#திருக்கூடலூர்_வையங்காத்தபெருமாள் #ஜெகத்ரட்சகன்
மூலவர்: #வையங்காத்தபெருமாள் (#ஜெகத்ரட்சகன்) #உய்யவந்தார் என்னும் திருநாமம் நின்ற திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம். திருக்கூடலூர் தஞ்சை மாவட்டத்தில் திருவையாற்றிலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் உள்ளது. மதுரையை தென்
திருக்கூடலூர் என்றும் இதனை வட திருக்கூடலூர் என்றும் கூறுவர். அதே போல் ஆடுதுறை என்னும் பெயரும் இன்றைய தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்திலிருந்து சீர்காழி செல்லும் வழியில் அமைந்துள்ளது. சிறிய கிராமம் #ஆடுதுறை. இங்கு பெருமாளை எழுந்தருளச் செய்தமையால் “ஆடுதுறைப் பெருமாள் கோயில்” என்றே
வழங்கப்படுகிறது. திருமால் #வராஹ அவதாரமெடுத்துப் பூமியை (இவ்விடத்தில்) பிளந்து உள்புகுந்து #ஸ்ரீமுஷ்ணத்தில் வெளியே எழுந்து அவ்விடத்துத் தம் தேவியைத்தாங்கி காட்சி தந்தார் என்று புராணங்கள் பேசுகின்றன. இதனைத் திருமங்கையின் பாடலும் சான்று காட்டும். பூமாதேவியை காக்கும் பொருட்டு வராஹ
அவதாரமெடுத்து ஸ்ரீமுஷ்ணத்தில் தேவியை அணைத்துக் காட்சி கொடுத்ததாலும் முதலில் இவ்விடத்தில் பூமியைக் கீறி உள்புகுந்ததால் திருமங்கை ஆழ்வார் இத்தலத்தைமட்டும் பாடி ஸ்ரீமுஷ்ணத்தைப் பாடாது விட்டாரென்றும் ஆன்மீக ஆய்வாளர் கூறுவர். ஒரு சமயம் அம்பரீஷன் என்னும் மன்னன் மிகச்சிறந்த திருமால்
பக்தனாகி கடும் தவம் புரிவதிலும், கடுமையான விரதங்களைக் கடைப் பிடிப்பதிலும் அம்பரிஷன் தேவர்களிலும் சிறந்தவனாக விளங்கினான். அவன் தவநிலையைச் சோதிக்க துருவாச முனிவர் ஏகாதசி அன்று அம்பரீஷனின் இடம் வந்து அவரும் துவாதசி பாரணம் செய்ய வருவதாகச் சொல்லி ஆற்றில் குளிக்க சென்றவர் பாரணை நேரம்
முடியும் வரை திரும்பி வரவில்லை. ஏலாரசி விரத மகிமை கிடைக்க அவர் துளசி தீர்த்தத்தை அருந்தி பாரணையை முடித்துக் கொண்டு அவர் வந்ததும் உணவருந்தலாம் என்று காத்துக் கொண்டிருந்தார். ஆனால் நீர் அருந்தி பாரணையை இவர் வரும் முன்னே முடிக்கும் கொண்டதை ஞான திருஷ்டியால் அறிந்து கொண்ட துர்வாசர்
கோபம் கொண்டு அம்பரீஷுக்கு சாபம் கொடுக்க, மஹா விஷ்ணு தன் பக்தனுக்குக் கேடு நேர்வதைக் கண்டு பொறுக்காமல் துர்வாசர் மீது தனது சக்ராயுதத்தை ஏவினார். சக்ராயுதத்தை எதிர்த்து நிற்க முடியாத துர்வாசர் சக்ராயுதத்தை சரண் அடைந்து எம்பெருமானின் அடியார்களுக்கு அபச்சாரம் விளைவித்த தனது குணத்தை
நொந்து தன்னைக் காப்பாற்றுமாறு மஹாவிஷ்ணுவை வேண்ட சக்ராயுதத்தை திருப்பிப் பெற்ற மஹாவிஷ்ணு துர்வாசரை மன்னித்தது இத்தலத்தில்தான். பிறகு திருமாலின் வேண்டுகோளின்படி பொன்னி ஆற்றின் கரையில் திருக்கோயில் எழுப்பி நீண்டநாள் வழிபட்டு பரகதியடைந்தான் அம்பரீஷன். அம்பரிஷனுக்கு அருளியதால்
#அம்பரிஷ_வரதரென்றும் #வையங்காத்த_பெருமானென்றும் இங்கு பெருமாளுக்குத் திருநாமம் ஏற்பட்டது. அம்பரிஷனால் கட்டப்பட்ட கோயில் இப்போது இல்லை. ஒரு சமயம் #பொன்னியில் வெள்ளப்பெருக்கு உண்டாகி அதன் கரையிலிருந்த (காவேரிப் பிரளயம் என்றும் இதனைக் கூறுவர்) இக்கோவில் இருந்த இடம் தெரியாமல் அழிந்து
