#ஏகலைவன்_செய்தது_குருபக்தியா?
வழங்கியர் ஸ்ரீ கிரிதாரி தாஸ்

ஏகலைவன்–மஹாபாரதத்தின் மாபெரும் கதாபாத்திரங்களுக்கு இடையில் மிகச் சிறியவன், ஆயினும் பிரபலமானவன். தன் மானசீக குருவான துரோணரின் விருப்பத்திற்கு இணங்கி தன் வலதுகை கட்டை விரலை தட்சணையாகக் கொடுத்தவன். குருவிற்காக கட்டை விரலையே
வழங்கிய ஏகலைவனை குரு பக்தியின் உதாரணமாகக் காட்டுகின்றனர். பாண்டவர்கள், கௌரவர்கள் என பலரும் துரோணரிடம் போர்க்கலை கற்று வந்தபோதிலும், அர்ஜுனன் தனது குருவின் மீது கொண்டிருந்த பெரும் மதிப்பினாலும் மரியாதையினாலும் மிகச்சிறந்த சீடனாகத் திகழ்ந்தான். அனைத்து கலைகளையும் நுண்ணியமாகக்
கற்றுக் கொண்ட அர்ஜுனன், துரோணருக்கு மிகவும் பிரியமானவனாக மாறினான்.
அர்ஜுனனுக்கு இருளில் உணவளிக்கக் கூடாது என்று துரோணர் சமையல்காரனுக்கு கட்டளையிட்டிருந்தார். ஒருமுறை, அர்ஜுனன் உணவருந்திக் கொண்டு இருந்தபோது, காற்றினால் விளக்கு அணைந்து விட்டது. அப்போது, விளக்கு இல்லாத போதிலும் தன்
கை வாயை நோக்கி சரியாகச் செல்வதைக் கவனித்த அர்ஜுனன், பயிற்சி இருந்தால் போதும், ஒளி அவசியமில்லை என்பதை உணர்ந்தான். அதனைத் தொடர்ந்து இரவில் அம்பெய்த பழகினான். அதன் அதிர்வொலியைக் கேட்ட துரோணர், உறக்கத்திலிருந்து எழுந்து அர்ஜுனனைக் கண்டபோது பூரித்துப் போனார். “இவ்வுலகில் உனக்கு சமமான
வில்லாளிகள் யாரும் இல்லாத அளவிற்கு உனக்கு வித்தைகளை கற்றுத் தரப் போகிறேன். இது சத்தியம்,” என்று அர்ஜுனனை அரவணைத்து துரோணர் உறுதி பூண்டார். போர்க் கலைகளைக் கற்றுக் கொடுப்பதில் துரோணரின் திறனைப் பற்றிக் கேள்விப்பட்ட பல்வேறு இளவரசர்கள் அவர் கீழ் கலை கற்கக் கூடினர். அச்சமயத்தில்,
நிஷாத எனப்படும் கலப்பின பிரிவைச் சார்ந்தவர்களின் மன்னன் ஹிரண்யதனு என்பவரின் மகனான ஏகலைவனும் துரோணரை அணுகினான். மக்களைக் காப்பதற்குரிய போர்க்கலையினை பண்பாடற்ற மக்களின் வருங்கால தலைவன் கற்றுக் கொண்டால், அதன் விளைவு எப்படியிருக்கும் என்ற எண்ணத்தில், துரோணர் ஏகலைவனை சீடனாக ஏற்க
மறுத்தார். துரோணரின் பாதங்களில் விழுந்து வணங்கிய ஏகலைவன், அங்கிருந்து விலகி, காட்டிற்குள் சென்று துரோணருக்குத் தெரியாமல் துரோணரைப் போன்ற சிலை ஒன்றை களிமண்ணால் வடித்தான். துரோணரின் குருகுலத்திலிருந்து எட்டு மைல் தொலைவில் தனது பயிற்சியைத் தொடங்கினான். அங்கிருந்த மரங்களை வெட்டி
விட்டு, தனது கூரிய பார்வையினால் துரோணர் கற்றுக் கொடுக்கும் பாடங்களை அங்கிருந்தே கற்கத் தொடங்கினான். இடையறாத முயற்சியினாலும் தனது குருவின் (சிலையின்) மீதான அதீத நம்பிக்கையினாலும் அம்புகளை எய்வதில் ஏகலைவன் இணையற்ற வேகத்தை அடைந்தான். ஒருநாள், துரோணரின் கட்டளைப்படி பாண்டவர்கள்
காட்டிற்கு வேட்டையாடச் சென்றனர். அவர்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்து வந்த வேலையாள் ஒருவன் தன்னுடன் நாய் ஒன்றையும் அழைத்து வந்திருந்தான். வேட்டையின் வேகத்தில் ஒவ்வொருவரும் திசைமாறிச் சென்றனர். திசைமாறிச் சென்ற நாய் ஏகலைவன் வில்வித்தையைப் பயிற்சி செய்துவந்த இடத்தை அடைந்தது.
