அறுபத்தஞ்சு வயது வரைக்கும் மடத்துக்காகவே தொண்டு செய்து, பரமாசார்யா பாதமே கதி என்று இருந்தவர் பஞ்சாபகேசன் என்கிற தொண்டர், அதற்கு மேல் ஆசார்யாளுக்கு கைங்கர்யம் செய்ய
நினைத்தாலும் அவரின் தள்ளாமை இடம் கொடுக்கவில்லை. அதனால, பெரியவாவிடம் உத்தரவு வாங்கிக் கொண்டு தஞ்சாவூரில் இருந்த அவர் பிள்ளையிடம் போனார். அவரின் மகனும் நல்லவன் தான். ஆனா சதா காலமும் பெரியவா கைங்கர்யத்தில் இருப்பதற்கு அவன் நிலைமை இடம் கொடுக்கலை. அன்றாடம் உழைத்தால் தான் அன்றன்றைய
பிழைப்பு நடக்கும். பஞ்சாபகேசன் காஞ்சிபுரத்தில் இருந்து தஞ்சாவூருக்குப் போய் விட்டாலும் பெரியவா பேரால் ஏதாவது கைங்கர்யம் செய்யணும்,தான தர்மம்னு முடிந்த அளவுக்காவது பண்ணணும் என்று நினைத்தார். ஆனா பெரிதா எதுவும் பண்ண முடியவில்லை. இந்த நிலையில் ஒரு நாள் அவர் மகன் பேச்சுவாக்கில்
"ஆரம்பத்துலேர்ந்து பெரியவா கார்யம்னே இருந்துட்டேள். ஏதாவது சர்க்கார் உத்தியோகத்துல இருந்திருந்தாலாவது ரிடையர்மென்டுக்கு அப்புறம் பென்ஷனாவது வந்திருக்கும். அதை வைச்சுண்டு உங்க இஷ்டத்துக்கு செலவு பண்ணியிருக்கலாம். இப்படி மடத்துல கைங்கரியம் பண்ணிண்டு இருந்துட்டு இப்போ.." என்று
இழுத்தான். பிள்ளை சொன்னது அப்பாவுக்கு சுருக் என்று இருந்தது. அவனும் பரமாசார்யா மேல பக்தி உள்ளவன் தான். ஆனால், அவன் அப்படிப் பேசினதும் கோபம் தாங்க முடியலை, அவருக்கு. "இப்போ நமக்கு என்ன கொறை வந்துடுத்துன்னு நீ இப்படிப் பேசறே? மகா பெரியவா பென்ஷன் தரணும்னு சொல்றியா? இல்லை நான்
கைங்கர்யம் செய்யறது தப்புன்னு சொல்றியா?” அப்பாவின் கோபத்தைப் பார்த்ததும் தன் தவறை உணர்ந்த பிள்ளை, "இல்லைப்பா நான் சொன்னது, உனக்குன்னு பென்ஷன் வந்தா நீ இஷ்டப்படி செலவு பண்ணலாமேன்னுதான்!" என்று ஏதோ சொல்லி சமாதானப் படுத்தினான். கொஞ்ச நாள் கழித்து ஏதோ விஷயமா காஞ்சிபுரத்துக்குப்
போனவன், அப்படியே மகா பெரியவாளையும் தரிசிக்க ஸ்ரீமடத்துக்குப் போனான். பக்தர் கூட்டத்தில் வரிசையில் நின்று தன் முறை வந்ததும் நமஸ்காரம் செய்தான். கண்ணைக் கொஞ்சம் சுருக்கி உத்துப் பார்த்த பெரியவா, "நீ பஞ்சாபகேசனோட புள்ளையாண்டான் தானே? அப்பா எப்படி இருக்கார்? அவருக்கு எம்மேலே
ஆத்மார்த்தமான ப்ரியம். அவரை எந்தக் கொறையும் இல்லாம பார்த்துக்கோ."
மகாபெரியவா சொல்லச் சொல்ல, ஆமோதித்து தலையை ஆட்டினான். அவன்கிட்டே ஒரு ஆரஞ்சுப் பழத்தைக் குடுத்த பெரியவா தொடர்ந்து பேச ஆரம்பிச்சார்.
