M.SivaRajan Profile picture
Nov 24 17 tweets 4 min read
#காசி

காசி என்பதை ஊராகப் பாக்காமல் அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும்.

காசி என்பது 168 மைல் பரப்பளவில் சிவபெருமானால் (சிவசக்தியால்) அமைக்கப்பட்ட ஒப்பற்ற, நினைப்ப தற்கே அரிய ஓர் சிவ சக்தி யந்திரம்.
வருடத்தின் எல்லா நாட்களும், ஒரு நாளின் எல்லா மணிநேரமும் ஓய்வின்றி செயல்படும் ஒப்பற்ற சிவ சக்திநிலை இங்கே இருப்பதாக அனைவரின் நம்பிக்கை.

சிவன் வடிவமைத்த காசியின் 168 மைல் சுற்றளவில் 468 சக்தி மையங்கள்.
அவற்றில் 108 அடிப்படை சக்தி மையங்கள்.

இதில் 54 ஆண்தன்மை நிறைந்த சக்தி வடிவங்கள், 54 பெண் தன்மை நிறைந்த சக்தி மையங்களாக சிவனால் அமைக்கப்பட்ட தென்பது வரலாறு.*

நிலவின் சுழற்சிக் கணக்கில், மூன்று வருடத்திற்கு ஒரு முறை 13 மாதங்கள் இருக்கும்.
நம் சூரிய குடும்பத்தில் இருப்பது 9 கோள்கள். 4 திசைகள் அல்லது பஞ்ச பூதங்களில் ‘ஆகாஷ்’ தவிர்த்து நான்கு அடிப்படைக் கூறுகள்.

ஆக, 13*9*4 = 468.

நம் உடலில் இருக்கும் சக்தி சக்கரங்கள் 114.

இதில் 2 நம் உடல் தாண்டி இருக்கிறது.
4 சக்கரங்களுக்கு நாம் ஏதும் செய்ய அவசியம் இருக்காது.
மற்ற 108ம் சரியாய் இருந்தால், இந்த நான்கும் தானாய் மலர்ந்திடும்.

இந்த 108ல் 54 பிங்களா (ஆண்தன்மை), 54 ஈடா (பெண் தன்மை). அதனால் 108 அடிப்படை சக்தி ஸ்தலங்களில் 54 சிவன், மற்றும் 54 தேவி கோவில்கள் காசியில் அமைக்கப் பட்டன.
காசி நகர அமைப்பே வடிவியல் (geometry) அளவிலும் கணிதவியல் அளவிலும் மிகக் கச்சிதமான, அற்புதமான வடிவமைப்பு.

பிரபஞ்சத்தின் சிறு அம்சமான மனிதனும், அந்தப் பிரபஞ்சமும் தொடர்பு கொள்வதற்கான மிக நேர்த்தியான அமைப்பு.
இது முழு உயிரோட்டத்தில் இயங்கும் ஒரு மாபெரும் மனித உடலின் பிரதிபலிப்பு.

முழு உயிரோட்டத்தில், முழுமையான சக்தி அமைப்பில் ஒரு உடல் இயங்கினால்,

அதுவே பிரபஞ்சத்தை அவனிற்குத் திறந்து வைக்கும்.
இப்படி பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய இடமாகத்தான் சிவசக்தியினால் காசி உருவானதாம்.

இங்கே ஒருவர் வாழமுடிந்தால், பிரபஞ்சத்துடன் இவ்வழியில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தால்,

எவர் தான் காசியை விட்டு வெளியேற சம்மதிப்பார்..?
468 கோவில்களில், 108 போக, மீதத்தில்

56 விநாயகர் கோவில்கள்,

64 யோகினி கோவில்கள்,

12 சூரியன் கோவில்கள்,

9 நவதுர்கை கோவில்கள்,

9 சண்டி கோவில்களும் அடங்கும்.

இதில் 56 விநாயகர் கோவில்கள் 8 திசைகளில்,

7 பொதுமையம் கொண்ட வட்டத்தில் அமைக்கப் பட்டிருக்கிறது.
இந்த வட்டத்தில் நடக்க ஆரம்பித்தால், இதன் முடிவு காசி விஸ்வநாதர் கோவிலில் முடியும்.

அதோடு சூரியனின் 12 கோவில்களும் தக்ஷிணாயனத்தில் இருந்து உத்தராயணத்திற்கு நகரும் சூரியனின் திசையை ஒத்து இருக்கிறது.

இப்படி படைப்பை உற்று நோக்கி, ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ற வகையில்
இயங்கும் வண்ணம் காசி அமைக்கப்பட்டது.

இது தவிர சிவன், சப்தரிஷிகளை உலகின் வெவ்வேறு மூலைக்கு அனுப்பிய போது,

அவர்கள் அவரைப் பிரிய மனமில்லாமல் ஏங்கியதால், அவர்களுக்கு ‘சப்தரிஷி’ பூஜையை கற்பித்து,

அதை அவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்தால்,
சிவனுடன் இருக்கும் உணர்வைப் பெறுவார்கள் என்றும் சொல்லி அனுப்பினாராம்.

