#ஶ்ரீவைஷ்ணவம் ஸ்ரீரங்க ஷேத்திரத்தில் #பராசர_பட்டர் என்கிற ஆச்சார்யார் இருந்தார். (இராமானுசரின் முதன்மை சீடரான கூரத்தாழ்வாரின் மூத்த மகன்) ரெங்கநாத புரோஹிதர் அவர். சஹஸ்ரநாமத்துக்கு பகவத் குண தர்ப்பணம் என்ற பாஷ்யம் எழுதியிருக்கிறார். பகவானுடைய கல்யாண குணங்களைக் காட்ட கூடிய கண்ணாடி
அது. ஸ்ரீரங்கத்திலேஇருக்கும் போது சிஷ்யர்களுக்கல்லாம் பாடம் சொல்லி கொடுப்பது வழக்கம். அவ்வாறு சொல்லுகிறபோது, ஒரு பெரிய வித்வான் வீதி வழியே போவார். அந்த வித்வான் போனால் பராசர பட்டர் ஏறடுத்தும் பார்க்கமாட்டார். விசாரிக்க கூட மாட்டார். அவர் போன சிறுது நேரத்துக்கெல்லாம், ஒரு பெரிய
செப்புச் சொம்பை நன்றாக பள பளவேன்று தேய்த்து எடுத்துக் கொண்டு, உஞ்சவிருத்தி பிராமணர் ஒருத்தர் வருவார். அரை குறையாக ஒரு ஸ்லோகத்தை சொல்லிக் கொண்டு வீதியோடு போவார். ஸ்லோகத்தையும் தப்பாகச் சொல்லுவார். பாத்திரம் ரொம்பும் அளவுக்கு வீதியில் சுற்றிவிட்டு வீட்டுக்கு போய்விடுவார்.ஒன்றும்
தெரியாதவர். அவர் வந்துவிட்டால் பட்டர் அவரைப் பார்த்து ஒரு அரை மணி நேரம் விசாரிப்பார். "தேவரீர் எப்படி இருக்கிறீர்? சௌக்கியமாக இருக்கிறீரா? குடும்பம் நன்றாக உள்ளதா?" என்று கேட்பார்.
ஒன்றுமே தெரியாத ஒருத்தர் வருகிறார். அவரிடம் அரை மணி நேரம் விசாரிக்கிறீர். மஹாவித்வான் போனால்
எதுவும் கேட்காமலிருக்கிறீரே என்று சிஷ்யர்கள் கேட்டார்கள் பட்டரிடம்.
அதற்கு அவர், உங்களுக்கு ஒன்றும் தெரியாது இதை பற்றி.நாளைக்கு நான் காட்டுகிறேன் என்று சொல்லிவிட்டார். மறுநாள் ஸ்ரீரங்கநாதரின் கோயில் உத்சவங்களுல்லாம் முடிந்த பிறகு கிரஹத்துக்கு வருகிறார் பட்டர். சிஷ்யர்களெல்லாம்
காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அப்போது அந்த பெரிய வித்வான் வந்தார். அவருக்கு பூரண கும்ப மரியாதையெல்லாம் கொடுத்து உள்ளே அழைத்துக் கொண்டு வந்தார் பட்டர். "ஆகச்சந்து" (வாருங்கள்) என்று அழைத்து வந்து "உபவிச்சந்து" (உட்காருங்கள்) என்று இருக்கச் செய்தார். உட்கார்ந்தவுடனே பட்டர் அவரைப்
பார்த்துக் கேட்டார் “பரதத்வம் நாம கிம்?" பரதத்வம் என்றால் என்ன? எது? உடனே அந்த மகான் சொன்னார், "எனக்கெங்கே சந்தேகமோ அங்கயே நீங்களும் கேள்வி கேட்டு விட்டீர்களே! இத்தனை சாஸ்திரம் படித்தும் எது பரதத்வம் என்று நிர்ணயம் பண்ண முடியாமல் போட்டுக் குழம்பிக் கொண்டு இருக்கிறேன். ஒன்றும்
புரியவில்லை. நீங்களும் அதையே கேட்டுவிட்டீர்களே.”
