M.SivaRajan Profile picture
Dec 20 28 tweets 5 min read
#வன_துர்க்கை

தினமும் காசிக்குப் போகும் கதிராமங்கலம் வன துர்க்கை!

மயிலாடுதுறையில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவு.

இங்கு தான் தனக்கென தனிக்கோயில் கொண்டு அருளாட்சி புரிகிறாள்,

ஸ்ரீ வன துர்கா பரமேஸ்வரி.
இந்த அம்பிகை அனுதினமும் காசிக்குச் சென்று வருவதாக ஐதீகம்.

அதற்குக் காரணம் ஒரு முனிவர்!

வேதங்களே விருட்சங்களாக வளர்ந்து நின்று இறைவழிபாடு செய்த புண்ணியம்பதியாம் வேதாரண்யம் திருத்தலத்தைத் தரிசிக்கச் சென்று கொண்டிருந்தார் அந்த முனிவர்.
அவர் செல்லும் வழியில், அசுரன் ஒருவன் மலை உருவில் நெடிதுயர்ந்து வளர்ந்து நின்று அவரை வழிமறித்தான்.

அவனை அழிக்கும் சக்தி வேண்டும் என்று துர்கா தேவியைப் பிரார்த்தித்து தவம் செய்தார் முனிவர்.

அவருடைய தவத்தால் மகிழ்ந்த துர்கை, முனிவருக்குக் காட்சி தந்தாள்.
அவர் வேண்டியபடியே அசுரனை அழிக்கும் சக்தியையும் வழங்கி அருள்பாலித்தாள்.

அசுரனை அழித்த முனிவர், தனக்குப் பேரருள் புரிந்த துர்கை அம்மனை அனுதினமும் வழிபட்டு வந்தார்.

நாட்கள் கழிந்தன. காசிக்குச் செல்ல விரும்பினார் முனிவர்.
ஆனால், காசிக்குச் சென்றுவிட்டால், துர்கையம்மனை வழிபட முடியாதே என கலங்கினார்.

அவருடைய கலக்கத்தை அகற்ற திருவுளம் கொண்ட துர்காதேவி, அனுதினமும் இரவுப் பொழுதில் காசிக்கு வந்து முனிவருக்குத் தரிசனம் தருவதாக திருவாக்கு தந்தாள்.
அதன்படியே, இன்றைக்கும் கோயில் கருவறை விதானத்தில் இருக்கும் துளை வழியே,

தினமும் வனதுர்கா பரமேஸ்வரி அம்மன் காசிக்குச் சென்று வருவதாக, சிலிர்ப்புடன் விவரிக்கிறார்கள் பக்தர்கள்.

வனதுர்கையிடம் வரம் பெற்ற அந்த முனிவர் யார் தெரியுமா?
‘நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான்’ என்றும், ‘வடாதுதிசை மேல்நாள் நீசம் உற, வானின் நெடு மா மலயம் நேரா, ஈசன் நிகர் ஆய், உலகு சீர் பெற இருந் தான்’ என்றும் கவிச்சக்ரவர்த்தி கம்பரால் போற்றி சிறப்பிக்கப் பெற்ற குறுமுனிவராம் அகத்தியர் தான் அவர்.
இந்த முனிவர் பெருந்தகை தனக்கு சக்தி தந்த அன்னையை,

‘வாழ்வளித்த அன்னை வனதுர்கா’ என்று போற்றினாராம்.

அதன் காரணம் தொட்டு, இந்த அம்பிகைக்கு வனதுர்கை என்று திருநாமம் ஏற்பட்டது என்கிறார்கள்.

இந்தத் திருத்தலத்துக்கு கதிராமங்கலம் எனும் பெயர் ஏற்படவும் ஒரு காரணக் கதை உண்டு.
இவ்வூரின் அருகில் அமைந்திருக்கிறது தேரழுந்தூர்.

கம்பர் வசித்த ஊர் இது.

அவரது இல்லத்தின் கூரை பழுதுபட்டிருந்தது.

