திருச்சி அடுத்த #பிச்சாண்டார்கோவிலில் #உத்தமர்_கோயில் உள்ளது. முப்பெருந்தேவியருடன் மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள ஒரே ஆலயம் இதுதான். வேறெந்தக் கோயில்களிலும் இல்லாத தனிச்சிறப்பாக சப்த குருக்கள் எனப்படும் ஏழு குரு பகவான்களும் ஒருங்கே அமைந்துள்ளனர். இங்கு குருப்பெயர்ச்சி மற்றும்
லட்சார்ச்சனையில் பங்கு கொள்வது எண்ணிலடங்கா நற்பலன்களை நல்கும். பிச்சாண்டார்கோவில் என்றழைக்கப்படும் இவ்வூரும், உத்தமர் கோயிலும் சைவ, வைணவ ஒருமைப் பாட்டுக்குச் சான்றாக விளங்குகின்றன.
வைணவ புராணத்தின்படி பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டிருந்த சிவபெருமான், பிச்சைக்காரன்
வடிவத்தில் வந்து அவரது தோஷம் நீங்கப் பெற்றதால், பிச்சாண்டார் கோவில் என்ற காரணப்பெயரை இவ்வூர் பெற்றது. சிவபெருமானின் புராண வரலாற்றின் படி அவருக்குரிய 63 மூர்த்தங்களில் (வடிவங்களில்) ‘பிச்சாடனர்’ அதிமுக்கியமானது. உலகில் நன்னெறி போதிக்க வந்த முனிவர்களும் அவர்தம் மனைவியரும்
கர்வத்தால் அறிவிழந்து நின்ற போது அவர்களை நெறிப்படுத்த சிவபெருமான் பிச்சாண்டவராகத் தோன்றியது இவ்வூரில் தான். பிச்சாண்டார் கோவில் என்ற காரணப்பெயர் மிகப் பொருத்தமானது. இப்பூவுலகில் உயிர்களைப் படைப்பதற்காக பெருமாளின் நாபிக்கமலத்தில் பிரம்மா தோன்றி இக்கோயிலில் குடிகொண்டு விளங்குவதால்
பிரம்மபுரி, ஆதிபிரம்மாபுரம், பிரம்மாபுரம் என்று பண்டைய பெயர் கொண்டு விளங்குகிறது. முன்னொரு காலத்தில் பிரளயத்தின் போது உலகம் முழுவதும் ருத்ரமூர்த்தியிடம் ஒடுங்கிய போது நித்தியமாகிய வேதங்களே தங்களுக்கு இருப்பிடமின்றி தன்னைச் சரணடைந்த போது சோமேசக்கடவுள் தான் பூலோகத்தில் அவதரிக்கப்
போவதாகக் கூறி வேதங்கள் கதம்ப மரங்களாகவும், ஆகமங்கள் புஷ்பங்களாகவும், இதிகாசங்கள் பழங்களாகவும், புராணங்களைப் பறவைகளாகவும் மாறி தனக்கு மனோகரமான நிழலைத் தர உத்தரவிட்டார். அதன்படி, வேதங்கள் கதம்ப மரங்களாக தோன்றியதால் இவ்வூர் கதம்பவனம், திருக்கரம்பந்துறை என்ற பெயர் பெற்றது. பிரம்மா
பூஜையைச் சோதிக்க பெருமாள் கதம்ப மரங்களினூடே மறைந்து நின்று பின்னர் தன்னை வெளிப் படுத்தியதால் கதம்பனூர் என்றும், கதம்ப மரங்களின் மற்றொரு பெயராகிய நீப மரங்களின் பெயரால் நீபவனம் என்றும் அழைக்கப்பட்டது.
