#டாகோர்_கோவில் துவாரகைக்கு அருகில் டாகோர் என்ற கிராமம் உள்ளது. அங்கு #போடணா என்பவர் வாழ்ந்து வந்தார். எப்போதும் துவாரகையில் உள்ள
ஸ்ரீ கிருஷ்ணனையே எண்ணித் துதித்து, அவரைக் காண மாட்டோமா என்று ஏங்கிக் கொண்டிருப்பார். அதனால் அவரை அனைவரும் #துவாரகா_ராமதாசர் என்று கூப்பிட்டனர். ImageImage
தினந்தோறும் உஞ்சவிருத்தி எடுத்து வந்து மனைவியிடம் கொடுப்பார். அவள் அதை சமைத்து, இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டு பிறகு சாப்பிடுவார்கள். ஒவ்வொரு ஏகாதசிக்கும் விரதமிருந்து, இறைவனைப் பாடி மறுநாள் துவாதசியன்று முடிந்த அளவு ஏழைகளுக்கும் உணவளித்து, பின் உண்பார்கள். அதேபோல் ஒவ்வொரு ஆடி Image
மாதம் ஏகாதசியன்று, டாகோரிலிருந்து பாத யாத்திரையாக துவாரகை சென்று, துவாரகாநாதனைத் தொழுது, மறுநாள் துவாதசியன்று தரிசித்துத் திரும்புவார். இவ்வாறு காலம் சென்றது. அவரது வயதான காலத்தில் தள்ளாமையால், முன் போல துவாரகைக்குச் செல்ல கஷ்டமாக இருந்தாலும், விடாமல் விரதத்தைப் பின்பற்றினார். ஓர
ஆடி மாதம் ஏகாதசியன்று துவாரகை புறப்பட்டார். அவரால் நடைப் பயணத்தைத் தொடர முடியவில்லை. ஒரு மரத்தடியில் அமர்ந்து, "கண்ணா! எனக்கு வயதாகிவிட்டது, முன்பு போல் என்னால் உன்னைத் தரிசிக்க வர முடியவில்லை. என்னால் முடியாவிட்டாலும், நீ எனக்கு எப்படியாவது தரிசனம் தர வேண்டும்" என்று வேண்டிக்
கொண்டு, அழுது கொண்டே அசதியில் உறங்கி விட்டார். அவர் கனவில் கண்ணன் தோன்றி, "கவலைப்படாதே போடணா! உன் முன் ஒரு தேர் ஒன்று வரும், அதில் நான் இருப்பேன், என்னை நீ உன் ஊருக்கு அழைத்துச் செல்" என்று கூறி மறைந்தார். கண் விழித்தபோது, எதிரே தேரும், அதில் துவாரகாநாதனும் இருப்பதைக் கண்டு
மகிழ்ந்து, தேரில் ஏறி டாகோர் சென்றார். விக்ரகத்தைப் பூஜை அறையில் வைத்து, தனது இல்லத்தையே கோவிலாக்கி, நாம சங்கீர்த்தனம் செய்யத் தொடங்கினார். அதே சமயம், துவாரகையில் கண்ணனின் மூல விக்ரகத்தைக் காணாமல் அர்ச்சகர்கள் திகைத்தனர். டாகோரில் ராமதாசரின் வீட்டில் கண்ணன் விக்ரகம் இருக்கும்
தகவலறிந்து, அவர்கள் டாகோர் சென்றனர். ராமதாசரின் வீட்டிற்குச் சென்று கண்ணனை எடுத்துக் கொண்டு செல்லத் தொடங்கினர். ராமதாசர், "கண்ணா! உன்னைப் பிரிந்து என்னால் இருக்க முடியாது" என்று அழுது அரற்றினார். அப்போது கண்ணன் அவரிடம், "என் எடைக்கு எடை பொன் தருவதாகச் சொல்" அவர்கள் கொடுத்து
விடுவார்கள்" என்று சொன்னார். அவரும் அவ்வாறே சொன்னார். உஞ்சவிருத்தி செய்து பிழைக்கும் அவர் எங்கே பொன் தரப் போகிறார் என்று நினைத்தவர்கள், அதற்கு சம்மதம் தெரிவித்தார்கள். ஒரு தராசில் துவாரகாநாதனின் விக்ரகத்தை வைத்தனர். ராமதாசர் வீட்டிற்குள் சென்று, அவரிடம் இருந்த ஒரே ஒரு பொன்னாலான,
