எப்படி??
ஒரே நாடு..
ஒரே மொழி...
வரலாறு முக்கியம்.. இந்தியா என்பது ஒற்றை தேசம் அல்ல. அது ஒற்றை தலைமையின் ஆட்சியில் வரலாற்றில் என்றுமே இருந்ததில்லை. ஒரே நாடு, ஒரே மொழி என்று இருந்ததில்லை. அதற்கென்று ஒற்றை அடையாளம் என்று எதுவும் இல்லை.

மாறாக இந்தியா என்பது, 1947ல்
பெரிய Image
பிரிட்டிஸ் இந்தியா மற்றும் , தனி மன்னராட்சி அதிகாரத்துடன் கூடிய அரசுகளான
1. ஐதராபாத் நிஜாம்
2. ஜம்மு காஷ்மீர் ராச்சியம்,
3. மைசூர் சமஸ்தானம்,
4. சிக்கிம் ராச்சியம்,
5. திருவிதாங்கூர் சமஸ்தானம
6. பரோடா அரசு,
மற்றும்
டல்ஹவுசி பிரபு அறிவித்த அவகாசியிலிக் கொள்கையின்படி,
பிரித்தானியாவின் இந்தியப் பேரரசுடன் இணைக்கப்பட்ட இந்திய மன்னராட்சி நாடுகளான

1. சதாரா அரசு 1848
2. நாக்பூர் அரசு 1854
3. தஞ்சாவூர் மராத்திய அரசு 1855
4. அயோத்தி இராச்சியம் 1859
5. அங்குல்(அனுகோள்) அரசு (Angul State-1848)
6. ஆற்காடு அரசு 1855
7. பண்டா அரசு (Banda State-1858)
8. குல்லர் அரசு (Guler State-1813)
9. ஜெயந்தியா அரசு (Jaintia State_1835)
10. ஜெய்த்ப்பூர் அரசு (Jaitpur State_1849)
11. ஜலாவுன் அரசு (Jalaun State_1840)
12. ஜஸ்வன் அரசு (Jaswan State_1849)
13. ஜான்சி அரசு (Jhansi State-1854)
14. கச்சாரி அரசு (Kachari State-1830)
15. காங்கிரா அரசு (Kangra State-1846)
16. கண்ணனூர் அரசு (Kannanur State-1819)
17. கிட்டூர் அரசு (Kittur State-1824)
18. குடகு இராச்சியம் (1834)
19. கொலபா அரசு (Kolaba State-1840)
20. கோழிக்கோடு அரசு (Kozhikode State-1806)
21. குல்லூ அரசு (Kullu State-1846)
22. கர்னூல் அரசு (Kurnool State-1839)
23. குட்லேஹர் அரசு (Kutlehar State-1825)
24. மக்கரை அரசு (Makrai State-1890 - 1893)
25. நர்குண்டு அரசு (Nargund State-1858)
26. பஞ்சாப் அரசு (Pañjab State-1849)
27. ராம்கர் அரசு (Ramgarh State-1858)
28. சம்பல்பூர் அரசு (Sambalpur State-1849)
29. சூரத் அரசு (Surat State-1842)
30. சிபா அரசு
31. துளசிப்பூர் அரசு (1859)
32. உதய்ப்பூர் அரசு, (சத்தீஸ்கர் மாநிலம்) (1860)

மேலும், ஏறக்குறைய 225 சிறு குறு மன்னராட்சி அரசுகளையும் உள்ளடக்கிய பல்வேறு இன, மொழி, கலாச்சாரங்களை உள்ளடக்கிய தனி நாடுகளாக இருந்தது.

1948 க்கு பிறகு
இவற்றை எல்லாம் ஒன்றிணைத்து உருவான பல நாடுகளின் கூட்டமைப்பு தான் இன்றைய இந்தியா என்பது கடந்த கால வரலாற்றை படித்தவர்களுக்கு நன்றாக தெரியும்.