புழுதியினால் நிரம்பிய அவனது கருமை நிற மேனி, தோலினால் ஆன கருமை நிற ஆடை ஆகியவற்றைக் கண்ட நாய் இடைவிடாது குரைக்க ஆரம்பித்தது. தன்னைப் பார்த்து நாய் குரைப்பதைக் கேட்ட ஏகலைவன் ஏழு அம்புகளை அதன் வாயை நோக்கி விரைவாகச் செலுத்தினான், ஏழு அம்புகளும் ஒரே நேரத்தில் கிளம்பியதைப் போல காணப்
பட்டது. வாயில் அம்புகள் துளைக்கப்பட்ட நிலையில் நாய் பாண்டவர்களை அடைந்தது. நாய் தனது வாயை மூடுவதற்குள் அடுத்தடுத்து அம்புகள் ஏவப்பட்டு உள்ளன என்பதைக் கண்ட பாண்டவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். அம்பு எய்தவன் நாயை கண்ணால் பார்த்து ஏவவில்லை. அது குரைத்ததைக் கேட்டு, ஒலி வந்த திசையில்
ஏவியுள்ளான் என்பதை சில அறிகுறிகளால் தெரிந்து கொண்டனர். அம்புகளின் வேகத்தையும் கண்ணால் பார்க்காமல் ஏவியதையும் கூர்ந்து கவனித்த பாண்டவர்கள் வீரனின் திறனை வெகுவாகப் பாராட்டினர். எய்தவனைத் தேடிப் புறப்பட்ட பாண்டவர்கள் இடைவிடாது அம்பெய்து கொண்டிருந்த ஏகலைவனைக் கண்டனர். அவனது
விசித்திரமான தோற்றத்தைக் கண்ட பாண்டவர்களிடம், தான் நிஷத மன்னரின் மகன் என்றும் துரோணரின் சீடன் என்றும் ஏகலைவன் எடுத்துரைத்தான். குருகுலத்திற்குத் திரும்பிய பாண்டவர்கள் நடந்தவற்றை முழுவதுமாக துரோணரிடம் எடுத்துரைத்தனர். ஏகலைவனின் அற்புத செயலை அர்ஜுனன் நினைத்தவண்ணம் இருந்தான். தன்
ஆச்சாரியரின் மீதான பற்றுதலால் உந்தப்பட்டு, அவரை தனிமையில் சந்தித்து, “என்னை பாசத்துடன் அரவணைத்து, எனது சீடர்களில் யாருமே உன்னை விடச் சிறந்தவனாக ஆக மாட்டான் என்று கூறினீர்கள். அப்படியிருக்கையில், தங்களின் மற்றொரு சீடனான நிஷாத மன்னனின் மகன் என்னை விடச் சிறந்த வில்லாளியாக இருப்பது
எப்படி? உண்மையில், அவன் உலகிலேயே மிகச்சிறந்த வீரனாக உள்ளான்” என்றான். யோசித்த துரோணர் அர்ஜுனனை அழைத்துக் கொண்டு ஏகலைவனைக் காணச் சென்றார். உடல் முழுக்க புழுதி படர்ந்து, ஜடா முடியுடன், அணிகலன்கள் அங்குமிங்கும் சிதறிய நிலையில் ஏகலைவன் பயிற்சியில் ஈடுபட்டிருந்தான். துரோணரைக் கண்ட
உடன், அவரது பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தான். “நான் உங்கள் சீடன்” என்று கூறி, துரோணரின் முன்பு கூப்பிய கரங்களுடன் பணிவாக நின்றான். “நீ என்னுடைய சீடன் என்றால், எனக்கு உடனடியாக குரு தட்சணை வழங்க வேண்டும்,” என்று துரோணர் உரைக்க, மகிழ்ச்சியுற்ற ஏகலைவன் உடனடியாக, “என்