ஒரு மழைக் காலத்தின் இரவுப் பொழுதில், வனதுர்கையை மனதால் துதித்த கம்பர், அன்னையின் அருள் தன்னைக் காக்கவேண்டும் என்று பிரார்த்தனை விட்டு உறங்கிப்போனார்.
மறுநாள் காலையில், அவரது இல்லத்தின் கூரை நெற் செய்து கதிர்களால் வேயப்பட்டிருந்ததைக் கண்டு வியந்தார் கம்பர்.

இது அன்னை நிகழ்த்திய அற்புதமே என்று உணர்ந்தவர், வனதுர்கையை ‘கதிர்தேவி’, ‘கதிர்வேந்த மங்கள நாயகி’ என்றெல்லாம் போற்றித் தொழுதார்.
இதையொட்டியே இந்த ஊருக்கும் கதிராமங்கலம் எனும் பெயர் வாய்த்ததாம்.

அகத்தியருக்கும் கம்பருக்கும் மட்டுமல்ல; இன்னொருவருக்கும் அருள்செய்திருக்கிறாள் இந்த அம்பிகை.

அவர், மிருகண்டு மகரிஷி.
பதினாறு வயதில் தன் மகன் மார்க்கண்டேயன் இறந்துவிடுவானே என்ற சோகத்தால் அல்லலுற்ற மிருகண்டு முனிவர்,

தன் மகனின் ஆயுள் சிறக்கவேண்டி பல்வேறு தலங்களுக்கும் சென்று வழிபட்டார்.
அவ்வாறு செல்லும் வழியில், கதிராமங்கலத்தில் உலக நலன் வேண்டி அம்பிகை மோன தவம் செய்யும் காட்சியைக் கண்டார்.

தன் மகன் நீண்ட ஆயுள் பெற்று வாழ அருளும்படி அந்த அன்னையை வேண்டினார்.
அதையேற்ற அம்பிகை, ‘திருக்கடவூர் சென்று அமிர்தகடேஸ்வரரை பூஜித்தால்,

அவரின் திருவருளால் மார்க்கண்டேயன் சிரஞ்ஜீவியாகத் திகழ்வான்’ என்று வழிகாட்டி அருள்பாலித்தாளாம் வனதுர்கை.

அவளின் திருவாக்குப்படியே அனைத்தும் நடந்தது.
இவ்வாறு அடியார்கள் பலருக்கும் அருள்செய்த அம்பிகை, நமக்கு அருள்செய்யவும் காத்திருக்கிறாள்.

பொதுவாக துர்கையம்மன் ஆலயம் வடக்கு அல்லது தெற்குநோக்கி அமைந்திருக்கும்.

ஆனால், இங்கே கிழக்குநோக்கி அருள்பாலிக்கிறாள் வனதுர்கையம்மன்.

கோயிலில் விநாயகர் இல்லை.
மூன்றுநிலை ராஜகோபுரத்துடன் திகழும் இந்த அழகிய ஆலயத்தின் கருவறையில், ஏகதள விமானத்தின் கீழ், தாமரை பீடத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள் அன்னை.

மேலிரு கரங்களில் சங்கும் சக்கரமும் திகழ, கீழிரு கரங்களில் வலக்கரம் அபயம் காட்ட, இடக்கரம் ஊர்த்துவ ஹஸ்தமாகத் திகழ்கிறது.
நாம் திருக்கோயிலை விட்டு நகர மனம் வராத அளவு அழகுப் பொங்க காட்சியளிக்கிறாள் அருள்மிகு வனதுர்கை அம்மன்.

அரக்கர்கள் சிலர், தாங்கள் பெற்ற வரத்தால் மூவுலகங்களையும் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

இவர்களின் தொந்தரவு, மும்மூர்த்தியரையும் விட்டுவைக்கவில்லை.
இந்த அசுரர்களை அழிக்க வேண்டி, மும்மூர்த்திகளும் மற்ற தேவர்களும் ஆதி பராசக்தியின் அருள் வேண்டி மாபெரும் யாகம் ஒன்றை நடத்தினர்.

இந்த யாகத்தின் பலனாகத் தோன்றிய அம்பிகை, தன் அம்சத்துடன் தேவாதிதேவர்கள் அனைவரது அம்சத்தையும் இணைத்து துர்கையாக அவதரித்து,
மகிஷன், சும்பன், நிசும்பன், பண்டன் ஆகியோரை வதம் செய்தாள்.

