*திருக்கூடலூர்_வையங்காத்த
பெருமாள் *

திருக்கூடலூர் தஞ்சை மாவட்டத்தில் திருவையாற்றிலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் உள்ளது. மதுரையை தென்திருக்கூடலூர் என்றும் இதனை வட திருக்கூடலூர் என்றும் கூறுவர்.

1
அதேபோல் ஆடுதுறை என்னும் பெயரும் இன்றைய தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்திலிருந்து சீர்காழி செல்லும் வழியில் அமைந்துள்ள ஆடுதுறை என்னும் நகரமன்று. ஏற்கனவே சொன்னது போல் திருவையாறிலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் உள்ள ஒரு சிறியகிராமம்.

2
இந்த எளிய கிராமத்தின் பெயர் ஆடுதுறை. இங்கு பெருமாளை எழுந்தருளச் செய்தமையால் “ஆடுதுறைப் பெருமாள் கோயில்” என்றே வழங்கப்படுகிறது.

3
*வரலாறு*

திருமால் வராஹ அவதாரமெடுத்துப் பூமிக்குள் புகுந்தது இந்த இடம்தான் என்று புராணங்கள் பேசுகின்றன. இதனைத் திருமங்கையின் மேற்படி பாடலும் சான்று காட்டும்.

4
திருமால் பூமியை (இவ்விடத்தில்) பிளந்து உள்புகுந்து ஸ்ரீமுஷ்ணத்தில் வெளியே எழுந்து அவ்விடத்துத் தம் தேவியைத்தாங்கி காட்சி தந்தார் என்பர்.

5
மஹாலெட்சுமியைக் காக்கும் பொருட்டு வராஹ அவதாரமெடுத்து ஸ்ரீமுஷ்ணத்தில் தேவியை அணைத்துக் காட்சிகொடுத்ததாலும் முதலில் இவ்விடத்தில் பூமியைக் கீறி உள்புகுந்ததால் திருமங்கை ஆழ்வார் இத்தலத்தைமட்டும் பாடி ஸ்ரீமுஷ்ணத்தைப் பாடாது விட்டாரென்றும் ஆன்மீக ஆய்வாளர் கூறுவர்.

6
ஒரு சமயம் அம்பரிஷி என்னும் ஒரு மன்னன் மிகச்சிறந்த திருமால் பக்தனாகி மன்னர் பதவியை துறந்து மகரிஷி ஆனான். கடும் தவம் புரிவதிலும், கடுமையான விரதங்களைக் கடைப் பிடிப்பதிலும் அம்பரிஷன் தேவர்களிலும் சிறந்தவனாக விளங்கினான்.

7
அம்பரிஷியன் தவநிலையைச் சோதிக்க துருவாச முனிவர் அம்பரிஷியின் குடிலுக்கு வந்து அவரது ஏகாதசி விரதத்தின் பலனைக் கொடுக்குமாறு கேட்டார். துருவாசர் வந்திருப்பதையும் பொருட்படுத்தாது தனது விரதத்திலேயே அம்பரிஷி மூழ்கியிருந்தார்.

8
ஏகாதசி முடிந்து துவாதசிவந்துவிட்டது. அப்போதும் ஸ்ரீமந் நாராயணன் நினைவாக தவத்தில்ஆழ்ந்துவிட்டார் அம்பரிஷி.

9
தன்னைச் சற்றும் மதிக்காத நிலையைக் கண்ட கோபகுணம் கொண்ட துர்வாசர் அம்பரிஷிக்கு சாபம் கொடுக்க, அம்பரிஷி மகாவிஷ்ணுவை துதித்தார். மஹா விஷ்ணு துர்வாசர் மீது தனது சக்ராயுதத்தை ஏவினார்.

10
சக்ராயுதத்தை எதிர்த்து நிற்க முடியாத துர்வாசர் சக்ராயுதத்தை சரண் அடைந்து எம்பெருமானின் அடியார்களுக்கு அபச்சாரம் விளைவித்த தனது குணத்தை நொந்து தன்னைக் காப்பாற்றுமாறு மஹாவிஷ்ணுவை வேண்ட சக்ராயுதத்தை திருப்பிப் பெற்ற மஹாவிஷ்ணு துர்வாசரை மன்னித்தது இத்தலத்தில்தான்.

11
பிறகு திருமாலின் வேண்டுகோளின்படி பொன்னியாற்றின் கரையில் திருக்கோயில் எழுப்பி நீண்டநாள் வழிபட்டு பரகதியடைந்தான். அம்பரிஷனுக்கு அருளியதால் 
அம்பரிஷ வரதரென்றும் வையங்காத்த_பெருமானென்றும் இங்கு பெருமாளுக்குத் திருநாமம் ஏற்பட்டது. இந்த அம்பரிஷனால் கட்டப்பட்ட கோயில் இப்போது இல்லை.