கதம்ப முனிவர் என்ற மகரிஷியின் தவத்திற்கு மனமிறங்கி மும்மூர்த்திகளும் காட்சி
கொடுத்ததால் கதம்பனூர் என்றும் பின்னர் மருவி கரம்பனூர் என்றும், ‘திரு’ என்ற அடைமொழியுடன் ‘திருக்கரம்பனூர்’ என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது. உத்தமர் கோயில் என்று இவ்வாலயம் அழைக்கப்படுவதும் காரணப் பெயர் தான். கோயிலில் படைப்புத் தொழில் புரியும் பிரம்மா தனி சன்னதியில் குரு பகவான்
ஸ்தானத்தில் தெற்கு முகமாக அமர்ந்து பக்தர்களுக்கு வேண்டுவன அனைத்தையும் அருளி வருகிறார். அவரது இடப்புறம் கல்விக் கடவுள் கலைவாணி ஞானசரஸ்வதி குடி கொண்டு கல்வி, கலை, ஞானம், நல்லறிவு ஆகியவற்றை வழங்கி வருகிறார். காக்கும் கடவுளாகிய திருமால், புருஷோத்தமர் என்ற திருநாமத்துடன் ஆதிசேஷன் மேல்
பள்ளி கொண்டுள்ளார். இவரது இடப்புறம் தனி சன்னதியில், பிச்சாடனரின் பிரம்மஹத்தி தோஷம் நீங்க அவரது பிச்சைப் பாத்திரம் பூரணமாக நிரம்பும் அளவு அன்னமிட்ட பூரணவல்லித் தாயார் குடிகொண்டு சகல ஐஸ்வர்யங்களையும் நல்கி அழிவில்லாமல் சகல உயிர்களையும் காத்து வருகிறார். மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள
108 வைணவத் திருப்பதிகளில் ஸ்ரீரங்கத்திற்கு அடுத்த பெருமை  உடையது. அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய தொழில்களை புரிந்து வரும் சிவபெருமான் பிச்சாண்டவர் (பிச்சாடனர்) என்ற திருநாமத்துடன் சவுந்தர்ய பார்வதியை தென்முகமாகக் கொண்டு விளங்குகிறார். பிச்சாடனராக இத்தலத்தில் அவதரித்த இறைவன்,
நெறி கெட்டு கர்வத்துடன் இருந்த ரிஷிகளையோ அவர்களது பத்தினிகளையோ அழிக்காமல் அவர்களின் அகம்பாவத்தை மட்டும் அழித்ததால் அவர் உத்தமராக விளங்குகிறார். ஆரோக்கியம், தொழில் மேன்மை, வேலைவாய்ப்பு, சுயதொழில் உத்யோக உயர்வு, திருமணம், புத்திரபாக்கியம், உயர்கல்வி, வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு,
மனநலம், வழக்குகளில் வெற்றி, மனநிம்மதி உள்ளிட்ட அனைத்து பிரார்த்தனைகளும் 11 வாரங்கள் தொடர்ந்து அர்ச்சனை செய்வதனால் பிரம்மாவினால் நிறைவேற்றி வைக்கப்படுகின்றன. பிரார்த்தனை கை கூடிய பிறகு கோயிலில் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை அல்லது தயிர் சாதம் தளிகை செய்து அர்ச்சனை செய்து வேண்டுதலை
நிறைவு செய்ய வேண்டும்.
பக்தர்களுக்கு ஜாதகத்தில் விஷ்ணு தோஷம் இருந்தால் புதன் கிழமையிலும், சிவன் மற்றும் குரு தோஷம் இருந்தால் வியாழக் கிழமையிலும், நாகதோஷம் மற்றும் சுமங்கலி தோஷம் இருந்தால் வெள்ளிக்கிழமையிலும் பிரம்மாவிற்கு உகந்த ஆத்தி இலையில் அர்ச்சனை செய்வது நலம். புத்திர
பாக்கியம் வேண்டுவோர் ராமபிரானின் தந்தை தசரதமகாராஜா பூஜித்த தசரதலிங்கத்தை வில்வ இலையால் எந்தநாளும் அர்ச்சனை செய்து பலன் பெறலாம். தசரதலிங்கத்திற்கு தொடர்ந்து 48 வாரங்கள் அர்ச்சனை செய்து குழந்தைப் பேறு பலருக்கு கிடைத்துள்ளதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
நடைதிறப்பு : காலை 6.00 முதல்
12.00 வரை, மாலை 4.00 முதல் இரவு 8.00 வரை.
