவன் பெயராலேயே அவ்வூருக்கு தஞ்சாவூர் என பெயரிட்டார்கள். அம்மன், ஏகெளரியம்மன் என்றே அழைக்கப்படுகிறாள்.

தஞ்சாவூரில் இருந்து திருச்சி செல்லும் வழியில், தஞ்சாவூருக்கு அடுத்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது வல்லம்.
இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில், ஒரு கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது ஏகெளரியம்மன் கோயில்.

இங்கே சந்நிதியில், உக்கிரமாகவும் அதேசமயம் சாந்தசொரூபினியாகவும் வீற்றிருக்கிறாள் கெளரியம்மன்.
இந்த அம்மன் எட்டு திருக்கரங்களுடன் பத்ம பீடத்தில் காட்சியளிக்கிறாள்.

காவல் தெய்வமாகவும்,எல்லை தெய்வமாகவும் திகழும் இந்த அம்மனை வணங்கினால் தைரியம் கிட்டும் என்பது ஐதீகம்.
அந்தக் காலத்தில், போருக்குப் புறப்படுவதற்கு முன்பு ஆயுதங்களை இவளின் திருவடியில் வைத்து பூஜைகள் போடப்பட்டுத்தான் எடுத்துச் செல்வது வழக்கம் என்கிறார்கள்.

தீராத கடன் பிரச்சினை, தீராத நோய், தீராத பகை என்று கலங்கித் தவித்து மருகியவர்கள்,
கெளரியம்மனிடம் மனதார வேண்டிக் கொண்டால், விரைவில் கடன் பிரச்சினை தீரும், தீராத நோயும் குணமாகும், பகை அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.

வேண்டுதல் நிறைவேறியவர்கள், அம்மனுக்கு எருமைக்கன்று வழங்கி, தங்கள் பிரார்த்தனையை, நேர்த்திக்கடனைச் செலுத்துகிறார்கள்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Nov 11
#குல_தெய்வ_வழிபாடு

#குல_தெய்வ_பரிகாரம்

*குலதெய்வ கோபம் தணிய 200 வருடத்திற்கு முன்புள்ள பரிகாரம் :*

குலதெய்வ கோபம் தணிய 200 வருடங்களுக்கு முன்பு செய்யபட்டு வந்த பரிகாரம் ஒன்று உள்ளது.

அதன் விபரம் :

*தேவையான பொருட்கள்*

எழுமிச்சை , தாமரைநூல், சாதா திரி, வேப்ப எண்ணெய்.. Image
வீட்டின் அருகில் உள்ள அம்மன் கோயிலுக்கு மாலை 6.45க்கு மேல் (அது சூரியன் முழுமையாக அஸ்தமனம் அடையும் நேரம்)சென்று எழுமிச்சை பழத்தை தரையில் வைத்து உருட்டிவிட்டு,

அதன் தலைப்பகுதியில் சிறிதாக துளையிட்டு உள்ளிருக்கும் சாறு விதைகளை நீக்கிவிடவேண்டும்.
பின்பு வேப்ப எண்ணையை அதில் நிரப்ப வேண்டும் .

பின்பு சாதா திரியையும் தாமரைநூலையும் இணைத்து அந்த கனியின் உள்ளே செலுத்தி தீபம் ஏற்றி இரு கைகளிலும் வைத்துக் கொண்டு அம்மனிடம் குலதெய்வ கோபம் நீங்க அருள்புரியுமாறு வேண்டிக் கொள்ள வேண்டும்..
Read 5 tweets
Nov 11
#சிவபுராணம்

சிவபுராணம் என்றால் என்ன? அதை தினமும் படிப்பதால் வரும் பயன்கள் என்ன?

சிவபுராணத்தின் பெருமைகள் :

1. தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார். Image
2. வந்தவர் மாணிக்கவாசகர் பெருமானிடம் தாங்கள் எழுதிய ' திருவாசகத்தை' நீங்கள் ஒருமுறை சொன்னால் அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறேன் என்றார்.

3. மாணிக்கவாசகர் அமர்ந்து இருந்தபடியே 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் சொல்ல சொல்ல, பெருமான் எழுதிக் கொண்டார்.
4. மறுநாள் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று ஆலயத்திற்கு வந்த தில்லை வாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சதர்கள் கூத்தபெருமான் சன்னதியில் நிறைய ஓலைச்சுவடிகளை கண்டு திகைத்து போயினர்.
Read 14 tweets
Nov 11
#மோட்ச_தீபம்

*முன்னோர்களுக்கு மோட்சதீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டிய தலம்*

நவகயிலாயத்தில் ஒன்பதாவதாக விளங்கும் சேர்ந்தபூமங்கலத்தில் ஈசன் சுக்கிர அம்சமாக விளங்குகிறார். Image
அகத்தியர் தனது சீடர் உரோமச முனிவருக்காகத் தாமிரபரணி ஆற்றில் விட்ட ஒன்பது மலர்களில் ஒன்பதாவது மலர் சேர்ந்த இடம்.