"இந்த மடத்துல கைங்கரியம் பண்ணறவாளுக்கு கைநிறைய தரணும்னு எனக்கும் ஆசைதான். ஆனா,
இப்போதைய நிலையைல அது முடியலை. ஏன்ன குடுக்கறவா என்ன குடுக்கறாளோ அதைவைச்சுண்டு மடத்தை நடத்த வேண்டியிருக்கு. ஏன்னா இது ஸர்க்கார் ஆபீஸ் இல்லை பாரு. இங்கே காமாக்ஷியை ப்ரார்த்திச்சுண்டு அவ என்ன தராளோ அதான். ஆனா ஒன்னோட தகப்பனார் இந்த மடத்துக்கு எவ்வளவோ கைங்கரியம் செஞ்சிருக்கார். அதனால
மாஸாமாஸம் இருபத்தஞ்சு கலம் நெல்லை அவர் இருக்கற இடத்துக்கே அனுப்பச் சொல்லிடறேன். மடத்துக்காரா இந்த ஏற்பாட்டை செஞ்சுடுவா. ஒரு பென்ஷன் மாதிரி இதை ஏற்பாடு செஞ்சிருக்கேன்னு வைச்சுக்கோயேன்."
மகாபெரியவா சொன்னது தான் தாமதம் அப்படியே தடால் என்று அவர் காலில் விழுந்தான் அவன்.
"ஸ்வாமீ என்னை
மன்னிச்சுடுங்கோ. ஏதோ ஒரு ஆதங்கத்துல சர்க்கார் உத்யோகம் பார்த்திருந்தா ஒங்களுக்குப் பென்ஷன் வந்திருக்கும்னு என் தகப்பனார் கிட்டே பேசிட்டேன். அது தப்புதான். நீங்க இப்படி நெல்லை அனுப்பறதா சொன்னதை அப்பா கிட்ட சொன்னா அவர் மனசு ஒடைஞ்சு போயிடுவார். நான் பேசியது தப்புதான்!" என்று
கதறினான். அவனை எழுந்திருக்கச் சொன்னார் பரமாசார்யா. "நான் ஒன்னைக் குறை சொல்லலை. ஒங்க அப்பாவோட கைங்கர்யத்துக்கு என்னால பென்ஷன் நிறைய குடுக்க முடியலை. அதனால ஏதோ கொஞ்சம் நெல்லை அனுப்பறேன்னுதான் சொல்றேன். அப்பாகிட்ட சொல்லு. அவரை கஷ்டப்படாம பார்த்துக்கோ. புரியறதா?" ஆசிர்வாதம் பண்ணினார்
ஆசார்யா. தன்னோட பக்தன் எங்கே இருந்தாலும் என்ன பண்ணினாலும் எப்பவும் அவனைப் பார்த்துண்டே இருக்கிற பகவான் மாதிரி தனக்குத் தொண்டு செஞ்ச பக்தன் எங்கேயோ இருக்கிற ஊருக்குப் போன அப்புறமும் அவன் பிள்ளை அவனைக் கேட்ட கேள்வியை இருந்த இடத்தில் இருந்தே தெரிஞ்சுண்டு அந்த பக்தருக்கு ஒரு குறையும்
இல்லாம இருக்க வழி பண்ணின பரமாசார்யாளோட கிருபையை நினைச்சு சிலிர்த்துப் போனார்கள் அங்கே இருந்தவர்கள் எல்லோரும். அது மட்டுமா. தன்னோட அப்பாவை பென்ஷன் கூட இல்லாம சேவை செய்யறியே என்று கேட்ட அதே பிள்ளை பரமாசார்யாளுக்கு கைங்கர்யம் செய்யறதையே தன்னோட பிரதான வேலையா மாற்றிக் கொண்டு அடிக்கடி
மடத்துக்கு வந்து தொண்டு செய்ய ஆரம்பித்து விட்டான்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#அட்சதை#அக்ஷதை
பூஜைகளிலும், திருமணங்களிலும், சுப நிகழ்வுகளிலும் அட்சதைக்கென தனியிடம் அளிக்கப்பட்டிருக்கிறது.
"க்ஷதம்" என்றால் "குத்துவது" அல்லது "இடிப்பது" என்று பொருள்.