தனது மனைவியின் மூக்குத்தியை எடுத்து வந்து, இன்னொரு தட்டில் வைத்தார். எல்லோரும் ஏளனமாக பரிகசித்து சிரித்தனர். அப்பொழுது அவருக்கு ருக்மிணி செய்தது நினைவுக்கு வந்தது. கொல்லைப் புறம் சென்று இரண்டு துளசி தளங்களை எடுத்து வந்து மூக்குத்தியுடன் தராசில் வைத்து தனது மனைவியுடன் தராசை சுற்றி Image
வந்து வணங்கினார். பின்னர், கண்களை மூடிக் கண்ணனைத் தியானித்தார். தராசின் இருதட்டுகளும் சரிசமமாக நின்றது. அர்ச்சகர்களும், மற்றவர்களும் ராமதாசரின் பக்தியைக் கண்டு அதிசயித்து, ராமதாசரை வணங்கி, துவாரகாநாதனை அவரிடமே கொடுத்துவிட்டுத் திரும்பிச் சென்றனர். ராமதாசரும், தினமும் நாம Image
சங்கீர்த்தனத்தால் கண்ணனைப் பாடி, தொழுது வணங்கினார். இன்றும் அவர் பாடிய அந்தப் பாடல்கள் துவாரகையில் பாடப்படுகின்றது. டாகோர் கோவிலில் உள்ள கண்ணனை 'ராஞ்சோட்ஜி' என்று அழைக்கின்றனர். கண்ணன் போதணருடன் டாகோருக்கு மாட்டு வண்டியில் வந்தான் என்றும் சிலர் கூறுகின்றனர். அங்குள்ள ஒரு வேப்ப ImageImage
மரத்தில், ஒரு கிளையில் உள்ள இலைகள் இனிப்பாகவும், மற்ற கிளைகளில் உள்ள இலைகள் கசப்பாகவும் இருக்குமாம். கண்ணன் வரும் வழியில் அந்த மரத்தின் கிளையைப் பிடித்துக் கொண்டு சிறிது நேரம் நின்றான் என்றும், அதனால் அந்தக் கிளைகளில் உள்ள இலைகள் இனிக்கிறது. இதில் மறைமுகமாக தெர்விக்கப்பட்டுள்ள Image
விவரங்கள்:
தூவாராகையில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டதால், அங்குள்ள விக்கிரகம் வெளியே எடுத்துச் செல்லப்பட்டது. அப்பிரச்சினை விக்கிரகத்தை அப்புறப்படுத்தும் அளவிற்கு இருந்துள்ளது. டாகோர் ஒருவேளை பாதுகாப்பான இடம் என்று அங்கு தற்காலிகமாக மறைத்து வைக்கப்பட்டு இருக்கலாம். பிறகு, பிரச்சினை
தீர்ந்ததும், விக்கிரகம் துவாரகைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம். அப்பொழுது, பதிலுக்கு துவாரகை விக்கிரகம் போலவே, டோகோரில் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கலாம்.துவாரகையைப் போன்று, டாகோர் விக்கிரகமும் பிரசித்திப் பெற்றிருக்கலாம். இல்லை விக்கிரகமே சேதப்படுத்தப் பட்டிருக்கலாம்.
பதிலுக்கு இன்னொரு விக்கிரகத்தை உருவாக்கி இருக்கலாம். இவையெல்லாம், இடைக்காலத்தில் நடந்த விசயங்கள் என்பதால், அந்நியர்களின் நுழைவைத் தெரிந்து கொள்ளலாம். மசூதி போன்ற கூம்பு கோபுரங்கள் கொண்ட டாகோர் கோவில் அமைந்துள்ளது. இப்பொழுதைய கோவில் கட்டப் பட்ட வரலாறு: இந்நிகழ்ச்சிகள் எல்லாம்
சரித்திர ரீதியாக சம்வத் 1212 அல்லது 1156 CE ஆண்டில் நடந்துள்ளதாகத் தெரிகிறது. இப்பொழுதுள்ள கோவில் 1772ம் ஆண்டு கட்டப்பட்டது. எது எப்படியாகிலும், டங்நாத் மஹாதேவ் என்ற இடத்தில் இவ்விக்கிரகம் பல ஆண்டுகள் வைக்கப்பட்டிருந்தது. இதே மாதிரியான மற்றொரு விக்கிரகம், லட்சுமி கோவிலும் உள்ளது.