ஸ்வாமிக்கு நான் என்ன வேண்டுமானாலும் கொடுப்பேன். குருவே கட்டளையிடுங்கள்! எதையும் மறுக்க மாட்டேன்,” என்று உறுதியுடன் கூறினான். “உன் வலதுகை கட்டை விரலை எனக்குக் கொடு,” என்று துரோணர் பதிலளித்தார். துரோணரின் கட்டளை அதிர்ச்சி தருவதாக இருந்த போதிலும், ஏகலைவன் வலதுகை கட்டை விரலை
தயக்கமின்றி வெட்டி துரோணருக்கு அர்ப்பணித்தான். காலப்போக்கில் ஏகலைவன் தனது எஞ்சிய விரல்களைக் கொண்டு அம்பு எய்துவதற்கு கற்றுக் கொண்டான. ஆனால், முந்தைய வேகத்தை அவனால் பெற முடியவில்லை. அர்ஜுனன் வெல்லவியலாத வீரனானான். ஏகலைவனின் இக்கதையை அறிந்த பல்வேறு மக்கள், அர்ஜுனன் பொறாமை கொண்டவன்,
துரோணர் கட்டை விரலை குரு தட்சணையாகக் கேட்டது குற்றம், ஏகலைவன் மிகச்சிறந்த குரு பக்தன் போன்ற கருத்துகளை வைக்கின்றனர். ஆனால், பக்தர்களில் சிறந்தவரான அர்ஜுனனை பொறாமை கொண்டவன் என்று கூறுவது சரியா? ஆச்சாரியரான துரோணரின் செயலை குற்றமாகக் கருதுவது தகுமா? அர்ஜுனனின் மீதும் துரோணரின்
மீதும் குற்றமில்லை என்றால், ஏகலைவனின் தவறுதான் என்ன? துரோணர் எதற்காக அவனது கட்டை விரலைப் பெற வேண்டும்? அர்ஜுனன் எதற்காக துரோணரிடம் சென்று ஏகலைவனைப் பற்றிக் கூற வேண்டும்?
பெரும்பாலான மக்கள், ஏகலைவனின் குரு பக்தியை மெச்சுகின்றனர். ஆனால், குரு பக்தி என்னும் போர்வையில் குருவிற்கு
எதிராகச் செயல்பட்டவன் ஏகலைவன் என்பதே உண்மை. அவன் உண்மையிலேயே துரோணரை தனது குருவாக ஏற்றிருந்தால், “உனக்கு வில்வித்தை கற்றுக் கொடுக்க முடியாது” என்ற குருவின் முதல் கட்டளையை அவன் பின் பற்றி இருப்பான். ஆனால் அவன் அவ்வாறு செய்யவில்லை. துரோணர் ஏகலைவனை தாழ்ந்த குலம் என்று ஒதுக்கி
இருக்கலாம், அல்லது அவனது நேர்மையை சோதிப்பதற்காக ஒதுக்கி இருக்கலாம், அல்லது வேறு காரணத்திற்காகவும் ஒதுக்கி இருக்கலாம்–எப்படியிருந்தாலும் ஏகலைவனின் கடமை குருவின் கட்டளைப்படி நடப்பதே. ஆனால் அவனுக்கோ தன் குருவின் கட்டளை பிடிக்கவில்லை. குருவின் முதல் கட்டளையைக் கூட மதிக்காத சீடனை
சிறந்த குரு பக்தனாக ஏற்றுக் கொள்ள முடியுமா? குரு இல்லாமல் வித்தையைக் கற்றுக் கொள்ள முடியாது என்பதாலும் குரு இல்லாதவனை மக்கள் மதிக்க மாட்டார்கள் என்பதாலும், ஏகலைவன் துரோணருக்கு சிலை செய்து கலையைக் கற்றுக் கொண்டான். கற்பனையில் மனம் போனபடி செயல்படுபவர்களை சாஸ்திரமும் பெரியோர்களும்
மதிப்பதில்லை. அவனது முக்கிய குறிக்கோள் வில்வித்தையைக் கற்று மிகச்சிறந்த வீரனாக வருவதே. அதாவது, தனது சொந்த புலன்களை திருப்தி செய்வதே–குருவை திருப்தி செய்வது அல்ல. இத்தகைய ஆசை நேர்மையானதல்ல. துரோணரின் முதல் கட்டளையை ஏகலைவன் ஏற்கவில்லை என்றாலும், இறுதியில் அவரது கட்டளையை ஏற்று கட்டை
