#ராமநாம_மகிமை
வீதியில் ராம நாம சங்கீர்த்தனம் செய்தபடி பஜனை கோஷ்டி ஒன்று சென்றது. அதை அலட்சியம் செய்த ஒருவனுக்கு, அவனை அழைத்து ராம நாமத்தை உபதேசித்த ஒரு ஞானி, இதை ஒரு போதும் விற்காதே ஆத்மார்த்தமாக ஒரே ஒரு முறையாவது சொல்லிப் பார் என்றார். அவனும் அப்படியே செய்தான். காலகிரமத்தில்
இறந்து போனான். அவன் ஆத்மாவை இழுத்துப் போய் யமதர்மராஜன் முன் நிறுத்தினர். அவரும், அவனுடைய பாப, புண்ணிய கணக்கை பரிசீலித்து, ஒருமுறை ராம நாமத்தை சொல்லி இருக்கிறாய் அதற்காக என்ன வேண்டுமோ கேள் என்றார். ராம நாமத்தை உபதேசித்த ஞானி அதை விற்காதே என்று கூறியிருந்தது நினைவுக்கு வந்தது.
அதனால், அதற்கு விலை கூற மறுத்து, ராம நாமத்திற்கு, நீங்கள் என்ன தர வேண்டுமென நினைக்கிறீர்களோ, அதைத் தாருங்கள் என்றான். திகைத்த யமதர்ம ராஜா ராம நாமத்திற்கு நாம் எப்படி மதிப்பு போடுவது என்று எண்ணி இந்திரன் தான் இதை தீர்மானிக்க வேண்டும் வா இந்திரனிடம் போகலாம் என்றார். 'நான் வருவது
என்றால், பல்லக்கில் தான் வருவேன் அத்துடன், பல்லக்குத் தூக்குபவர்களில், நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும். சம்மதமா என்றான். இவன் நம்மையும் பல்லக்கு தூக்கச் சொல்கிறான் என்றால், ராம நாமம், மிகுந்த மகிமை உடையதாகத் தான் இருக்க வேண்டும், அதனால் தான் இப்படி எல்லாம் பேசுகிறான் என்று
எண்ணிய யமதர்ம ராஜா, அதற்கு சம்மதித்து, அவனை பல்லக்கில் உட்கார வைத்து, சுமந்து கொண்டு இந்திரனிடம் போனார். இந்திரனோ ராம நாமத்தை என்னால் எடை போட முடியாது பிரம்மதேவரிடம் கேட்போம் வாருங்கள் என்றார். யமதர்மனோடு இந்திரனும் சேர்ந்து பல்லக்கு தூக்கினால் தான் வருவேன் என்று மீண்டும் அவன்
நிபந்தனை விதித்தான். அதற்கு இந்திரனும் ஒப்புக் கொண்டான். பல்லக்கை சுமந்து கொண்டு, பிரம்மாவிடம் சென்றனர். அவரும் ராம நாம மகிமை சொல்ல, என்னால் ஆகாது வைகுண்டம் போய், அந்த பரம்பொருளையே கேட்கலாம் வாருங்கள் என்று சொல்ல, அவரும் பல்லக்கு சுமக்கும்படியாக ஆயிற்று. அனைவரும் மகா விஷ்ணுவிடம்
சென்று இந்தப் பல்லக்கில் இருக்கும் ஆன்மா ஒரு முறை ராம நாமத்தை சொல்லியிருக்கிறது. அதற்காக இவனுக்கு என்ன புண்ணியம் என்பதை தாங்கள் தான் கூற வேண்டும். எங்களால் முடியவில்லை என்றனர். இந்த ஜீவனைப் பல்லக்கில் வைத்து, நீங்கள் எல்லாரும் சுமந்து வருகிறீர்களே, இதிலிருந்தே ராம நாம மகிமை
தெரியவில்லையா என்று சொல்லி பல்லக்கில் வந்த ஆன்மாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டார் பகவான்.

மும்மைசால் உலகுக்கெல்லாம்
மூலமந்திரத்தை முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும்
தனிப் பெரும் பதத்தை தானே
இம்மையே, எழுமை நோய்க்கும்
மருந்தினை இராமன் எண்ணும்
செம்மைசேர் நாமம் தன்னை கண்களில் தெரியக்
கண்டான்.