மண்மேடாகி விட்டது. கோபுரத்தையும், மதில்களையும், இதர விக்ரஹங்களையும் வெள்ளம் அடித்துச் சென்றாலும் மூலவர், உற்சவர், தாயார் மட்டும் பொன்னியின் போக்கில் சென்று ஒருபுறம் ஒதுங்கி நிற்க, மீன் வேட்டைக்குச் சென்று வந்த பரதவர் வலையில் சிக்கி அவர்களால் எடுத்துச் செல்லப்பட்டு அவர்களின்
சேரியில் அமர்ந்தனர். வெள்ளம் வடிந்து வானம் வெறிச்சோடிய சில தினங்களில் மதுரையில் நிலா முற்றத்தில் தூங்கிக் கொண்டிருந்த #ராணிமங்கம்மாளின் கனவில் மஹாவிஷ்ணு தோன்றி ஆற்றங்கரையில் ஒதுங்கிச் சேரியில் இருக்கும் தமக்கு கோவில் கட்டுமாறு கேட்டுக் கொள்ள தனது தளபதி கிருஷ்ண ராஜுநாயக்கருடன் படை
பரிவாரத்துடன் தஞ்சைத் தரணி நோக்கிப் புறப்பட்டு அழிந்த கோவிலைப் பார்வையிடும் போது, சேரித் தலைவன் மீனவன் ராமன் என்பவன் ஓடிவந்து இறைவன் தன் சேரியிலிருப்பதை தெரிவிக்க, ராஜ மரியாதையுடன் வழிபாடு செய்து தெய்வங்களை பெற்றுக் கொள்ள, எவ்விடத்தில் கோவில் கட்டுவதென்ற ஐயம் எழ, சேரிக்கு அருகில்
பேரொளி தோன்றி அது ஓரிடத்தில் நிலைத்து நின்று மறைய இறைவனும் குறிப்பால் உணர்த்தினான் என்றே நினைத்து அவ்வொளி தோன்றிய இடத்தில் (#ஆடுதுறைகிராமத்தில்) ராணி மங்கம்மாவினால் இப்போதுள்ள கோவில் கட்டப்பட்டது.
சென்று தரிசிப்போம். அருள் பெறுவோம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Nov 30
#MahaPeriyava
Almost everyone is familiar with the name Sri Ki.Va.Jagannathan, a very eminent Tamil scholar, poet and author. Once when MahaSwamigal was camping in Mylapore, Sri https://t.co/wHfXISFUpw.Ja’s daughter-in-law, Tripurasundari went there for darshan Image
She stood in the long queue along with other devotees waiting to see the Mahan and finally reached the place where He was sitting. She was introduced to Sri Maha Periyava. She kept the fruits, flowers and other offerings which she brought for the Mahan in a bamboo tray in front
of Him and prostrated. Raising His right hand, the Mahan blessed Tripurasundari and asked “Where are you staying in Madras?”
“Here in Mylapore Periyava” replied Tripurasundari.
“Do you have the habit of going to temples?”
“Yes Periyava. Especially, I always enjoy going to
Read 9 tweets
Nov 30
#Words_that_have_come_true
1. A day will come when Congress leaders will wear their Janeu outside of their coat and shirt and vote in the elections - Veer Savarkar in 1959.

2. One day BJP will rule the whole country - Atal Behari Vajpayee in the Parliament in 1999.
3. I will definitely free India from the Congress - Narendra Modi in 2010

4. I am leaving the Congress party today. But I vow that I will build an establishment against the philosophies of Congress which will push back the party. Even if it takes a 100 years, does not matter
to get rid of 800 years of slavery. But this establishment will unite India and create a United Akanda Bharat - Keshav Boliram Headgewer, Founder of RSS in 1922 in Nagpur.

