#சிவானந்த_சரஸ்வதி #சிவானந்தர் 1887 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் நாள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பத்தமடை என்னும் ஊரில் குப்புசாமி என்ற இயற்பெயரில் பிறந்தவர். இவர் அப்பைய தீட்சிதர் வம்சத்தில் வந்தவர். வறுமையுற்ற குடும்பம் என்றாலும் அவர் படிப்பில் கெட்டிக்காரர் ஆனதால் மருத்துவ
படிப்பினை படித்தார். பின் பொருளீட்ட மலேயா சென்றார். ஓயா மழை கொட்டும் ரப்பர் காடுகள் நிறைந்த அத்தேசத்தில் நோய் இயல்பானது. பல விஷயங்களுக்கு தரமான மருத்துவர்கள் தேவையாய் இருந்த காலமது. அப்பொழுதுது தான் குப்புசாமி அங்கு பணி ஆற்றினார். குப்புசாமி மலேயாவின் மிக சிறந்த மருத்துவராக
மின்னினார். பெரும் பட்டமும் பதக்கமும் அவரை தேடி வந்தன. ஆனால் அவர் மனம் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டது. மருத்துவம் நோயினை மட்டும் தீர்க்கிறது ஆனால் மனம் சம்பந்தமான சிக்கலை, வாழ்வியலின் பல தீர்வுகளை அதனால் கொடுக்க முடிவதில்லை. ஆன்ம பலமே உண்மையான மருத்துவம் என்பதை புரிந்து கொண்டார்.
தன் டாக்டர் தொழிலை உதறி, பாரதம் திரும்பி, காவியும் ருத்திராட்சமும் அணிந்து தன் மனத்தை அடக்க ரிஷிகேஷம் சென்றார். பல நாள் பட்டினி கிடந்தார், வீதியில் உறங்கினார், பிச்சைகார கோலத்தில் ஞானம் தேடினார். அந்த தேடலில் மகான் விஸ்வானந்த சரஸ்வதியினை சந்தித்தார், அவர் இவரை எதிர்பார்த்து
இருந்தவர் போல அழைத்து தீட்சை கொடுத்து ஞானத்தை ஞானமே அடையாளம் கண்டு கொள்ளும் என்பது போல அந்த விஸ்வானந்தர் இவருக்கு சிவானந்தர் எனும் பெயரையும் கொடுத்து மன்னனிடம் சொல்லி ஒரு காணி நிலமும் கொடுத்து ஆசிரமம் அமைக்க உதவினார். அப்படித் தான் சிவானந்தாவின் ஆஸ்ரமம் தொடங்கியது, மெல்ல மெல்ல
அவரின் ஆன்மீக மருத்துவ சேவை தொடர்ந்தன. ஒரு கட்டத்தில் 100 பணியாளர்கள் கொண்ட மருத்துவ ஆஸ்ரமம் எழுந்தது, அதில் தொழுநோயாளி முதல் எல்லா நோயாளிகளும் பராமரிக்கப் பட்டனர். சிவானந்த சுவாமிகளே இந்தியாவில் ஏழை தொழு நோயாளிகளை மருத்துவரீதியாக அரவணைத்த மகான், தெரசா இவருக்கு பின்னால் வந்தவர்.
(தெரசா உண்மையில் என்ன செய்தார் என்பது ஓர் அவலக் கதை!) இந்தியாவின் சொந்த மக்களுக்கான தொழுநோய் மருத்துவமனையினை தொடங்கியது இந்த இந்து சன்யாசிதான்.‌ ஒரு நாள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண், சுவாமியின் சீடர்களால் காப்பாற்றப் பட்டு கொண்டு வர பட்டாள். அவள் தொலைதூரத்தில் இருந்து
வந்தவள், அவள் சாக துணிந்த காரணம் மணமாகாமல் கர்ப்பம் தரித்தது. சுவாமி அவளை திட்டவில்லை, கர்ப்பம் கலைக்க சொல்லவில்லை, அவளை பெற்றோரிடமும் அனுப்பவில்லை, அனுப்பினால் என்னாகும் என்பது சுவாமிக்கு புரிந்தது. குழந்தை பிறந்ததும் குழந்தை இல்லா தம்பதியிடம் அக்குழந்தையினை ஒப்படைத்துவிட்டு
அப்பெண்ணின் வழியில் அவளை போக சொன்னார். சுவாமியின் காலில் விழுந்து இரு பெண்களும் அழுதனர், சுவாமி நிதானமாக சொன்னார்.
