63 ஆண்டுகால அநீதி ஒப்பந்தத்துக்கு வேட்டு வைக்கும் மோடி..
ஒவ்வொரு அநீதியாக நீக்கி நீக்கி சீர்செய்யவே மோடிக்கு பத்தாண்டு போதாது என நிரூபிக்கும் நிலையில் தான் நடப்பு உள்ளது..
இப்போது சிந்து நதிநீர் ஒப்பந்தம் எனும் மிகப்பெரிய மோசடி ஒப்பந்தத்தை மோடி உடைக்க கிளம்பிவிட்டார்...
விடுதலை பெற்ற பின் நாட்டை துண்டாடிய பின் சிந்து மற்றும் அதன் உபநதிகளாகிய ஐந்து பெரிய நதிகளான ஜீலம் சேனாப் சட்லஜ் பியாஸ் மற்றும் ராவி ஆகிய நதிநீர் பகிர்ந்து கொள்ளும் விசயத்தில் பெரிய சர்ச்சை உருவானது..
வழக்கம் போல சர்வதேச தலையீடுக்கு நேரு ...
காஷ்மீர் விவகாரத்துக்கு அதுவரை எவரும் எட்டி பார்க்காத ஐநாவை பஞ்சாயத்துக்கு அழைத்தது போலவே..
இதிலும் .. உலக வங்கி தலையீட்டுக்கு பாரதம் உட்பட்டது..
இழுத்து இழுத்து 9 ஆண்டு கடத்தி கடைசியாக 1960 ஆண்டில் ஒப்பந்தம் உருவானது.
கராச்சிக்கு போய் பாகிஸ்தான் அதிபராக இருந்த அயூப் கானுடன் நேரு ஒப்பந்தம் முடித்து வந்தார்..
அந்த ஒப்பந்தம் சொல்வதென்ன..
பாகிஸ்தான் நாட்டுக்கு 80% பங்கு நதிநீரை தர வேண்டும்..
இந்தியாவுக்கு வெறும் 20% மட்டுமே..
இந்திய மக்கள் தொகை என்ன.. இந்திய நிலப்பகுதி என்ன..
வெரும் 20% எனும் ஒப்பந்தத்தை போட்டுவிட்டு.. வந்ததோடு நின்றதா..
நேரு உட்பட சோனியாவின் பொம்மை அரசு காலம் வரை அந்த பங்கு நீரை கூட தேக்கி வைத்து உபயோகிக்க எந்த நடவடிக்கைகள் எடுக்கவில்லை..
எனவே நமது 20% பங்கிலும் பெரும் பகுதி பாகிஸ்தான் காரனுக்கே போனது..
ஆக 90% க்கு மேல் பாகிஸ்தான் அனுபவித்தது..
இதற்கு எந்த கேள்வியும் இல்லை..
எந்த போர் வந்தாலும் . பாகிஸ்தான் எத்தனை தீவிரவாத தாக்குதல் செய்தாலும்..
இந்தியாவுக்கு எதிராக எத்தனை மூர்க்கத்தனமான மோசடி எதிர்ப்பை செய்தாலும்
தங்கு தடையின்றி நதிநீரை கர்ண மகாபிரபு போல கொடுப்பதை கணக்கு பார்க்காமல் குருட்டுத்தனமாக கொடுத்துக் கொண்டே இருந்தோம்.
நீண்டகால கிஷன் கங்கா அணை போன்ற இந்தியாவின் திட்டத்துக்கு எல்லாம் துவக்க நிலையிலேயே பாகிஸ்தான் எதிர்ப்பை தெரிவித்தது..
அந்நிய ஆர்டிபுட்டர் மத்தியஸ்த கோரிக்கை வைத்தது
இந்தியா நியூட்டரல் மத்தியஸ்தம் என கேட்டது..
அதெல்லாம் கதைக்கு ஆகாது என மோடி முடிவுக்கு வந்துவிட்டார்..
இந்த ஒப்பந்தத்தை தூக்கி போட கிளம்பிவிட்டார்..
90 நாள் அவகாசம் தந்து பாகிஸ்தான் பஞ்ச பண்ணாடை நாட்டுக்கு நோட்டிஸ் அனுப்பிவிட்டார்..
இது போரை விட பெரிய தாக்குதல்..
இனி நமது பகுதியில் அணைகள் கட்டி ஜம்மு காஷ்மீர் லடாக் ஹரியானா பஞ்சாப் ராஜஸ்தான் தில்லி வரை நீர் பயன்பாடு கிடைக்க வழி காண்கிறார்..
நீர்மின்சாரம் தயாரித்து ஜம்மு காஷ்மீர் தொழில் மற்றும் வாழ்வாதார மாற்றத்தை உருவாக்க முடியும்..
இத்தகைய அறிவிப்பால் அலறி தவிக்குது பாகிஸ்தான்.