“சரி நீங்கள் போகலாம்!" என்று அவரை அனுப்பிவிட்டார். வித்வான் போன உடனே அந்த உஞ்சவிருத்தி பிராமணர் வந்தார். அவரை வீட்டிற்குள்ளே அழைத்தார் பட்டர். உடம்பல்லாம் நடுங்கியது அந்த ஏழை பிராமணருக்கு. கூப்பிடுகிறவரோ பெரிய வித்வான் இவரோ
ஒன்றும் தெரியாத அஞ்ஞானி, அறிவிலி. இவரை கூப்பிட்டு உள்ளே உட்கார வைத்து விட்டு பட்டர் கேட்கிறார் "சுவாமி ஒரு சின்ன சந்தேகம்” சந்தேகம் என்ற உடனேயே மூர்ச்சை ஆகிவிடும் போலிருந்தது பிராமணருக்கு. பட்டர் அவரை ஆசுவாச படுத்தி "சுவாமி பயபடாதீர். ஒரு சின்ன கேள்வி உம்மைப் பார்த்து கேட்கிறேன்.
பரதத்வம் என்றால் என்னவென்று தெரியுமா? பட்டர் இதை கேட்டதும்தான் தாமசம் பிராமணர் உடனேயே கையிலிருந்த சொம்பை கோபத்துடன் தூக்கி எறிந்தார். அது போய் ரெங்கனாதருடைய கோயில் சுவரில் அடித்து கீழே விழுந்தது! அவர் பட்டரைப் பார்த்துப் பேசினார் "பரதத்வம் தெரியாமலா இத்தனை நாட்களாக இங்கே பாடம்
சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருக்கிறீர்! நீர் என்னவோ பெரியதாகச் சொல்லிகொடுக்கிறீர் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பரதத்வம் உமக்கே தெரியாதா?
"சரி உமக்கு தெரியுமா பரதத்வம்?" திருப்பிக் கேட்டார்.
“ஏன் தெரியாது? இதோ உள்ளே படுத்துக் கொண்டிருக்கிறானே அந்த ரெங்கநாதன்தான் பரதத்வம்.
இதிலே உமக்கு என்ன சந்தேகம்?”இதை சொன்னவுடனே பராசர பட்டர் விழுந்து விழுந்து அவரைச் சேவிக்கிறார். எல்லா சிஷ்யர்கள் கண்களிலும் ஜலம் வருகிறது. எல்லா சாஸ்திரங்களையும் படித்தும், பரதத்வம் என்றால் என்னவென்று சொல்ல முடியவில்லை அந்த மஹாவித்வானால். ஆனால் உஞ்சவிருத்தி பிராமணருக்கோ ஒன்றும்
தெரியாது. ரெங்கநாதன்தான் பரதத்வம் என்கிறார்.
எது வேண்டும் நமக்கு இப்போது?
சுமையான கல்விகள் அதெல்லாம். அத்தனை கல்விகளைச் சுமந்தும் பிரயஜோனம் இல்லையே! பரதத்வம் தெரியாத கல்வி எதற்கு? ஸாவித்யா, உத்தமா வித்யா, வேத வித்யா ஸமீரிதா - அவனை உணர்த்தாத வித்யை நமக்கு எதற்கு ? அவனை உணராத ஞானம்
அஞ்ஞானம்.
அவித்யை என்றால் எது?