இன்றளவிலும் இப்பூஜை விஸ்வநாதர் கோவிலில் இரவு 7 மணியளவில் நடைபெறுவது இக்கோவிலின் சிறப்பு.

அப்பூஜையை உணர்ந்தால் தான் புரியும்.

அப்பூஜையை செய்பவர்களுக்கு அதன் மகத்துவம் தெரியவில்லை எனினும்,
அதைச் சிறிதும் பிசகாமல் செய்வதால், அவ்விடத்தில் நம்பற்கரிய சக்தி உருவாகிறது.

அக்காலத்தில், இந்தப் பூஜை ஒரே நேரத்தில், காசியின் 468 கோவில்களிலும் செய்யப்பட்டது.

இதன் தாக்கத்தை வார்த்தைகளில் அடக்கிட முடியாது.
இப்படியொரு மாபெரும் உயிரோட்டத்தில் காசிதிளைத்திருந்ததை நாம் அனுபவிக்காமல் போனது,

நம்முடைய மிகப்பெரும் துரதிர்ஷ்டம் என ஆன்றோர்கள் கூறுகிறார்கள்.

இதை நாம் கவனித்துப் பார்த்தால், எல்லையில்லாமல் வளர வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு.
இது வெறும் ஆசையாய் இருந்தால் போதாது என்று, அதை நிறை வேற்றிக் கொள்வதற்குத் தேவையான கருவியாய் காசி உருவாக்கப்பட்டது.

இது ஒரு சக்தி உருவம்...

இந்த உருவத்திற்கு ஏற்றாற்போல், அதைச் சுற்றி ஒரு ஊர் தானாக உருவானது.
அதனால் காசி என்பதை ஊராகப் பாக்காமல்,

அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும்.

இந்த மகத்தான வாய்ப்பை உணர்ந்துதான், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்கள் காசியை இன்றும் போற்றி வருகின்றனர்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Nov 25
#சந்திர_தரிசனம் 🌜

இன்று பிறை பார்க்க தவறாதீங்க" புண்ணியம் ஏராளம்.*

கார்த்திகை மாதம் என்றாலே தீப ஒளி மட்டுமே நம் கண் முன் வந்து செல்லும் அல்லவா

பெண்கள் சுமங்கலி பூஜை செய்வது முதல், இம்மாத நன்நாளில் ஐயப்பனுக்கு மாலை இட்டு சபரி மலை செல்வது நாம் அறிந்ததே.. Image
திருவண்ணாமலை தீபம் முதல்.. கார்த்திகை மாத பிறை வரை அனைத்தும் விசேஷமே அல்லவா....

கார்த்திகை மாத வெள்ளிக்கிழமை நாளான இன்று பிறை பார்ப்பதால் எந்த அளவிற்கு புண்ணியம் கிடைக்கும் என்பதை படித்து பாருங்கள்
*பிறை பார்ப்பதன் புண்ணியம்*
🌜

வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது.

ஊர்மக்கள் அவரவர் பங்காக மணலைக் கொட்டி, உடையும் கரையை அடைத்தார்கள்.

மதுரை மாநகரில் பிட்டு விற்று வாழ்ந்து வந்த மூதாட்டியின் பங்கினை அடைக்க யாருமில்லை.
Read 11 tweets
Nov 25
#பஞ்ச_பைரவர்_ஆலயம்

*பிதுர் தோஷத்தை நீக்கும் பசுபதீஸ்வரர் ஆலய பஞ்ச பைரவர்*!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆவூர் திருத்தலம்.

இங்கு பசுபதீஸ்வரர் எனும் சிவாலயம் இருக்கிறது. Image
இங்கு சிவபெருமான் பசுபதீஸ்வரர் என்ற திருநாமத்துடனும் அம்பாள் பங்கஜவல்லி என்று திருநாமத்துடனும் அருள்பாலித்து வருகிறார்கள்.

ஆவூர் பெயர் காரணம்:

வசிஷ்ட முனிவரால் சாபம் பெற்ற காமதேனும் என்ற வானிலக பசு பூமிக்கு வந்து இறைவனை பூஜித்து சாப விமோசனம் பெற்ற இடம் இந்த திருத்தலம் ஆகும்.
எனவேதான் இத்தலம் ஆவூர் என்றானது.

‘ஆ’ என்பது பசுவை குறிக்கும்.

இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பம்சம் பஞ்ச பைரவ மூர்த்திகள் இங்கு ஐந்து பைரவர்களும் ஒரே பீடத்தில் வீற்றிருக்கிறார்கள்.

இவர்களை தேய்பிறை அஷ்டமி தினத்தில் வழிபாடு செய்தால் அனைத்து துன்பங்களும் நீங்கும்.
Read 6 tweets
Nov 25
#ராகு_கால_துர்கா_பூஜை

*அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கும் ராகு காலம் துர்கா பூஜை*!

