M.SivaRajan Profile picture
Nov 24 12 tweets 3 min read
#சம்பக_சஷ்டி

இன்று முதல் பைரவருக்கான சம்பக சஷ்டி :

தோன்றிய வரலாறு

ஹிரண்யாட்சகன் என்ற அரக்கன் பெரிய சிவபக்தன் இவன் குழந்தை வரம் வேண்டி தவம் புரிகிறான்.
தாருகாவன அழிவிற்குப் பிறகு சிவபெருமான் யோக நிஷ்டையில் இருக்கையில் பார்வதி தேவி விளையாட்டாக சிவனின் கண்களை மூடி விடுகிறாள். 

ஈஸ்வரன் கண்களை திறந்தவுடன் ஹிரண்யாரட்சகனைப் பார்கிறார்.

ஹிரண்யாட்சகனுக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன.
அதில் ஒன்று குருடாக இருந்ததால் அந்தகாசுரன் என்றும், இரண்டாவது குழந்தை சம்பகாசுரன் என்றும் அழைக்கப் பட்டனர்.  

இவர்கள் இருவரும் அதிபராக்கிரமம் படைத்தவர்களாக இருந்தனர்.  

அவர்களும் பெரிய சிவபக்தர்கள்.  

தேவர்களைப் பல கொடிய இன்னல்களுக்கு ஆளாக்குகின்றனர்.
அசுரர்களின் மாயையால் இருள் சூழ்ந்து நின்ற உலகை விடுவிக்க , தேவர்கள் சிவபெருமானை வேண்டி நின்றனர்.  

தாருகா வனம் அக்கினி சாந்தமாகி சிவனின் நெஞ்சில் சிறு குழந்தையாக இருந்தது.  

அதை சக்தி தேவி தமது குமாரனாக எடுத்து வளர்த்து வந்தாள்.
தேவர்களின் துயர் நீக்க அக்கினிக்கு ஈசன் ஆணையிட, 

அதில் விஸ்வரூபம் எடுத்தவர் தான் பைரவர்.

தேவர்களை காக்க எழுகிறார்.

முதலில் 8 பிரிவாக செயல்பட்டு, 

பிறகு 64 மூர்த்தங்களில் 
64 சக்தி கணங்களுடன் செயல்பட்டு

அந்தகாசுரனையும், 
சம்பகாசுரனையும் குமார சஷ்டியன்று வதம் செய்கின்றார்.
தனது பூத கணங்களுடன் ஒருவராக அவர்களை சேர்த்துக் கொள்கின்றார்.

சிவபக்தர்களான அரக்கர்களை அழித்த தோஷம் நீங்குவதற்காக ஸ்ரீ யோகபைரவர் தனது வலது கரத்தில் சிவலிங்கத்தை வைத்துக்கொண்டு பூஜை செய்துகொண்டிருக்கிறார்.
இடது கரத்தை தொடையில் வைத்தவாறு காட்சியளிக்கிறார்.

குமார ரூபமாக இருந்து அசுரர்களை வதம் செய்த நாளை குமார சஷ்டி என்றும், 

சம்பக சஷ்டி எனவும் அழைக்கப்பட்டு கார்த்திகை மாதம் வரும் அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை திதியன்று காப்பு கட்டுதல் விழாவுடன் துவங்கி
ஆறு நாட்கள் விரதம் அனுஷ்டித்து தினம்தோறும் அஷ்ட பைரவர் ஹோமம்,  அபிஷேக ஆராதனைகள் அதிவிமர்சையாக நடைபெறுகின்றன.  

கொடிய துன்பம் தீர்த்து,  நெடிய இன்பம் தந்த இந்த குமார சஷ்டி நாளில் விரதம் இருந்து வழிபட எல்லா நன்மைகளையும் தருவார் ஸ்ரீ யோக பைரவர்.
திருப்பத்தூர் திருத்தளி நாதர் ஆலயத்தில்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் திருத்தளிநாதர் கோயிலில் பிரசித்தி பெற்ற யோக பைரவர் சன்னதி அமைந்துள்ளது .

இத்திருத்தலத்தில் யோகபைரவருக்கு ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் வளர்பிறை பிரதமை திதி முதல் சஷ்டி திதி வரையுள்ள காலம்
சம்பகசஷ்டி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

யோக பைரவர் சன்னதியில்
சம்பக சஷ்டி பெருந்திருவிழா நாளை தொடங்கி ஆறுநாட்கள் நடைபெறுகிறது . 

காலை 9:00 மணிக்கு அஷ்டபைரவர் யாகம் துவங்குகிறது.