"ஒரு உயிரை காத்து இன்னொரு உயிரிடம் ஒப்படைக்க‌ இறைவன் என்னை பயன்படுத்தினான் அவ்வளவுதான்"
சிவானந்த சாமியின் புகழும் அவரின் ஞானமும் அது கொடுத்த போதனையும் ஏராளம், ஏகபட்ட
புத்தகங்களை எழுதினார், உலகம் எல்லாம் அவர் மடத்தின் கிளைகள் திறந்தன. இன்று சுமார் 300 கிளைகளுடன் மிகபெரிய தொண்டு நிறுவனமாக அது வளர்ந்து நிற்கிறது. அவர் அறிவுரையால் மேன்மை அடைந்தவர்கள் எண்ணற்றோர். அதில் ஓர் இளைஞன், 1962ல் ரிஷிகேஷில் விரக்தி நிலையில் இருந்தான். அவனையே உற்று
நோக்கினார் சுவாமி, அந்த இளைஞன் கண்ணீர் விட்டு சொன்னான், "சுவாமி நான் ஏழை மீனவ வீட்டு மகன், நன்றாக படித்து பைலட்டாக வேண்டுமென கனவு கண்டேன், படித்தும் முடித்தேன்.
ஆனால் பைலட் தேர்வில் என்னை நிராகரித்து விட்டார்கள், நான் அதற்கு தகுதி இல்லையாம், இனி நான் என்னாவேன் என எனக்கே
தெரியவில்லை" என மனமுடைந்து நின்றான். புன்னகைத்த சுவாமி சொன்னார் "நீ படைக்கப்பட்டது விமான ஓட்டியாவதற்கு அல்ல. வேறு எதற்காகவோ நீ படைக்கப்பட்டு இருக்கிறாய். அதை நோக்கிச் செல். காரணங்களின்றி இங்கு எதுவும் நடக்காது".
அவரிடம் ஆசீர்வாதம் வாங்கிய அந்த இளைஞன் பின் தீவிரமாக உழைத்து ஏவுகனை
விஞ்ஞானியாகி பாரதத்தின் குடியரசு தலைவனுமானான். அவர் தான் #டாக்டர்_அப்துல்_கலாம்.
சிவானந்தர் இந்தியாவின் மிகபெரும் யோகி, அதுவும் விஞ்ஞான கல்வி கற்றுவிட்டு அதெல்லாம் பணம் சம்பாதிக்கும் விஷயம் மட்டுமே, வாழ்க்கைக்கு உண்மையன தேவை ஆத்ம தெளிவு, ஆன்ம பலம் கொடுக்கும் ஆன்மீகம் என உணர்ந்து
நின்றவர். சுருக்கமாக சொன்னால் தன்னை அறிந்தவர். எத்தனையோ லட்சம் மக்கள் அவரால் கல்வி, மருத்துவம், ஆன்மீக தெளிவு என பலன் பெற்றனர், இன்னும் பெற்று கொண்டே இருக்கின்றனர்.
ஒவ்வொருவர் வாழ்வும் அதன் நோக்கில் நல்லபடியாக செல்ல, அவர்கள் பிறந்த கடமையினை சரியாக செய்ய இடையூறுகளை நீக்கி
வழிகாட்டினார் சுவாமி, இன்றும் அவரின் ஆஸ்ரமம் அதை தொடர்ந்து செய்கிறது. அந்த நெல்லை பிறப்பு பாரதி போல தனித்துவம் மிக்கது, தொழுநோயாளிகளை தொட்டு அரவணைத்த உன்னத கரங்கள் அவருடையது. ஆனால் தெரசாவுக்கு இருந்த விளம்பரமும் உலகளாவிய கொண்டாட்டமும் பாரத ரத்னா போன்ற விருதுகளும் ஏன் சுவாமி
சிவானந்தாவுக்கு இல்லை? நாமே நம் மகான்களை போற்றுவதில்லை. அதனால் தான்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Nov 30
#நற்சிந்தனை
காட்டில் அலைந்து கொண்டிருந்த ஒருவன், ஒரு பாழுங்கிணற்றில் விழுந்து விட்டான். இவனை காப்பாற்ற ஆளில்லை. “யாராவது என்னை தூக்கி விடுங்கள், காப்பாற்றுங்கள்" என்று கூவி கதறினான். இவனை காப்பாற்ற ஒருவர் வந்தார். "அடடா! கீழே விழுந்து விட்டாயா! கவலைப்படாதே நான் உன்னை Image
காப்பாற்றுகிறேன்" என்றார். முடிச்சுகள் உள்ள கயிறை போட்டு, "இதோ இந்த கயிற்றில் உள்ள முடிச்சை பிடித்து இடுப்பில் கட்டிக்கொள். நான் உன்னை தூக்கி விடுகிறேன்" என்றார்.