விரலைக் கொடுத்தான் என்று கூறி அவனைப் பாராட்டுபவர்கள் உள்ளனர். ஆனால் நாம் இதனை ஆழமாக சிந்தித்துப் பார்த்தால், குரு பக்தியைக் காட்டிலும் ஏகலைவன் உலக தர்மத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளான் என்பதைப் புரிந்துகொள்ளலாம். குருவானவர் தட்சணைக் கேட்கும் போது அதைக் கொடுப்பது உலக
தர்மம்; குருவின் கட்டளையை உளமாற ஏற்று அதனை நிறைவேற்றுவது குரு பக்தி. இதன்படி ஏகலைவன் தனது விரலை அர்ப்பணித்தது உலக தர்மம். குரு பக்தி அல்ல. அவனிடம் உண்மையான குரு பக்தி இருந்திருந்தால், துரோணரின் முதல் உபதேசத்தைப் பின்பற்றியிருப்பான். துரோணரால் முதலில் மறுக்கப்பட்ட பின்னர், ஏகலைவன்
தனது குருவின் கருணைக்காக காத்திருந்திருக்க வேண்டும். அதுவே குரு பக்தி. அல்லது குரு முக்கியமல்ல, கலை மட்டுமே முக்கியம் என்று நினைத்திருந்தால், வேறொரு குருவிடம் சென்று கலை கற்றிருக்க வேண்டும். குருவிற்கு சேவை செய்வதன் அடிப்படை சரணாகதி. நீதிநெறிகள் அல்ல. ஆனால் ஏகலைவன் சரணடைவதற்கு
முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இத்தகைய வெளி வேஷங்கள் செயற்கையானவை. அர்ஜுனன் ஏன் துரோணரிடம் சென்று ஏகலைவனைப் பற்றிக் கூற வேண்டும்? அர்ஜுனனின் தூண்டுதலின் பேரிலேயே துரோணர் கட்டை விரலைப் பெற்றார் என்று கூறி, அர்ஜுனன் பொறாமை கொண்டவன் என்று கூறுவோரும் உண்டு. உண்மையில், அர்ஜுனன் மீது
எந்த தவறும் இல்லை. “நீயே எனது சீடர்களில் முதன்மையானவன்,” என்று துரோணர் அர்ஜுனனுக்கு அளித்த வாக்கினை அவர் காப்பாற்றியாக வேண்டும்; மேலும், அதனைக் காப்பாற்ற வேண்டிய கடமை சீடனுக்கும் உண்டு. ஏகலைவனைப் பற்றி துரோணரிடம் கூறியதன் மூலமாக அர்ஜுனன் தனது கடமையைச் செய்தான், அதில் பொறாமை என்ற
கேள்விக்கே இடமில்லை. அர்ஜுனன் கிருஷ்ணரின் மிகச்சிறந்த தூய பக்தன்; இல்லாவிடில் கிருஷ்ணர் கீதையை உரைப்பதற்கு அர்ஜுனனைத் தேர்ந்தெடுத்திருக்க மாட்டார். தனது பக்தர்கள் பொறாமையற்றவர்கள் என்று கிருஷ்ணர் கீதையில் (12.13) கூறுவதை அறிதல் நன்று. ஞானத்தை குருவிடமிருந்து நேரடியாகக் கேட்டுப்
பெறுவதே பக்குவமான முறை. ஆனால் ஏகலைவன் தனது சொந்த பலத்தினால் மாவீரனாக வளர முயன்றான். இதைத்தான் அர்ஜுனன் தடுக்க விரும்பி, தனது குருவிடம் தெரிவித்தான். அர்ஜுனன் கருணையுடன் அவ்வாறு செய்யாவிடில், போலியான குரு பக்தி பரவியிருக்கும். குருவிடம் சென்று பணிவுடன் பாடம் கற்பதற்கு பதிலாக, ஒரு
