சைவம்! அசைவம்!! என்ன  வேறுபாடு?

தண்ணீரை உறிந்து குடிக்கும் மிருக வகைகள் சைவம். உதாரணம் யானை, ஆடு, மாடு, குரங்கு போன்றவை..

தண்ணீரை நக்கி குடிக்கும் மிருக வகைகள் அசைவம். உதாரணம் சிங்கம், புலி, நாய், பூனை போன்றவை...
தண்ணீரை உறிந்து குடிக்கும் மிருகங்களுக்கு இயற்கையாகவே குடல் நீளமாக இருக்கும். செரிமானம் தாமதமாக நடந்தாலும் பிரச்சினையில்லை.
தண்ணீரை நக்கி குடிக்கும் அசைவ மிருகங்களுக்கு குடல் சிறிதாகவே இருக்கும். 

செரிமானம் விரைவில் நடந்தே ஆக வேண்டும்.மனிதன் இதில் எந்த மிருக வகையில் சேர்ந்தவன்?
தண்ணீரை உறிந்து குடிப்பதால் நிச்சயம் சைவ வகை தான்.. 

நாம் கீரையும், பச்சை காய்கறிகளையும் மட்டுமே உண்டு நூறு ஆண்டுகள் வாழ முடியும். 

ஆனால் சிங்கத்திற்கோ புலிக்கோ இது சாத்தியமில்லை!
எங்கே தவறு நடந்தது? 

நாக்கு தான். 

வேட்டையாடி உண்டால் தான் உயிர் வாழ முடியும் என்ற நிலையைக் கடந்து, பயிர் செய்து உயிர் வாழுமளவிற்கு நாம் பரிணாம வளர்ச்சி பெற்றாலும் நாக்கு ருசி நமக்கு இன்னும் மாறவில்லை. மறையவில்லை!
மாமிசம் மனித உணவா?இனி ஆராய்ச்சி செய்வோம்.

இரு ஜீவராசிகளுக்கும் பற்களின்
அமைப்பு சைவ ஜீவராசிகளுக்கு பற்கள் மனிதனை போல் தட்டையாக அமைந்துள்ளன.

அசைவ இனங்களுக்கு கூர்மையாக பற்கள் உள்ளன.
எவ்வாறு தண்ணீர் அருந்துகின்றன?

சைவ ஜீவராசிகள் அனைத்தும்

மனிதனைப் போல் தண்ணீரை உறிஞ்சிதான் குடிக்கின்றன.

அசைவ ஜீவராசிகள் தண்ணீரை நக்கிக் குடிக்கின்றன.
கால் விரல்கள்?

சைவ ஜீவராசிகளுக்கு விரல்கள்
மனிதனைப் போல் சிறியதாகவும், பாதம்
தட்டையாகவும் இருக்கும்.

அசைவ ஜீவராசிகளுக்கு விரல்கள்
நீளமாகவும், கூர்மையான
நகங்களுடனும் இருக்கும்.
குடல் அமைப்பு?

சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப் போன்றே பதினைந்து அடி வரை
நீளமான குடலாக உள்ளது. காரணம், சைவ சாப்பாட்டில் நச்சுத் தன்மை
குறைவாகவும், சத்துக்கள் அதிகமாகவும்
இருப்பதால் உணவானது குடலில் சற்று அதிக நேரம் இருப்பதற்கான ஏற்பாடு.
அசைவ ஜீவராசிகளுக்கு

அசைவ உணவில் நச்சுதன்மை அதிகம் உள்ளதால் மிக குறைவான நேரத்தில்
குடலை விட்டு வெளியேறு ஏற்றாற்போல் ஐந்து அடிகள் மட்டுமே குடலின் நீளம்
உள்ளது.
சமநிலையான உடல் உஷ்ணம் 

சைவ ஜீவராசிகளுக்கு மனிதனைப் போன்றே உடலில் வெப்பம் அதிகமானால் தாகத்தை உண்டாக்கி அதிக தண்ணீர் பருக வைத்து வியர்வை என்ற செயலின் மூலமாக உடலை
குளிர்விக்கிறது.
அசைவ ஜீவராசிகளுக்கு

இந்த ஏற்பாடு இல்லை. ஆதலால் தனது நாக்கினை
தொங்க விட்டுக் கொண்டு அது தன்னை குளிர்விக்கிறது.
மலத்தின் தன்மை.