பின்னர் ஏகாந்தியாக இந்த ஆலயத்தில் உலக நன்மைக்காக தாமரை பீடத்தின்மேல் மங்கலம் தரும் மகாலக்ஷ்மியாக அருள்புரிகிறாள் என்கிறார்கள் பக்தர்கள்.
கர்ப்பகிரக நுழைவாசலுக்கு மேற்புறம் சைலபுத்ரி, பிரம்மசாரிணி, சண்டகண்டீ, கூஷ்மாண்டீ, ஸ்கந்தமாலா, சித்திதாயினி, காத்யாயினி, காலராத்ரி, மஹாகவுரி ஆகிய தேவியரின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அம்மையின் எதிரில் சிம்மவாகனம் அமர்ந்த நிலையில் இருக்கிறது.
எல்லா நாட்களும் ராகு காலத்தின்போது இவளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.

மிருகசீரிட நட்சத்திரக்காரர்களுக்கு அதிதேவதை, இந்த தேவி என்கிறார்கள்.

அத்துடன், இவ்வூரிலும் சுற்றுவட்டாரப் பகுதியிலும் தங்களின் குலதெய்வம் எதுவென்று தெரியாத அன்பர்கள்
இந்த அன்னையையே தங்களின் குல தெய்வமாகக் கருதி வழிபட்டு வருகிறார்கள்.

ராகுபகவானின் இஷ்ட தெய்வம் துர்கை.

எனவே அவர் துர்கையை பூஜை செய்யும் காலத்தில் (ராகு காலத்தில்), நாம் அவளை வழிபடுவது கூடுதல் விசேஷம்.
ராகு தோஷம் உள்ளவர்கள் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில் ஏதேனும் ஒருநாள், இந்தத் தலத்துக்கு வந்து, துர்காதேவிக்கு 54 அல்லது 108 எண்ணிக்கையிலான எலுமிச்சை பழங்களால் மாலை கோத்து, அம்மனுக்குச் சமர்ப்பித்து வழிபடலாம்.
மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க் கிழமைதோறும் விரதமிருந்து பால் அபிஷேகம் செய்து, குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

இவ்வாறு, மகிமைகள்பல கொண்ட கதிராமங்கலம் திருத்தலத்துக்கு ஒருமுறையேனும் சென்று,
வனதுர்கை அம்மனைக் கண் குளிரத் தரிசித்து, அகமகிழ வழிபட்டு வரம்பெற்று வருவோம்.

செல்வ விருத்திக்கு செந்தாமரை அர்ச்சனை!

குடும்ப விருத்திக்காக இந்த அம்பிகைக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டுச் செல்கிறார்கள் பக்தர்கள்.
அதேபோல், பகைவர்களால் ஏற்படும் தொல்லைகள் நீங்குவதற்கு குங்கும காப்பு சாற்றி, செவ்வரளி பூக்களால் அர்ச்சித்து வழிபடுகின்றனர்.

மேலும், திருமணத் தடைகள் நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், வழக்கில் வெற்றி பெறவும், வியாபாரம் விருத்தியடையவும்
இந்த அம்மனிடம் வந்து பிரார்த்திக்கிறார்கள்.

இல்லத்தில் செல்வம் செழிக்க செந்தாமரை பூக்களாலும், கடன்கள் தீர்வதற்கு செவ்வரளி பூக்களாலும், தொழில் வெற்றிபெறுவதற்கு செம்பருத்தி பூக்களாலும், திருமணம் கைகூட மஞ்சள் நிற மலர்களாலும் இந்த அம்பிகைக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால்,
இந்த அம்பிகைக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், அவளின் திருவருளால் விரைவில் பலன் கிடைக்கும்.