பூஜை விவரம் : நான்கு கால பூஜைகள்.
அருகிலுள்ள நகரம் : திருச்சி.
கோயில் முகவரி :  அருள்மிகு உத்தமர் கோவில்,
மணச்சநல்லூர் தாலுகா, திருச்சி - 621 216. 
தொலைபேசி  எண் : 0431-2591466(officer room), 0431-2591405.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
#திருமங்கையாழ்வார் மங்களாசாஸனம்

பேரானைக் குறுங்குடி எம்பெருமானைத் திருத்தண்கால் ஊரானைக் கரம்பனூர் உத்தமனை முத்திலங்கு காரார் திண்கடல் ஏழும் மலையேழிவ் வுலகுண்டும் ஆராதென்று இருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே

சிவபெருமானை பாடியோர் பாடியோர் அப்பர், சுந்தரர் மற்றும் திருஞான சம்பந்தர்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Feb 19
#சப்த_சிரஞ்ஜீவி மந்திரத்தைச் சொன்னால் தீராத நோயும் தீரும் என்பது ஐதீகம். நமக்கு நோய் என்றாலும் நம்மைச் சார்ந்தோருக்கு நோய் என்றாலும் அவர்களுக்காகவும், இந்த மந்திரத்தைச் சொல்லி வரலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். ஆன்மிகத்தில் ஏழு என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ImageImageImageImage
#சப்த என்றால் ஏழு என்று அர்த்தம். சப்த ரிஷிகள் என்று வணங்குகிறோம். சப்த கன்னியரை வணங்குகிறோம். சப்த சாகரம் என்று ஏழு கடல்களைச் சொல்லுகிறோம். திருமணச் சடங்கு வைபவத்தில் கூட, சப்தபதி எனும் சடங்கு நிகழ்த்தப்படுகிறது. சப்த ஸ்வரங்கள் என்கிறோம். அதே போல சப்த சிரஞ்ஜீவிகள் என்றும் சொல்ல ImageImageImage
பட்டிருக்கிறது. ஸ்ரீஅனுமன், விபீஷணர், மார்க்கண்டேயர், மகாபலி சக்கரவர்த்தி, வேத வியாசர், பரசுராமர், அஸ்வத்தாமன் எனும் ஏழு பேரையும் சப்த சிரஞ்ஜீவிகள் எனப் புராணம் விவரிக்கிறது. #சிரஞ்ஜீவிகள் என்றால் எப்போதும் இருப்பவர்கள், முடிவே இல்லாதவர்கள்,எல்லாக் காலத்திலும் இருப்பவர்கள் என்று
Read 9 tweets
Feb 19
#Unshakable_Faith_in_Almighty
This is a true story, incident that happened on 12th June, 2020 is being shared here. A local resident noticed a aged couple looking distressed, walking on the highway at noon on a hot summer day near Kopargaon, a small town in Maharashtra, Image
Ahmednagar district. As a matter of courtesy, he asked them for food which they politely declined. He, then offered them some money. This offer was also refused. Then, he inquired as to why they were walking like this at noon. The man, then started narrating their story. He said
that they had walked almost 2200 Km. till that day and were returning to their native place Dwarka in Gujarat. He further said that about a year back, he had become nearly blind. The expert doctors had given up all hopes and had refused to do any surgery. However, his mother had
Read 10 tweets
Feb 19
#MahaPeriyava
Source: Maha Periyaval Darisana Anubhavangal
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb

Sri Maha Periyava was talking to the devotees on general topics. He said, "Our ancestors left behind capital in the form of land, money, orchards and Image
houses so that their descendants can continue to do many good deeds. They did so wishing us well and with the concern that their children should lead a blessed life. They desired that these good deeds be performed generation after generation from the profit accrued from the
capital. But, in many places, the charitable deeds that they wished to have performed or stated in their will, do not take place. The money that ought to be spent in charity is spent for the family. This is adharma. Because this is wrong, many families that enjoy the property of
Read 6 tweets
Feb 18
#சந்தோஷம்
ஒரு ஸ்ரீ கிருஷ்ண பக்தி சொற்பொழிவு கூட்டத்தில் ஒரு பெண்மணியை பார்த்து சொற்பொழிவாளர் கேட்டார். “உங்கள் கணவர் உங்களை சந்தோஷமாக பார்த்து கொள்கிறாரா?"