இவனோ கயிறை பிடித்து கொள்ள மறுத்தான்.
"ஏனப்பா! நான் தான் கயிறை போட்டு இருக்கிறேனே. இங்கு என்னை தவிர ஆள் கிடையாது. இந்த
கயிறை பிடித்துக் கொள். நீ விழுந்து கிடக்கிறாய். நான் உன்னை காப்பாற்ற வேண்டியவன். நம்பிக்கையுடன் கயிறை பிடித்துக்கொள்" என்றார் வந்தவர்.
"அது சரி. நான் இந்த கயிறை பிடித்து கொண்டு ஏறும் போது பாதியில் அறுந்து விட்டால்?" என்றான் விழுந்தவன்.
"கவலையே படாதே! இது அறுகவே அறுகாத கயிர்.
Read 19 tweets
Nov 30
#MahaPeriyava Ghatam Maestro Vikku Vinayakram being an ardent devotee of Paramacharya, he attributes all his success to His bountiful blessings. “I have felt His divine presence on more than one occasion,” he says. Once Vinayakram had gone on a tour to Athens to perform at a Image
concert along with L. Shankar and Zakir Hussain. Somehow the Ghatam (a circular pot beaten with the hands as a percussion instrument in South Indian music) he took broke a few days before the scheduled date of performance. Vinayakram was in tears and called his wife in Chennai Image
and told her that he wanted to return as there was no point of staying in Athens. His wife asked him to wait for one day and in the meantime went to Kanchi Mutt and explained the situation to Sri Maha Periyava. Periyava did not react to her narrative and kept quiet. She was in
Read 10 tweets
Nov 29
இந்தியாவில் உள்ள 12 ஜோதிர் லிங்கத் தலங்களில் ஒன்றான குஜராத் மாநிலத்தில் ஜாம்நகரில் உள்ள #துவாரகை #நாகநாத் என்ற #நாகேஸ்வரம்
#நாகேஸ்வரர் #நாகேஸ்வரி திருக்கோயில்
மூலவர்: நாகேஸ்வரர் (நாகநாதர்)
அம்மன்: நாகேஸ்வரி
தீர்த்தம்: பீம தீர்த்தம், கோடி தீர்த்தம், நாக தீர்த்தம் ImageImage
புராண பெயர்: தாருகாவனம்
லிங்க வடிவங்களில் ஜோதிர் லிங்கம் என்பவை சிறப்பு வாய்ந்தவை. இந்தியா முழுவதும் 12 ஜோதிர் லிங்க திருத்தலங்கள் உள்ளன. திருவாதிரை நட்சத்திர நாளில் சிவபெருமான், தன்னை ஜோதி லிங்க வடிவில் வெளிப் படுத்தியதாக புராணங்கள் சொல்கின்றன. இதனால் திருவாதிரை நாள் ஜோதிர் Image
லிங்கத்தை வணங்குவதற்கு உரிய சிறப்பு நாளாகக் கருதப்படுகிறது.
சிவ புராணத்தில் கூறிருப்பது படி, சுப்பிரியா என்னும் சிவ பக்தையை, தாருகா என்ற அசுரன் பிடித்துச் சென்றான். அவளை, தாருகாவனம் என்ற இடத்தில் மேலும் பலருடன் சேர்த்து அடைத்து வைத்திருந்தான். பாம்புகளின் நகரமாக விளங்கிய அந்த Image
Read 13 tweets
Nov 29
#MahaPeriyava
Narrated by Prof S.Kalyanaraman, Neurosurgeon, Chennai.