12
ஒரு சமயம் பொன்னியில் வெள்ளப்பெருக்கு உண்டாகி அதன் கரையிலிருந்த (காவேரிப் பிரளயம் என்றும் இதனைக் கூறுவர்) இக்கோவில் இருந்த இடம் தெரியாமல் அழிந்து மண்மேடாகிவிட்டது. மூலவரும் உற்சவரும்தாயாரும், இதர விக்ரஹங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன.

13
கோபுரத்தையும்,மதில்களையும், இதர விக்ரஹங்களையும் வெள்ளம் இடித்துச் சென்றாலும் மூலவர், உற்சவர், தாயார் மட்டும்பொன்னியின் போக்கில் சென்று ஒருபுறம் ஒதுங்கி நிற்க, மீன் வேட்டைக்குச்சென்று வந்த பரதவர் வலையில் சிக்கி அவர்களால் எடுத்துச் செல்லப்பட்டு அவர்களின் சேரியில் அமர்ந்தனர்.

14
வெள்ளம் வடிந்து வானம் வெறிச்சோடிய சில தினங்களில் மதுரையில்நிலாமுற்றத்தில் தூங்கிக் கொண்டிருந்த ராணிமங்கம்மாளின் கனவில் மஹாவிஷ்ணு தோன்றி ஆற்றங்கரையில் ஒதுங்கிச் சேரியில் இருக்கும் தமக்கு கோவில் கட்டுமாறு கேட்டுக்கொள்ள தனது தளபதி கிருஷ்ண ராஜுநாயக்கருடன் படை பரிவாரத்துடன்

15
தஞ்சைத் தரணி நோக்கிப் புறப்பட்டு அழிந்த கோவிலைப் பார்வையுறுங்கால், சேரித் தலைவன் மீனவன் ராமன் என்பான் ஓடிவந்து இறைவன் தமது சேரியிலிருப்பதை தெரிவிக்க, ராஜ மரியாதையுடன் வழிபாடியற்றி அவைகளைப் பெற்றுக் கொள்ள எவ்விடத்தில்கோவில் கட்டுவதென்ற ஐயம் எழ,

16
சேரிக்கருகாமையில் பேரொளி தோன்றி அது ஓரிடத்தில் நிலைத்து நின்று மறைய இறைவனும் குறிப்பால்உணர்த்தினான் என்றே நினைத்து அவ்வொளி தோன்றிய இடத்தில் (ஆடுதுறைகிராமத்தில்) ராணி மங்கம்மாவினால் இப்போதுள்ள கோவில் கட்டப்பட்டது.

17
*மூலவர்:* #வையங்காத்தபெருமாள் (ஜெகத்ரட்சகன்) உய்யவந்தார் என்னும் திருநாமம் நின்ற திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம்.

#வாழ்க_பாரதம்
#வளர்க_பாரதம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

Nov 30
இந்தப் பரமபதத்தின் இரகசியம் தான் என்ன…!

மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி அன்று சாதாரண மக்களும் அறிந்துணர்வதற்காகப் பரமபதத்தைக் காட்டுவார்கள்.
இந்த வாழ்க்கையில் மனிதனானபின் மிருகத்திலிருந்து நாம் எப்படி மனித நிலைக்கு வந்தோம்…? மனிதனானபின் எப்படிப் பரமபதம் அடைவது…? என்று சிந்தித்துச் செயல்படும் நிலைக்குத்தான் பரமபதத்தின் படத்தைப் போட்டு அங்கே காட்டி இருப்பார்கள்.
பரமபதத்தில் நாம் தாயத்தை உருட்டுகின்றோம். உருட்டிக் கொண்டு போனவுடனே 

1.முதலில் சிறு பாம்பு கடிக்கும். அது கடித்த பின் மீண்டும் கீழே கொண்டு போய் விட்டுவிடும்.

2.இதிலிருந்து தப்பித்து மேலே சென்றவுடன் அதை விடப் பெரிய பாம்பு கடித்தவுடன் மேலே இருந்து கீழே வந்து விடுகின்றோம்.
Read 17 tweets
Nov 29
தனித்துவம் வாய்ந்த முருகன் திருத்தலங்கள் :-

குமரன் ஒரு கையில் வில்லுடனும் மறு கையில் வேலுடனும் காட்சி தரும் இடம் திருவிடைக்கழி. மயிலாடுதுறை – தரங்கம்பாடி சாலை தடத்தில் இருக்கிறது .
முருகப் பெருமான் கையில் மாம்பழத்தோடு காட்சி தரும் இடம் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம்.
ஸ்ரீ முருகப்பெருமானுக்கு இரண்டு முகங்களும் எட்டு கரங்களுடனும் சென்னிமலையில் காட்சி தருகிறார். இந்த சந்நதிக்கு எதிரில் காகங்கள் பறப்பதில்லை.
Read 18 tweets
Nov 29
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் பூஜை முறைகள்...!!