அதனையடுத்து  பூர்ணாகுதி நடந்து பைரவருக்கு அபிஷேகம், தீபராதனை நடைபெறும்.
அன்றைய தினத்தில் பைரவர் வெள்ளிக்கவசத்தில் அருள்பாலிப்பார். 

அதனை தொடர்ந்து மாலை 4:00 மணிக்கு அஷ்டபைரவர் யாகம், பூர்ணாகுதி, அபிஷேகம், தீபாராதனை நடைபெறும்.

அதனை அடுத்து பைரவர் சந்தனக் காப்பில் அருள்பாலிப்பார்.
ஆறு நாட்களிலும் தினசரி காலை , மாலை இருவேளைகளில் யாகசாலை பூஜை நடைபெறும்.

அனைவரும் கலந்து கொண்டு பைரவர் அருள் பெறுக.

#யோக_பைரவர்

#சம்பக_சஷ்டி

#ஓம்_பைரவாய_நமஹா

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Nov 25
#சந்திர_தரிசனம் 🌜

இன்று பிறை பார்க்க தவறாதீங்க" புண்ணியம் ஏராளம்.*

கார்த்திகை மாதம் என்றாலே தீப ஒளி மட்டுமே நம் கண் முன் வந்து செல்லும் அல்லவா

பெண்கள் சுமங்கலி பூஜை செய்வது முதல், இம்மாத நன்நாளில் ஐயப்பனுக்கு மாலை இட்டு சபரி மலை செல்வது நாம் அறிந்ததே.. Image
திருவண்ணாமலை தீபம் முதல்.. கார்த்திகை மாத பிறை வரை அனைத்தும் விசேஷமே அல்லவா....

கார்த்திகை மாத வெள்ளிக்கிழமை நாளான இன்று பிறை பார்ப்பதால் எந்த அளவிற்கு புண்ணியம் கிடைக்கும் என்பதை படித்து பாருங்கள்
*பிறை பார்ப்பதன் புண்ணியம்*
🌜

வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது.

ஊர்மக்கள் அவரவர் பங்காக மணலைக் கொட்டி, உடையும் கரையை அடைத்தார்கள்.

மதுரை மாநகரில் பிட்டு விற்று வாழ்ந்து வந்த மூதாட்டியின் பங்கினை அடைக்க யாருமில்லை.
Read 11 tweets
Nov 25
#பஞ்ச_பைரவர்_ஆலயம்

*பிதுர் தோஷத்தை நீக்கும் பசுபதீஸ்வரர் ஆலய பஞ்ச பைரவர்*!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆவூர் திருத்தலம்.

இங்கு பசுபதீஸ்வரர் எனும் சிவாலயம் இருக்கிறது. Image
இங்கு சிவபெருமான் பசுபதீஸ்வரர் என்ற திருநாமத்துடனும் அம்பாள் பங்கஜவல்லி என்று திருநாமத்துடனும் அருள்பாலித்து வருகிறார்கள்.

ஆவூர் பெயர் காரணம்:

வசிஷ்ட முனிவரால் சாபம் பெற்ற காமதேனும் என்ற வானிலக பசு பூமிக்கு வந்து இறைவனை பூஜித்து சாப விமோசனம் பெற்ற இடம் இந்த திருத்தலம் ஆகும்.
எனவேதான் இத்தலம் ஆவூர் என்றானது.

‘ஆ’ என்பது பசுவை குறிக்கும்.

இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பம்சம் பஞ்ச பைரவ மூர்த்திகள் இங்கு ஐந்து பைரவர்களும் ஒரே பீடத்தில் வீற்றிருக்கிறார்கள்.

இவர்களை தேய்பிறை அஷ்டமி தினத்தில் வழிபாடு செய்தால் அனைத்து துன்பங்களும் நீங்கும்.
Read 6 tweets
Nov 25
#ராகு_கால_துர்கா_பூஜை

*அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கும் ராகு காலம் துர்கா பூஜை*!

ராகு கால நேரத்தில் நல்ல காரியங்கள் எதுவும் செய்யக்கூடாது என்பது பலரது பொதுவான கருத்தாக உள்ளது.
ஆனால் இது விசேஷ பூஜைகள் செய்து, வேண்டிய வரத்தினை பெறுவதற்கான நல்ல நேரம்.

பொதுவாக மற்ற கிரகங்களின் ஆற்றல் அந்த நேரத்தில் குறைந்திருக்கும் என்பதால் தான், ராகு காலத்தில் சுப காரியங்களைத் தவிர்க்கச் சொன்னார்கள்.
அதே சமயம் ராகு காலத்தில் துர்க்கை தேவியை வணங்குவது சிறப்பான பலனைத் தரும் என்கிறது தேவி பாகவதம்

ராகுவின் சிறப்பு:

ராகுவைப் போல நல்லவைகளை அள்ளிக்கொடுப்பவர் யாருமில்லை.