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb

I was a neighbour of Pradosham Venkatarama Iyer and because of his association I was drawn towards Maha Periyava and from that moment the joy Image
and happiness my family members and I have received is beyond words. Regular darshan and interaction between 1978 and 1984 has made me gain knowledge about various religious activities. I am able to chant many verses and also assist my gurukul at Selaiyur in homams. This is all
due to the kindness and blessings which I have received from Maha Periyava. I would like to share some events. Sri Pradosham Venkatarama Iyer celebrated the Platinum Jubilee Peetarohanam of Maha Periyava in a very religious manner and a procession was arranged with Periyava’s
Read 12 tweets
Nov 29
#சிவபெருமானின்_ரிஷபவாகன_தத்துவம்
சிவ பெருமானிடம் ஏதேனும் வேண்டுதல் இருந்தால் அதை அவர் வாயிற் காப்போன் நந்தியின் காதில் ஓதி விட்டால், சிவன் காதிலேயே ஓதியது போல் ஈடேறி விடும் என்பது ஐதீகம்.
‘ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப' என்னும் பாடல் புறநானூற்றின் Image
கடவுள் வாழ்த்தாக அமைந்து இருக்கிறது. 'சிவபெருமானின் வாகனமான காளை தூய்மையான வெள்ளை நிறமும் சீரார்ந்த பெருமையும் கொண்டது என்பது இதன் பொருள். உலகில் உள்ள எல்லா பொருட்களுக்கும் அழிவு உண்டு. ஆனால் தர்மத்திற்கு மட்டும் அழிவு என்பது இல்லை. இதனை உணர்த்தவே சிவபெருமான் ரிஷப வாகனத்தில் Image
எழுந்தருளியுள்ளார். ஒருமுறை தர்மதேவதை இந்த உலகில் தான் அழியாமல் இருக்க வேண்டும் என்று எண்ணினாள். இதற்காக சிவ பெருமானை வேண்டி கடும் தவம் இருந்தாள். சிவபெருமானும் தர்ம தேவதையின் தவத்தால் மனம் மகிழ்ந்தார். பின்னர் அவள் முன் தோன்றிய சிவபெருமான், தர்ம தேவதையிடம் தவம் இருந்ததற்கான
Read 10 tweets
Nov 27
#ஸ்ரீ_ரண்டுமூர்த்தி_திருககோவில் (ஸ்ரீ
அன்னபூர்ணேஸ்வரி, மற்றும் மகிஷாசுரமர்தினி). திருவலத்தூர், கொடும்பு, பாலக்காடு மாவட்டம்.

பாலக்காட்டில் உள்ள திருவலத்தூரில் சொகனாசினி நதிக்கரையில் அமைந்துள்ள இத்திருத்தலத்தில் இரண்டு பிரதான தெய்வங்கள் உள்ளன. அன்னபூர்ணேஸ்வரி உருவம் கல்லாலும்,
மகிஷாசுரமர்த்தினி பலா மரத்தாலும் செய்யப்பட்டுள்ளன. இக்கோயிலில் அழகிய கூத்தம்பலம் (பாரம்பரிய கோவில் அரங்கம்) மற்றும் ஒரு பெரிய மிழவு (ஒரு தாள வாத்தியம்) உள்ளன. திருவாலத்தூர் கோயில் பழங்கால கேரள கட்டிடக் கலையின் தேர்ச்சிக்கு ஓர் எடுத்துக்காட்டு. இது கோவில் கட்டிடக்கலைக்கு சிறந்ததாக
கருதப்படுகிறது. வெளிப்புற கல் சுவர் முழுமையடையாததாக தோன்றலாம், ஆனால் அது இயற்கையின் சீற்றத்தை பல முறை தாங்கியுள்ளது. உட்புற மண்டபத்தில் தேவி பாகவதம் மற்றும் ராமாயணத்தின் காட்சிகளை சித்தரிக்கும் அழகிய சுவர் ஓவியங்கள் உள்ளன. மற்றொரு ஈர்ப்பு ஒரு பெரிய மிழவு (சாக்கியர் கூத்து மற்றும்
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(