பூஜை நடைமுறைகள், தரிசன முறைகள் மற்றும் அபிஷேக ஆராதனை முறைகள் ஆகியவை ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு விதமாக பின்பற்றப்படும்.
அதன்படி ஐயப்பன் சுவாமிக்கு பிரசித்தி பெற்ற சபரிமலை கோவிலில் பலவிதமான பூஜை முறைகள் காலம் காலமாக பின்பற்றப்படுகின்றன. அவை உஷத் கால பூஜை, உச்சி கால பூஜை, அத்தாழ பூஜை, மாத பூஜையாக படி பூஜை மற்றும் உதயாஸ்தமன பூஜை ஆகியவை ஆகும்.
1. உஷத் கால பூஜை :

அதிகாலையில் ஐயப்பன் சன்னதி நடை திறந்த உடனே அபிஷேகம் நடைபெறும். காலையில் கணபதி ஹோமத்துடன் உஷத் கால பூஜை நடைபெறும்.
Read 11 tweets
Nov 29
இருக்கும் வரையில் தெரியாத அருமை இழந்த பின்பு தெரியும்…

நான் ரொம்பக் கோபமாக வீட்டை விட்டு வெளியேறினேன்...........

அவசரத்தில்
அப்பாவின் ஷூவை மாட்டிக்கொண்டு வெளியேறும் அளவுக்கு அவ்வளவு கோபம்.
இனி நான் பெரிய ஆள் ஆன பிறகுதான் வீட்டுக்கு வருவேன்... அவ்வளவு கோபம். பின்னே இருக்காதா என்ன? கல்லூரி போகும் மகனுக்கு ஒரு மோட்டார் சைக்கிள் கூட வாங்கி கொடுக்க முடியாத அப்பா…. “நீங்கள், நான் ஏன் பெரிய இன்ஜினியர் ஆக வேண்டும் என்று கனவு காண்கிறீர்கள்? உங்கள் கடனையெல்லாம் அடைப்பதற்கா?
மண் ரோட்டில் நடந்தவுடன், காலணியில் ஏதோ சிக்கியதை உணர்ந்தேன். என் கால் விரலில் இருந்து கொஞ்சம் ரத்தம் கொட்டியது... பார்த்தால் பூட்ஸில் ஆணி இருந்தது. மிகவும் வலித்தது, பொறுத்துக்கொண்டு சிறிது தூரம் சென்றவுடன் ... என் கால்களில் ஈரமாக உணர்ந்தேன்,
Read 17 tweets
Nov 29
*பாரதம், ராமாயணம் என்பது என்ன ?*

ரொம்ப Simple
படித்துதான் பாருங்களேன்..

மண்ணால் போரெனில்
பாரதம் ....
பெண்ணால் போரெனில்
ராமாயணம் ....
சகுனி குழப்பினால்
பாரதம்....
கூனி குழப்பினால்
ராமாயணம் ....

பெண் ஐந்தை மணந்தால்
பாரதம் ...
பத்தை (10) மறுத்ததால்
ராமாயணம் ....

அனுமன் கொடிதனில் பறந்தால் பாரதம் ...
அனுமன் கடல்தாண்டி பறந்தால் ராமாயணம் ....
இறை இப்புவி இறங்கி சாரதியானால் பாரதம் ...
இறை இப்புவி இறங்கி சத்திரியனானால் ராமாயணம் ....

மேய்த்தது கோ எனில்
பாரதம்..
மேன்மை கோ எனில்
ராமாயணம் ...

பகடையால் பகையெனில்
பாரதம்....
பாவையால் பகையெனில் ராமாயணம் ........
Read 10 tweets
Nov 29
" *இருபத்து நான்கே நிமிடங்கள் செய்த தவத்துக்காக காட்சி அளித்த , யோக நரசிம்மப்பெருமாள்…!

ஆழ்வார்கள் பாடிய நூற்றிஎட்டு திவ்ய தேசங்களுள் ஒன்று வேலூர் மாவட்டத்தில் உள்ள சோளசிம்மபுரம் எனப்படும் சோளிங்கர்*.

 *திருக்கடிகை* என்ற திருப்பெயரில் இவ்வூரை ஆழ்வார்கள் பாடியுள்ளார்கள்.
கடிகை என்பது ஒரு நாழிகைப் பொழுதைக் குறிக்கும். ஒரு நாழிகை இந்தத் திருத்தலத்தில் தங்கி இருந்தாலே, இத்தலம் முக்தியை அளிக்க வல்லது. அதனால் தான் திருக்கடிகை என்று இதனை ஆழ்வார்கள் அழைத்துள்ளார்கள்.
நரசிம்ம அவதாரத்தைத் தரிசிக்க விரும்பிய சப்த ரிஷிகள் எனப்படும் ஏழு முனிவர்கள், சோளிங்கர் மலைக்கு மேல் நரசிம்மர் யோக நிலையில் தவம் புரிவதை அறிந்து கொண்டார்கள்.
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(