இதில் எந்த நாடுகளும் ஒரே மொழியை பேசியதில்லை, ஒரே உணவு பழக்கத்தை கொண்டிருக்கவில்லை, ஒரே கலாச்சாரத்தை உடையதாக இல்லை, ஒரே தெய்வ வழிபாடு முறை
கொண்டிருக்கவில்லை, ஒரே நிறமும், தோற்றமும் கொண்டவர்களாக இருக்கவில்லை.

300 க்கும் மேற்றப்பட்ட நாடுகள் ஒரே கூட்டமைப்பில் இணைந்த ஒரே காரணத்திற்காக ஒரே கலாச்சாரம், ஒரே மொழி , ஒரே மதத்தை பின்பற்றி ஒரே குடிகளாக மாற வேண்டும் என்பதும், வாழ வேண்டும் என்பதும் அந்த மக்களின் மேல்
திணிக்கப்படும் அதிகார வன்முறை தான் அன்றி வேறில்லை.

இந்த 300 நாடுகளில் எதை நீங்கள் இந்திய தேசமாக சொல்கிறீர்கள்?
எந்த நாடு பழைய இந்தியா?
இந்திய தேசம் என்பதின் ஆரம்ப புள்ளி எந்த நாடு? என்று உங்களால் சொல்ல முடியுமா?

இத்தனை நாடுகளையும் 1948 ம் ஆண்டிற்கு பின் ஒருங்கிணைத்து
உருவாக்கிய மாநிலங்களின் கூட்டமைப்பு தான் இன்றைய இந்தியா.

இதை தான் டாக்டர் அம்பேத்கர் " India, that is Bharat, shall be a Union of States " என்று தான் உருவாக்கிய இந்திய அரசியல் சாசனத்தில் எழுதி இருக்கிறார்.

#ஒன்றிய_அரசு என்பது தான் அரசியல் சாசனம் சொல்வது. சட்டபடியானது.
#தமிழ்நாடு இந்திய ஒன்றியத்தின் தனி அடையாளமும், தனி மொழியும் கலாச்சாரமும் கொண்ட ஒரு மாநிலம். ..

இவ்வாறான பலஅடையாளங்களை மறைத்து பேரினவாதம் புரிவதால் மீண்டும் அடிமைத்தனத்துக்குள் பலஇனங்களை கட்டாயபடுத்தும் வேலையைத்தான் இன்றைய பாஜக அரசு முழு வீச்சாக செயல்படுத்த துடிக்கின்றது..

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தென்குமரி தென்றல்

தென்குமரி தென்றல் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Stalinkumari

Nov 17
டாக்டர்.கலைஞரின் சாதனைகளில் "ராஜமன்னார் குழு" அமைத்ததும் ஒரு பெரிய மைல் கல் எனலாம்..
19 ஆகஸ்ட் 1969 சட்டமன்றத்தில் ஒரு அறிவிப்பு வெளியாகிறது, மாநில அரசின் அதிகாரங்களை அதிகரிக்க ஓய்வு பெற்ற நீதி அரசர் திரு ராஜமன்னார் தலைமையில் மூன்று நபர் குழு ஒன்றை அறிவிக்கிறார்,தமிழ்நாட்டின்
முதலமைச்சர் கலைஞர். இப்படி நடப்பது இந்தியாவில் அது தான் முதல் முறை, டெல்லி சென்ற கலைஞரிடம் இந்த குழு பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் சொன்னது,” ஒன்றிய அரசின் சிரமங்களை அதிகார பகிர்வின் மூலம் தான் சரிசெய்ய முடியும் அதற்கு இத்தகைய குழு அவசியமான ஒன்று தான்” என்றார். இந்த
குழு அறிக்கை கலைஞருக்கு காணிக்கையாக்கப்பட்டுள்ளது(Tribute). அவரின் தொலைநோக்கு பார்வையையும் இந்தியாவின் கூட்டாட்சியின் மேல் அவர் கொண்டிருந்த அக்கறையையும் சுட்டிக்காட்டி இதை கலைஞருக்கு சமர்ப்பித்துள்ளார்திரு. ராஜமன்னார்.
சுயமரியாதையின் நீட்சி தான் மாநில சுயாட்சி, மாநிலங்கள்
Read 16 tweets
Nov 17
இன்று நாடார் குலமென்று நெஞ்சு நிமிர்த்தி திரிகிற சாணார்கள் 19 ஆம் நூற்றாண்டின் துவக்கம் வரை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் 18 வகை கீழ் சாதி பட்டியலில் தான் இருந்தார்கள்.