#வன_துர்க்கை

#கதிராமங்கலம்_வன_துர்க்கை

#துர்க்கை_அம்மன்_வழிபாடு

#சாக்தம்

#அம்பாள்வழிபாடு

#ஓம்ஐம்க்லீம்சௌம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Dec 21
#பிரதோஷ_சிறப்பு

#சிவ_அஷ்டோத்ர_சத_நாமாவளி

01. ஓம் சிவாய நமஹ

02. ஓம் மஹேச்வராய நமஹ

03. ஓம் சம்பவே நமஹ

04. ஓம் பினாகிநே நமஹ

05. ஓம் சசிசேகராய நமஹ

06. ஓம் வாம தேவாய நமஹ

07. ஓம் விரூபாக்ஷாய நமஹ

08. ஓம் கபர்தினே நமஹ

09. ஓம் நீலலோஹிதாய நமஹ

10. ஓம் சங்கராய நமஹ
11. ஓம் சூலபாணயே நமஹ

12. ஓம் கட்வாங்கிநே நமஹ

13. ஓம் விஷ்ணுவல்லபாய நமஹ

14. ஓம் சிபி விஷ்டாய நமஹ

15. ஓம் அம்பிகா நாதாய நமஹ

16. ஓம் ஸ்ரீ கண்டாய நமஹ

17. ஓம் பக்த வத்ஸலாய நமஹ

18. ஓம் பவாய நமஹ

19. ஓம் சர்வாய நமஹ

20. ஓம் திரிலோகேசாய நமஹ
21. ஓம் சிதிகண்டாய நமஹ

22. ஓம் சிவாப்ரியாய நமஹ

23. ஓம் உக்ராய நமஹ

24. ஓம் கபாலிநே நமஹ

25. ஓம் காமாரயே நமஹ

26. ஓம் அந்தகாஸுர ஸூதநாய நமஹ

27. ஓம் கங்காதராய நமஹ

28. ஓம் லலாடாக்ஷõய நமஹ

29. ஓம் காலகாளாய நமஹ

30. ஓம் க்ருபாநிதயே நமஹ
Read 11 tweets
Dec 21
#மரகத_லிங்கம்

மார்கழி மாதத்தில் மட்டுமே காண முடியுமாம் இந்த அதிசய லிங்கம்.

தமிழ்நாட்டில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் திருச்செங்கோடு மலையின் மீது அமைந்துள்ளது ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில். Image
இங்கு மூலவர் அர்த்தநாரீஸ்வரரும், தாயார் பாகம்பிரியாளும் அருள்பாலித்து வருகிறார்கள்.

இந்தக் கோயிலில் என்ன அதிசயம் என்றால்....

இங்கு மார்கழி மாதம் மட்டும் பிருங்கி முனிவர் வழிபட்ட மரகத லிங்கத்தை வைத்து வழிபடப்படுகிறதாம்.
மற்ற மாதங்களில் அதற்குப் பதிலாக வேறு ஒரு லிங்கம் வைத்து வழிபடுகிறார்கள்.

இதற்காக, குறைந்தது 5 மணிக்குள்ளாக கோவிலில் இருக்க வேண்டும்.

பிருங்கி முனிவர் வழிபட்ட மரகத லிங்கம்

முன்பு ஒரு காலத்தில் ஆதிஷேசனும் வாயுதேவனும் தங்களில் யார் பலசாலி என அறிய இருவரும் போர் புரிந்தனர்.
Read 16 tweets
Dec 21
#புத_வார_பிரதோஷம்

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள்.

புதன் என்பது செல்வத்தை அள்ளித்தரக்கூடிய ஒரு பொன்னான நாள்.

அந்த நாளில் யார் ஒருவர் விரதம் இருந்து பிரதோஷ வழிபாடு செய்கிறார்களோ, அவர்களின் வாழ்வில் செல்வம் பெருகும். Image
செல்வம் என்பது பணம் மட்டுமல்ல,

அறிவுச் செல்வம், ஆரோக்கியம், குழந்தை செல்வம், திருமண பாக்கியம், குடும்ப ஒற்றுமை என 16 வகையான செல்வங்கள் இருக்கின்றன.