சைவ ஜீவராசிகளுக்கு

மனிதனைப் (சைவம் சாப்பிடும் மனிதன்) போன்றே
மலம் கழிப்பதில் சிரமம் இருக்காது.

மலம் துர்நாற்றம் வீசாது.
அசைவ ஜீவராசிகளுக்கு

(அசைவம் சாப்பிடும் மனிதன் உட்பட) மலம் கழிப்பதில் சிரமமும், மலம் அதிக
துர்நாற்றத்துடனும் இருக்கும்.
"உடற்கூறு ஆராய்ந்தோம்.
இனி மனநிலை ஆராயலாம்."

வாழும் முறை 

சைவ ஜீவராசிகள் ஒற்றுமையாக
அதாவது கூட்டம் கூட்டமாக வாழும்.

மனிதனும் அவ்வாறே வாழ
ஆசைப்படுகிறான்.
அசைவ ஜீவராசிகள்

தனித்தனியாக
வாழும் இயல்புடையது.

தன் எல்லைக்குள் தன் இனத்தைச் சார்ந்த
இன்னொரு விலங்கினை
அனுமதிக்காது.

(இன்றைய மனிதனின் நிலையும்
இதுதான்.)
இயல்பு 

சைவ ஜீவராசிகளின் இயல்பான குணம் சாந்தமாகவும், அமைதியாகவும்
இருக்கும்.

அசைவ ஜீவராசிகள் வேகமாகவும், ஆக்ரோசமாகவும் இருக்கும்.
சைவ ஜீவராசிகளை ஆக்கபூர்வமான
வேலைகளில் (உழுதல், வண்டி இழுத்தல்) ஈடுபடுத்த முடியும்.

அசைவ ஜீவராசிகளால் இவ்வாறான செயல்கள்
எதுவும் செய்ய இயலாது.
மன இறுக்கம்

அசைவ உணவு சாப்பிடுபவர்கள் அதிக மன இறுக்கத்திற்கு உள்ளாவது ஏன்? 

ஒவ்வாருவரின் உடலிலும்
அபாயகரமான சமயங்களில் தப்பித்துக் கொள்வதற்காக (உடலிற்கு அதிக இயக்க
சக்தியை தர ) சக்தி வாய்ந்த
ஹார்மோன்கள் அட்ரீனல்
சுரப்பியிலிருந்து சுரந்து இரத்தத்தில் கலக்கும்.
இந்த நீரானது ஒவ்வொரு விலங்கும் வெட்டப்படும் போது அதிக அளவில்
சுரந்து அதன் இரத்தத்திலும்,
சதைகளிலும் கலந்து இருக்கும். 

இவற்றை உட்கொள்ளும் மனிதன் தன் சாதாரண வேலைகளிலும் கூட ஏதோ
அபாயத்தில் உள்ளது போன்ற
உணர்வைப் பெறுகிறான். 

இதுவே மன இறுக்கமாக
உருவெடுக்கிறது.
மனிதன் ஆறாவது அறிவை சற்றும் பயன்படுத்தாது அதிக சக்தியும், பலமும்
வேண்டியே தான் அசைவம்
சாப்பிடுவதாக எண்ணுகிறான். 

சைவத்தில் தான் அதிக சக்தியும், பலமும் உள்ளது.சைவம் சாப்பிடும் யானைக்கு
பலத்தில் என்ன குறை?
உதாரணமாக சோயா பீன்ஸில்
நாற்பது சதவீதம் சுத்தமான புரோட்டீன் உள்ளது. இது மாமிசத்தில் உள்ளதை விட
இரு மடங்கும், முட்டையில் உள்ளதை விட நான்கு மடங்கும் அதிகமாகும் மேற்கண்ட இந்த ஆராய்ச்சியின் அறிய
வேண்டியது. இயற்கையின் அமைப்பு படி மனிதன் உட்கொள்ள வேண்டியது
சைவமே !
எனவே, மனிதன்

ஆரோக்கியமாக, அமைதியாக,
நிம்மதியாக, பொறுமையாக,
பலசாலியாக, ஒற்றுமையுடனும், கோபம் இல்லாமல்,மன இறுக்கம், மலச்சிக்கல்,
நோய் இல்லாமலும் வாழ
ஆசைப்படுவாான் எனில் சைவமே உட்கொள்வது காலச் சிறந்தது.
இது உண்மைதானா என்று யோசித்துக் கொண்டே இருக்க, திருவள்ளுவர் எனக்கு விடை கொடுத்தார்.

*தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்*.

பொருள்:தன் உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படிக் கருணையுள்ளம் கொண்டவராக இருக்க முடியும்.
மனிதன் நான் யாருக்கும் எந்த பாவமும் பண்ணல, என்ன மட்டும் ஏன் கடவுள் இப்படி சோதிக்கிறாருன்னு இனிமேல் கேட்க மாட்டான்.

அதற்க்காக அசைவம் 
சாப்பிடாதீர்கள்
என்று நான் கூற முடியாது!

#படித்ததில்_பிடித்தது
#சிந்திக்கவைத்த_பதிவு

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

Jan 22
*திருப்பதி பெருமாளுக்கு தம்பி என்று வணங்கப்படும் குடவாசல்*ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில்*
*Kudavasal srinivasa Perumal koil*
  
திருப்பதி, திருமலையில் நடப்பது போன்றே இவ்வாலயத்தில் எல்லா வழிபாடுகளும் வைபவங்களும் நடத்தப்படுகின்றன.

1 Image
இவர் திருப்பதி பெருமாளுக்கு தம்பி என வணங்கபடுகிறார்.

திருப்பதி மலை செல்ல முடியாதவர்கள் பிரார்த்தனைகள் இந்த கோயிலில் செல்லுத்தபடுகிறது.

2
*ஆலய தல வரலாறு*

முன்னொரு காலத்தில், வடதிசைக்கு அதிபதியான குபேரன் மகாவிஷ்ணுவை வணங்கி, "நான் எப்பொழுதும் தங்களை தரிசித்துக் கொண்டிருக்கும் பாக்கியத்தை அருள வேண்டும்'' என்று வரம் கேட்டார்.

3
Read 33 tweets
Jan 21
கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வையே இப்பதிவு.

1. நல்லவர்கள் ஏன் கஷ்டபடுகின்றார்கள்?

2. கெட்டவர்கள் ஏன் எல்லா நலன்களுடன் வாழ்கின்றார்கள்?

3. ஆன்மீகத்தில் காலடி எடுத்து வைக்கும் ஒருவனுக்கு ஏன் அதிக கஷ்டம் ஏற்படுகின்றது?

4. கர்மவினைகளை அனுபவித்துதான் தீர்க்க வேண்டுமா?
போன்ற பல கேள்விகளுக்கு முழுவிளக்கமே இப்பதிவு.

பதிவிற்குள் செல்வதற்குமுன் ஒரு கதையை பார்த்துவிடுவோம்.

சித்திரபுரம் என்ற ஊரில் சித்தன் என்ற ஏழை விவசாயி வாழ்ந்துவந்தான். அவன் குணத்தில் நல்லவனாகவும் சிறந்த பக்திமானாக
இருந்தபோதிலும்
அவனுக்கு வாய்ந்த மனைவி கொடுமைக்காரியாக இருந்ததால் அவனது வாழ்க்கை மிகவும் கஷ்டத்திலேயே நகர்ந்தது.