சக்கிலியனைத் தொட்டாதான் தீட்டு, ஆனால் சாணானைப் பார்த்தாலே தீட்டு என்று ஓரங்கட்டப்பட்ட சமூகம்.

ஆனால் இப்போது
குமரி மாவட்ட பாஜக வின் செங்கற்கள் இவர்களே.! சடை.. படை.. என்று பேசித் திரிந்த பழைய தமிழிசையும், மார்த்தாண்டத்தில் இரண்டரை வருடங்களாக விசித்திர பாலமொன்றை கட்டி, ஓராண்டுக்குள் குண்டும் குழியுமாக தேசிய நெடுஞ் சாலையை மாற்றிய பொறியியல் வல்லுநர் பொன்னாரும் இந்த சாணார் குலக் கொழுந்துகளே!
1754-ல் திருதாங்கூர் சமஸ்தானத்தின் இராணுவச் செலவுகளுக்காக, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டும் ‘தலைஇறை’ எனும் வரி விதிக்கப்பட்டது. இத்தலைஇறையைக் கட்ட முடியாமல் பலரும் வாழ வழி தேடி திருநெல்வேலிக்குத் தப்பியோடினர். 1807-ல் மட்டும் ஈழவர், நாடார், சாம்பவர் சாதி
Read 17 tweets
Nov 15
#பாரதியாரின்_பாடல்களில்_சாதி_ இல்லையா ?

குறிப்புகள்

1.பாடல் :

வந்தே மாதரம் - சரணம் -2 -
வரி -1 " ஆரிய பூமியில் "

2.எங்கள் நாடு -

பாடல் - 3- வரி 7 "உன்னத ஆரிய நாடெங்கள் நாடே "

3.பாரதமாதா -

(1)பாடல் -1,வரி 4 "ஆரிய ராணியின் வில்
(2)பாடல் -4 , வரி 4 " ஆரிய ராணியின் சொல்
(3)பாடல் -6 , வரி 4 " ஆரிய தேவியின் தோள் "

4.பாரத தேவியின் திருத்த சாங்கம் -

பாடல் 2 - நாடு ,வரி4 " ஆரிய நாடென்றே அறி "
5.தாயின் மணிக்கொடி
பாடல் 5 - வரி 5 " ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ ?" 6.தமிழ் நாடு -
பாடல் 2 வரி 1 " வேதங்கள் நிறைந்த தமிழ்நாடு "
7.தமிழ்த் தாய் ,

(1)பாடல் 1 ,வரி 2 "ஆரிய மைந்தன்"
(2)பாடல் 2, வரி 3-4 " உயர் ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன் "

8.தமிழ் சாதி ,

வரி 132-133 " ஆரிய நாட்டின் அறிவும் பெருமையும் "

9.வாழிய செந்தமிழ் ,
வரி 6 -7 " ஆரிய நாட்டினர் ஆண்மையோடியற்றும் சீரிய முயற்சிகள்"
Read 7 tweets
Oct 31
24, அக்பர் சாலை, டெல்லி காங்கிரஸ் கட்சி அலுவலகம். வரவேற்பு அறையில் அமர்ந்திருக்கிறார் ராஜீவ் காந்தி. அப்போது அவர் வளர ஆரம்பித்த இளம் தலைவர்.

இந்திய பிரதமரான அவரது தாய் இந்திரா காந்தி உள்ளே இருக்கிறார். முதியவர் ஒருவர் வருகிறார். கந்தல் ஆடை. கரங்கள் நடுங்குகின்றன. கரிசனத்துடன் Image
விசாரிக்கிறார் ராஜீவ். மத்தியப்பிரதேசத்தில் இருந்து வருவதாக கூறும் முதியவர், தனது கிராமத்தின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க பிரதமரிடம் மனு கொடுக்க வேண்டும் என்கிறார். அதிர்ச்சியடைகிறார் ராஜீவ்.