சிலையை வைத்து அதனை குருவாக நினைத்து பயிற்சி செய்யும் போலித் தன்மைகள் பல மடங்கு அதிகரித்து இருக்கும். அத்தகு நாத்திகக் கொள்கைகள் நிலைநாட்டப் பட்டிருப்பின், மக்களுக்கு உண்மையான பக்குவத்தை வழங்கும் முறைகள் அழிந்திருக்கும். குருவின் கட்டளைகளை மறுத்துவிட்டு, வெளி வேஷத்தில் குரு
பக்தியை வெளிப் படுத்துவோர் அதிகரித்திருப்பர். அர்ஜுனன் தானாகச் சென்று, “என்னை உங்களின் சிறந்த சீடனாக மாற்றுங்கள்,” என்று ஒரு போதும் கேட்கவில்லை. அர்ஜுனனின் நடத்தையிலும் திறமையிலும் அக மகிழ்ந்த துரோணர், தானாக முன் வந்து, அர்ஜுனனிடம் உறுதி அளித்தார். குருவின் வாக்கினைக் காப்பாற்றிய
அர்ஜுனனின் செயலில் தவறு இருப்பதாக நினைப்பவர்கள், குரு-சீட உறவினை அறியாதோர் என்பதில் சந்தேகமில்லை. அர்ஜுனன் ஏகலைவனின் மீது சற்றும் பொறாமை கொண்டவன் அல்ல என்பதும், அர்ஜுனனின் செயல் ஏகலைவன் மட்டுமின்றி மொத்த உலகத்தின் மீதும் அவன் கொண்டிருந்த கருணையைக் காட்டுகிறது என்பதும் தெளிவான
உண்மைகளாகும். உண்மையான குரு பக்தி எளிமையானது இயற்கையானது. ஏகலைவன் தனது குருவினால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் படவில்லை. ஏகலைவன் தனது கல்வியை முறைப்படி கற்கவில்லை என்பதாலும் மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுத்ததைப் பார்த்து திருடிக் கற்றுக் கொண்டான் என்பதாலும், அவனது கட்டை விரலை
தட்சணையாகப் பெற்றதாக துரோணர் தனது மகனிடம் கூறியுள்ளார். குருவிற்குத் தெரியாமல் கல்வியைத் திருடிக் கற்றுக் கொள்ளுதல் மன்னிக்க முடியாத குற்றம் என்பதால், வேத கால தர்மத்தின்படி, உண்மையில் துரோணர் ஏகலைவனுக்கு அதிகமான தண்டனையைக் கொடுத்திருக்கலாம். ஆனால் ஏகலைவனின் அகங்காரத்தை குறைக்கும்
வகையில், அவர் மிகுந்த கனிவுடன் கட்டை விரலை மட்டும் பெற்றுக் கொண்டார். துரோணர் ஏகலைவனை சீடனாக ஏற்றுக்கொள்ளவே இல்லை என்னும்பட்சத்தில், ஏகலைவனை குரு பக்திக்கு உதாரணமாகக் கூறுவது தவறு. #குருவே_இல்லை #குருபக்தி_எங்கிருந்து_வந்தது?
மருத்துவக் கல்லூரிக்குச் செல்லாமல் திருட்டுத்தனமாக
மருத்துவம் கற்றுக் கொண்டால், அவர்களை அரசு அங்கீகரிக்குமா, தண்டனை வழங்குமா? கட்டை விரலின்றி அம்பெய்தப் பழகிக் கொண்ட ஏகலைவன் பிற்காலத்தில் கிருஷ்ணரின் விரோதியான ஜராசந்தனின் கீழ் பணிபுரிந்து வந்தான். பிற்காலத்தில் ஏற்பட்ட போர் ஒன்றில், ஏகவைவன் கிருஷ்ணரால் கொல்லப்பட்டான்.