ராகு கால நேரத்தில் நல்ல காரியங்கள் எதுவும் செய்யக்கூடாது என்பது பலரது பொதுவான கருத்தாக உள்ளது.
ஆனால் இது விசேஷ பூஜைகள் செய்து, வேண்டிய வரத்தினை பெறுவதற்கான நல்ல நேரம்.

பொதுவாக மற்ற கிரகங்களின் ஆற்றல் அந்த நேரத்தில் குறைந்திருக்கும் என்பதால் தான், ராகு காலத்தில் சுப காரியங்களைத் தவிர்க்கச் சொன்னார்கள்.
அதே சமயம் ராகு காலத்தில் துர்க்கை தேவியை வணங்குவது சிறப்பான பலனைத் தரும் என்கிறது தேவி பாகவதம்

ராகுவின் சிறப்பு:

ராகுவைப் போல நல்லவைகளை அள்ளிக்கொடுப்பவர் யாருமில்லை.

ராகுவின் நிலையைப் பொருத்து நமக்கு நன்மைகள் தேடி வரும்.
Read 21 tweets
Nov 25
#ஆணவம்

#தற்பெருமை

*ஒருவனும் அவனவன் சாதனையை பெரிதுபடுத்தி பேசக்கூடாது.

உன்னிலும் வல்லவர் உலகில் உண்டு.

*குருக்ஷேத்திர யுத்தம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த வேளை.

பாண்டவ, கவுரவப்படைகள் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். Image
களத்திலே அன்று வில்லாதி வில்லர்களான அர்ஜுனனும், கர்ணனும் மோதிக் கொண்டிருக்கிறார்கள்.

அர்ஜுனனுக்கு கண்ணன் தேரோட்டிக் கொண்டிருக்கிறான்.

தேர் உச்சியில் இருந்த கொடியில், ஆஞ்சநேயர் அழகாய்ப் பறந்து கொண்டிருக்கிறார்.
அர்ஜுனனும், கர்ணனும் தங்கள் அம்புகளை ஒவ்வொருவர் தேர்களை நோக்கி எய்கின்றனர்.

அடேங்கப்பா! ஆற்றல் மிக்க அந்த அர்ஜுனனின் அம்பு, கர்ணனின் தேரை முப்பத்தைந்து கல் தொலைவு தள்ளி விழச் செய்கிறது.

அர்ஜுனனின் தேரைத் தாக்கிய அம்பு, அதை முப்பது கல் தொலைவில் விழச்செய்கிறது.
Read 10 tweets
Nov 25
#சிவ_அபிஷேக_பலன்கள்:

1) அருகம்புல் ஜலத்தினால் சிவாபிஷேகம் செய்தால் நஷ்டமான பொருட்கள்
திரும்ப கிடைக்கும்.

2) நல்லெண்ணெய் அபிஷேகத்தினால் அபம்ருத்யு நசிக்கும்.

3) பசும்பால் அபிஷேகத்தினால் ஸகல ஸௌக்கியம் கிட்டும்.

4) தயிர் அபிஷேகத்தினால் பலம், ஆரோக்கியம், யஸஸ் கிட்டும்.
5) பசு நெய்யினால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்ய ப்ராப்தி கிட்டும்.

6) கரும்பு ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் தன வ்ருத்தி கிட்டும்.

7) மிருதுவான சர்க்கரையினால் அபிஷேகம் துக்கம் நசிக்கும்.

8) தேன் அபிஷேகத்தினால் தேஜோவ்ருத்தி கிட்டும்.
9) புஷ்ப ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் பூலாபம் கிட்டும்.

10) இளநீரினால் அபிஷேகம் செய்தால் சகல ஸம்பத்தும் கிட்டும்.

11) உத்திராட்ச ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்யம் கிட்டும்.

12) பஸ்மத்தினால் அபிஷேகம் செய்தால் மஹா பாபங்கள் நசிக்கும்.
Read 8 tweets
Nov 25
#ஜெய்_ஸ்ரீராம்

வல்வில் ராமர் கோவில்
பூதங்குடி..

திருவைக்காவூர் பூதங்குடி கிராமத்தில் அமைந்துள்ள வல்வில் ராமர் கோவிலில் வழிபாடு செய்தால் திருமணம், சந்தான பாக்கியம் சம்பந்தமான குறைகளையும் தீரும் என்பது ஐதீகம். Image
சோழர்களால் கட்டப்பட்ட இக்கோவிலில் ராமர் சயன கோணத்தில் காட்சியளிக்கிறார்.

அதே போல் பெருமாள் கிழக்கு நோக்கி புஜங்க சயனத்தில் சோபன விமானத்தின் கீழ் காட்சியளிக்கிறார்.

புதனுக்குரிய பரிகார தலமான இக்கோவிலில் பித்ருக்களுக்கு பரிகாரம் செய்வது உண்டு.
பெருமாளின் மங்களா சாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இக்கோவில் 10-வது திவ்ய தேசமாகும்.

இக்கோவிலின் பிரகாரத்தில் நரசிம்மர் தனியே சன்னதி கொண்டிருக்கிறார்.

இவர் யோக நரசிம்மர்.

இவர் காலடியில் ராமன் விக்கிரகம் காணப்படுகிறது.
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(