இந்த லட்சுமி கோவில், கம்பட்டைச் சேர்ந்த ரதன்ஜி நந்தஜி என்பவரால், வைஷ்ணவ சாகையின் ஆச்சாரியரான ஹரிராய்ஜி என்பவரின் விண்ணப்பத்தின்படி விக்கிரம ஆண்டு 1781ல் கட்டினார். பல சம்ஹிதைகளின் படி, உயரமான மற்றும் பெரிய கெடாவில் உள்ள ஶ்ரீகிருஷ்ணர் கோவில் மஹாராஷ்டிரத்தில் உள்ளா சச்தாரா
மாவட்டத்தில் உள்ள தம்பவே என்ற கிராமத்தைச் சேர்ந்த, கோபால்ராவ் ஜகந்நாத் தம்ப்வேகர் என்பவரால் விக்கிரம ஆண்டு 1781ல் கட்டப்பட்டது. இத்தகவலை அறிவிக்கும் கல்வெட்டு இன்றும் தம்பவேகர் குடும்பத்தைச் சேர்ந்த பாலசந்திர தம்பவேகர் வீட்டில் உள்ளது. 1769ல் கோபால்ராவ் ஜகந்நாத் தம்ப்வேகர் பேஷ்வா
அரசாங்கத்தில் ஓர் அதிகாரியாக இருந்தார். அவர் நடந்தே துவாரகைக்குச் சென்று வரும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். வதோதராவில் தங்கியிருந்த போது ரஞ்சோத்ராய் தெய்வத்தைப் பற்றி கேள்வி பட்டார். டாகோருக்கு வந்து வழிபட்ட பிறகு, அங்கு ஒரு நிலத்தையும் வாங்கினார். அங்குதான் அவர் இக்கோவிலை மாற்றி
அமைத்து கட்டினார். இன்றும் ராஜ குடும்பங்கள் மூலம் இக்கோவிலுக்கு மான்யங்கள் கிடைத்து வருகின்றன. இந்த ரஞ்சோத்ராய் கோவிலில் 24கூம்பு கோபுரங்களும் உள்ளன. மிக உயரமான கூம்பு கோபுரம் 90 அடிகளைக் கொண்டுள்ளது. இக்கூம்பு கோபுர கலசங்கள் எல்லாம் தங்கத்தினால் செய்யப்படவை. “நிஜ் மந்திர்” நான்க
பக்கங்களிலும் வெள்ளியினால் ஆன கதவுகள் முதலியன கொண்டுள்ளன. “சிகரபந்தி” (பள்ளியறை) என்ற பகுதி தெற்கு பகுதியில் உள்ளது. அங்கு கடவுளுக்கு வெள்ளியினால் செய்யப் பட்ட ஊஞ்சல், படுக்கை முதலியன உள்ளன. இக்கோவில் அமைப்பே ஹிந்து-முஸ்லிம் கலவையில் கட்டப்பட்டது போன்று காட்சியளிக்கிறது. Image
குறிப்பாக உயரமாக உள்ள ஏழடுக்குக் கொண்ட கோபுரத்தை நான்கு மூலைகளிலும் நான்கு கூம்பு கோபுரங்கள் தூண்களைப் போன்று அமைக்கப் பட்டுள்ளன. இதனை பார்க்கும் போது மசூதி போன்றே காட்சியளிக்கிறது. சாதாரணமாக பார்க்கும் போது, ஓர் இந்து கோவில் அல்லது ராஜஸ்தானிய மாளிகை போன்றுள்ளதை கவனிக்கலாம். Image
வருடம் முழுவதும் சுமார் ஒரு கோடி வரை பக்தர்கள், யாத்திரிகர்கள் வந்து கொண்டிருப்பதால், குஜராத் அரசின் “யாத்ராதாம் விகாஸ் போர்ட்” என்ற நிர்வாகத்தின் கீழ் வேண்டிய வசதிகள் செய்யப்படுகின்றன. குறிப்பாக, “பல்குன் பௌர்ணமி” அன்று சுமார் 20 லட்சம் பக்தர்கள் வருவதால், அவர்களுக்கு வேண்டிய
வசதிகளை செய்து வருகிறது. இப்பகுதிகளில், சந்திரனை மையமாக வைத்துக் கொண்டாடப் படும் பண்டிகைகள் அதிகமாக இருக்கின்றன. ஊர்களின் பெயர்களும் சந்திரனின் பெயர்களாகவே (சோம்நாத், சந்திபபூர் முதலியன) இருக்கின்றன.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Dec 4
#கடத்தூர்_அர்ச்சுனேஸ்வரர்_கோவில் திருப்பூர்
கொங்கு மண்டலம் வரலாற்று சிறப்பு, கலை, பண்பாடு, நாகரிகம், இறையுணர்வு ஆகியவற்றைக் கொண்ட வளம் கொழிக்கும் பழம் பெருமை வாய்ந்த பகுதியாகும். வைணவத்தின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் நெல்லை மாவட்டத்தில் 9 இடங்களில் பெருமாளுக்கென அமைக்கப்பட்ட ImageImage
கோவில்கள் நவதிருப்பதி என அழைக்கப்படுவது போல கொங்கு மண்டலத்தில் சைவத்தின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் அமராவதி ஆற்றின் கரையோரம் கொழுமம் முதல் கரூர் வரை 11 சிவாலயங்கள் உள்ளன.