அந்த 16 செல்வங்களைப் பெற புதன் கிழமைகளில் வரும் பிரதோஷ வழிபாடு தான் சிறந்த நாள்.
புதன் கிழமையில் வரும் பிரதோஷ விரதம் இருப்பவர்கள்,

செவ்வாய் கிழமை மாலையிலேயே நன்றாக குளித்து சிவ ஆலயத்திற்கு சென்றோ அல்லது வீட்டிலிருந்தோ சிவனை வழிபட்டு

☘️
"ஓம் நமசிவாய நமஹா
☘️

என்ற மந்திரத்தை கிழக்கு திசை நோக்கி அமர்ந்து 108 முறை உச்சரிக்க வேண்டும்.
Read 9 tweets
Dec 21
*முதியவராக வந்த சிவபெருமான்!*

*சுந்தரமூர்த்தி நாயனாருக்கு காட்சி சிவபெருமான் கொடுத்த திருத்துறை ஸ்ரீ சிஷ்ட குருநாதர் கோயில்*

கடலூர் மாவட்டம், 
திருத்துறையூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் 
கோயிலாகும். Image
திருத்துறையூரில் 300 ஆண்டுகள் பழமையான திருக்கோயிலாக ஸ்ரீ சிஷ்ட குருநாதர் மற்றும் ஸ்ரீ சிவலோக நாயகி கோயில் அமைந்துள்ளது.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் தவ நெறி வேண்டிப் பெற்ற தலமாக இத்தலம் விளக்குகின்றது.
திருவெண்ணைநல்லூரில் சிவபெருமான் சுந்தரமூர்த்தி நாயனார் காட்சி கொடுத்து, பித்தா என்று அடி எடுத்துத் தந்தார்.

பிறகு தன்னுடைய புகழை இவ்வுலகிற்குப் பரப்புவதற்கு ஆணையிட்டதையும் சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனிடம் தவ நெறி வேண்டிய நிலையில்
Read 12 tweets
Dec 20
#வேல்_பந்தனம்

முருக வழிபாட்டில் தொன்மை வாய்ந்தது வேல் வழிபாடு.

இன்றும் பல முருகன் கோவில்களில் வேலுக்கு மட்டுமே பூஜை செய்து கொண்டிருக்கின்றனர்.

மனம் பாரமாக இருக்கும் நேரங்களில் மனதுக்குள் சக்திவேலை நினைத்துக் கொண்டு ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க என்று சொன்னால் மனம் லேசாகி விடும்.
வேலை வணங்குவதால் காரிய தடைகள் விலகி திருமணம் கைகூடும், குழந்தைப்பேறு கிடைக்கும்.

கல்வியில் மேன்மை, மன பயம் நீங்கி வலிமை உண்டாகும்.

வியாபாரத்தில் லாபம், பில்லி சூனியம், நவகிரகங்களினால் உண்டாகும் தோஷங்கள் நீங்கும்.

சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
மேற்கண்ட கவிதை வடிவம் முருகப்பெருமானுக்குரிய வேல் பந்தனம் எனும் வகையாகும்.

இதில் கண்ட எழுத்துக்களை கீழ்க்கண்டவாறு படிக்க வேண்டும்.

“வால வேல விகாரவா, வார காமனை நாடி வா, வாடி நாடிடுமோ சிவா, வாசி மோகன வேலவா’’

இந்த வேல் பந்தன மந்திரத்தை ஜபித்தால் எதிர்ப்புகள் நீங்கி,
Read 5 tweets
Dec 19
ராமானுஜருக்கு உகந்த திருப்பாவைப் பாடல்

திருப்பாவைப் பாசுரங்கள் ராமானுஜருக்கு மிகவும் உகந்தவை.

ஆண்டாள் தமது பாடலில் கூறிய 100 தடா அக்காரவடிசலை பெருமாளுக்குப் படைத்தவர் ராமானுஜர்.
ராமானுஜர் பிச்சைக்குச் செல்லும் போது பாசுரங்களைப் பாடியவாறு செல்வாராம்.

இவ்வாறு  செல்லுகையில் ஒருநாள் திருப்பாவைப் பாடல்களைப் பாடியவாறு சென்றிருக்கிறார்.

அப்போது அவர் பெரியநம்பி அவர்களது வீட்டு வாசலில் பிச்சை கேட்கிறார்.
பெரியநம்பியின் மகள் அத்துழாய், பிச்சை இடுவதற்காக தமது இல்லத்தின் வாசலுக்கு வருகிறார்.

அத்துழாயின் வருகையைக் கண்ட ராமானுஜர் அவள் முன் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார்.
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(