இதை கூட செய்யாத காங்கிரஸ் கட்சி மோடிக்கு எங்கே எப்போது எப்படி அந்நிய தீய சக்திகளோடு கைகோர்த்து வீழ்த்திட முடியும் என அனைத்து பாதக முயற்சிகளை செய்கிறது.
இந்திய மக்கள் நாம் ஒற்றுமையோடு மோடியின் முயற்சிகள் அனைத்துக்கும் பின் நின்று ஆதரித்தால்
பாரத தேசம் நன்மை காணும்.
மோடியின் பலம்
தேசத்தின் பலம்.
வளர்ச்சிக்கான பலம்..
உலக வல்லரசாக முதன்மை தேசமாக மாற்றம் காணும் நெடும் பயணத்தின் அஸ்திவாரம் மோடிஜி..
படித்துவிட்டு, வேலை வாய்ப்பு இல்லாததால் வெளிநாடுகளுக்கு வேலை தேடி படை எடுக்கும் இளைஞர்கள் நிரம்பிய கன்யாகுமரி மாவட்டம் குளச்சல் துறைமுகம் அருகே உள்ள இனயத்தில் ரூ.28 ஆயிரம் கோடி செலவில் ஆழ்கடல் வர்த்தக துறைமுகம் ஒன்று அமைக்கப்பட இருந்தது.
இணயம் துறைமுகம் மூலம் லட்ச கணக்கான படித்த மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து இருக்கும்.
உலகம் எங்கும் உள்ள பெரிய பெரிய சரக்கு கப்பல் வந்து செல்லும் வசதி தென் இந்தியாவில் வேறு எங்கும் இல்லை. இணயம் கடல் பகுதி ஆழ்கடல் துறைமுகம் அமைக்க உகந்த இடம் என்று கண்டறியப் பட்டு..
துறைமுக நிர்வாக அலுவலகம் திறப்பு விழா கூட நடை பெற்றது.
பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் மத்திய பாஜக அமைச்சராக இருந்த போது, துறைமுக பணிக்கான பணம் ஒதுக்கி, பூர்வாங்க ஆய்வுப் பணிகள் நடை பெற்றன. துறைமுகத்தை குழித்துறை ரயில் நிலையத்துடன் இணைப்பது, நான்கு வழி சாலை அமைப்பது உள்ளிட்ட..
நேற்று, ரேபரேலியின் முன்ஷிகஞ்சில் உள்ள ஒரு சலூனில் ராகுல் காந்தி தனது தாடியை டிரிம் செய்யும் வீடியோ பார்த்தபோது, எனது மாவட்டமான குஷிநகர் நாராயண்பூரில் 1980 இல் நடந்த ஒரு சம்பவம் எனது நினைவுக்கு வந்தது.
இன்று மோடியை சர்வாதிகாரி என்று சொல்வோருக்கு
இந்த விஷயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அப்போது மத்தியில் இந்திரா காந்தியின் அரசு ஆட்சியில் இருந்தது, இந்திரா பிரதமராக இருந்தார்.
அன்று உத்தரபிரதேசத்திலோ ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தது, பாபு பனாரசி தாஸ் முதல்வராக இருந்தார்.
பாபு பனாரசி தாஸின் அரசு இந்திரா காந்தியின் கண்களை மிகவும் உருத்திக் கொண்டே இருந்தது.
தமது சொந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை அமைக்க முடியாமல் தவித்த அவர், உத்தரபிரதேசத்தில் நான் இருக்கும் போது ஜனதா கட்சி ஆட்சி எப்படி ஆட்சி நடத்தலாம் என்று கருவினார்.
19ம் நூற்றாண்டு இந்துமதத்திற்கு சோதனைகள் அதிகம் உதித்த காலம், ஒரு பக்கம் கம்யூனிச நாத்திக கொள்கைகள் ஒருபக்கம் ஐரோப்பிய மதமாற்ற கொடுமைகள் அவர்களின் மேலாதிக்க மனப்பான்மை என இந்துமதம் மிகபெரிய சவாலை எதிர்கொண்டது.
ஐரோப்பியரின் மிகபெரிய ஆயுதம் கல்வி கூடங்களானது, ஆட்சி அவர்களிடம் சிக்கியது அதிகாரம் அவர்களிடம் சிக்கியது எனும் வகையில் அவர்கள் நினைத்த கல்வியினை அவர்களால் கொடுக்கமுடியும், அக்கல்வியில் இந்திய தேசபற்றோ இந்திய கலாச்சாரமோ இந்துமத பெருமைகளோ இருக்கும் என எதிர்பார்க்க முடியாது.
கல்வியில் மாற்றம் என்பது எதிர்காலத்தில் சில தலைமுறைகளை மாற்றி மொத்த தேசத்தையே சீர்குலைக்கும் ஆபத்து, தேசத்தின் முகத்தையே மாற்றும் பெரும் ஆபத்து அத்தோடு நாடு மாறும் மதம் அழியும் இந்தியாவின் தனிதன்மையே சீர்குலையும், எதிர்காலம் கேள்விகுறியாகும்.