5. One day the dead Hindu religion will wake up and say proudly ‘I am a Hindu’. At that time Even the US
Read 11 tweets
Nov 30
#கோடிலிங்க_தரிசனம்
கர்நாடகாவின் சிறப்புமிக்க இடம் ஹம்பி. இது வட கர்நாடகாவில் உள்ள ஒரு சிறிய கிராமம். விஜயநகரப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் அதன் தலைநகராக விளங்கிய விஜயநகரத்தின் இடிபாடுகளுக்குள் இருக்கிறது, தற்போதைய ஹம்பி. இந்த ஊர், விஜயநகர பேரரசு காலத்திற்கும் முற்பட்டது. தற்போது
ஹம்பி, ஒரு முக்கியமான புராதன விஷயங்கள் அடங்கிய இடமாக உள்ளது. பல வியப்பூட்டும் அம்சங்களை தன்னகத்தே கொண்ட விருப்பாட்சா கோவில், பழம்பெரும் நகரத்தின் நினைவுச் சின்னங்களைத் தாங்கி இந்த ஊர் நிற்கிறது. அதன் ஒரு பகுதிதான் சிவலிங்கங்கள். ஹம்பியில் உள்ள துங்கபத்ரா நதிக்கு அருகில் பாறைகளில்
கோடி லிங்கங்கள் ஆங்காங்கே செதுக்கப் பட்டுள்ளன. கோடி லிங்கங்கள் இருப்பதால், இந்த நதிக்கு 'கோடி லிங்க சக்கர தீர்த்தம்' என்றும் பெயர். ராமாயண காலத்தில் துங்கபத்ரா நதி, 'பம்பா' என்றும், மகாபாரத காலத்தில் 'துங்கேனா நதி' என்றும் அழைக்கப்பட்டுள்ளது. இதே போல கம்போடியாவிலும் ஓரிடத்தில்
Read 4 tweets
Nov 30
#நற்சிந்தனை
காட்டில் அலைந்து கொண்டிருந்த ஒருவன், ஒரு பாழுங்கிணற்றில் விழுந்து விட்டான். இவனை காப்பாற்ற ஆளில்லை. “யாராவது என்னை தூக்கி விடுங்கள், காப்பாற்றுங்கள்" என்று கூவி கதறினான். இவனை காப்பாற்ற ஒருவர் வந்தார். "அடடா! கீழே விழுந்து விட்டாயா! கவலைப்படாதே நான் உன்னை
காப்பாற்றுகிறேன்" என்றார். முடிச்சுகள் உள்ள கயிறை போட்டு, "இதோ இந்த கயிற்றில் உள்ள முடிச்சை பிடித்து இடுப்பில் கட்டிக்கொள். நான் உன்னை தூக்கி விடுகிறேன்" என்றார்.
இவனோ கயிறை பிடித்து கொள்ள மறுத்தான்.
"ஏனப்பா! நான் தான் கயிறை போட்டு இருக்கிறேனே. இங்கு என்னை தவிர ஆள் கிடையாது. இந்த
கயிறை பிடித்துக் கொள். நீ விழுந்து கிடக்கிறாய். நான் உன்னை காப்பாற்ற வேண்டியவன். நம்பிக்கையுடன் கயிறை பிடித்துக்கொள்" என்றார் வந்தவர்.
"அது சரி. நான் இந்த கயிறை பிடித்து கொண்டு ஏறும் போது பாதியில் அறுந்து விட்டால்?" என்றான் விழுந்தவன்.
"கவலையே படாதே! இது அறுகவே அறுகாத கயிர்.
Read 19 tweets
Nov 30
#MahaPeriyava Ghatam Maestro Vikku Vinayakram being an ardent devotee of Paramacharya, he attributes all his success to His bountiful blessings. “I have felt His divine presence on more than one occasion,” he says. Once Vinayakram had gone on a tour to Athens to perform at a
concert along with L. Shankar and Zakir Hussain. Somehow the Ghatam (a circular pot beaten with the hands as a percussion instrument in South Indian music) he took broke a few days before the scheduled date of performance. Vinayakram was in tears and called his wife in Chennai
and told her that he wanted to return as there was no point of staying in Athens. His wife asked him to wait for one day and in the meantime went to Kanchi Mutt and explained the situation to Sri Maha Periyava. Periyava did not react to her narrative and kept quiet. She was in
Read 10 tweets
Nov 29
இந்தியாவில் உள்ள 12 ஜோதிர் லிங்கத் தலங்களில் ஒன்றான குஜராத் மாநிலத்தில் ஜாம்நகரில் உள்ள #துவாரகை #நாகநாத் என்ற #நாகேஸ்வரம்
#நாகேஸ்வரர் #நாகேஸ்வரி திருக்கோயில்
மூலவர்: நாகேஸ்வரர் (நாகநாதர்)
அம்மன்: நாகேஸ்வரி
தீர்த்தம்: பீம தீர்த்தம், கோடி தீர்த்தம், நாக தீர்த்தம்
புராண பெயர்: தாருகாவனம்
லிங்க வடிவங்களில் ஜோதிர் லிங்கம் என்பவை சிறப்பு வாய்ந்தவை. இந்தியா முழுவதும் 12 ஜோதிர் லிங்க திருத்தலங்கள் உள்ளன. திருவாதிரை நட்சத்திர நாளில் சிவபெருமான், தன்னை ஜோதி லிங்க வடிவில் வெளிப் படுத்தியதாக புராணங்கள் சொல்கின்றன. இதனால் திருவாதிரை நாள் ஜோதிர்
லிங்கத்தை வணங்குவதற்கு உரிய சிறப்பு நாளாகக் கருதப்படுகிறது.
சிவ புராணத்தில் கூறிருப்பது படி, சுப்பிரியா என்னும் சிவ பக்தையை, தாருகா என்ற அசுரன் பிடித்துச் சென்றான். அவளை, தாருகாவனம் என்ற இடத்தில் மேலும் பலருடன் சேர்த்து அடைத்து வைத்திருந்தான். பாம்புகளின் நகரமாக விளங்கிய அந்த
Read 13 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(