குருவினால்
புறக்கணிக்கப்பட்டவன் கிருஷ்ணராலும் புறக்கணிக்கப் படுகிறான். கிருஷ்ணர் பக்தர்களைக் காப்பவர், துஷ்டர்களை அழிப்பவர். ஏகலைவன் குரு பக்தனாக இருந்திருந்தால், கிருஷ்ணர் ஏகலைவனைக் கொன்றிருக்க மாட்டார். அவன் துஷ்டனாக இருந்த காரணத்தினால் தான், கிருஷ்ணர் தனது கரங்களாலேயே அவனைக் கொன்றார்.
கிருஷ்ணர் அசுரர்களை மட்டுமே கொல்வார், பக்தர்களை என்றும் பாதுகாப்பார். ஏகலைவன் அசுரத் தன்மை கொண்டவன் என்பதை இதிலிருந்து தெளிவாக உணரலாம். துரோணர் ஏகலைவனை நிராகரித்ததில் தவறில்லை என்பதை அவனது பிற்கால செயல்கள் துல்லியமாகக் காட்டுகின்றன. வெளி வேஷத்திற்கு குரு பக்தனாக இருந்து கொண்டு,
உள்ளே பொறாமையை வளர்ப்பவன் சீடனல்ல. வெளியில் பார்ப்பதற்கு கடுந்தவங்களைச் செய்தாலும் அது பக்தி ஆகாது. அசுரர்கள்கூட ஆழமான தவங்களைச் செய்வதை நாம் புராணங்களில் பல இடங்களில் காண்கிறோம். அத்தகைய கடுமையான தவங்களால் குருவையோ கிருஷ்ணரையோ யாராலும் திருப்தி செய்ய இயலாது, குருவின் சொற்படி
நடத்தல் என்னும் உண்மையான சரணாகதி அவசியம். ஏகலைவன் தண்டிக்கப்பட்டதன் மூலமாக போலியான குரு பக்தி தடுக்கப்பட்டது. பௌதிகத் தளத்தில் இருப்பவர்கள் வேண்டுமானால் ஏகலைவனைப் புகழலாம், ஆனால் ஆன்மீகத் தளத்திலிருந்து பார்த்தால், ஏகலைவனின் நிலை புலப்படும். நம்மிடம் உள்ள ஏகலைவனை விரட்டுவோம்
நமது குரு நமக்கு ஏதேனும் அறிவுறுத்தினால், அதை அப்படியே நிறைவேற்ற வேண்டும். (குருவை ஏற்பதற்கு முன்பாக அவர் உண்மையான குருவா என்பதையும் தெரிந்து கொள்ளுதல் அவசியம்.) “குருதேவர் இதைச் செய்யும்படிச் சொல்கிறார். ஆனால் நான் வேறு செயல்களைச் செய்யப் போகிறேன்,” என்று நினைத்தல் முற்றிலும்
தவறு. குருவின் கூற்றுகளை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். அதில் எதையும் சேர்க்கக் கூடாது, எதையும் கழிக்கக் கூடாது. சேர்த்தாலோ கழித்தாலோ, குருவின் கருணையை நம்மால் பெற இயலாது. நாம் உண்மையான சீடர்களா என்பதை அறிய, குரு சில நேரங்களில் சோதனை செய்யலாம். அச்சமயத்தில் நாம் குருவை விட்டு
விலகக் கூடாது. உண்மையான குரு, போலியான குரு என்று இரு தரப்பினர் இருப்பதுபோன்று, உண்மையான சீடன், போலியான சீடன் என்று இரு தரப்பினரும் உண்டு. உண்மையான சீடன் குருவின் கட்டளைகளை நிறைவேற்ற அயராது உழைப்பான். போலியான சீடனோ வெறுமனே குருவை வழிபட்டால் போதும், எல்லாவற்றையும் அறிந்து கொள்ளலாம்
என்று நினைப்பான். குருவிற்கு உண்மையாக தொண்டு செய்தால் மட்டுமே மாயையை வெற்றி கொண்டு இறைவனை அணுக முடியும்

(இக்கட்டுரையின் பெரும் பகுதி ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரின் உபதேசங்களை அடிப்படையாகக் கொண்டதாகும்.) பகவத் தரிசனம் என்னும் பத்திரிகையிலிருந்து எடுத்து edit செய்துள்ளேன்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jan 20
#மகாபெரியவா
இல்லற தர்மத்திலே ஆண் குழந்தைகள் பிறக்க வேண்டும். ஒரு புத்திரன் பிறந்தால் அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யும் கைங்கர்யங்களின் மூலம் தந்தைக்கு நல்ல கதியைத் தருகிறான். ஆண் குழந்தையை பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்துவிடுகிறான். இது சாஸ்த்ரத்தில்
உள்ளது. அப்போ பெண்ணை பெத்தவாளுக்கு?