அவனை உணராதது அவித்யை. அவனை உணரக் கூடிய காட்டக் கூடிய அனைத்தும் வித்யைதான். ஆகவே, சமஸ்த சாஸ்திரங்களையும் படித்து பகவானை உணரவில்லை என்றால் அத்தனையும் வீணே. ஒன்றுமே படிக்கவேண்டாம். ஆனால் அவனை உணர்ந்தால் போதும். எவன் உணர்ந்திருந்தால் எல்லாம் உணர்ந்ததாக
ஆகிறதோ அவனே பரபிரும்மம். எல்லாவற்றையும் உணர்ந்து அவனை உணரவில்லை எனில் எதையுமே உணர்ந்ததாக ஆகாது என்று சொல்லிவிட்டது உபநிஷத். காலத்தினால் இருந்து ரக்ஷிக்கக் கூடியவன் இந்த எம்பெருமான்தான். அவன்தான் ரக்ஷகன் என்பதை எடுத்துக்காட்டி உள்ளே இருக்கிற அவன் தான் பரதத்வம் என்பதை சுலபமாக
எடுத்துக் காட்டியிருக்கிறார் உஞ்சவிருத்தி பிராமணர். அவருக்கு மற்ற சாஸ்திரங்களெல்லாம் தெரியாது. இருந்தாலும் "ரெங்கநாதர்தான்' என்று திடமாகச் சொல்லுகிறார் பாருங்கள். அது சாமான்யர்களிடத்தில் தான் அமையும். 'ஜாதியில், ஒழுக்கத்தால் மிக்கோரேனும், சதுர் மறையால் வேள்வியால் தக்காரேனும்' -
பிள்ளை பெருமாள் ஐயங்கார் அழகாகச் சொல்லுகிறார் - உத்தம குலத்திலே பிறந்திருக்கலாம். சதுர் சாஸ்திர பண்டிதராக இருக்கலாம். அந்த ரங்கநாதன் பரதத்வம் என்று சொல்லாதவர், அவனிடத்திலே பக்தி இல்லாதவர் வெறும் வீணர் தான்.
சாமானியராக இருந்தாலும் எம்பெருமானிடத்திலே பக்தியோடு இருப்போரே உயர்ந்தவர்.
அவன்தான் ரக்ஷகன். எக்காலத்திலும் எப்பொழுதும் அவன்தான் ரக்ஷகன். நம் சாமர்த்தியத்தினால் நாம் ரக்ஷிக்கப் படுவதில்லை. அவனே நம்மை ரக்ஷிக்கிறான் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
பகவான் நம்மை ரக்ஷிக்கிறான் என்பதை எவ்வாறு அறிந்துக் கொள்ளலாம்? தூக்கம் என்பதை கொடுத்திருக்கிறானே. அதை வைத்தே
தெரிந்துக் கொள்ளலாமே. நாம் விழித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கிறோம். அதை சரி பண்ணுகிறோம். அதை சரி தட்டுகிறோம் அது மேலே விழுந்து விடுமோ என்று சுற்றியிருக்கிற எல்லாவற்றையும் பார்க்கிறோம். விஷ ஜந்துக்கள் உள்ளே வர கூடாது என்று அதையும் இதையும் மூடி வைக்கிறோம்
ஆனால் தூங்குகிறபோது எது மேலே விழுந்தால் நமக்கு என்ன தெரியும். எந்த பிராணியோ விஷ ஜந்தோ கடித்தால் என்ன தெரியப் போகிறது. தூக்கத்திலே நம்மை நாமா ரக்ஷித்துக் கொண்டு இருந்தோம்? இல்லையே!
தூக்கத்திலே எப்படி நாம் ரக்ஷகர்கள் இல்லையோ அப்படியேதான் விழித்துக் கொண்டு இருக்கும் போதும் நாம்
ரக்ஷகர்கள் இல்லை. எவ்வாறு தூக்கத்திலே நம்மை ரக்ஷிப்பதர்க்கு பகவானை நம்பிக் கொண்டிருக்கிறோமோ அதே மாதிரி விழிப்பிலும் அவனே நம்மை ரக்ஷிக்கிறான் என்று நினைக்கிற எல்லோரும் எம்பெருமானிடத்திலே உத்தமமான பக்தி உடையவர்கள்.
திருவடி சரணம் ஸ்ரீரங்கா🙏🏻
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Dec 4
#கடத்தூர்_அர்ச்சுனேஸ்வரர்_கோவில் திருப்பூர்
கொங்கு மண்டலம் வரலாற்று சிறப்பு, கலை, பண்பாடு, நாகரிகம், இறையுணர்வு ஆகியவற்றைக் கொண்ட வளம் கொழிக்கும் பழம் பெருமை வாய்ந்த பகுதியாகும். வைணவத்தின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் நெல்லை மாவட்டத்தில் 9 இடங்களில் பெருமாளுக்கென அமைக்கப்பட்ட ImageImage
கோவில்கள் நவதிருப்பதி என அழைக்கப்படுவது போல கொங்கு மண்டலத்தில் சைவத்தின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் அமராவதி ஆற்றின் கரையோரம் கொழுமம் முதல் கரூர் வரை 11 சிவாலயங்கள் உள்ளன.