இதனால் இவ்வூருக்குச் சேர்ந்த பூமங்கலம் என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.
தாமிரபரணி ஆறு கடலோடு சங்கமிக்கும் இடம் என்பதால் சேர்ந்தமங்கலம் என்ற பெயர் வந்ததாகவும் ஒரு சிலர் கூறுகிறார்கள்.

இரண்டும் சேர்ந்து “சேர்ந்தபூமங்கலம்” ஆயிற்று.

கோயிலுக்கு கோபுரம் கிடையாது. கொடிமரம் உள்ளது.
Read 11 tweets
Nov 11
#வெற்றிலை_வழிபாடு

ஒவ்வொரு ராசிக்குரிய வெற்றிலை வழிபாடு  

மேஷம்

வெற்றிலையில் மாம்பழம் வைத்து செவ்வாய்கிழமை 
முருகனை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் அகலும்.

ரிஷபம்

வெற்றிலையில் மிளகு வைத்து செவ்வாய்கிழமை 
ராகுவை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் விலகும் Image
மிதுனம்

வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து புதன்கிழமை இஷ்ட தெய்வத்தை  வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் விலகும்.

கடகம் 

வெற்றிலையில் மாதுளம்பழம் வைத்து வெள்ளிக்கிழமை 
காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கஷ்டம்  விலகும்.
சிம்மம் 

வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து வியாழக்கிழமை 
இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் விலகும்.

கன்னி 

வெற்றிலையில் மிளகு வைத்து வியாழக்கிழமை 
இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் தீரும்.
Read 6 tweets
Nov 11
#நவகிரக_பரிகார_கோயில்கள்

ஒன்பது கோள் தோஷ நிவர்த்தி தலங்கள்

சூரிய பகவான் வழிபாட்டிற்கு

1.அருள்மிகு சூரியணார் கோயில், சிவன்/காசிவிஸ்வநாதர்
2 அருள்மிகு பாபநாசம் சிவன் கோவில், பவநாசர்
3.அருள்மிகு. கொளப்பாக்கம் சிவன் கோவில்,
4.அருள்மிகு ஸ்ரீவைகுந்தம் சிவன் கோவில், கைலாசநாதர்
5.அருள்மிகு. பரிதிநியமம் சிவன் கோவில், பருதியப்பர்

சந்திர பகவான் வழிபாட்டிற்கு

1.அருள்மிகு திங்களூர் சிவன் கோவில், கைலாசநாதர்
2.அருள்மிகு.சேரன்மாதேவி சிவன் கோவில், அம்மைநாதர்
3.அருள்மிகு. சோமங்களம் சிவன் கோவில், சோமநாதர், சந்திரன்
4.அருள்மிகு. திருவரகுணமங்கை பெருமாள் கோவில், விஜயாசனர்

செவ்வாய் பகவான் வழிபாட்டிற்கு

1.அருள்மிகு. வைத்தீஸ்வரன் கோயில், வைத்தீஸ்வரர்
2.அருள்மிகு. கோடகநல்லூர் சிவன் கோவில், காசி விஸ்வநாதர்
Read 14 tweets
Nov 10
#முன்_ஜென்ம_வினைகள்_அகல

*முன் ஜென்ம தீவினைகள் நீங்க வழிபடவேண்டிய திருவாடானை திருக்கோயில்*

மதுரையிலிருந்து(100 கி.மீ) தொண்டி செல்லும் வழியில் திருவாடானை உள்ளது. சிவகங்கையில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ளது.
வருணனுடைய மகன் வாருணி.

ஒரு நாள் இவன் துர்வாச முனிவரின் ஆசிரமத்தில் தங்கினான்.

முனிவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார்.

அப்போது வாருணியுடன் வந்த நண்பர்கள் ஆசிரமத்தில் உள்ள பூ, பழங்களை வீசி எறிந்து துர்வாச முனிவரின் தவத்தை கலைத்தனர்.
துர்வாச முனிவர் கோபத்துடன், “வாருணி! நீ வருணனின் மகனாக இருந்தும், பொருந்தாத காரியம் செய்து விட்டாய்.

எனவே பொருந்தாத தோற்றமான, ஆட்டின் தலையும் யானையின் உடலுமாக மாறுவாய்” என சாபமிட்டார்.

ஆடு+ஆனை என்பதால் இத்தலம் வடமொழியில் “அஜகஜபுரம்” ஆனது.
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(