"தசாநாம் பூர்வேஷாம் தசாநாம் பரேஷாம்
ஆத்ம நச்ச லோத் தாரண த்வாரா
நித்யநிரதிசய ஆனந்த ஸாஸ்வத விஷ்ணுலோக வாப்யர்தம்
கன்னிகா தானாக்ய மஹாதானம் கர்த்தும்
யோக்யதா ஸித்திம் அநுக்கிரஹாண"......

கன்னிகா தானத்தின் போது செய்கின்ற ஸங்கல்ப மந்திரம்.

தசாநாம்
பூர்வேஷாம் என்றால் எனக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறைகள் .

தசாநாம் பரேஷாம் என்றால் எனக்குப் பின்னாலே வரக்கூடிய பத்து தலைமுறைகள்.

ஆத்ம நச்ச என்றால் என்னுடன் சேர்த்து
21 தலைமுறைகளான என்னுடைய குலம் உத்தாரணம் பெறுவற்கும் நிலைத்த விஷ்ணு லோகத்தை நான் அடைவதற்கும் இந்த மாபெறும்
Read 6 tweets
Jan 19
Sri Sankara Charitham by #MahaPeriyava – Determining the period of Sri Sankara’s life – Haala-Purnavarma — Proof from many evidences

"Apart from the belief passed through many generations and the testimonies of the Matams, let me speak of a few more (in support of the argument Image
that the life period of Acharya was 6-5 BC). When we study all the Puranas collectively, it can be observed that according to the ‘Genealogy’ (Royal lineage), the Mauryas ruled from 1500 BC to 1200 BC (I am only saying approximately); thereafter Sungas (शुङ्ग) had ruled upto
900 BC, later, Kanwas (कण्व) had reigned for about 100 years, and subsequently, Satavahanas [शातवाहन] – known as “Andhras” – had ruled for about five hundred years from the beginning of 8th Century. Although the Satavahana empire was founded in the Deccan, since it had spread
Read 19 tweets
Jan 19
#ஸ்ரீவாழைமர_பாலசுப்ரமணிய_சுவாமி ஆலயம் விருதுநகர்
இறைவனே தேடி வந்து குடியிருக்கும் கிராமம், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள துலுக்கன்குறிச்சி. சிவகாசியிலிருந்து சங்கரன்கோவில், கழுகுமலை செல்லும் மெயின்ரோட்டில், சிவகாசியில் இருந்து 17 கிமீ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது
இக்கோவில். 150 ஆண்டுகளுக்கு முன்னர் முருகப் பெருமான் மீது அன்பும் ஆழ்ந்த பக்தியும் கொண்டிருந்த வேலாயுதம் என்ற பக்தருக்கு காட்சி கொடுத்து, தான் வாழைமரத்தில் குடியிருப்பதாக கூறி அருள் பாலிப்பதால் வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி என அழைக்கப்படுகிறார். துலுக்கன்குறிச்சி கிராமத்தில்
வாழ்ந்த தேரியப்பர்-வீரம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் வேலாயுதம். இவர் தினமும் அதிகாலை வெம்பக்கோட்டை வைப்பாற்றில் குளித்து விட்டு வனமூர்த்தி லிங்காபுரம் விநாயகர் கோவிலில் உள்ள முருகனை தரிசித்து விட்டு அன்றாட பணிகளை செய்வதையே வழக்கமாக கொண்டிருப்பார். வைத்திய முறை தெரிந்து வைத்து
Read 16 tweets
Jan 18
#பஞ்சகிருஷ்ண_தலங்கள்
பஞ்ச கிருஷ்ண தலங்கள் என்பவை தமிழ்நாட்டில் உள்ள முக்கிய வைணவ‌ ஆலயங்கள் ஆகும். இத்தலங்களின் திருமால் எப்போதும் பக்தர்களுடன் சஞ்சரித்துக் கொண்டிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன இவை கிருஷ்ண ஆரண்ய தலங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
இத்தலங்களில் கிருஷ்ணனின் லீலைகளும்
அடியவர்கள் திருமாலின் தரிசனத்தைப் பெற்றுள்ளனர் என்றும் தல புராணங்கள் கூறுகின்றன.