"அக்ஷதம்" என்றால் இடிக்கப்படாதது என்று பொருள். உலக்கையால் இடிக்கப்படாத, முனை முறியாத அரிசி அட்சதை
எனப்படுகிறது. முனை முறிந்த அரிசியைக் கொண்டு அட்சதை தயாரிப்பது வழக்கமல்ல. முனை முறியாத அரிசியோடு மஞ்சளையும் இணைக்கிறோம். பூமிக்கு மேல் விளையும் பொருள் அரிசி. பூமிக்குக் கீழ் விளையும் பொருள் மஞ்சள். இவை இரண்டையும் இணைக்கப் பயன்படுவது தூய பசுநெய் என்கிற ஊடகம். சந்திரனின் அம்சம்
கொண்ட அரிசி, குருவின் அம்சம் கொண்ட மஞ்சள், மஹாலக்ஷ்மியின் அம்சமான நெய் இவை யாவும் ஒன்று சேரும்போது, அங்கே நல்ல அதிர்வு உண்டாகி, அந்த இடமே சுபிட்சம் ஆகிறது. வெள்ளை அரிசியோடு மஞ்சள் நிறம் சேர்ந்து நெய்யின் மினுமினுப்போடு விளங்கும் இந்த அக்ஷதை, பெரியோர்களின் ஆசிகளைச் சுமந்து வரும்
#விதுரர்_நீதி
திருதராஷ்டிரன் விதுரரைப் பார்த்து, மனிதனுக்கு ஆயுள் நூறு வருடங்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இருந்தும், முழுமையான ஆயுள் வரை யாரும் வாழ்வதாகத் தெரியவில்லையே இது ஏன் என்று கேட்டார். அதற்கு விதுரர், ஆறு கூரிய வாள்கள் தான் மனிதனின் ஆயுளை அழிக்கின்றன – குறைகின்றன
என்றார். அவை:
முதல் வாள் - அதிக கர்வம்
தான் கெட்டிக்காரன், தான் செல்வந்தன், தான் கொடையாளி, தான் நல்லவன், பிறர் கெட்டவர்கள் என்று நினைப்பதால் கர்வம் அதிகரிக்கிறது. கர்வம் கொண்டவனைக் கடவுள் சீக்கிரம் அழித்து விடுவார். ஆகவே, கர்வம் கொள்ளாமலிருக்க, தன் விஷயத்தில் குற்றங்களைப் பார்க்க
வேண்டும். பிறர் விஷயத்தில் குணங்களைப் பார்க்க வேண்டும்.
இரண்டாவது வாள் - அதிகம் பேசுதல்:
அதிகம் பேசுகிறவன் வீண் விஷயங்களைப் பற்றிப் பேசி, வீண் வம்பை விலைக்கு வாங்குவான். அதனால்தான் பகவான் கீதையில் கடுமையில்லாததும், உண்மை ஆனதும், பிரியமானதும், நன்மையைக் கருதியதுமான வார்த்தை எதுவோ,
#மகாபெரியவா சென்னை ஸம்ஸ்கிருத கல்லூரியிலே 1956-57லே மஹா பெரியவா சில நாள் தங்கி இருந்தபோது மாலை தினமும் பிரசங்கம் நடைபெறும். பெரியவா பேச்சை கேட்க கூட்டம் அலைமோதும். அன்று ராஜாஜி வந்திருந்தார். என்ன பேசறதுன்னு மகாபெரியவா முடிவு செய்யவில்லை. பக்கத்தில் பேராசிரியர் சங்கரநாராயணன்
நிற்பதை பெரியவா பார்த்து அவரை பக்கத்தில் கூப்பிட்டார். அவரிடம் ஒரு ஸ்லோகத்தின் முதல் ரெண்டு வரியை சொன்னார்.
"உனக்கு அடுத்த ரெண்டு வரி இருக்கே அது தெரியுமா?”
“பெரியவா மன்னிக்கனும். எனக்கு தெரியலை”
இப்படி பெரியவா ஒரு ஸ்லோகத்தை பத்தி பேசினது மைக்கில் எல்லோருக்கும் கேட்டது.
கூட்டத்தில் ஒருவருக்கு அந்த ஸ்லோகம் தெரிஞ்சிருந்தது. அவர் மெதுவாக மேடைக்கு அருகே வந்து பேராசிரியர் சங்கரநாராயணனிடம் “சார், பெரியவா கேட்ட அந்த பாக்கி ரெண்டு அடி எனக்கு தெரியும். அது இதுதான் என்று அவரிடம் சொன்னதை பேராசிரியர் சந்தோஷமா மேடையிலேறி பெரியவா கிட்ட,
“பெரியவா அந்த மீதி
தீமைகளைச் செய்யாதீர்கள். புதிய வாசனைகளைச் சேர்த்துக் கொள்ளாதீர். தேவையற்ற சுமைகளைச் சுமக்காமல் இருங்கள்.
மனத்தை எண்ணங்களிலிருந்து விடுவிப்பதே சாதனையின் நோக்கமாகும். குருவே ஈசுவரன். ஈசுவரனே குரு. கடவுளே குருவாய் வரும் நிலையும் உண்டு.