இவற்றில் கொழுமம் தாண்டேஸ்வரர் ஆலயம், காசிவிஸ்வநாதர் ஆலயம், கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் ஆலயம் ஆகியவை
குறிப்பிடத்தக்கவை. 1000 ஆண்டுகளுக்கு முன் சிவபெருமான் சுயம்பு லிங்கமாக தோன்றி, விக்கிரம சோழனை ஆட்கொண்ட இடத்தில் இக்கோவில் உள்ளது. சோழர்களின் கட்டிட கலையை பறைசாற்றும் வகையில் முற்றிலும் கல்லால் கட்டப்பட்டுள்ளது. விக்கிரம சோழன் மட்டுமல்லாது பொது மக்களின் பங்களிப்போடு இக்கோவில்
Read 22 tweets
Dec 4
#அறந்தாங்கி_வீரமாகாளி_அம்மன் திருக்கோயில்
புதுக்கோட்டையிலிருந்து 40 கிமீ தொலைவில், காரைக்குடி-மயிலாடுதுறை ரயில் தடத்தில் காரைக்குடியிலிருந்து 45 கிமீ தொலைவில் உள்ளது இக்கோவில். அறந்தாங்கியைச் சுற்றியுள்ள 16 கிராமங்களின் காவல் தெய்வமாக வீரமாகாளியம்மன் போற்றப் படுகிறாள். முப்பது Image
நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும் கோவில் என்றும் இத்தலத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய கல் வடிவமாக வழிபட்டு வந்த கிராமத்து மக்களுக்கு திருவுருவச்சிலை செய்யும் எண்ணம் ஏற்பட்டது. அப்போது உருவான விக்ரகத்தை நான்கு கரங்களுடன் செய்து முடித்தனர். ஆனால்
வலது மேல் கரத்தில் ஒரு விரலில், பின்னம் ஏற்பட்டு விட்டது. இதனால் ஊர் மக்கள் மனவருத்தம் அடைந்தனர். அன்றைய தினம் கோவில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய அம்மன், தான் பூமியில் மறைந்து வாழ்ந்து வருவதாகவும். வெளிப்படும் நேரம் வந்து விட்டதாகவும் தெரிவித்தாள். தன் ஆலயத்தில் இருந்து ஓர் ஆட்டை
Read 10 tweets
Dec 4
#நற்சிந்தனை ஒருநாள் காசி விஸ்வநாதர் வறியவன் வேடம் பூண்டு காசியில் நகர் வலம் வந்தார். செல்வந்தர்கள் வசிக்கும் பகுதியில் பசிக்கு உணவு கேட்டார். எல்லாக் கதவுகளும் மூடப்பட்டன. பின் நடுத்தர மக்கள் வசிக்கும் இடங்களில் வீடு வீடாக ஏறி இறங்கினார். யாரும் பிச்சை போடவில்லை. மாலை 7 மணி Image
ஆகிவிட்டது. உணவு கிடைக்கவில்லை. பசியோடு காசியின் கழிவு நீர் கங்கையில் கலக்கும் இடத்திற்கு வந்தார். அங்கே தனியாக ஒரு தொழுநோயாளி அமர்ந்திருப்பதைக் கண்டார். அவரைச் சுற்றி நான்கு நாய்கள். காலை முதல் மாலை வரை எடுக்கும் பிச்சையை இங்கே கொண்டு வந்து 5 பங்காக பிரிப்பார். முதல் 4 பங்கு
உணவுகளை நான்கு நாய்களுக்கும் மிச்சமுள்ள ஒரு பங்கை இவரும் சாப்பிடுவார். அங்கு வந்த காசி விஸ்வநாதர் அவரிடம் சென்று எனக்குப் பசிக்கிறது என்று கை நீட்டினார். தொழு நோயாளி அவர்வாடிய முகத்தை கண்டு தன் பங்கு உணவை அவருக்கு நீட்டினார். காசி விஸ்வநாதர் அதிர்ந்துவிட்டார். நான் யார் தெரியுமா
Read 6 tweets
Dec 4
#ஶ்ரீவைஷ்ணவம் ஸ்ரீரங்க ஷேத்திரத்தில் #பராசர_பட்டர் என்கிற ஆச்சார்யார் இருந்தார். (இராமானுசரின் முதன்மை சீடரான கூரத்தாழ்வாரின் மூத்த மகன்) ரெங்கநாத புரோஹிதர் அவர். சஹஸ்ரநாமத்துக்கு பகவத் குண தர்ப்பணம் என்ற பாஷ்யம் எழுதியிருக்கிறார். பகவானுடைய கல்யாண குணங்களைக் காட்ட கூடிய கண்ணாடி Image