அருகிலிருந்த கணவர் நிமிர்ந்து, நம்பிக்கையுடன் அமர்ந்தார். காரணம், மனைவி அவரிடம் எந்த புகாரும் சொன்னதே இல்லை. அவர்
சந்தோஷமாகவே இருந்தார். ஆனால், அந்த மனைவி தெளிவாக "இல்லை, என் கணவர் என்னை சந்தோஷமாக வைத்துக்கொள்ளவில்லை" என்றார். கணவர் அதிர்ந்தார். ஆனால், மனைவி தொடர்ந்தார். “என் கணவர் என்னை சந்தோஷமாக வைத்திருக்கவில்லை. என்னை சந்தோஷப்படுத்தியதும் இல்லை. ஆனால், நான் ஸ்ரீ கிருஷ்ணன் அருளால்
மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். நான் சந்தோஷமாக இருப்பது என்பது என் கணவரை சார்ந்தது இல்லை. என்னையே சார்ந்தது. நான் சந்தோஷமாக இருக்கிறேனா என்பது நான் சம்பந்தப்பட்ட விஷயம். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் சந்தோஷமாக இருப்பது என்பது என் முடிவு. அடுத்தவரால் நான் சந்தோஷமாக இருப்பேன்
Read 8 tweets
Feb 18
#மகாபெரியவா
மார்ச் 20,2020,தினமலர்-திருப்பூர் கிருஷ்ணன்.

காஞ்சி மகாசுவாமிகளை வேத பண்டிதர்கள் சிலர் தரிசிக்க வந்தனர்.
இளைஞன் ஒருவனும் அவர்களுடன் வந்திருந்தான். அவன் முகம் சற்று வாட்டமாக இருந்தது. அனைவரும் வேதங்களைப் பாராயணம் செய்ய சுவாமிகள் ஆர்வமுடன் கேட்டார். ஆளுக்கொரு ஆரஞ்சுப்
பழம், குங்குமப் பிரசாதமும் கொடுத்து ஆசியளித்தார். அவர்கள் விடைபெற்ற போது இளைஞனிடம் “நீ மட்டும் இங்கேயிரு. பிறகு போகலாம்!” என சொன்னார். சிறிது நேரத்தில் பக்தர் ஒருவர் சுவாமிகளை தரிசிக்க வந்தார். சாஷ்டாங்கமாக வணங்கி எழுந்த அவர், 'சுவாமி! காதுவலியால் நான் மிகவும் சிரமப்பட்டேன்.
அறுவைச் சிகிச்சை செய்ய நேரிடும் என மருத்துவர்கள் எச்சரித்தனர். மருந்திலேயே குணம் பெற வேண்டும் என்றும், விருப்பம் நிறைவேறினால் கடுக்கன்களை தங்களிடம் சமர்ப்பிப்பதாக வேண்டிக் கொண்டேன். அடுத்த முறை பரிசோதித்த போது மருந்திலேயே குணப்படுத்தலாம் என மருத்துவரும் தெரிவித்தார். அதன்படி
Read 7 tweets
Feb 18
#Gotra_in_Hinduism #Gene_Mapping
Every time we sit for a Puja, the temple priest asks you for our Gotra. The Science behind Gotra (Genetics), is nothing but what is today popularly known as Gene mapping. Why do we consider the knowledge of one's Gotra to be so important to decide
marriages?
Why should only Sons carry the Gotra of father, why not Daughters?
How/Why does Gotra of a Daughter change after she gets married? What is the logic?
In fact, this is an amazing and ancient genetic science that we follow. The word Gotra is formed from two Sanskrit
words, Gau (meaning Cow) and Trahi (meaning Shed). Gotra means Cow-shed. Gotra is like a cowshed protecting a particular male lineage. We identify our male lineage / Gotra by considering to be descendants of the 8 great Rishi (Sapta Rishi + Bharadwaj Rishi). All the other Gotra
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(