மத்தியப்பிரதேசத்தின் எங்கோ ஒரு மூலையில் இருந்து சுமார் 1,000 கி.மீ. தூரத்தைக்
கடந்து, ஏன் இவர் டெல்லிக்கு வர வேண்டும்? அக்கறையாக அருகில் ஒரு ஆள் இருந்தால் இப்படி நடக்குமா? கவலையடைந்தார் ராஜீவ். காந்தியின் கனவு அவருக்குள் கருக்கொண்டது அப்போதுதான்!

1980-களின் தொடக்கம் அது. உலகம் முழுவதுமே மாற்றங்களை எதிர்நோக்கியிருந்தது. பரிணாமத்தின் அடுத்த கட்டத்துக்கு
Read 20 tweets
Oct 19
குழந்தைத் திருமணம் எனும் கொடுமை.அதற்கு ஆதரவாக போராட்டம் நடத்தும் மிருகங்கள் குறித்த பதிவு

பால்ய விவாகம் எனப் படும் குழந்தைகள் திருமணத்தினால் நிகழ்ந்த கொடுமைகளை சாமிநாதன் அங்ளேசரிய ஐயர் சில மாதங்களுக்கு முன்பு டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் பட்டியலிட்டார்.
அவர் "காத்தரின் மேயோ"
வின் புத்தகமான
"மதர் இந்தியா"விலிருந்து (1927இல்வெளிவந்தது) சில அதிர்ச்சிகரமான தகவல்களைக் குறிப்பிட்டார்.பால்ய விவாகத்தினை தடை செய்யும் சட்டத்தினை பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்த போது அதற்கு ஆதரவான சீர்திருத்த வாதிகளிடம் மருத்துவர்கள் அளித்த ஆதாரங்கள்தான் இவை
1. திருமணம் செய்து வைக்கப் பட்ட மறுநாளே வயதான கணவனின் வன்முறைக்குள்ளான அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டாள்: “அவளுடைய தொடை எலும்பு பிறழ்ந்திருந்தது. இடுப்புப் பகுதி முற்றிலும் சேதமடைந்திருந்தது. சதை பிய்ந்து தொங்கிக் கொண்டிருந்தது”
2. 9 வயதுப் பெண்: “அறுவை சிகிச்சையால்
Read 10 tweets
Oct 2
பாரதி முதல்...பெரியார் வந்த பிறகும் சமுதாயத்தில் பல பெண்களின் நிலை... தந்தையே! கரண்டி பிடித்த நாங்கள் அதைக் கடாசிவிட்டு இப்போது புத்தகம் ஏந்துகிறோம்” என்று பெரியார் பிறந்தநாள் கருத்தரங்கில் பேசுவதற்காகக் குறிப்பெழுதிக் கொண்டிருந்தாள் மலர்விழி. 😊
அப்போது அடுப்பங்கரையிலிருந்து
தீய்ந்த வாடை வரவும், ”ஐயையோ அடுப்பில் குழம்பு காய்வதை மறந்தே போனேனே” என்று எண்ணிக்கொண்டவள், 🤔”கொஞ்சம் அடுப்பை அணைத்துவிடுங்களேன்! நான் பேசுவதற்கு முக்கியமான குறிப்புகளை எழுதிக் கொண்டிருக்கிறேன்” என்று ரூமிலிருந்து குரல்கொடுத்தாள் ஹாலில் உட்கார்ந்திருந்த கணவனை நோக்கி.

அவனோ,
'நான் வெந்து தணிந்தது காடு' படத்தின் ரிவ்யூ படித்துக்கொண்டிருக்கிறேன்; நீயே வந்து அடுப்பை அணைத்துவிடு, ப்ளீஸ்!” என்று அசட்டையாகச் சொல்லிவிடவே, நொந்துபோன அவள் 😞விரைந்துவந்து அடுப்பை அணைத்தாள்.

தந்தையே…இதுதான் இன்றைக்கும் தமிழ்ப் பெண்களின் நிலை!

என்ன வித்தியாசம் என்றால்..
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(