அது. ஸ்ரீரங்கத்திலேஇருக்கும் போது சிஷ்யர்களுக்கல்லாம் பாடம் சொல்லி கொடுப்பது வழக்கம். அவ்வாறு சொல்லுகிறபோது, ஒரு பெரிய வித்வான் வீதி வழியே போவார். அந்த வித்வான் போனால் பராசர பட்டர் ஏறடுத்தும் பார்க்கமாட்டார். விசாரிக்க கூட மாட்டார். அவர் போன சிறுது நேரத்துக்கெல்லாம், ஒரு பெரிய Image
செப்புச் சொம்பை நன்றாக பள பளவேன்று தேய்த்து எடுத்துக் கொண்டு, உஞ்சவிருத்தி பிராமணர் ஒருத்தர் வருவார். அரை குறையாக ஒரு ஸ்லோகத்தை சொல்லிக் கொண்டு வீதியோடு போவார். ஸ்லோகத்தையும் தப்பாகச் சொல்லுவார். பாத்திரம் ரொம்பும் அளவுக்கு வீதியில் சுற்றிவிட்டு வீட்டுக்கு போய்விடுவார்.ஒன்றும்
Read 21 tweets
Dec 4
#மகாபெரியவா
ஒரு நாள், ஒரு கணவனும் மனைவியும் சேர்ந்து மஹா பெரியவா அவர்களை பார்ப்பதற்காக மடத்திற்கு வந்து இருந்தார்கள். கணவன் மனைவி இரண்டு பேர் முகத்திலேயும் சோகம். இவர்களுடைய தீராத துன்பத்திற்கு தீர்வை தேடி நொந்து போய், மகா பெரியவாவை பார்ப்பதற்காக மடத்திற்கு வந்திருந்தார்கள். Image
இருவரும் சேர்ந்துதான் மடத்திற்குள் வந்து, சேர்த்துதான் அமர்ந்தனர். மஹா பெரியவா அவர்களை சந்திப்பதற்காக வரவேற்பறையில் அமர்ந்திருக்கும் போது, ஒரு கட்டத்தில் மனைவி, கணவரை பார்த்து கோபத்தோடு எழுந்து கணவரை விட்டு ஒரு அடி தள்ளி போய் அமர்ந்து கொண்டார். இதை மகா பெரியவா உள்ளிருந்து
பார்த்துக் கொண்டு இருக்கிறார். தன்னுடைய சீடனை விட்டு பெரியவா, அந்த மனைவியை மட்டும் உள்ளே அழைத்து வரச் சொல்லி சொன்னார்.
அந்த மனைவியும் உள்ளே வந்து மகா பெரியவா அவர்களை வணங்கி விட்டு முகத்தில் கலக்கத்தோடு குழப்பத்தோடு தயக்கத்தோடு நின்றார். உடனே மகா பெரியவா அந்த பெண்ணை பார்த்து
Read 13 tweets
Dec 3
#Advice_To_The_Elderly and may be to the younger generation as well!

1. Keep walking
2. Take a deep breath when you feel irritable
3. Exercise so that the body does not feel stiff
4. Drink more water when the air conditioner is on in summer
5. The more you chew, the more
energetic the body and brain will be
6. Memory declines not because of age, but because of long-term non-use of the brain
7. No need to take a lot of medicine
8. No need to deliberately lower blood pressure and blood sugar levels
9. Only do what you love, not what you hate
10. No
matter what, don’t stay at home all the time
11. Eat whatever you want, the fat body is just right
12. Do everything meticulously
13. Don't deal with people you hate
14. Rather than fighting the disease to the end, it is better to live with it
15. You can't fall asleep and don't
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(