#திருக்கண்ணங்குடி #திருக்கண்ணபுரம் #திருக்கண்ணமங்கை #கபிஸ்தலம #திருக்கோவிலூர் ஆகிய இடங்களில் பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்கள்.

#லோகநாதபபெருமாள்_கோவில் திருக்கண்ணங்குடி
நாகபட்டிணம்- திருவையாறு சாலையில்
நாகபட்டிணத்திலிருந்து 8 கிமீ தொலைவிலும், சிக்கலிலிருந்து 2 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
வசஷ்ட முனிவர் கண்ணன் மீது பக்தி கொண்டு வெண்ணையால் கண்ணனை உருவாக்கி வழிபட்டு வந்தார். அவரின் பக்தியின் காரணமாக வெண்ணைக் கண்ணன் உருகவில்லை. கண்ணன் ஒருநாள் சிறுவனாக வந்து வெண்ணைக் கண்ணனை உண்டு
Read 30 tweets
Jan 17
#MahaPeriyava

Author: Prof S.Kalyanaraman, Neurosurgeon, Chennai
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb

Once we went for darshan to Kanchipuram. There was a need for a new elephant at Sri Ekambareswarar Temple. One of the senior officials of the Mutt Image
asked me whether I could buy and donate an elephant to the temple. I replied that I was not in a position to do so because of my financial position and commitment at that time. That person then probably thought that if Maha Periyava had asked me to buy an elephant and donate it,
I would certainly oblige. As I was having darshan, he told Maha Periyava, “Dr Kalyanaraman wants to donate an elephant to Sri Ekambareswarar temple, Periyava should bless him. Maha Periyava did not reply to him and continued to talk to devotees and give them darshan. Again the
Read 11 tweets
Jan 16
#மகாபெரியவா "மாமா, இந்த மாசம் அப்பா ஶ்ராத்தம் அதுதான் உங்களுக்கு ஞாபகப் படுத்திட்டு போகலாம்னு வந்தேன்" என்றான் சந்துரு.
"இத நீ எனக்கு, ஞாபகபடுத்தணுமா? இந்த மாசம் 26ஆம் தேதி, தசமி திதிதானே எனக்கு ஞாபகம் இருக்கு, கார்த்தால பத்து மணிக்கு நான் அங்க இருப்பேன். நீ கவலைப்படாதே வழக்கம்
போல நல்லபடியா நடத்தி குடுத்துடறேன். பிராமணாள் கூட ஏற்பாடு பண்ணிட்டேன்" என்றார் மகாதேவ சாஸ்திரிகள்.
"ரொம்ப சந்தோஷம் மாமா. நமஸ்காரம் பண்றேன், ஆசீர்வாதம் பண்ணுங்கோ" என்ற சந்துரு, நமஸ்காரம் பண்ணி அபிவாதயே சொல்லி முடித்தவுடன், "க்ஷேமமா சௌக்யமா, இருப்பேடா அம்பி, தீர்காயுஷ்மான்பவா.
சீக்கரமேவ விவாக பிராப்திரஸ்து" என்று ஆசீர்வாதம் பண்ணி அனுப்பினார். சந்துரு சென்ற கொஞ்ச நேரத்தில் ஒரு சாஸ்திரிகள் அவரை பார்க்க வந்தார். வந்தவரை வரவேற்ற மகாதேவா சாஸ்திரிகள் என்ன விஷயம் என்று விசாரிக்க, "டெல்லியில் வேதபுரின்னு ஒருத்தர், மத்யஅரசுல பணி. நல்ல செல்வாக்கானவர்.
Read 52 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(