- வாலிவதைப் படலம், கம்ப ராமாயணம்.

இராம நாமம்தான் எல்லா மந்திரங்களுக்கும் மூத்த மந்திரம், மூல மந்திரம் என்கிறான் கம்பன். சொல்வோம் ராம நாமத்தை சதா சர்வகாலமும்!
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Dec 15
#தூயபக்தி #ஶ்ரீராமானுஜர் #அரங்கன் #சலவைத்_தொழிலாளி #ஶ்ரீவைஷ்ணவம் #விசிஷ்டாத்வைதம்
உண்மையான பக்தர்கள் மற்றவர்களை பற்றித்தான் கவலைப்படுவார்கள். தம்மைப் பற்றி நினைப்பதில்லை. அதை குருவிடம் விட்டு விடுவார்கள். ஒரு சமயம் ராமானுஜர், ஸ்ரீரங்கத்தில் கிருஷ்ணாவதாரம் பற்றி தாம் செய்த Image
உபன்யாசத்தில் கிருஷ்ணன், சலவைத் தொழிலாளியிடம், சலவை செய்த துணிகளைக் கேட்ட போது, அவன் தர மறுத்ததாகக் கூறினார். அன்றிரவு, ஒரு சலவைத் தொழிலாளி ராமானுஜரிடம் வந்து, கிருஷ்ணனுக்கு சலவை செய்த துணிகளைத் தர மாட்டேன் எனக் கூறிய அந்த சலவைத் தொழிலாளிக்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்
அதற்காக ரங்கநாதரின் துணிகளை இனி நானே துவைத்துத் தருகிறேன் எனக் கூறினான். “அப்படியே செய்” எனக் கூறினார் ராமானுஜர். அந்த சலவை தொழிலாளியும் அடுத்த நாள் முதல் ரங்கநாதரின் துணிகளை வாங்கிச் சென்று பளிச்செனத் துவைத்து, ராமானுஜரிடம் காட்டி, பிறகு கோயிலில் கொடுத்து வந்தான். ராமானுஜரும்
Read 7 tweets
Dec 15
#MahaPeriyava
When Sri Periyaval was camping at Orirukkai, a foreigner came to India. He wanted a ticket from Delhi to Mumbai. He was not able to get it. So he took the flight to Madras. When he came out of Meenambakkam he wondered where to go. He asked the taxi driver, "Is there Image
any self-realized leader here?"
The taxi driver replied, "The Shankaracharya Swami of Kanchipuram is here."
"Take me to Kanchipuram at once," said the man and soon reached there. Sri Periyaval was then staying in a thatched shed at Orirukkai. He was resting after taking his
bhiksha. The foreigner was very eager to see Sri Periyaval. We told him, "Please wait for sometime. Swami is taking rest."
After a while Periyaval got up, did achamana and applied vibuthi on His person, He asked us "Has he come?"
A devotee, Nagalakshmi and some other ladies were
Read 11 tweets
Dec 13
#மகாபெரியவா கட்டுரை எஸ்.ரமணி அண்ணா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

மரவக்காடு ராமஸ்வாமி அய்யருக்கு, 4 பெண்கள், 2 ஆண் குழந்தைகள். இள வயதில் எதிலும் அக்கறை காட்டாமல் சுற்றித் திரிந்ததால் மாத வருமானத்திற்கு உத்திரவாதம் இல்லை. வைதீகச் சடங்குகள் செய்விக்கும் பண்டிதர்களுடன் உதவியாளனாக Image
செல்வார். அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பம் நடந்து கொண்டிருந்தது. பரம்பரையாக வந்த வீட்டில் வசித்ததால் வீட்டு வாடகை பிரச்னை இல்லை. கிராமத்துக்கு வெளியே, ஒரு தென்னந்தோப்பில் இருந்து வந்த வருமானம் ஒரு நாளில் ஒரு வேளை சாப்பாட்டிற்கு வழி செய்தது. மகா பெரியவாளை
நமஸ்கரித்து விட்டு எழுந்து நின்றார் ராமஸ்வாமி. முகத்தில் சோகம் அப்பியிருந்தது. "பெரிய பெண்ணுக்கு 22வயதாகிறது. அடுத்தவளுக்கு 20. ரெண்டு பேருக்கும் ஒரே முகூர்த்தத்திலே கல்யாணம் பண்ணினால் செலவு குறையும். அது ஒத்து வரலே, மூத்தவளுக்கு ஒரு வரன் நிச்சயமாகும் போல் இருந்தது. பணம் தேவைப்