வேலை நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களை தியானத்திலும் பிராத்தனையிலும் செலவிட்டான். எந்த அளவிற்கு அவன் பக்தியில் மனதை செலுத்துகின்றானோ அந்த
அளவிற்கு அவனை கஷ்டங்கள் சூழ்ந்து கொண்டன.
Read 83 tweets
Jan 21
கண்களுக்குப் புலப்படாத கடவுளைக் காணுதல்

ஜன்னலுக்கு வெளிப்புறத்தில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்களின் ஒலியினை நாம் செவியுறுகின்றோம். ஆனால், இந்த வாகனங்கள் ஒரு குறிப்பிட்ட தடத்தின் எல்லைக்குள் கவனமாகச் செல்கின்றன, தடம் மாறிச் சென்றால் அவை ஒன்றுக்கொன்று மோதி விபத்து ஏற்படும். Image
அதுபோலவே, கிரகங்கள் ஒவ்வொன்றிற்கும் வரையறுக்கப்பட்ட வேகம் உண்டு. கோடிக்கணக்கான கிரகங்கள் சுற்றிக் கொண்டுள்ளன. ஆனால், அவை மோதிக்கொள்வதில்லை. இந்த ஒழுங்குமுறை எவ்வாறு வடிவமைக்கப்பட்டது? யார் இந்த திறந்தவெளியில் கிரகங்கள் பயணிப்பதற்கான தடத்தினை அமைத்தது?
வாகனங்கள் குறிப்பிட்ட தடத்திற்குள் செல்லுமாறு முறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வழிமுறையை உருவாக்கியது யார்? காவல் துறை, அரசாங்கம்.
Read 16 tweets
Jan 21
என்னை மண்டையில் சுத்தியை கொண்டு அடித்தார்கள்
ஒரு மலை என் தலையில் மோதியதை போல் உணர்ந்து அம்மா அம்மா என்று கதறியே தரையில் சரிந்தேன்.
என் மண்டை எழும்பு உடைந்த வலியை உணர்ந்தேன் நான்.. Image
கூர்மையான கத்தியை கொண்டு என் கழுத்தை அறுக்கும் பொது அந்த வலிநிறைந்த நொடிபொழிதில் என்னை வளர்த்த உன் முகமே என் நினைவில் வந்து சென்றது.

உயிர் பிரியும் தருவாயில் என்னை உருவாக்கிய நீயே என்னை அழிப்பாயென்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை.!
இதுவே நான் ஒரு நாயாக பிறந்திருந்தால் கடைசி வரையும் வளர்த்தவர் வீட்டிலேயே இருந்து இறந்து போயிருப்பேன்..
Read 7 tweets
Jan 21
#தை_அமாவாசை !....

புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் தர ஏற்ற புண்ணிய தலங்கள் !

அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏற்ற திருத்தலங்கள் தமிழகத்தில் உள்ளன. Image
காசி, கயா போன்ற திருத்தலங்களுக்கு செல்ல முடியாதவர்கள் மாதம்தோறும் வரும் அமாவாசையன்று நமது ஊருக்கு அருகில் உள்ள புண்ணிய தலங்களுக்கு சென்று தர்ப்பணம் கொடுக்கலாம்.
அமாவாசை நாள்களில் புண்ணிய தலங்களுக்குச் சென்று தர்ப்பணம் கொடுப்பது மிகவும் புண்ணியத்தைத் தரும் பித்ரு தோஷத்தை நீங்கும். புனித தீர்த்த தலங்களுக்கு சென்று எள், தண்ணீர் இறைத்து பித்ருக்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும்.
Read 54 tweets
Jan 21
'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்ற சொல்லுக்கு ஏற்ப, கடல் வழி வாணிபத்தில் சிறந்து விளங்கியவர்கள், நகரத்தார். காவிரிப்பூம்பட்டினத்தை பூர்வீகமாகக் கொண்டு வாழ்ந்த இவர்கள், ஆழிப்பேரலை மற்றும் வேறு சில மாறுதல்களின் காரணமாக, பாண்டிய நாட்டிற்கு வந்தனர்.

1 Image
அவர்கள் வசிப்பதற்கு பாண்டிய மன்னர், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைக் கொடுத்தார். நெடுங்காலம் காரைக்குடியில் வசித்த நகரத்தார், நாளடைவில் ஒன்பது ஊர்களுக்கு பிரிந்தனர்.

2
அவை காரைக்குடியைச் சுற்றியுள்ள, இளையாத்தன்குடி, மாத்தூர், வைரவன் கோயில், நேமங்கோயில், இலுப்பைக்குடி, சூரக்குடி, வேலங்குடி, பிள்ளையார்பட்டி, இரணியூர் ஆகும்.

3
Read 28 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(