இவற்றில் கொழுமம் தாண்டேஸ்வரர் ஆலயம், காசிவிஸ்வநாதர் ஆலயம், கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் ஆலயம் ஆகியவை
குறிப்பிடத்தக்கவை. 1000 ஆண்டுகளுக்கு முன் சிவபெருமான் சுயம்பு லிங்கமாக தோன்றி, விக்கிரம சோழனை ஆட்கொண்ட இடத்தில் இக்கோவில் உள்ளது. சோழர்களின் கட்டிட கலையை பறைசாற்றும் வகையில் முற்றிலும் கல்லால் கட்டப்பட்டுள்ளது. விக்கிரம சோழன் மட்டுமல்லாது பொது மக்களின் பங்களிப்போடு இக்கோவில்
Read 22 tweets
Dec 4
#அறந்தாங்கி_வீரமாகாளி_அம்மன் திருக்கோயில்
புதுக்கோட்டையிலிருந்து 40 கிமீ தொலைவில், காரைக்குடி-மயிலாடுதுறை ரயில் தடத்தில் காரைக்குடியிலிருந்து 45 கிமீ தொலைவில் உள்ளது இக்கோவில். அறந்தாங்கியைச் சுற்றியுள்ள 16 கிராமங்களின் காவல் தெய்வமாக வீரமாகாளியம்மன் போற்றப் படுகிறாள். முப்பது Image
நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும் கோவில் என்றும் இத்தலத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய கல் வடிவமாக வழிபட்டு வந்த கிராமத்து மக்களுக்கு திருவுருவச்சிலை செய்யும் எண்ணம் ஏற்பட்டது. அப்போது உருவான விக்ரகத்தை நான்கு கரங்களுடன் செய்து முடித்தனர். ஆனால்
வலது மேல் கரத்தில் ஒரு விரலில், பின்னம் ஏற்பட்டு விட்டது. இதனால் ஊர் மக்கள் மனவருத்தம் அடைந்தனர். அன்றைய தினம் கோவில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய அம்மன், தான் பூமியில் மறைந்து வாழ்ந்து வருவதாகவும். வெளிப்படும் நேரம் வந்து விட்டதாகவும் தெரிவித்தாள். தன் ஆலயத்தில் இருந்து ஓர் ஆட்டை
Read 10 tweets
Dec 4
#நற்சிந்தனை ஒருநாள் காசி விஸ்வநாதர் வறியவன் வேடம் பூண்டு காசியில் நகர் வலம் வந்தார். செல்வந்தர்கள் வசிக்கும் பகுதியில் பசிக்கு உணவு கேட்டார். எல்லாக் கதவுகளும் மூடப்பட்டன. பின் நடுத்தர மக்கள் வசிக்கும் இடங்களில் வீடு வீடாக ஏறி இறங்கினார். யாரும் பிச்சை போடவில்லை. மாலை 7 மணி
ஆகிவிட்டது. உணவு கிடைக்கவில்லை. பசியோடு காசியின் கழிவு நீர் கங்கையில் கலக்கும் இடத்திற்கு வந்தார். அங்கே தனியாக ஒரு தொழுநோயாளி அமர்ந்திருப்பதைக் கண்டார். அவரைச் சுற்றி நான்கு நாய்கள். காலை முதல் மாலை வரை எடுக்கும் பிச்சையை இங்கே கொண்டு வந்து 5 பங்காக பிரிப்பார். முதல் 4 பங்கு
உணவுகளை நான்கு நாய்களுக்கும் மிச்சமுள்ள ஒரு பங்கை இவரும் சாப்பிடுவார். அங்கு வந்த காசி விஸ்வநாதர் அவரிடம் சென்று எனக்குப் பசிக்கிறது என்று கை நீட்டினார். தொழு நோயாளி அவர்வாடிய முகத்தை கண்டு தன் பங்கு உணவை அவருக்கு நீட்டினார். காசி விஸ்வநாதர் அதிர்ந்துவிட்டார். நான் யார் தெரியுமா
Read 6 tweets
Dec 4
#மகாபெரியவா
ஒரு நாள், ஒரு கணவனும் மனைவியும் சேர்ந்து மஹா பெரியவா அவர்களை பார்ப்பதற்காக மடத்திற்கு வந்து இருந்தார்கள். கணவன் மனைவி இரண்டு பேர் முகத்திலேயும் சோகம். இவர்களுடைய தீராத துன்பத்திற்கு தீர்வை தேடி நொந்து போய், மகா பெரியவாவை பார்ப்பதற்காக மடத்திற்கு வந்திருந்தார்கள்.