Read 18 tweets
Dec 13
திரு @sujathadesikan அவர்கள் குறிப்பிட்டு இருப்பது போல் இன்னொரு எளிமையானவர், கிருஷ்ண சேவையில் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டு மிகப்பெரிய தொண்டினை ஶ்ரீ கிருஷ்ண பகவானுக்கும் ஶ்ரீ ஆண்டாள் நாச்சியாருக்கு செய்து வருகிறார். அவர் பெயர் திரு வெண்மணி குமார். இவருக்குக் கண்ணன் மேல்
அளவில்லா அன்பு. இவரின் அன்பு ஆழ்வார்களின் அன்புக்கு இணையானது. இவருடைய நோக்கமே சமூக சமயப் பணி தான். இவரின் இருப்பிடம் கோடம்பாக்கம் ஹை ரோடில் சட்டிப் பானைகள் விற்பனை செய்யும் இடத்திற்கு வெகு அருகில் கக்கன் காலனியில் உள்ளது. அங்குள்ள குழந்தைகளின் முன்னேற்றம் தான் இவரின் முதல்
இலக்காக இருந்தது. தன் முயற்சியாலும், தமிழின் மேலும் கண்ணனின் மேலும் உள்ள அதீத ஈடுப்பாட்டினால் முதலில் திருப்பாவை பயின்று பின் நாலாயிர திவ்ய பிரபந்தத்தையும் கற்றுக் கொண்டார். பகவத் கீதை முதல் பாகவதம் வரை குரு முகமாக பயின்று பல மணி நேரம் உபன்யாசம் செய்யும் அளவு ஞானம் பெற்றார். பின்
Read 17 tweets
Dec 13
There was a non believer who just witnessed a nama sangeertanam with no respect. A gnani saw this, called him and gave Rama mantra upadesha and said chant Rama nama at least once and never sell the punya palan of this nama at any time. He did chant Ram nama once and eventually
when he died he went to yamaloka and all the good he had done was this one chanting of Rama nama. Yama asked him how much this nama is worth to him. He immediately remembered the sage telling him never to sell it. He said he cannot put a value on it and Yama was not sure how to
value this, so he said let us go to Indra to find the value. This atma said I will come only in a palanquin which is also carried by you. Yama agreed, thinking this Rama nama must be so powerful for him to demand this from him. Indra could not value, so went to Brahma, Indra
Read 5 tweets
Dec 13
#பக்தி ரமாபாய் என்ற ஒரு பக்தை பண்டரிபுரம் கோவிலின் அருகில் வசித்து வந்தார். அவர் தினமும் மோரில் கோதுமை மாவைக் கரைத்து ஒரு உணவு தயாரித்து விட்டலன் கோவிலில் சென்று அவனுக்கு நிவேதனம் செய்துவிட்டு வருவார். வெகு காலமாக தினமும் இவ்வாறு விட்டலனுக்கு உணவு படைத்துவந்தார். ஒருநாள் அவருக்கு
உடல் நிலை மிகவும் மோசமாகி விட்டு இருந்ததால் கோவிலுக்குச் செல்ல முடியவில்லை. இன்று கோவிலுக்குப் போக முடியாது என்ற எண்ணம் அவர் மனத்தைப் பிசைந்தது. அவரால் அதைத் தாங்கவே முடியவில்லை, உடல் உபாதையை மீறி பெற்ற அன்னையைப் போல் வருந்திப் புலம்பத் துவங்கினார். விட்டலா! இன்று என்னால் உனக்கு
உணவு கொண்டு வர முடியவில்லையே, இந்நேரத்திற்கு உனக்குப் பசிக்குமே! நான் இப்படிக் கிடக்கிறேனே! நீ எப்படிப் பசி தாங்குவாய்? என்றெல்லாம் பலவாறு புலம்பி அழுதார். மீண்டும் மீண்டும் எழ முயற்சி செய்த போதும் உடல் ஒத்துழைக்கவில்லை. கண்ணீருடன் படுக்கையில் கிடந்தவரை அப்படியே விட்டுவிட விட்டலன
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(