தியானத்தில் ஆன்ம
தியானம் எனப்படுவதே சிறந்தது. அது சித்தியானால் மற்ற தியானங்கள் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. ஒவ்வொருவர் உடைய மனப் பக்குவத்திற்கு ஏற்றவாறு தியான முறைகளைக் கை கொள்ள வேண்டும்.
கடவுளை ஒவ்வொருவரும் அவர்கள் இதயத்தில் தேடினால், கடவுள் அருளும் அவர்களை நிச்சயம் தேடும். கர்த்தா ஒருவன்.
நாமெல்லாம் அவன் ஏவலுக்கு ஆட்பட்ட கருவிகளே! இதனை ஒவ்வொருவரும் உணர்ந்தால் பணிவு வராமல் போகாது.
மந்திரங்களை இடைவிடாது சொல்வதால் மனம் அடங்கும். பின் மந்திரம், மனம், மூச்சு என எல்லாம் ஒன்றே என்று ஆகும். ஆத்ம விசாரமே தவம், யோகம், மந்திரம், தவம் எல்லாம். ஒருவன் தான் யார் என்று அறிந்து
#அரங்கன்#பராசர_பட்டர்#ஶ்ரீவைஷ்ணவம்#தமிழ்
பராசர பட்டர், ஸ்ரீரங்கத்து அரங்கநாதனின் முன்னே நின்றார்.
‘என்னையும் என்னுடைய அழகையும் பாடிவிடுவீரோ நீர்?’ என அரங்கன் கேட்க,
‘முதலில், உம் ஆதிசேஷனைப் போல எனக்கு ஆயிரம் நாக்குகளைத் தாருங்கள், பார்க்கலாம்’ என்றார் பராசரர்.
‘அட! ஆயிரம்
நாக்குகள் இருந்தால் தான் பாடுவீரோ?’ என்று சிரித்த அரங்கன், கருணையும் வாஞ்சையும் மேலிட பராசரபட்டருக்கு, ஆயிரம் நாக்குகளை வழங்கினான். ஆனந்தத்தில் கைகள் குவித்து, சிரம் தாழ்த்தி நமஸ்கரித்தார் பராசரர்
”மன்னிக்கவும் ரங்கா! என்னால் உன்னை பாட முடியாது!” என்று சொல்லிவிட்டு, அமைதியாகி
விட்டார். ஆச்சரியம் தாங்கவில்லை அரங்கனுக்கு! பின்னே, பாடு என்று உத்தரவு போட்டாகி விட்டது. பராசரர் கேட்டபடி, ஆயிரம் நாக்குகளையும் அவருக்கு வழங்கியாகி விட்டது. அப்படியும் ‘பாட முடியாது’ என்று மறுத்தால்?
”என்ன விளையாடுகிறாயா? ஆயிரம் நாக்குகள் கேட்டாய், கொடுத்தேன். பிறகென்ன பாட
#மகாபெரியவா வேதம் பயிலும் குழந்தைகளிடம் பெரியவாளின்
தாய்ப்பாசம் ஈடற்றது. பற்பல முறை தன்னிடம் வரும் செல்வந்தர்களான
பக்தர்களிடம், எனக்கு நீ ஒரு உதவி
செய்வாயோ? என்று மஹாபெரியவா கேட்பார்கள். அவர் கேட்கும் உதவி வேதபாடசாலைக் குழந்தைகளுக்கு தித்திப்பு, காரம் பக்ஷணங்களை பண்ணி நீயே போய்
கொடுத்துட்டு வா என்பது தான். பிறகு சில நாட்களில் கழித்து அந்தப் பாடசாலை குழந்தைகள் மஹா பெரியவாளை தரிசிக்க வந்தால் உடனே அவர்களிடம், அன்று பக்ஷணம் வந்ததா? சாப்பிட்டாயா?என்று அக்கறையோடு கேட்பார்கள்.
மாடு கூடத் திங்காத அழுகல் வாழைப் பழம் வேதபாடசாலைப் பையன்களுக்கு, என்று பழமொழி போல்
கூறப்பட்ட காலத்தில் பெரியவாளின் பெரிய புரட்சி, பாடசாலை குழந்தைகளுக்கு அவர் காட்டிய அலாதி பிரியமும், அவர்களுக்கு செய்து கொடுத்த சௌகர்யங்களும்.
மகா பெரியவா வேதபாடசாலை குழந்தைகளுக்கான வசதிகளை உருவாக்கி கொடுத்த விதமே மிகச் சிறப்பு. ஒருமுறை பெரியவாளுக்கு அப்பளம் கொண்டு வந்த