குலதெய்வம், ஒரு ஜாதகத்தில், ஒரு ஜாதகருக்கு எந்தெந்த அமைப்பில், பாதிக்கப்பட்டு இருக்கும் பொழுது,
அவருக்கு வெளியே தெரியாமலே இருக்கும்.
பொதுவாக ஒரு மோசமான
தசா புக்தி ,கோட்சாரத்தில்
ஏழரை சனி, அஷ்டம சனி நடக்கக்கூடிய காலகட்டங்களில் , தன்னுடைய முயற்சிகள் தடுமாறி, பலனளிக்காமல் போகும் போது தான், ஒரு ஜாதகர் ,ஜோதிடரிடம் ஜாதகம் பார்க்க வருகிறார்.
ஜோதிடரும் அவருடைய ஜாதகத்தை ஆராய்ந்து,
தசா புத்தி சரியில்லை என்றால் , அந்த கிரகத்தின் அதிபதி மற்றும் அந்த கிரகத்திற்குரிய பரிகாரங்களை வழிபாடாக பரிந்துரைக்கின்றனர்.
உதாரணமாக ஒருவருக்கு செவ்வாய் தசை. கன்னி லக்னம் என்று வைத்துக்கொள்வோம்.
27 நட்சத்திரங்களுக்கும் பரிகாரம் வழங்கி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் முருகபெருமான்!
சுயம்பு முருகனை காண்பது அரிது.
அப்படியொரு சுயம்பு வேலவனை வணங்கும் பாக்கியத்தை வில்வாரணி என்னும் ஊரில்,
நட்சத்திரகிரி, நட்சத்திரக் குன்று என்றெல்லாம் அழைக்கப்படும் நட்சத்திரக் கோயிலில் நாம் பெறலாம்.
வில்வாரணி நட்சத்திரகிரியில் வீற்றிருக்கும் வள்ளி தெய்வானை சமேத சிவசுப்ரமணிய சுவாமி கோயில் தனிச்சிறப்பு பெற்றது.
முருகனின் கருணையால் உருவான இத்திருத்தலத்து கருவறையில், நாகாபரணத்துடன் முருகரும், சுயம்பு வடிவான சிவபெருமானும் ஒருசேர காட்சிதரும் சிறப்பு இங்கு மட்டுமே காண இயலும்.
27 நட்சத்திரங்களும், சிவ சர்பமும் முருகப்பெருமானை வழிபடும் சிறப்பு, இந்த கோயிலை தவிர உலகில் வேறெங்கும் இல்லை.