ராகுவின் நிலையைப் பொருத்து நமக்கு நன்மைகள் தேடி வரும்.
Read 21 tweets
Nov 25
#ஆணவம்

#தற்பெருமை

*ஒருவனும் அவனவன் சாதனையை பெரிதுபடுத்தி பேசக்கூடாது.

உன்னிலும் வல்லவர் உலகில் உண்டு.

*குருக்ஷேத்திர யுத்தம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த வேளை.

பாண்டவ, கவுரவப்படைகள் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். Image
களத்திலே அன்று வில்லாதி வில்லர்களான அர்ஜுனனும், கர்ணனும் மோதிக் கொண்டிருக்கிறார்கள்.

அர்ஜுனனுக்கு கண்ணன் தேரோட்டிக் கொண்டிருக்கிறான்.

தேர் உச்சியில் இருந்த கொடியில், ஆஞ்சநேயர் அழகாய்ப் பறந்து கொண்டிருக்கிறார்.
அர்ஜுனனும், கர்ணனும் தங்கள் அம்புகளை ஒவ்வொருவர் தேர்களை நோக்கி எய்கின்றனர்.

அடேங்கப்பா! ஆற்றல் மிக்க அந்த அர்ஜுனனின் அம்பு, கர்ணனின் தேரை முப்பத்தைந்து கல் தொலைவு தள்ளி விழச் செய்கிறது.

அர்ஜுனனின் தேரைத் தாக்கிய அம்பு, அதை முப்பது கல் தொலைவில் விழச்செய்கிறது.
Read 10 tweets
Nov 25
#சிவ_அபிஷேக_பலன்கள்:

1) அருகம்புல் ஜலத்தினால் சிவாபிஷேகம் செய்தால் நஷ்டமான பொருட்கள்
திரும்ப கிடைக்கும்.

2) நல்லெண்ணெய் அபிஷேகத்தினால் அபம்ருத்யு நசிக்கும்.

3) பசும்பால் அபிஷேகத்தினால் ஸகல ஸௌக்கியம் கிட்டும்.

4) தயிர் அபிஷேகத்தினால் பலம், ஆரோக்கியம், யஸஸ் கிட்டும்.
5) பசு நெய்யினால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்ய ப்ராப்தி கிட்டும்.

6) கரும்பு ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் தன வ்ருத்தி கிட்டும்.

7) மிருதுவான சர்க்கரையினால் அபிஷேகம் துக்கம் நசிக்கும்.

8) தேன் அபிஷேகத்தினால் தேஜோவ்ருத்தி கிட்டும்.
9) புஷ்ப ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் பூலாபம் கிட்டும்.

10) இளநீரினால் அபிஷேகம் செய்தால் சகல ஸம்பத்தும் கிட்டும்.

11) உத்திராட்ச ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்யம் கிட்டும்.

12) பஸ்மத்தினால் அபிஷேகம் செய்தால் மஹா பாபங்கள் நசிக்கும்.
Read 8 tweets
Nov 25
#ஜெய்_ஸ்ரீராம்

வல்வில் ராமர் கோவில்
பூதங்குடி..

திருவைக்காவூர் பூதங்குடி கிராமத்தில் அமைந்துள்ள வல்வில் ராமர் கோவிலில் வழிபாடு செய்தால் திருமணம், சந்தான பாக்கியம் சம்பந்தமான குறைகளையும் தீரும் என்பது ஐதீகம். Image
சோழர்களால் கட்டப்பட்ட இக்கோவிலில் ராமர் சயன கோணத்தில் காட்சியளிக்கிறார்.

அதே போல் பெருமாள் கிழக்கு நோக்கி புஜங்க சயனத்தில் சோபன விமானத்தின் கீழ் காட்சியளிக்கிறார்.

புதனுக்குரிய பரிகார தலமான இக்கோவிலில் பித்ருக்களுக்கு பரிகாரம் செய்வது உண்டு.
பெருமாளின் மங்களா சாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இக்கோவில் 10-வது திவ்ய தேசமாகும்.

இக்கோவிலின் பிரகாரத்தில் நரசிம்மர் தனியே சன்னதி கொண்டிருக்கிறார்.

இவர் யோக நரசிம்மர்.

இவர் காலடியில் ராமன் விக்கிரகம் காணப்படுகிறது.
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(