இருவரும் சேர்ந்துதான் மடத்திற்குள் வந்து, சேர்த்துதான் அமர்ந்தனர். மஹா பெரியவா அவர்களை சந்திப்பதற்காக வரவேற்பறையில் அமர்ந்திருக்கும் போது, ஒரு கட்டத்தில் மனைவி, கணவரை பார்த்து கோபத்தோடு எழுந்து கணவரை விட்டு ஒரு அடி தள்ளி போய் அமர்ந்து கொண்டார். இதை மகா பெரியவா உள்ளிருந்து
பார்த்துக் கொண்டு இருக்கிறார். தன்னுடைய சீடனை விட்டு பெரியவா, அந்த மனைவியை மட்டும் உள்ளே அழைத்து வரச் சொல்லி சொன்னார்.
அந்த மனைவியும் உள்ளே வந்து மகா பெரியவா அவர்களை வணங்கி விட்டு முகத்தில் கலக்கத்தோடு குழப்பத்தோடு தயக்கத்தோடு நின்றார். உடனே மகா பெரியவா அந்த பெண்ணை பார்த்து
Read 13 tweets
Dec 3
#Advice_To_The_Elderly and may be to the younger generation as well!

1. Keep walking
2. Take a deep breath when you feel irritable
3. Exercise so that the body does not feel stiff
4. Drink more water when the air conditioner is on in summer
5. The more you chew, the more
energetic the body and brain will be
6. Memory declines not because of age, but because of long-term non-use of the brain
7. No need to take a lot of medicine
8. No need to deliberately lower blood pressure and blood sugar levels
9. Only do what you love, not what you hate
10. No
matter what, don’t stay at home all the time
11. Eat whatever you want, the fat body is just right
12. Do everything meticulously
13. Don't deal with people you hate
14. Rather than fighting the disease to the end, it is better to live with it
15. You can't fall asleep and don't
Read 6 tweets
Dec 3
#மகாபெரியவா
கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-05-04-2017 குமுதம் லைஃப் ஒரு பகுதி.

ஸ்ரீமடம் பாலு சபரிமலையை விட்டு இறங்கி எர்ணாகுளம் வந்து ஒரு வக்கீலின் வீட்டில் வந்து தங்கினார் .அங்கேயே உணவருந்தினார். வக்கீலின் தாயார் இவருக்கு ஆசி வழங்கிய பின்னர், Image
"டேய் நீ ராமய்யர் மாமாவைப் பார்க்காமல் போகாதே. மகா பெரியவா கிட்டேயிருந்து வந்திருக்கேன்னு சொன்னா அவர் ரொம்ப சந்தோஷப்படுவார்" என்று வற்புறுத்திச் சொல்லவே ஸ்ரீமடம் பாலு அதற்கு சம்மதித்தார். ராமய்யருக்கு வயது 90 இருக்கும். இவர்(பாலு) காஞ்சி மடத்தில் இருந்து வந்திருப்பதாகவும்,
ஸ்ரீமகா பெரியவாளிடம் கைங்கர்யம் செய்பவர் என்று தெரிந்ததும் அந்த முதியவர் இவர் காலில் திடீரென்று விழுந்து நமஸ்கரித்தார். ஸ்ரீமடத்து பாலுக்கு உடலும் உள்ளமும் பதறியது. இவ்வளவு வயதானவர் நம் காலில் விழுவதா? அபசாரம் அல்லவா என்று பதறினார்.
"நான் ரொம்பச் சின்னவன்.எனக்குப் போய் நமஸ்காரம்
Read 13 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(